Tuesday, August 1, 2023

இந்தியாவுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த மோடி

 பெங்களூரில் எதிர்க் கட்சிகள் நடத்திய கூட்டத்தில் தாம் அமைத்த கூட்டனிக்கு  I-N-D-I-A  [இந்தியா] எனப் பெயர் வைத்ததைச் சகிக்க முடியாத  பாரதீய ஜனதாத் தலைவர்கள் அதற்கு எதிராகத் தமது கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.மணிப்பூர் வன்செயல் தொடர்பாக வாய்திறக்காத  பிரதமர் நரேந்திர் மோடி, மிகக் கடும்  கோபத்தில்  வார்த்தைகளைக் கொட்டியுள்ளார்.

"ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகீதின், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்டவை கூட தங்களின் பெயர்களில் இந்தியா என்பதை கொண்டுள்ளன"  என்ற  பிரதமர் மோடியின்  பேச்சு அந்தக் கூட்டனியை இந்திய நாட்டுக்கு  எதிரான அமைப்புப் போலவும், பயங்கரவாத  இயக்கம் போலவும்  உள்ளதாக மரி முகமாகச் சுட்டிக் காட்டி யிருப்பதாகக் கருதப்படுகிறது.   இந்தியன் முஜாகீதின் என்பது பயங்கரவாத அமைப்பாகும். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்திய கிழக்கிந்திய கம்பெனி சுதந்திரத்துக்கு முன்பாக இந்தியாவை சுரண்டியது  எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி என்பது நாட்டுக்கு நல்லதாக இருக்காது, என்று கூறி உள்ளார். இதையடுத்து உபி பிரதமர் யோகி ஆதித்யநாத் செய்த போஸ்டில்.. பெயர் மாற்றுவதால் குணம் மாறிவிடாது என்று இந்தியா என்ற பெயர் மாற்றத்தை விமர்சனம் செய்துள்ளார். இதையடுத்து அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் , அமித் ஷா ஆகியோரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து உள்ளனர். அவர்களின் இந்த திடீர் எதிர்ப்பு கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர்: எதிர்க்கட்சிகள் கூட்டணிகள் நெருங்கி வரும் நிலையிலும், மணிப்பூர் விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையிலும் பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்து உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா என்ற கூட்டணி உருவாக்கப்பட்ட பின் எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து செயல்பட தொடங்கி உள்ளன.  ஆம் ஆத்மி -காங்கிரஸ் போன்ற வேறுபட்ட கருத்துக்கள் கொண்ட கட்சிகள் கூட இணைந்து செயல்பட தொடங்கி உள்ளன. மணிப்பூர் விவகாரத்தில் இந்தியா கூட்டணி பாஜகவை நாடாளுமன்றத்தில் திணறடித்து உள்ளது. இந்த கூட்டணி வலிமையாக உருவெடுத்து இருக்கும் நிலையில்தான் தற்போது பாஜகவின் டாப் தலைவர்கள் இந்த கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றுது. கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை 26 கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டன. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்தன. நேற்று நடந்த இரண்டாம் கட்ட கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.  மோடிக்கு எதிராக யாரை நிறுத்துவது என்ற குழப்பம் இருந்ததால் இந்தியாவை நிறுத்தலாம் என்று   கூறப்படுகிறது

பெயர் மாற்றுவதால் குணம் மாறிவிடாது என்று இந்தியா என்ற பெயர் மாற்றத்தை யோகி ஆதித்யா விமர்சனம் செய்துள்ளார்.விமர்சனம் செய்துள்ளார்.  அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் , அமித் ஷா ஆகியோரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து உள்ளனர். அவர்களின் இந்த திடீர் எதிர்ப்பு கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

 எதிர்க்கட்சிகள் கூட்டணிகள் நெருங்கி வரும் நிலையிலும், மணிப்பூர் விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையிலும் பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்து உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா என்ற கூட்டணி உருவாக்கப்பட்ட பின் எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து செயல்பட தொடங்கி உள்ளன.  ஆத்மி -காங்கிரஸ் போன்ற வேறுபட்ட கருத்துக்கள் கொண்ட கட்சிகள் கூட இணைந்து செயல்பட தொடங்கி உள்ளன. மணிப்பூர் விவகாரத்தில் இந்தியா கூட்டணி பாஜகவை நாடாளுமன்றத்தில் திணறடித்து உள்ளது. இந்த கூட்டணி வலிமையாக உருவெடுத்து இருக்கும் நிலையில்தான் தற்போது பாஜகவின் டாப் தலைவர்கள் இந்த கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள்  ஒன்றிணைய மாட்டாது என நம்பிக்கொண்டிருந்த  பாரதீய ஜனதா  அதிர்ச்சியடைந்துள்ளது.  காங்கிரஸி மிக மோசமாக எதிர்த்த மாநிகக் கட்சிகள்  ஒரே  மேசையில் அமர்ந்து  கைகோர்த்துள்ளன.  பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என காங்கிரஸ் அறிவித்துள்ளது. யார் பிரதமராக வர வேண்டும் என்பட்ர்கு முக்கியமில்லை.  மோடி பிரதமராகக் கூடாது என ஸ்டாலின் கர்ஜித்துள்ளார். எதிர்க் கட்சிகளின்  ஒற்றுமையான  கூட்டணியால்  மோடி நிலை குலைந்துள்ளார். அதனால்தான்,  பயங்கரவாதிகள், சுரண்டல் போன்ற  வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளார்.

மணிப்பூர் கலவரம் ஆளும்  பாரதீய ஜனதாக் கட்சிக்கு  பின்னடைவை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். மணிப்பூருக்கு நடைபெற்றது மற்றைய மாநிலங்களுக்கும் ஏற்படக்கூடாது என்பதில் எதிர்க் கட்சிகள்  உறுதியாக  இருக்கின்றன. மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் வன்முறை ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி உள்ளது. குக்கி-மைத்தேயி பிரிவு மக்களின் இந்த மோதல் எல்லை மீறியது. கடந்த மே மாதம் 3ம் திகதி முதல் இரண்டரை மாதத்துக்கும் மேலாக இந்த வன்முறை தொடர்கிறது. வன்முறை  பெண்களை மான பங்கபப்டுத்தியது, கூட்டுப் பாலியல் வன்முறை போன்றனவற்றைத் உடனேயே அரிந்த  மத்திய அரசாங்கம்  கைகட்டி மெளனமாக  இருக்குறது.  அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து

 நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக வழங்கப்பட்ட  நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ்   ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இத்தகைய சூழலில் தான் 2023ல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 2019லேயே பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கணித்து கூறிய வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது. 

மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன. அதற்கு ஆளும் தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிப்பார் என கூறி பாஜக தரப்பில் கூறப்பட்டது.  இது எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பாக  5வது நாளாக நாடாளுமன்ற சபைகள் முடங்கின. இதற்கிடையே தான் நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸை காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் வழங்கின. காங்கிரஸ் சார்பில் கவுரவ் கோகாய் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ் கொண்டு வந்தார். அதனை சபாநாயகர் ஏற்றுள்ளார். விரைவில் இதுபற்றி விவாதிக்கப்பட உள்ளது.

2018ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆந்திராவில் செயல்படும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்தது. இதற்கு காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. அதன்பிறகு 2019 பிப்ரவரி 7 ம் திகதி பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், ‛‛நாங்கள் சேவை செய்து இங்கே ஆளும் கட்சியாக அமர்ந்து இருக்கிறோம். ஆனால் ஆணவத்தின் விளைவால் தான் 400ல் இருந்து 40 உறுப்பினர்களுடன் (மறைமுகமாக காங்கிரஸை விமர்சனம்)இங்கு வந்துள்ளீர்கள். இன்றைய சூழலில் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என பார்த்து கொள்ளுங்கள். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்க விரும்புகிறேன். 2023ல் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் செயல்படுங்கள்'' என பிரதமர் மோடி சிரித்தபடி தெரிவித்து இருந்தார். அதாவது 2018 ல் தனது அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் முறியடித்ததை மனதில் வைத்து பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்திருந்தார். இந்த வீடியோ தான் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே தான் பிரதமர் மோடி அன்று கூறியபடியே தற்போது 2023ம் ஆண்டில் மணிப்பூர் வன்முறையை காரணமாக வைத்து எதிர்க்கட்சிகள் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பாஜகவினர் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்

நம்பிக்கையில்லாத் தீர்மானம்  தோல்வியடையும். ஆனால், பாரதீய ஜனதாவின் ஆஅட்சிமீது மக்கள் வெறுப்படையத் தொடங்கிவிட்டனர்.

No comments: