ஏற்கனவே அமெரிக்காவில் நடந்த இந்தியன் வெல்ஸ் போட்டியை வென்றிருந்த அர்னா சபலென்கா, கோகோ காஃபை வீழ்த்தி மியாமி ஓபன் பட்டத்தை வென்று, உயர்மட்ட 'சன்ஷைன் டபுள்' கிளப்பில் உறுப்பினரானார்.
இந்த
வெற்றியின் மூலம், அர்யனா சபலென்கா இந்த ஆண்டு தனது சாதனையை 23-1 என மேம்படுத்தியுள்ளார் அவரது ஒரே தோல்வி அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் எலெனா ரைபகினாவிடம் ஏற்பட்டது.
நடப்புச்
சம்பியனான அர்னா சபலென்கா, சனிக்கிழமையன்று நடைபெற்ற மியாமி ஓபன் இறுதிப் போட்டியில், கோகோ
காஃபை 6-2, 4-6,
6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, பெரிதும் விரும்பப்படும் 'சன்ஷைன் டபுள்' சாதனையைப் படைத்து ஒரு தனித்துவமான குழுவில் இணைந்தார்.
ஒரு
செட்டைக் கூட இழக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய உலக நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா, தனது முதல் சர்வ் புள்ளிகளில் 73 சதவீதத்தை வென்றதுடன், இரண்டு பிரேக் பாயிண்டுகளை மட்டுமே எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.
இந்தியன்
வெல்ஸ் , மியாமி பட்டங்களை அடுத்தடுத்து வென்ற ஐந்தாவது பெண்மணி சபலென்கா ஆவார். இப்போட்டிகள் முறையே கலிபோர்னியா, புளோரிடா
ஆகியவற்றில் நடைபெறுவதால்,
இந்தச் சாதனை 'சன்ஷைன் டபுள்' என்று அழைக்கப்படுகிறது.
'சன்ஷைன் டபுள்' சாதனையை நிறைவுசெய்த இகா
ஸ்வியாடெக்
(2022), விக்டோரியா
அசரென்கா
(2016), கிம் கிளைஸ்டர்ஸ் (2005) , ஸ்டெஃபி கிராஃப் (1994, 1996) ஆகியோருடன் இந்த பெலாரஸ் வீராங்கனையான சபலென்காவும் இணைகிறார்.

No comments:
Post a Comment