Tuesday, November 3, 2009

24 ஓட்டங்களால் வென்றது அவுஸ்திரேலியா


அவுஸ்திரேலிய இந்திய அணிகளுக்கிடையே மொஹாலியில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 24 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத் தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49.2 ஒவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்கள் எடுத்தது.
வட்சன், மார்ஸ் ஜோடி களமிறங்கியது 23 பந்துகளுக்கு முகம் கொடுத்த மார்ஸ் ஐந்து ஓட்டங்கள் எடுத்த நிலையில் நெஹ்ராவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இந்திய அணி வீரர்களின் பந்தைப் பதம் பார்த்து ஆறு பௌண்டரிகள் உட்பட 49 ஓட்டங்கள் எடுத்த வட்சன் ஹர்பஜனின் பந்தை டோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
பொண்டிங், வைட் ஜோடி நிதானமாகத் துடுப்பெடுத்தாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது பொண்டிங் ஒரு நாள் போட்டியில் 73 ஆவது அல்ரச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
மறுமுனையில் வைட் ஒரு நாள் அரங்கில் தனது நான்காவது அரைச் சதத்தைத் பூர்த்தி செய்தார்.
52 ஓட்டங்கள் எடுத்த பொண்டிங் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். பொண்டிங் வெளியேறியதும் களமிறங்கிய ஹஸி தனது அதிரடி மூலம் இந்திய அணிக்கு அச்சுறுத்தல் விடுத்தார்.
41 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஹஸி ஒரு சிக்சர், இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்கள் எடுத்தபோது ஹர்பஜனின் பந்தை இஷாந்த் சர்மாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தர்.
ஹென்றிக்ஸ் ஆறு ஓட்டங்களுடனும் ஜோன்சன் எட்டு ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 62 ஓட்டங்கள் எடுத்த ஹஸி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததும் அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். அவுஸ்திரேலியா 49. 2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 256 ஒட்டங்கள் எடுத்தது.
நெஹ்ரா மூன்று விக்கட்டுகளையும் ஹர்பஜன் இரண்டு விக்கட்டுகளையும் யுவராஜ் சிங் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
251 ஒட்டங்கள் என்ற இலக்குடன் களம் புகுந்த இந்திய அணி 46. 4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
ஷேவாக் தனது வழமையான அதிரடியுடன் ஆட்டத்தை ஆரம்பித்தார்.
சச்சின் மிக நிதானமாகத் துடுப்பெடுத்தாடினார். 19 பந்துகளில் ஏழு பௌண்டரிகள் அடங்கலாக 30 ஒட்டங்கள் எடுத்த ஷேவாக் ஹரிட்ஸின் பந்தில் எல்.பி.
டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
கோஹ்லி 10 ஓட்டங்களில் வெளியேறினார். 17 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கர் சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் 40 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை யில் நடுவர் அசோக டி சில்வாவின் தவறான முடிவில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
யுவராஜ்சிங் 12, டோனி 26, ரைனா 17, ஜடேஜா 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஹர்பஜன் தன் பங்குக்கு அவுஸ்திரேலிய வீரர்களை மிரட்டினார். 25 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஹர்பஜன் ஒரு சிக்சர் ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்கள் எடுத்தார். பிரவீன் குமார் 17 ஓட்டங்கள் எடுத்தார்.
ஏனையவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 46. 4 ஒவர்களில் சகல விக்கட்களையும் இழந்த இந்திய அணி 226 ஓட்டங்கள் எடுத்தது.
பொலிங்கர், வட்சன் ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளையும் ஹரிட்ஸ் இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக வட்சன் தெரிவு செய்யப்பட்டார். ஏழு போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்றன.

No comments: