Wednesday, May 19, 2010

உலகக்கிண்ணம்2010


இங்கிலாந்து1966
இங்கிலாந்தில் 1966ஆம் ஆண்டு நடைபெற்ற ஏழாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் மேற்கு ஜேர்மனியை தோற்கடித்து இங்கிலாந்து சம்பியனானது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்கு 30 நாடுகள் போட்டியிட்டன. புள்ளிகளின் அடிப்படையில் 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
ஆசியாவில் இருந்து தென் கொரியா தகுதி பெற்றது. ஐரோப்பாவிலிருந்து பல்கேரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன், ஹங்கேரி, இத்தாலி, போர்த்துக்கல், சோவியத் யூனியன், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, வட மத்திய அமெரிக்காவிலிருந்து மெக்ஸிக்கோ, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேசில், சிலி, உருகுவே ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
16 நாடுகளும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் போட்டியிட்டன. சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் 50 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மேற்கு ஜேர்மன் முதல் சுற்றில் அதிக கோல் அடித்த நாடாகத் திகழ்ந்தது. இங்கிலாந்து ஆர்ஜென்ரீனா, உருகுவே, மெக்ஸிக்கோ மேற்கு ஜேர்மன், ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டிகள் கோல் எதுவும் அடிக்கப்படாது சமநிலையில் முடிந்தன. தென் கொரியா, சிலி ஆகியவற்றுக்கிடையேயான போட்டி 11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
முதல் சுற்றில் விளையாடிய நான்கு குழுக்களில் இருந்தும் அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற்ற தலா இரண்டு நாடுகள் காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. இங்கிலாந்து, ஆர்ஜென்ரீனா மேற்கு ஜேர்மன், உருகுவே சோவியத் யூனியன், ஹங்கேரிபோர்த்துக்கல், தென் கொரியா ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஜேர்மனி, இங்கிலாந்து, சோவியத் யூனியன், போர்த்துக்கல் ஆகியன அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் 53 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற போர்த்துக்கல் காலிறுதியில் அதிக கோல் அடித்த நாடு என்ற பெருமை பெற்றது. ஆட்ட நேர முதல் பாதியில் 3 2 என்ற கோல் கணக்கில் தென் கொரியா முன்னிலையில் இருந்தது. இடைவேளையின் பின்னர் மூன்று கோல்கள் அடித்த போர்த்துக்கல் வெற்றி பெற்றது.
மேற்கு ஜேர்மன், சோவியத் யூனியன் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மேற்கு ஜேர்மன் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. போர்த்துக்கலுக்கு எதிரான அரையிறுதியில் 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
அரையிறுதியில் தோல்வி அடைந்த போர்த்துக்கல், சோவியத் யூனியன் ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்த்துக்கல் மூன்றாம் இடத்தையும் சோவியத் யூனியன் நான்காம் இடத்தையும் பிடித்தன.
இங்கிலாந்து, மேற்கு ஜேர்மன் ஆகியவற்றுக்கிடையேயான இறுதிப் போட்டியில் 4 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இங்கிலாந்து சம்பியனானது.
போர்த்துக்கல் 17 கோல்களும் ஜேர்மன் 15 கோல்களும் இங்கிலாந்து 11 கோல்களும் சோவியத் யூனியன் 10 கோல்களும் அடித்தன. ஆர்ஜென்ரீனா, உருகுவே ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு எதிராக தலா இரண்டு தடவை சிவப்பு அட்டை காட்டப்பட்டது. சோவியத் யூனியன் வீரருக்கு எதிராக ஒரு தடவை சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
இயுசெபியோ (போர்த்துக்கல்) ஒன்பது கோல்களும், ஹெல்மட்ஹல்லர் (மேற்கு ஜேர்மன்) ஆறு கோல்களும், போர்குயன் (சோவியத் யூனியன்) ஹர்ட்ஸ் (இங்கிலாந்து), பெனி (ஹங்கேரி) ஆகியோர் தலா நான்கு கோல்களும் அடித்தனர். சில்வா (ஹங்கேரி), ரட்டின் (பல்கேரியா), ரொச்சி (ஹங்கேரி), அல்பொசி (ஆர்ஜென்ரீனா) ஆகியோருக்கு எதிராக சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
இயுசெபியோ (போர்த்துக்கல்), ஹெல்மட்ஹலர் (மே. ஜேர்மனி), பெக்கன் பகுர் (மே. ஜேர்மன்), பெனி (ஹங்கேரி), ஹரிட்ஸ் (இங்கிலாந்து), போர்குஜன் (சோவியத் யூனியன்) ஆகியோரின் பெயர்கள் கோல்டன் ஷýவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஒன்பது கோல்கள் அடித்த இயுசெபியோ சிறந்த வீரராகத் தெரிவ செய்யப்பட்டு கோல்டன் ஷý வழங்கப்பட்டது.32 போட்டிகளில் 89 கோல்கள் அடிக்கப்பட்டன. 16,35,000 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர்

ரமணி

மெட்ரோநியூஸ்

No comments: