இலங்கைப்
பத்திரிகை உலகில் பல சாதனைகளைப்
படைத்த ஏகாம்பரம் ரவிவர்மா கவிதை,சிறுகதை என்பவற்றிலும்
முத்திரை பதித்துள்ளார். அரசியல்,இலக்கியம்,விளயாட்டு,ஆன்மீகம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.
தெளிவான இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய இவரது எழுத்து நடை
வாசகர்களின் மனதில் இலகுவாகப் பதிந்து
விடும் தன்மை உள்ளது.
பத்திரிகைத்துறை சார்ந்த பத்தி எழுத்து,
விளையாட்டு, விவரணக்கட்டுரை ஆகியவற்றில் விருதுகளைப் பெற்றுள்ளார்.ஆங்கில,சிங்கள மொழிப்பத்திரிகையாளர்களுடன்
போட்டியிட்டு விவரணக்கட்டுரையில் முதலிடம் பெற்றுள்ளார்.
இவரது சிறுகதைகள் யதார்த்த
பூர்வமானவை. மனிதவாழ்வின் அவலங்களையும் சோகங்களையும் மிக லாவகமாக மனதில்
பதியும்படி சிறுகதைகளாக வடித்துள்ளார்.
இவர் எழுதிய தமிழக
அரசியல்,திரைக்குவராத சங்கதி,தடம்மாறிய தமிழ்
படங்கள்,பாடல் பிறந்த கதை
ஆகியன வாசகர்களிடம் வரவேற்பைப்
பெற்றவை.தினக்குரல்,இடி,சுடர் ஒளி,ஆகிய
பத்திரிகைகளில்
பணி புரிந்த
இவர் மெட்ரோ நியூஸ்
ஆசிரிய பீடத்தில் பணி புரிகின்றார்.புதிய
கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்குண்டு.இந்தச் சிறுகதைத்
தொகுப்பைப் போன்று இவரது ஏனைய ஆக்கங்களும் நூலாக
வெளிவர வேண்டும் என
வாழ்த்துகிறேன்.
மடுளுகிரிய விஜேரத்ன.
No comments:
Post a Comment