Tuesday, July 16, 2019

பிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றம்


விஜய் தொலைக்காட்சியில்  கமல்தொகுத்து வழங்கும் பொக்பொஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்க்காத திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது தொடரில் வனிதாவின் பங்கு மிக முக்கியமானது. விஜயகுமாரின் மகளான வனிதாவைப் பார்வையாளர்கள் மிகவும் விரும்பினர். போட்டியாளர்களிடையே  பிரச்சினையை உருவாக்கி அவர்களைப் பிரித்துவைப்பதில் வனிதா கில்லாடி. மூன்று திருமனம், விஜயகுமாருக்கு எதிராக பொலிஸில் புகார் செய்தது போன்றவற்றால்  ஊடகங்ளின்  மூலம் மிகவும் பிரபலமானவர். அனைவரும் எதிர்பார்த்ததுபோல்வே வனிதா கச்சிதமாக காய் நகர்த்தினார்.

பொக்பொஸ் வீட்டினுள் வனிதா செய்யும் அடாவடியைப் பார்த்து ரசிகர்கள் அவர் மீது வெறுப்படைந்தனர். முதல் இரண்டு வாரங்கள் தலைவராக வனிதா தெரிவு செய்யப்பட்டதால் அவரை வெளியேற்ற முடியவில்லை. இரண்டு பேர் சும்மா கதைத்தால் அதனுள் புகுந்து இருவரையும் பிரித்து விடுவார். வனிதாவுக்குக்  கொலைகாரன் டாக்ஸ் கொடுக்கப்பட்டபோது  திறமையாகச் செய்தார். பொக்பொஸ்சின் விருப்பத்தை நிறைவேற்றியதால்  வனிதா இப்போதைக்கு வெளியேற மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத நேரத்தில்  பிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றப்பட்டார்.

வனிதாவின் கொடுமையைத் தாங்கமுடியாத அபிராமி,  பிக்பொஸ்  வீட்டைவிட்டு வெளியேறப்போவதாக அழுதார். முன்னர் நடைபெற்ற பிக்பொஸ் நிகழ்ச்சியில் காயத்திரியும் ஜூலியும்  சேர்ந்த் செய்ததை வனிதா தனி ஒருவராகச் செய்தார். ரசிகர்கள் வனிதாவை வெறுத்தாலும், டிஆர்பியில் பிக்பொஸ் நிகழ்ச்சி முன்னிலையில் இருந்தது. ஆதலால், வனிதா பிக்பொஸ்  வீட்டினுள் இருப்பார் என்ற யூகட்தை பிக்பொஸ்  உடைத்தெறிந்துள்ளார். ரசிகர்களிடம் பாராட்டுப் பெற்ற பாத்திமா பாபுவை முதல் ஆளாக வெளியேற்றி அதிர்ச்சிதந்த பிக்பொஸ்  வனிதாவை வெளியேற்றி  ரசிகர்களுக்கு இரண்டாவது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
பிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா  வெளியேற்றப்படுகிறார் என கமல் அறி வித்ததும், பிக்பொஸ் ஏமாற்ருகிறார்  சீக்கிரட் ரூமுக்கௌ தன்னை  அனுப்பபோவதாக வனிதா தெரிவித்தார். ரசிகர்களும் அப்படித்தான் நினைத்தார்கள்.  ஆனால், வனிதா உண்மையிலேலே வெளியேற்றப்பட்டுவிட்டார். பிக்பொஸ்  வீட்டினுள் வனிதா இருக்கும் வரை திட்டியவர்கள், அவர்  வெளியேறியதும் ஆதங்கப்பட்டனர். வனிதா ஆமி என அவரைத் தூக்கிப் பிடித்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இனி  பிக்பொஸ்  நிகழ்ச்சியைப் பார்க்கப்போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர்.

பிக்பொஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வனிதா, கமலுடன் உரையாடும்போது தனது பக்க  நியாயத்தை எடுத்துரைத்தார். ஒருசிலர்  வனிதாவுக்காக அனுதாபப்பட்டனர். வனிதா இல்லாத பிக்பொஸ் நிகழ்ச்சி களைகட்டுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்திருக்கின்றனர்.

No comments: