Thursday, July 4, 2019

27 ஆண்டுகளுக்குப் பிறகு அரை இறுதியில் இங்கிலாந்து.


உலகக்கிண்ணப் போட்டியின் ஆரம்பத்தில் எதிரணிகளை மிரட்டி வெற்றி பெற்ற இங்கிலாந்து   பின்னர் தோல்வியின் பக்கம் சென்றது. இந்தியாவை வென்றதன் மூலம் அரை இறுதி வாய்ப்பை தக்கவைத்தது. நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் 119 ஓட்டங்களால் வெற்றிபெற்று பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பை தவிடு பொடியாக்கியது.  

  செஸ்டர்-லே-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற  இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி  50 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 305 ஓடங்கள் எடுத்தது  நியூஸிலாந்து அணியில் லாக்கி ஃபெர்குசன், ஐஸ் சோதி ஆகியோருக்குப் பதிலாக டிம் செளதி, மாட் ஹென்றி சேர்க்கப்பட்டிருந்தனர். இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

 ஆரம்பத்துடுப்பாட்ட  வீரர்களான‌ ஜேசன் ராய்-ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி  முதல் விக்கெற்றூக்கு  123 ஓட்டங்கள் சேர்த்தது. 60 ஓட்டங்களில் ஜேசன் ராய் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஜானி பொஸ்கோவுடன் ஜோஸ் பட்லர்  ஜோடி சேர்ந்தார். 106 ஓட்டங்கள் எடுத்த ஜானி பொஸ்டோவ் மூன்றாவது விக்கெற்றக வெளியேறினார்.அடுத்து வந்த  இயன் மார்கன் 42 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து களம் இறங்கிய பட்லர் 11, பென் ஸ்டோக்ஸ் 11, கிறிஸ் வோக்ஸ் 4, ஆதில் ரஷீத் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெற்களை இழந்து  305 ஓட்டங்கள் எடுத்தது  லியாம் பிளங்கெட் 15 ஓட்டங்களுடனும் , ஜோஃப்ரா ஆர்ச்சர் 1 ஓட்டங்களுடனும் இருந்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் நீஷம், ஹென்றி , போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெற்களையும், சேன்ட்னர், செளதி தலா ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.

  306ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய நியூஸிலாந்து அணி, 45 ஓவர்களில் 186  ஓட்டங்கள் மட்டும் எடுத்தது.அதிகபட்சமாக டாம் லதாம் மட்டும்  57 ஓட்டங்கள் அடித்தார்.   கப்டில் 8, நிகோலஸ் 0, கேப்டன் வில்லியம்சன் 27, டெய்லர் 28, நீஷம், 19, கிராண்ட்ஹோம் 3, சேன்ட்னர் 12, ஹென்றி 7, போல்ட் 4 ஓட்டங்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3, கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் பிளங்கெட், ஆதில் ரஷீத், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 4-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து.
அந்த அணி இதற்கு முன்பு 1979, 1987, 1992 ஆகிய ஆண்டுகளில் இறுதி ஆட்டம் வரை முன்னேறி தோல்வியடைந்தது

  106 ஓட்டங்கள் அடித்த‌ இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ, ஆட்ட நாயகன் ஆனதுடன், உலகக் கிண்ண‌ கிறிக்கெட் போட்டியில் அடுத்தடுத்த ஆட்டங்களில் சதம் விளாசிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த ஆட்டத்துக்கு முன்பாக, இந்தியாவுடனான ஆட்டத்திலும் பேர்ஸ்டோவ் 111 ஓட்டங்கள் அடித்தார்

உலகக் கிண்ணப் போட்டியில் 36 வருடங்களின் பின்னர் நியூஸிலாந்துக்கு எதிரானக இங்கிலாந்து வெற்றி பெற்றது. 

இங்கிலாந்துன்  நட்சத்திர வீரரான  ஜோ ரூட்  இந்தஉலகக் கிண்ணப் போட்டியில்  500 ஓட்டங்களை எட்டினார்.   இந்த உலகக்கிண்ணப் போட்டியில்  கோப்பையில் 5 வீரர்கள் 500 ஓட்டங்களைக் கடந்துள்ளனர். முதல் 4 இடங்களில் இந்தியாவின் ரோகித் சர்மா,  , பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல்-ஹசன், அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் ஆகியோர் உள்ளனர். உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் 5 வீரர்கள் 500 ஓட்டங்களை கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் அதிகபட்சமாக 3 வீரர்கள் 500 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருந்தனர்.

No comments: