Thursday, October 14, 2010

பா.மா.க.வை புறந்தள்ளியது தி.மு.க.அ.தி.மு.க.வை எதிர்பார்க்கும் பா.ம.க.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடைபெறாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. தமிழக சட்ட மன்றத் தேர்தல் திடீரென நடந்தால் யாருடன் கூட்டணி சேர்வது தொகுதிப் பங்கீடு எப்படி இருக்க வேண்டும் என்று சகல கட்சிகளும் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தன. தமிழக சட்ட மன்றத்தேர்தல் உரிய காலத்தில் தான் நடைபெறும் என்று தெரிந்ததனால் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகள் சற்று ஆறிப்போயுள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய பாட்டாளி மக்கள் கட்சி "சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்' என்ற மன நிலையில் மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சங்கமமாவதற்குத் தயாராகிறது.
வன்னியரின் உரிமைக்காக என்று ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் நாளடைவில் அரசியல் கட்சியாகப் பரிணமித்தது. வன்னியரின் வாக்கு வங்கியை பாட்டாளி மக்கள் கட்சி அறுவடை செய்ததனால் திராவிடக் கட்சிகள் இரண்டும் அக்கட்சிøயத் தமது கூட்டணியில் சேர்ப்பதற்கு முன்னுரிமைகொடுத்தன. ராமதாஸ் இருக்கும் கூட்டணிக் கட்சிவெற்றி பெறும் என்ற கருத்தினால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூ"டடணி வெற்றி பெறும் என்ற மாயை கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் முடிவுக்கு வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் இவ்வளவுதான் என்று தெரிய வந்ததனால் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அவரை ஒதுக்கத் தொடங்கினார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பாட்டõளி மக்கள் கட்சி வெளியேறியதும் திராவிட முன்னேற்றக் கழகம் இருகரம் கொண்டு அழைக்கும் என்றே டாக்டர் ராமதாஸ் எதிர்பார்த்தார்.
தமிழக முதல்வர் கருணாநிதி அவசரப்படாது மிக நிதானமாகத் தனது முடிவை அறிவித்தார். ராஜ்ய சபையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைந்தபோது திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்வதற்காகத் தூதுவிட்டார் ராமதாஸ். ராமதாஸின் மகன் அன்புமணியின் ராஜ்ய சபை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்ததும் மீண்டும் அவரை ராஜ்ய சபை
உறுப்பினராக்குவதற்காகவே பாட்டõளி மக்கள் கட்சியின் தூதுக்குழு கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களைச் சந்தித்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைவதற்கு எவ்வித தடையும் இல்லை என்று அறிவித்த கருணாநிதி இன்னொரு நிபந்தனையையும் முன்வைத்தார். அன்புமணி ராஜ்ய சபை உறுப்பினராவதற்கு 2013 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என்ற கருணாநிதியின் நிபந்தனை ராமதாஸைக் கோபமடைய வைத்தது. உடனடியாகக் கொதித்து எழாமல் பொறுமை காட்டினார் ராமதாஸ்.
கருணாநிதியின் நிபந்தனையை கேட்டு உணர்ச்சிவசப்படாத ராமதாஸ் மீண்டும் ஒருமுறை தூதுக்குழுவை அனுப்பினார். இரண்டாவது தூதும் பயனளிக்காததால் கோபத்தை அடக்கிக் கொண்டு பொறுமை காத்தார் ராமதாஸ். ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணி தமிழகத் தேர்தலில் வெற்றி பெற மாட்டாது என்பதைக் காலம்கடந்து உணர்ந்த ராமதாஸ் அவசரப்படாது பொறுமை காத்தார். இனியும் பொறுமை காக்க முடியாது என்பதனால் தனது கோபத்தை வார்த்தை மூலம் வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டார் ராமதாஸ்.
அன்புமணிக்கு ராஜ்ய சபை உறுப்பினர் பதவி தருவதõக வாக்குறுதியளித்த கருணாநிதி ஏமாற்றி கழுத்தறுத்துவிட்டார் என்று ராமதாஸின் பேச்சு திராவிட முன்னேற்றக் கழகத்தை உசுப்பேற்றிவிட்டது.
கழுத்தறுப்பதும் காலை வாருவதும் எங்களுக்குத் தெரியாது. நம்பியவரை எங்கள் தலைவர் கைவிடமாட்டார் என்று துரைமுருகன் பதிலளித்துள்ளார். நாலு சீற்றுக்காக கட்சி ஆரம்பித்து அமைச்சுப் பதவிக்கு பேரம் பேசும் அரசியல்வாதிகள் மலிந்துவிட்டார்கள் என்று அன்பழகன் காட்டமாகப் பதிலளித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் ராமதாஸுக்குப் பதிலளித்துள்ளதனால் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இடம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவது அரசியல்வாதிகளுக்குப் புதியதல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கருணாநிதியையும் பற்றி ராமதாஸ் குற்றம் கூற ராமதாஸின் குற்றப்பட்டியலை திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்கள் பகிரங்கப்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் தலைமைப் பீடம் விரும்புகிறது. தமிழக கட்சித் தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினாலும் காங்கிரஸ் தலைமைப் பீடம் அதனைக் கண்டு கொள்ளப் போவதில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் தயவு இன்றி தேர்தலைச் சந்திக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகிறது. ஆகையினால் இனியும் காத்திருப்பதில் பயனில்லை என்று உணர்ந்து விட்டார் ராமதாஸ். ஜெயலலிதா அழைப்பு விடுத்தால் உடனடியாக ஒப்புதலளிக்கும் மன நிலையில் பாட்டõளி மக்கள் கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக காத்திருக்க ஜெயலலிதா காங்கிரஸ் கட்சி இல்லாத பலமான கூட்டணியை அமைக்கத் தயாராகிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாகப் போராட வேண்டி ஏற்படும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இது சாதகமாக அமையும். அதேவேளை பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் என்று உறுதியாகக் கூற முடியாத நிலை ஏற்படும்.
அன்புமணிக்கு ராஜ்ய சபை உறுப்பினர் பதவி தரும் கட்சியுடன் தான் ராமதாஸ் கூட்டணி சேர்வார். இல்லையேல் தனித்துப் போட்டியிட்டு திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவார்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு10/10/10

No comments: