Tuesday, February 7, 2012

தமிழ் இலக்கியப் பரப்பில்கல்கி கைவைக்காத துறையேஇல்லை

இந்தப் பத்திரிகைக்கு மூன்று நோக்கங்கள் உண்டு. முதலாவது நோக்கம் தேசநலன். ,ரண்டாவது நோக்கம் தேசநலன். மூன்றாவது நோக்கம் தேசநலன்இப்படி 1941ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி காவல் தெய்வமான விநாயகரைச் சாட்சியாக வைத்து கல்கி சஞ்சிகையை மாதமிருமுறை வெளியிட்டார் அமரர் ~~கல்கி.
அமரர் கல்கி நூற்றாண்டு விழாவை தமிழ் ,லக்கிய உலகம் ,ப்பொழுது கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
நாவல், குறுநாவல், சிறுகதை, அரசியல் விமர்சனம், சங்கீத விமர்சனம், பயணக்கட்டுரை, சினிமா விமர்சனம் என்று அவர் தொடாததில்லை. தொட்டுப் பொன்னாக்காததில்லை.
வாசகர்கள் எதை விரும்புகிறார்களோ அதையே வாசகர்களுக்குக் கொடுத்தார். தனக்குப் பிடிக்காத எதையும் வாசகர்களுக்குத் திணித்ததில்லை. நகைச்சுவையாக விமர்சனம் செய்வது அவரின் தனிப்பாணி. சம்பந்தப்பட்டவர் மனம் நோகாதபடி அவர்கள் விடும் தவறைச் சுட்டிக்காட்டுவது கல்கியின் தனிப்பாணி.
சங்கீதக் கச்சேரிகளில் தமிழ்ப்பாடல்கள் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தமிழிசைப் பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமாக வேண்டும் என்பதற்காக தமிழிசைப் பாடல்கள் பலவற்றை எழுதினார்.
அவர் எழுதி தமிழ்த்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்இன்றும் காற்றினிலே தவழ்ந்து ரசிப்பவர் மனதை நிறைக்கின்றன.
மென்மையான உணர்வுடன் நகைச்சுவை கலந்து அவர் எழுதும் தலையங்கங்கள் மூலம் எதிர்கால அரசியல் நிலைப்பாடு எப்படிஇருக்கும் என்பதைச் சகலரும் அறியக்கூடியதாக இருக்கும். தனிநபர் வெறுப்பு, குரோதம் எதுவுமற்ற அவரது நடை எவரையும் இலகுவாக கவர்ந்து விடும் தன்மை வாய்ந்தவை.
காந்திஜியின் அனுமதியுடன் 1940ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகப் போரில் ஈடுபட்டு சிறை சென்றார். கல்கி சிறையில் இருந்த போது எம்.எஸ்.வி. நடித்த சகுந்தலை திரைப்படம் வெளியாகியது.

கல்கி எழுதும் விமர்சனங்கள் தமிழ் வாசகர்களுக்கு வேதவாக்கு. கல்கியின் பேனை ஒரு திரைப்படத்தைப் பாராட்டி எழுதிவிட்டால் அந்தப்படம் வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சகுந்தலை படத்துக்கு கல்கி விமர்சனம் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று சதாசிவம் விரும்பினார். ஆனால் அது நடக்கக்கூடிய சம்பவமாக இருக்கவில்லை. ஏனென்றால் அப்பொழுது கல்கி மாயவரம் சிறையில்இருந்தார்.
கல்கியின் சத்தியாக்கிரகம் மாயவரம் சாமி அய்யங்கார் ஆர்.கே.சுப்பிரமணியபிள்ளை போன்றவர்கள் விரும்பியதால் மாயவரத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட கல்கி மூன்று மாதச்சிறைத் தண்டனை பெற்று மாயவரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
சிறையில்இருந்த கல்கியை தன்னுடைய செல்வாக்கினால் வெளியே அழைத்துச் சென்று தஞ்சாவூரில் ஓடிக்கொண்டிருந்த சகுந்தலை படத்தைப் பார்க்க வைத்த அன்றிரவே கல்கியிடமிருந்து விமர்சனத்தையும் எழுதி வாங்கிய பின் அவரைப் பத்திரமாக மறுபடியும் சிறையில் சேர்த்துவிட்டார் சதாசிவம். அந்த விமர்சனம் ஹிந்து உட்பட பல பத்திரிகைகளில் வெளியாகியது.
கல்கியின் விமர்சனத்துக்கு மக்கள் மத்தியில்இருந்த மதிப்புக்கு இந்த ஒரு சம்பவமே போதும். சதாசிவத்தைப் பற்றி கல்கி ஏற்கனவே அறிந்திருந்த போதிலும் இவ்வளவு சாமர்த்தியசாலி என்பதைக் கல்கி அன்றுதான் அறிந்து கொண்டார்.
சிறையிலிருந்து வெளியேறியதும் சொந்தப் பத்திரிகை நடத்துவதென்றால் சதாசிவத்தின் நிர்வாகத்தின் கீழ்தான் நடத்த வேண்டும் என்று தீர்மானம் எடுத்தார்.
கல்கி சஞ்சிகையின் வளர்ச்சிக்குத் துணையாக நின்றவர்களில் சிறந்த நிர்வாகியான சதாசிவம், மூதறிஞர் ராஜாஜி, டி.கே.சி., திருமதி.எம்.எஸ்.வி. ஆகியோர் முதன்மையானவர்கள்.
கல்கிக்குப் பிடிக்காதவை சிபார்ஸும், விடுமுறையும். திறமை எங்கு இருந்தாலும் அதை ஊக்குவிக்க அவர் தவறியதில்லை. அச்சுக்கோர்க்கும் வேலை செய்த விந்தன் என்பவர் எழுதிய சிறுகதையைப் படித்துவிட்டு அவரைக் கல்கி சஞ்சிகையின் உதவி ஆசிரியராக்கினார்.

நகைச்சுவைச் சிறப்பிதழ் வெளியிடுவதனால் உதவி ஆசிரியர்கள் கண்டிப்பாக ஏதாவது நகைச்சுவையாகச் சொல்ல வேண்டும். அவற்றிலிருந்து சிறந்தவையைத் தெரிவு செய்வார். எவ்வளவு பிரபலமானவரின் ஆக்கம் என்றாலும் தரமில்லை என்றால் பிரசுரிக்க மாட்டார்.
சிறந்த இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தாலும் அதை தமிழில் மொழி பெயர்த்து கல்கியில் வெளியிடுவார். கல்கியைத் தொடர்ந்து படிப்பவர்கள் வேற்றுமொழியில் உள்ள சிறந்த கதை, கவிதை, நாவல்களைப் படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
குழந்தைகளைக் கண்டால் கல்கியும் குழந்தையாகி விடுவார். நீதிக்கதை, போதனைக்கதை சொல்லி குழந்தைகளின் மனதைக் கவர்ந்திடுவார். ஆனந்த விகடனில் பணியாற்றிய போது குழந்தைகளுக்கென்று சில பக்கங்களை ஒதுக்கியிருந்தார்.
கல்கி சஞ்சிகையை ஆரம்பித்த போதும் குழந்தைகளுக்கான சில பக்கங்களை ஒதுக்கினார். குழந்தைக் கவிஞர்களான அழ.வள்ளியப்பா, தேசிக விநாயகம்பிள்ளை ஆகியோரின் பாடல்களைப் பிரசுரித்தார். இன்று கல்கி நிறுவனம் குழந்தைகளுக்காக கோகுலம் என்னும் சஞ்சிகையை வெளியிடுகிறது.
சிவகாமியின் சபதம்,பொன்னியின் செல்வன்,பார்த்தீபன் கனவு,அலை ஓசை, கள்வனின் காதலி என்று பேராசிரியர் கல்கி புகழ்கூறும் நவீனங்கள்இன்றும் கல்கியின் பெருமையைக் கூறும் சாட்சிகளாக உள்ளன.
அவர் எழுதிய சரித்திர நாவல்கள் அனைத்தையும் எதிர்கால சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
கல்கியின் தொடர் நாவல்களைப் படிக்கும் போது அடுத்தவாரம் என்ன நிகழும் என்பதை வாசகர்கள் அறிவதற்குப் பெரும் ஆவலாக இருப்பார்கள். பொறுமையில்லாத சிலர் நேரிலும் கடிதமூலமும் முடிவைத் தெரிவிக்கும் படி கல்கியைக் கேட்டார்கள்.
அகஸ்தியர், கர்நாடகம், குகன், தமிழ்த்தும்பி, தமிழ் மகன், துதிக்கையான், பரிசோதகர், முகமூடி, ராசி, வழிப்போக்கன், விறிசி, ஒரு தமிழ் மகன், கிராமவாசி, தமிழ்த்தேனீ, தும்பி, தேனீ, யமன், பிரகஸ்பதி, பெற்றோன், விகடன் லாங்கூலன், விவசாயி, ஒரு பிராமண இளைஞன் என்பன கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியின் புனைபெயர்கள்.
கல்கி என்னைத் தாக்கி எழுதினாலும் தூக்கி எழுதினாலும் அதை வரவேற்கிறேன் என்று செம்மங்குடி சீனிவாச ஐயர் ஒருமுறை கூறினார்.
இந்திய மத்திய அரசு மாநிலங்களில் ஹிந்தி மொழியைத் திணிக்க முற்பட்ட போது அதை விமர்சித்து அவர் எழுதிய தலையங்கங்கள் இன்றும் இலங்கை அரசியலுக்குப் பொருத்தமானதாக உள்ளன.
பொன்னியின் செல்வன் நாவலில் இலங்கை அரசில் ஏற்பட்ட குழப்பங்களின் பின் நிலையான அரசு அமையவேண்டும் என நினைத்த பௌத்தத் துறவிகள் அருள்மொழிவர்மரை அரசாளும்படி கேட்க அதற்கு அவர் கூறும் காரணம் இன்றும் இலங்கை அரசியலுக்குப் பொருத்தமாக உள்ளது.
ஆயிரத்தைனு}று வயதான அரசமரம் இன்னும் நிற்பது என்னவோ உண்மைதான். ஆனால் தர்மம் செத்துப் போய் எத்தனையோ நாளாகிவிட்டது என்று வந்தியத்தேவன் பொன்னியின் செல்வன் நாவலில் சொல்வதும் அவரின் எழுத்துக்கள் சிரஞ்சீவித்தன்மை வாய்ந்தவை என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றன.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
தினக்குரல் 16/05/1999

No comments: