Wednesday, November 15, 2017

இத்தாலி தோல்வியடைந்ததால் பப்போன் விடை பெற்றார்



உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான பிளே-ஆப்சுற்று ஆட்டத்தில் சுவீடனிடம் தோல்வி கண்டு வாய்ப்பை இழந்ததால் இத்தாலி அணியின் கேப்டனும், கோல்கீப்பருமான ஜியானுலிகி பப்போன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ரஷியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இத்தாலியில் மிலன் நகரில் நேற்று முன்தினம் நடந்த 2-வது பிளே-ஆப் ஆட்டத்தில் இத்தாலி அணி கோல் எதுவுமின்றி சுவீடனும் டிரா கண்டது. முதல் ஆட்டத்தில் சுவீடன் அணி வெற்றி பெற்று இருந்தால் உலக போட்டிக்கு முன்னேறியது. இத்தாலி அணி உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனதால் இத்தாலி அணி வீரர்கள் மிகுந்த மனவேதனையுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். 39 வயதான கேப்டனும், கோல்கீப்பருமான ஜியானுலிகி பப்போன் சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுவதாக கண்ணீர் மல்க உடனடியாக அறிவித்தார்.

உலகின் தலைசிறந்த கோல்கீப்பர்களில் ஒருவரான பப்போன், எதிரணியினரின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை தடுத்து நிறுத்துவதில் கில்லாடி. 1997-ம் ஆண்டில் ரஷியாவுக்கு எதிரான சர்வதேச போட்டியில் இத்தாலி அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்த பப்போன் அது முதல் 175 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 1998, 2002, 2006, 2010, 2014-ம் ஆண்டுகளில் நடந்த உலக கோப்பை போட்டிகளில் இத்தாலி அணியில் பப்போன் இடம் பெற்றார். 1998-ம் ஆண்டில் மட்டும் அவர் களம் இறங்கவில்லை. 2006-ம் ஆண்டில் இத்தாலி அணி உலக கோப்பையை வென்ற போது அந்த போட்டி தொடரில் அவர் மொத்தம் 2 கோல்களை மட்டுமே தடுக்க தவறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 ஆண்டுகளாக 175 சர்வதேச போட்டியில் ஆடி இருக்கும் பப்போன் 79 போட்டிகளில் இத்தாலி அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அதிக சர்வதேச போட்டியில் விளையாடிய இத்தாலி வீரர் என்ற பெருமைக்குரிய பப்போன், உலக அளவில் அதிக சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்களில் 4-வது இடத்தில் உள்ளார்.

ஓய்வு குறித்து பப்போன் பேசுகையில், ‘இத்தாலி கால்பந்து உலகத்துக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். எனது அதிகாரப்பூர்வமான கடைசி சர்வதேச போட்டியில் அணி வெற்றி பெறாமல் போனதையும், உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனதையும் தலைகுனிவாக கருதுகிறேன். இந்த தோல்வியை எல்லோரும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் பலிகடா ஆக்கக்கூடாது. கடந்த காலங்களிலும் நமது அணி தோல்வியில் இருந்து மீண்டு வலுவான நிலையை எட்டி இருக்கிறது. இத்தாலி அணியில் திறமையும், அர்ப்பணிப்பும் அதிகம் இருப்பதால் நல்ல எதிர்காலம் இருக்கிறதுஎன்று தெரிவித்தார்.

பப்போனை தொடர்ந்து இத்தாலி அணியை சேர்ந்த ஆந்த்ரே பாராக்லி, டானிலே டி ரோஸ் ஆகிய வீரர்களும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளனர். இத்தாலி அணியின் மானேஜர் ஜியாம்பிரோ வென்டுரா கருத்து தெரிவிக்கையில், ‘நான் ராஜினாமா செய்யவில்லை. இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவரிடம் பேசிய பிறகு தான் எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய முடியும்என்றார்.

 கணக்கில் சுவீடனிடம் தோல்வி கண்டு இருந்ததால் அந்த அணி அடுத்த ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிர்ச்சிகரமாக இழந்தது. 1958-ம் ஆண்டுக்கு பிறகு  இத்தாலி அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாமல் போனது இதுவே முதல்முறையாகும். 60 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை பறிகொடுத்து இருக்கும் இத்தாலி அணி உலக கோப்பை போட்டிக்கு அதிக தடவை (18 முறை) தகுதி பெற்ற அணிகள் வரிசையில் 3-வது இடத்தில் உள்ளது. பிரேசில் அணி எல்லா போட்டிகளுக்கும் தகுதி பெற்று முதலிடத்திலும், ஜெர்மனி அணி 19 முறை தகுதி கண்டு 2-வது இடத்திலும் உள்ளன.

இத்தாலி அணி 4 முறை (1934, 1938, 1982, 2006) உலக கோப்பையை உச்சி முகர்ந்து இருக்கிறது. இரண்டு முறை (1970, 1994) 2-வது இடத்தை பிடித்து இருக்கிறது. ஐரோப்பிய கண்டத்தில் நெதர்லாந்துக்கு அடுத்தபடியாக வலுவான இத்தாலி அணி தகுதி இழந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாமல் போனதால் அந்த நாட்டு வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் சோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள். இதற்காக இத்தாலி கால்பந்து சம்மேளனம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.




No comments: