Friday, May 21, 2010

திரைக்குவராதசங்கதி 20


சினிமா நடிகனாக வேண்டும் என்றஆசையில் கிராமத்தில் இருந்து சென்னைக்குரயிலேறிய இளைஞர்களில்விஜயகுமாரும் ஒருவர். சினிமாவில்நடிக்க வேண்டும் என்று தகப்பனிடம்கூறி தகப்பனின் அனுமதியுடன் சென்னைக்குரயில் ஏறினார் விஜயகுமார்.விஜயகுமாரின் அண்ணன் ஒருவர்சென்னையில் பெட்டிக்கடை வைத்திருந்தார். திடீரென தன் முன் நின்ற தம்பியைக் கண்டதும் அதிர்ச்சியுடன் ஏன்வந்தாய் என்று கேட்டார்.சினிமாவில் நடிக்கும் ஆசையால்ஊரில் இருந்து ரயிலேறி வந்தேன்எனக் கூறினால்.தன்னை ஊருக்கு ரயிலேற்றி விடுவார்எனத்தெரிந்து கொண்ட விஜயகுமார்சென்னையைப் பார்க்க வந்தேன்என்று பொய் கூறினார்.அண்ணனின் கடையில் நின்ற சுப்பராவ் என்பவரிடம் பீடா தயாரிக்க கற்றுக்கொண்டார். விஜயகுமாரின் எண்ணத்
தைப் புரிந்துகொண்ட அண்ணன்புது உடுப்பு, சப்பாத்து எல்லாம் வாங்கிக் கொடுத்து அவரை ஊருக்குஅனுப்பி வைத்தார்.ஒரு வாரத்தில் ஊருக்குத் திரும்பி
வந்த விஜயகுமாரை ஆச்சரியத்துடன்பார்த்தார் தகப்பன். பையன் சென்னையைப் பற்றி அறிந்து கொண்டு சினிமாஆசையை துறந்துவிட்டான் என்று
தகப்பன் நினைத்தார். விஜயகுமார்மனம் தளராது சென்னைக்குச் சென்றுசினிமாவில் நடிக்கப் போகிறேன்என்று தகப்பனிடம் உறுதியாகக் கூறினா
ர். தன்னால் முடிந்தவரை தகப்பன்மறுத்துப் பார்த்தார். விஜயகுமார் நடிப்பதில் உறுதியாக இருந்தார். இறுதியில்மகனின் விருப்பத்துக்கு ஒப்புக்கொண்டு சென்னைக்குச் செல்லஅனுமதி கொடுத்தார்.சினிமா வாய்ப்பு கிடைக்கும் வரைசுப்பாராவுடன் தங்குவதாக விஜயகுமார் கூறினார். அவரின் செலவுக்கு
தகப்பன் மாதா மாதம் 300 ரூபாஅனுப்புவதாகக் கூறினார்.மைலாப்பூரில் சுப்பாராவின் அறையில் விஜயகுமார் தங்கினார். விஜயகுமாரின் விருப்பத்தை தகப்பன் தபால்மூலம் அறிவித்ததனால் விஜயகுமாரின் அண்ணன் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
நாடகவேந்தன் ஆர்.எஸ். மனோகரின்நாடகத்தில் நடித்து வந்த சரோஜாஎன்னும் நடிகை அவரை விட்டுப்பிரிந்து தனியாக நாடகக் கம்பனிஒன்றை உருவாக்கினார். சுப்பாராவின்சிபாரிசில் "ராம பக்தி' எனும் நாடகத்தில்நடிப்பதற்கு விஜயகுமாருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.நாடகம் ஆரம்பமாகும்போது பிள்ளையாராகவும் நாடகம் முடியும்போதுமகா விஷ்ணுவாகவும் விஜயகுமார்நடித்தார். பிள்ளையாராக வந்தது நான்தான்என்று நண்பர்களிடம் சத்தியம்
செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.மகா விஷ்ணு வேடம் ஓரளவுக்கு அவரை அடையாளம் காட்டியது.கே.எஸ். கோபாலகிருஷ்ணன், மல்லியம் ராஜகோபால் போன்ற இயக்குநர்களின்ஆஸ்தான ஜோதிடரான கும்பகோணம் வையாபுரி என்பவரின் அறிமுகம் விஜயகுமாருக்குக் கிடைத்தது.அவர்தான் செல்லும் சினிமா கொம்பனிகளுக்கு விஜயகுமாரைக் கூட்டிச்செல்வார். அப்போதுதான் இயக்குநர்ராமண்ணாவை விஜயகுமார் சந்தித்தார்.விஜயகுமாரின் நடிப்புஆர்வம் பற்றி ஜோதிடர் ராமண்ணாவிடம் கூறினார்.நடிகர் திலகம் சிவாஜி பத்மினி நடித்த "ஸ்ரீ வள்ளி'என்ற படத்தை ராமண்ணாஇயக்கினார். அப்படத்தில்பாலமுருகனாக நடிக்க ஒருவர் தேவைப்பட்டதால் அப்பாத்திரத்தில் நடிக்கும் சந்தர்ப்பத்தை அவர் விஜயகுமாருக்குக் கொடுத்தார்.
விஜயகுமõரின் சினிமா ஆசை பாலமுருகன் வடிவில் நிறைவேறியது. அப்படத்தில் நடித்து விட்டு அடுத்த படத்துக்காக விஜயகுமார் காத்திருந்தார்.
விஜயகுமாருக்கு கதாநாயகனாகநடிக்க சந்தர்ப்பம் தருவதõக ராமண்ணாஉறுதிமொழி கொடுத்தார். அடுத்தபடத்துக்காக விஜயகுமார் ஐந்துவருடங்கள் காத்திருந்தார். அதற்குக்காரணம் அவருடைய இளம் பருவம்.18 வயதான விஜயகுமார் சிறுவனாகவும் இளைஞராகவும் இல்லாமல்இரண்டும் கெட்டான் நிலையில் இருந்தார்,
"சொர்க்கத்தில் திருமணம்' என்ற படத்தைராமண்ணா இயக்கினார். அப்படத்தில்லதா கதாநாயகியாக நடித்தார்.விஜயகுமாரை கதாநாயகனாக நடிக்க
வைக்க ராமண்ணா விரும்பினார்.ஆனால் சந்தர்ப்பம் அதற்கு இடம்கொடுக்கவில்லை. ரவிச்சந்திரன் கதாநாயகனாகநடித்தார்.விஜயகுமாரின் மீது நம்பிக்கை வைத்திருந்த ராமண்ணா லதாவை ஒரு தலையாக விரும்பும் பாத்திரத்தை உருவாக்கி விஜயகுமார் நடிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

ரமணி
மித்திரன்வாரமலர் 30/09/07


No comments: