Tuesday, May 27, 2025

இந்தியா U19 அணி கப்டனாக சிஎஸ்கே வீரர் தேர்வு

 இங்கிலாந்துக்குச் செல்லும்  இந்திய அண்டர் 19 அணி 5 ஒரு நாள் போட்டிகலிலும்,  , இரண்டு  டெஸ்ட் போட்டிகளிலும்  விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் சிஎஸ்கே அணியில் மாற்று வீரராக இடம் பிடித்து அபாரமாக விளையாடி வரும் 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரே தற்போது கப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் இந்த தொடரில் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷியும் இடம் பிடித்திருக்கிறார்.

 இந்திய அண்டர் 19 அணியில் துணை கப்டனாக மும்பையைச் சேர்ந்த அபிக்யான் குண்டு என்ற வீரர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். சூரியவன்ஷியுடன் தொடக்க வீரராக விளையாடி வந்த விஹான் மல்கோத்ரா என்ற வீரருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

 சௌராஷ்டிராவை சேர்ந்த விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரர் ஹர்வன்ஸ் , பெங்காலியை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் யுதாஜித் குகா, கேரளாவை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் முகமது ஈனான் , பஞ்சாப்பை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் அன்மோல்ஜித் சிங் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இதில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக அண்மையில் நடைபெற்ற இரண்டு யூத் டெஸ்ட் போட்டியில் முகமது ஈனான் 16 விக்கெட்டுகளையும், அன்மோலிஜித் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். கோச் பிஹார் தொடரில் அபாரமாக விளையாடிய ஆல்ரவுண்டர் கிலான் பட்டேலுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 2026 ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக்  கிண்ணத்  தொடர் ஸிம்பாப்பேவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

 ஐபிஎல் தொடரில் விளையாடிய இரண்டு வீரர்கள் தற்போது அண்டர் 19 அணியில் இடம் பிடித்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

 இந்தியா U-19 அணி: ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மால்ஹோத்ரா, மவுல்யராஜ்சிங் சாவ்டா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சவ்ஹான், கிலன் பட்டேல், ஹெனில் பட்டேல், யுதாஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, முகமது இனான், ஆதித்ய ராணா, அன்மோல்ஜீத் சிங்

காயத்திலிருந்து மீண்டார் நெய்மர்.

  நட்சத்திர  வீரர்  நெய்மர் காயத்திலிருந்து திரும்புவார் என்ற செய்தி ன் சாண்டோஸ் அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

33 வயதான அவர் புதன்கிழமை சாண்டோஸின் அணியுடன் வழக்கம்போல்  பயிற்சி பெற்றார்,   வியாழக்கிழமை வடகிழக்கு பிறேஸிலிய நகரமான மாசியோவில் நடைபெறும் மோதலின் இரண்டாம் பாதியில் அவருக்கு நிமிடங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 16 அன்று பிறேஸிலின் சீரி ஏ போட்டியில் அட்லெடிகோ மினிரோவை 2-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் வென்ற  போட்டியில்  இடது தொடை தசைநார் கிழிந்ததிலிருந்து நெய்மர் விளையாடவில்லை. ஜனவரியில் அல்-ஹிலாலில் இருந்து இலவச பரிமாற்றத்தில் தனது சிறுவயது கிளப்புக்குத் திரும்பியதிலிருந்து அவர் அனைத்து போட்டிகளிலும் ஒன்பது போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார்.

 வியாழக்கிழமை நடைபெறும் போட்டியில் நெய்மர் காயமின்றி வெற்றி பெற்று, ஜூன் மாதம் ஈக்வடார் , பராகுவேவுக்கு ஆகியவற்றுக்கு எதிரான  உலகக்  கிண்ண   தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு முன்னதாக மீண்டும் உடற்தகுதி பெறுவார் என்று பிறேஸிலின் புதிய தலைமை பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி,   நம்பிக்கை தெரிவித்தார்.

Saturday, May 24, 2025

விஜய் தலைமையில் புதிய கூட்டணி ஆதவ் அர்ஜுனா வியூகம்


 அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக இந்த இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி சேரப்போவதில்லை என்பது விஜயின் அரசியல் நிலைப்பாடு.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இரகசியமாக நடந்த  பேச்சு வார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை. அதனால், சிறிய கட்சிகளை இணைத்து  விஜயின் தலைமையில் புதிய கூட்டணிக்கு ஆதவ் அர்ஜுனா அத்திபாரம்  போடுகிறார்.பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத்தலைவர்   நயினார் நாகேந்திரன்,  விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். பாரதீய ஜனதாவை விஜய் எதிர்ப்பதாகக் கூறுகிறார் ஆனால், எங்கேயும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக பெரிதாக  எதனையும் விஜய் செய்ய வில்லை,

 தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, சீமான் உள்பட பல்வேறு கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜயும் கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை வலுப்படுத்தி வருகிறார். அதன்படி, கட்சி ரீதியிலான 120 மாவட்டச் செயலாளர்களை நியமித்தது, 70,000 ஆயிரம் பூத் ஏஜண்டுகள் நியமனம், சார்பு அணி நிர்வாகிகள் நியமனம் ,   அவர்களுக்கான பயிற்சி முகாம் என்று விஜய் கட்சி வேலைகளை தீவிரம் காட்டி வருகிறார்.

 தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி வந்தால் இபிஎஸ்-உடன் கூட்டணி அமைக்கலாம் என்ற விருப்பமும் விஜய்-க்கு இருப்பதாக சொல்கின்றனர்.

அதாவது திமுக - பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கும் விஜய், காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமான போக்கையே கடைபிடித்து வருவதாகவும் அவர்களுடன் அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் புதிதாக கட்சி தொடங்கிய விஜய் உடன் எப்படி இணைவார்கள் என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும் அக்கட்சியின் தலைவர்களான திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் ஆட்சி அதிகாரம் குறித்தும் கூட்டணி மாற்றம் குறித்தும் சில கருத்துக்களை அண்மையில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் முன்வைத்தாக கூறப்பட்டது. இதனை பயன்படுத்தி எப்படியும் காங்கிரஸை தங்கள் கூட்டணியில் இணைத்துவிட வேண்டும் என்று விஜய் முனைப்பு காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அரசியல் கட்சிகளால்  புறக்கணிக்கப்பட்ட  விஜயகாந்தின் மனைவி  பிரேமலதாவுடன் விஜய் கூட்டணி அமைக்கலாம். பரதீய  ஜனதாவின்  கூட்டனியில் தொடர வேண்டும்மென அன்புமணி ஆசைப்படுகிறார்.திரா விட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் விரும்புகிறார்.  சேருவதற்கு சரியான இடம் கிடைக்காவிட்டால் அவர்கள் விஜயிடம் தஞ்சம் அடையலாம்.

தமிழக வெற்றிக்கழகம் என்கிற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி ஓராண்டை கடந்துள்ள நிலையில்  தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிகளின்படி, பொதுவான தேர்தல் சின்னத்திற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து அரசியலில் குதித்த நடிகர் விஜய் தமிழக வெற்றிகழகம் என்கிற தொடங்கினார். தனது கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார் விஜய். அதன் பிறகு கட்சிக்கான மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் வேலைகளை ஆரம்பித்தும் முடித்தார் விஜய், அதன் பின்னர் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க மண்டல் வாரியாக பூத் கமிட்டி மாநாட்டை கோவையில் நடத்தினார். மேலும் அடுத்ததாக வட மாவட்டங்களில் விஜய் நடத்த திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தவெக கட்சியின் முதல் மாநாட்டில் கட்சியின் கொடி மற்றும் கொள்கை தலைவர்கள், கொள்கை முதலியவை அறிமுகப்பட்டன. ஆனால் கட்சியின் சின்னம் என்னவென்று அறிவிக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில்  தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிகளின்படி, பொதுவான தேர்தல் சின்னத்திற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், கிரிக்கெட் மட்டை, வைரம், ஹாக்கி குச்சி மற்றும் பந்து, மைக்ரோஃபோன் (மைக்), மோதிரம் மற்றும் விசில் போன்ற சின்னங்கள் சாத்தியமான தேர்வுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இவற்றில், கிரிக்கெட் மட்டை, மைக், வைரம் மற்றும் மோதிரம் ஆகியவை இதுவரை மிகவும் விரும்பப்படும் தேர்வாக வெளிப்பட்டதாகத் தெரிகிறது.

தேர்தல் ஆணைய விதிகளின்படி, தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு (மே 6, 2026) நவம்பர் 5 ஆம் தேதி சின்னத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலம் தொடங்கும். கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் சமீபத்தில் மூத்த நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, தேர்தல் ஆணையத்தின் 190 இலவச சின்னங்களின் பட்டியலிலிருந்து பரிந்துரைகளை தெரிவிக்குமாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் புஸ்ஸி ஆனந்த் சின்னங்களை தேர்வு செய்ய நான்கு முக்கிய காரணிகளை வைத்ததாகக் கூறப்படுகிறது: அந்த சின்னம் மக்களின் உணர்வுகளுடன் எதிரொலிக்க வேண்டும்; அது விஜய் நடித்த பிரபலமான படங்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்; அது வேறு எந்த இலவச சின்னத்தையும் ஒத்திருக்கக்கூடாது, மேலும் தேர்தல் பிரச்சாரம் முறையாக முடிவடைந்த 36 மணி நேரத்திற்குப் பிறகும் கூட மக்களிடம் எடுத்துச் செல்வது எளிதாக இருக்க வேண்டும். :

தேர்தல் ஆணையத்திடம் முன்மொழிய புதிய சின்னங்களை வடிவமைப்பதில் தவெக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி முடிவு விஜய்யிடம் உள்ளது என்று "அவர் மாநில அளவிலான மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, இறுதித் தேர்வு செய்வதற்கு முன் ஒவ்வொரு பரிந்துரைக்கப்பட்ட சின்னத்தின் நன்மை தீமைகளையும் எடைபோடுவார்" என்று  தவெக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

வர்மா

25/5/25

  

Tuesday, May 20, 2025

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் வெளிநாட்டு வீரர்கள்

 இந்திய , பாகிஸ்தான் யுத்தம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள்  மே மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமானது.

அவுஸ்திரேலியா,தென் ஆபிரிக்கா,இங்கிலாந்து,மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய நாட்டுகளின்  வீவெளியேறும் நிலை உள்ளதால் ஐபிஎல் அணிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியைச் சேர்ந்த ஆறு வெளிநாட்டு வீரர்கள் இந்தத் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளனர்.இது பெங்களூரு அணியின் பிளே ஆஃப் வாய்ப்புகளைப் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

  மே 25 உடன் முடிவடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதன் பிறகு பல்வேறு நாடுகளின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. முக்கியமாக, அவுஸ்திரேலியா ,தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 11 முதல் 15 வரை நடைபெற உள்ளது.இந்தத் தொடருக்காக சுமார் இரண்டு வாரங்கள் வரை இரு அணி வீரர்களும் பயிற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அந்தப் போட்டியில் விளையாட உள்ள அவுஸ்திரேலியா ,தென்னாப்பிரிக்கா வீரர்கள் மே மூன்றாவது வாரம் வரை மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இங்கிலாந்து  மேற்கு இந்தியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மே 29  ஆம் திகதி  தொடங்க உள்ளது. அதில் பங்கேற்க வேண்டிய   வீரர்கள் தங்கள் நாடுகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு தொடர்களால் மட்டுமே சுமார் 20 வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, ஐபிஎல் தொடரின் தற்காலிக நிறுத்தத்தால் ஆஸ்திரேலியா சென்ற சில வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


ஐபிஎல் அணி வீரர்களும் விலகும் காரணமும்

 

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

 ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்

  லுங்கி நெகிடி (தென்னாப்பிரிக்கா) ‍  உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பயிற்சி

 ரொமாரியோ ஷெப்பர்டு ( மேற்கு இந்தியா) - விலகும் காரணம்:   ஒருநாள் தொடர்

  ஃபிலிப்ஸ் சால்ட் (இங்கிலாந்து) - விலகும் காரணம்:  ஒருநாள் தொடர்

  ஜேக்கப் பெத்தேல் (இங்கிலாந்து) - விலகும் காரணம்:

 ஒருநாள் தொடர்

  லியாம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து) - விலகும் காரணம்: ஒருநாள் தொடர்

பஞ்சாப் கிங்ஸ்

 மார்க்கோ ஜான்சன் (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்

 ஜோஸ் இங்கிலிஸ் (அவுஸ்திரேலியா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்

 மார்க்கஸ் ஸ்டோனிஸ் (அவுஸ்திரேலியா) - விலகும் காரணம்: மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பவில்லை

மும்பை இந்தியன்ஸ் 

  ரியான் ரிகெல்டன் (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஸ்ஷிப் 

 கார்பின் போஷ் (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஸ்ஷிப் 

குஜராத் டைட்டன்ஸ் 

  ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) - விலகும் காரணம்:   ஒருநாள் தொடர்

 ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு ( மேற்கு இந்தியா) - விலகும் காரணம்:   ஒருநாள் தொடர் 

 காகிசோ ரபாடா (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்

  ஜெரால்ட் கோட்சி (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி:

  பாட் கமின்ஸ் (அவுஸ்திரேலியா) - விலகும் காரணம்:   உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்

வீரர்: ட்ராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா)   ஆஸ்திரேலிய அணியின் உலக டெஸ்ட் சம்பியஷிப்

டெல்லி கேப்பிட்டல்ஸ் 

 

  மிட்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா) - விலகும் காரணம்: மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பாததாலும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பும்

  டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (

 அன்ரிச் நோர்ஜே (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்

வர்மா

18/5/25 

ஏமாற்றிய வீரர்களால் விரயமான கோடிகள்


 

  ஐபிஎல்  சீசன் க்ளைமாக்ஸை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. நிறைய இளம் வீரர்கள் அவர்களின் ஆட்டத்தின் வழி நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்கின்றனர். அடிப்படை விலையில் வாங்கிய வீரர்கள் நெருப்பாக விளையாடுகிறார்கள். ஐபிஎல் இல்  விலை போகாத வீரர்களுடன் ஒப்பந்தம் செய்த சென்னை  அச்சுறுத்துகிறது.

  ஏலத்தில் பெருத்த எதிர்பார்ப்புடன் பல கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வீரர்கள் இந்த சீசனில்  ஏமாற்றிவிட்டார்கள்.

ரிஷப் பண்ட்  

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருபவர் ரிஷப் பண்ட்    ஐ.பி.எல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார். லக்னோ அணியின் நிர்வாகம் அவருக்கு கப்டனாக்கி அழகு பார்த்தது.. கோயங்கா பன்ட் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், இப்போது வரைக்கும் பன்ட் இந்த சீசனில் சொல்லிக்கொள்ளும்படி ஒரு இன்னிங்ஸை கூட ஆடவில்லை.

11 போட்டிகளில் 128  ஓட்டங்களை மட்டுமே அடித்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 99 மட்டுமே. நம்பர் 4 இல் தான் இறங்குவேன் என தலைகீழாக நின்று சொதப்பினார். பின்னர் ஓப்பனிங் இறங்கி சொதப்பினார். கன்னாபின்னாவென பேட்டை சுற்றி சகட்டுமேனிக்கு அவுட் ஆகிவிட்டு செல்கிறார். நடப்பு சீசனில் அவர் சொதப்பியிருக்கும் விதம் இந்திய ஒயிட் பால் அணியில் அவரின் இடத்தை மேலும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

வெங்கடேஷ் ஐயர்:

கொல்கத்தா அணி நடப்பு சம்பியன். அந்த அணியை சம்பியனாக்கிய ஸ்ரேயாஷ் ஐயருக்கு அவர் கேட்ட தொகையை வழங்காமல்  வெளியேற்றியது. அதேநேரத்தில்தான் ஏலத்துக்கு சென்று வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா 2021 சீசனிலிருந்து கொல்கத்தா அணியின் தவிர்க்க முடியாத வீரராக வெங்கடேஷ் ஐயர் இருக்கிறார்.

ஆனால், இந்த சீசனில் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு அணி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட போதிலும், 11 போட்டிகளில் 142 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். கொல்கத்தாவின் சறுக்கலுக்கு வெங்கடேஷ் பார்மில் இல்லாததும் மிக முக்கிய காரணம்.

ஜோப்ரா ஆர்ச்சர்:

எல்லா சீசனிலும் பெயரை பதிந்துவிட்டு கடைசி நிமிடத்தில் விலகும் ஆர்ச்சர், இந்த முறை  எதிரணிகளிடம் மரண அடி வாங்கியிருக்கிறார். அவரை 12.50 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் வாங்கியிருந்தது.

 12 போட்டிகளில் 11 விக்கெட்டுகளைத்தான் எடுத்திருக்கிறார். இடையில் ஐ.பி.எல் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக  ஓட்டங்களை கள் வழங்கியவர்  எனும் சாதனையையும் படைத்திருந்தார்.

இஷன் கிஷன்:

இஷன் கிஷனை 11.25 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் வாங்கியது.. தங்களது அதிரடி பட்டறையின் இன்னொரு கூர் ஆயுதமாக இஷன் இருப்பார் என எதிர்பார்த்தார்கள். அதற்கேற்ப சதத்தோடுதான் சீசனையும் தொடங்கினார். அவரது பார்மும் அங்கேயே தொடங்கிய இடத்திலேயே முடிந்துவிட்டது.

முதல் போட்டியிலேயே சதமடித்த போதும் 11 போட்டிகளில் சேர்த்து 196  ஓட்டங்களை மட்டும்தான் எடுத்திருக்கிறார். இடையில் மும்பைக்கு எதிரான போட்டியில் அவுட்டே ஆகாமல் பெரிய மனுசத்தனமாக நடையைக் கட்டி ஆரஞ்சு ஆர்மியின் கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டார்.

அஷ்வின் :

அஷ்வினை 9.75 கோடிக்கு சென்னை வாங்கியிருந்தது. ஓய்வுபெற்ற வீரருக்கு இது அதிகமான தொகையாக தெரிந்தாலும் சேப்பாக்கம் எமோஷனை வைத்து சென்னை ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர்.  ஆனால், அஷ்வினின் பௌலிங்க் எந்தவிதத்திலும் தாக்கம் ஏற்படுத்தவில்லை.

உள்ளூரான சேப்பாக்கத்திலேயே அவரின் பந்துகளை சரமாரியாக அட்டாக் செய்தனர். 5 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். தொடர்ந்து பவர்ப்ளேயிலுமே வீசி ஓவருக்கு 15  ஓட்டங்களுக்கு மேல் மனசாட்சியே இல்லாமல் வழங்கினர். மினி ஏலத்துக்கு முன்பாக அவரை ரிலீஸ் செய்து விடுங்கள் என்கிற மனநிலைக்கு ரசிகர்களே வந்துவிட்டனர். 

ஜேக் ப்ரேஸர் மெக்கர்க் :

கடந்த சீசனில் டெல்லி அணிக்காக இளம் சூறாவளியாக அசத்தியிருந்தார். அந்த நம்பிக்கையில்தான் மீண்டும் அவரை 9 கோடி கொடுத்து டெல்லி அணி வாங்கியது. ஆனால், இந்த சீசனில் அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. நடப்பு சீசனில் டெல்லி அணி 6 முறை ஓப்பனிங் கூட்டணியை மாற்றிவிட்டது. அதற்கு மிக முக்கிய காரணமே இந்த ஜேக்தான்.

6 போட்டிகளில் 55  ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 105 மட்டுமே. ஜேக் நல்ல பார்மில் இருந்திருந்தால் டெல்லி அணியின் பல தலைவலிகள் தீர்ந்திருக்கும்.

இவர்களெல்லாம் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள். ஏலத்துக்கு முன்பாக பெரிய தொகை கொடுத்து சில வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்திருக்குமே. அந்தப் பட்டியலில் பெரிய தொகையை வாங்கிய வீரர்கள் சிலருமே மோசமாகத்தான் ஆடி வருகின்றனர்.

பதிரன

பதிரன மாதிரியான 22 வயது இளம் வீரரை சென்னை மாதிரியான அணி கோடிகளை கொட்டி தக்கவைப்பதே பெரிய விஷயம். பதிரனாவுக்கு 13 கோடியை சென்னை அணி கொடுத்திருந்தது. ஆனால், கடந்த இரண்டு சீசன்களில் கொடுத்தத் தாக்கத்தை பதிரனா இந்த சீசனில் கொடுக்கவில்லை. மிடில் & டெத் ஓவர்களில்தான் பதிரனாவை சென்னை பயன்படுத்துகிறது.

அங்கேதான் பதிரனவால் விக்கெட் வேண்டும் என நினைக்கிறது. பதிரனாவால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. 12 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். எக்கானமி 10 க்கும் மேல் இருக்கிறது. சென்னை அணியும் பதிரனாவை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ரஷீத் கான்:

 ரஷீத் கானை 18 கோடி கொடுத்து குஜராத் அணி தக்கவைத்தது. அவரைத்தான் தங்களின் முக்கிய ஸ்பின்னராக பார்த்தது. கில் இல்லாத சமயங்களில் கடந்த சீசனில் கேப்டன்சியையும் கொடுத்திருந்தனர். அவ்வளவு முக்கியமாக கருதப்படும் ரஷீத் கான், சமீபமாக அந்த அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுப்பதில்லை. 

அவரின் பலவீனத்தை எதிரணி வீரர்கள்  அறிந்துவிட்டனர். வேகமாக ஸ்டம்பை நோக்கி வரும் கூக்ளிகளும் டைட்டான டெலிவரிகளும் மட்டுமே அவரின் ஆயுதம். அதை அணிகள் உடைத்து விட்டன. இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கிறார்.

ஹெட்மயர்

கையில் இருந்த தரமான வர்களை  தாரை வார்த்து ஹெட்மயரின் அதிரடிக்காக அவரை 11 கோடி கொடுத்து ராஜஸ்தான் அணி தக்கவைத்தது. அந்த அணிக்காக பினிஷர் ரோலில் இறங்கி போட்டிகளை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும். ஆனால், ஹெட்மயர் அதை ஒரு போட்டியில் கூட செய்யவில்லை.

இந்த சீசனில் நான்கைந்து போட்டிகளை நெருங்கி வந்து கடைசிப் பந்தில் ராஜஸ்தான் தோற்றிருக்கிறது. அந்த சமயங்களிலெல்லாம் ஹெட்மயர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து ஆடியிருக்கவே இல்லை. அடுத்த சீசனில் ஹெட்மயர் தக்கவைக்கப்படுவது கடினமே எனும் சூழல் தான் நிலவுகிறது.

சிலம்பு

18/5/25

 

Monday, May 19, 2025

அன்புமணிக்கு எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்


 பாட்டாளி மக்கள் கட்சியின்  சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாடு மே 11 ஆம் திகதி மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில்  நடந்தது.  12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மாந்நடு என்பதாலும் ராமதாஸ் , அவருடைய மகன் அன்புமணி ஆகியோருக்கிடையே வெடித்த போதல் என்பதாலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

அன்புமணி ராமதாஸ் நிர்வாகத் தலைமையில் நடைபெறும் முதல் மாநாடு என்பதால்  பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்றன.

 

க‌டந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டின் போது வெடித்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். ஆகையால் தமிழக அரசு மிகுந்தகட்டுப்பாடுகளை விதித்தது.

கட்சியின் கடந்தகாலம், எதிர்காலம் என்பனவற்றைப்பற்றிய எதிர்பார்புடன் சென்றவர்கள் ஏமாற்றமடைந்தனர். மகன் அன்புமணியின் மீதான  கோபத்தை வெளிப்படுத்தினார் ராமதாஸ்.

" வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கக் கோரி போராட்டம் அறிவிக்கப்படும்.   இதுவரை நடந்திராத போராட்டமாக இருக்கும். அந்தப் போராட்டத்துக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்" எனக் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்,

  "நாமும் ஒருநாள் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என் பேச்சைக் கேளுங்கள். நான் ஆளப் போவதில்லை. எனக்கு அந்த ஆசையும்  இல்லை. ஆசை இருந்திருந்தால் ஆளுநராக இருந்திருப்பேன்; பலமுறை அமைச்சராக இருந்திருப்பேன்;  த மிழ்நாட்டையும் ஆண்டிருப்பேன். ஆனால், மக்களுக்காக வாழ்கிறேன்."

  "நமக்குத் தேவை உங்களின் ஒரு  வாக்கு தான். இவ்வளவு நாள் என் பேச்சைக் கேட்டீர்கள். இடையில் மறந்துவிட்டீர்கள்."

  "முன்பு யானை சின்னத்தில் தனியாக நின்று நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இன்று கூட்டணியில் சேர்ந்து 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இதைப் பார்த்து நமக்கு கோபம் வரவில்லையா?"

 "சிலர் எங்கே கூட்டணி என்று கேட்கிறார்கள். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். கூட்டணியை முடிவு செய்வேன். அதைப் பற்றி நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம். சீட் வேண்டும்,  எம்.எல்.ஏ வேண்டும் என்றால் உழைக்கலாம்."

  "அந்தக் கூட்டணி...இந்தக் கூட்டணி.. கட்சிக்குள்ளேயே கூட்டணி.. கட்சிக்குள்ளேயே கூட்டு. இதெல்லாம் நடக்காது. உன்னை திருத்திக் கொள். இந்தக் கட்சியில் நீ பொறுப்பில் இருக்கவே முடியாது. அது யாராக இருந்தாலும் சொல்கிறேன்."

"இன்னும் 2 மாதம் கடந்தால் எனக்கு 87 வயது. வயதாகிவிட்டது எனக் கூறி ஏமாற்றப் பார்க்காதீர்கள். இந்தக் கட்சி ஒரு தனி மனிதனின் சொத்து அல்ல." எனப் பொரிந்து தள்ளிவிட்டார் ராமதாச்.

 ராமதாஸின் பேச்சைக்கேட்டபடி அன்புமணி அசட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருந்தார்.  அடங்கி இருந்த குடும்பப் பிரச்சனையை மாநாட்டில்  வெளிப்படுத்திவிட்டார்.

மாநாடு தொடர்பாக  அடுத்த நாள் திங்கள்கிழமை  அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி, தமிழ்நாடு அரசியல் களத்தில் இந்த மாநாடு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். அறிக்கையில் தன்னை பா.ம.க-வின் தலைவர் என அன்புமணி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 10 ஆம்  திக‌தியன்று தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி, அவரை செயல் தலைவராக மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார். கட்சியின் மாநாடு நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ராமதாஸின் இந்த அறிவிப்பு, அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது. இப்போது அன்புமணி தலைவர் என அறிக்கை விட்டிருந்தார்.

  தனது  மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் பரசுராமனுக்கு ராமதாஸ் கட்சிக்குள் முக்கிய பதவி கொடுத்ததை அன்புமணியால் ஜீரணிக்க முடியவில்லை.

இம்மாநாட்டுக்காக  அன்புமணி ராமதாஸ் வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ஒரு இடத்தில் மட்டுமே ராமதாஸின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. "அண்ணன் அன்புமணி அழைக்கிறார்" என்று  பாடல் முழுவதும் அன்புமணியில் அழைப்பு இருந்தது.

 ராமதாஸ், தனியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்புமணியின் படம் ஒரு இடத்தில் கூட இடம்பெறாத நிலையில், "ஐயா அழைக்கிறார்" என்றே அந்த பாடல் தொடங்குகிறது. அண்ணனா? ஐயாவா யாருக்குப் பின்னால் நிறப்து எஅந்த் தெரியாமல் கட்சியில் உள்ளவர்கள்  குழம்பிப்போய் உள்ளனர்.

ராமதாஸ்,  பேரன் பரசுராமன் ஆகிய இருவரும் ஒரு பக்கமாக நிற்கிறார்கள். அன்புமணியும் அவருடையா மகள்களும் இன்னொரு பக்கமாக நிற்கிறார்கள். குடும்பப்பிரச்சனையால் கட்சிக்கு என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் அடுத்த தலைவர்களும், தொண்டர்களும் இருக்கிறார்கள்.

  தகப்பனுக்கும் மகனுக்கும் இடையேயான மோதல் கடந்த டிசம்பரில் ஆரம்பமானது. பிரச்சனைகள் அனைத்தும்  முடிந்து விட்டதாக ஜி.கே. மணி  உள்ளிட்டவர்கள் கூறினார்கள்.  ஆனால், பிரச்சனை கைமீறிப் போய்விட்டதை ராமதாஸின்  பேச்சு வெளிப்படுத்தியது.

 பாரதீய ஜனதாவுடன்  கூட்டணி சேர வேணும் என அன்புமணி விரும்புகிறார். அப்போதுதான்  எம்பி பதவியில் தொடரலாம் அமைச்சராகலாம் என்பது அவரது கனவு.அண்ணா திரவிட முன்னேற்றக் கழகத்தின் தயவிலேதான் அன்புமணி எம்பியாக  இருக்கிறார்.

ராமதாஸ் இன் எதிர்  பார்ப்பு வேறுவகையாக  இருக்கிறது. திரவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்வதற்கு ராமதாஸ் முயற்சி செய்கிறார்.

தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு காலத்தில் இருந்த பாட்டாளி இப்போது பொலிவிழந்துள்ளது. அவசரம் இல்லாது ஆறுதலாகப் பேசும் கட்சியா பாட்டாளி மக்கள் கட்சி  மாறிவிட்டது.

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி  ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு கடந்த ஏப்ரல் 8‍ம் திக‌தி முக்கிய தீர்ப்பு வழங்கியதுமாநில அரசின் மசோதா குறித்து ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை, தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆளுநரால் கிடப்பில் போடப்பட்ட மசோதாக்களுக்கு நீதிமன்றம் உயிர் கொடுத்தது.ஆளுநரின் கையெழுத்து இல்லாமலே அவற்றை நடைமுறைப் படுத்தியது நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பு இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது.  ஆளுநரின் அதிகாரத்தின் மூலம் மாநிலங்களை முடக்கும் பாரதிய ஜனதாவுக்கு சாட்டையடி விழுந்துள்ளது. ஆளுநர் பதவி விலக வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்தது. இதுவரை அமைதியாக இருந்த பாரதீய ஜனதா இந்திய ஜனதிபதி மின் மூலம் நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பி உள்ளது.

  இந்த தீர்ப்பு தொடர்பாக  ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

அரசியலமைப்பு சட்டம் 143 (1)-வது பிரிவு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தின்படி, 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வந்து, அதுகுறித்து தனது கருத்துகளை தெரிவிக்குமாறு கோருகிறேன்.

. இந்திய அரசியலமைப்பு சட்டம் 200-வது பிரிவின்படி, மாநில ஆளுநரிடம் ஒரு சட்டமசோதா சமர்ப்பிக்கப்படும்போது அவருக்கு உள்ள சட்டரீதியான வாய்ப்புகள் என்னென்ன?,

 ஒரு மசோதாவை தாக்கல் செய்யும்போது, மாநில அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா?,

 அரசியலமைப்பு வழங்கி உள்ள விருப்பு உரிமையை ஆளுநர் பயன்படுத்துவது நியாயமானதா?,

  அரசியலமைப்பு சட்டத்தின் 361-வது பிரிவு, ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பான நீதிமன்ற மறுஆய்வுக்கு தடையாக உள்ளதா?,

 அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எவ்வித காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. அப்படி இருக்க, நீதிமன்ற உத்தரவு மூலம் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? போன்ற 14 கேள்விகளை ஜனாதிபதி எழுப்பி உள்ளார்.

அவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு பதில் அளிக்க 5 நீதிபதிகள் கொண்டஅரசியல் சாசன அமர்வை அமைக்க வேண்டும். அந்த அமர்வுதான் குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் என  சட்டம் தெரிந்தவர்கள் தெரிவித்தனர்.

 

ரமணி

18/5/25

  

Tuesday, May 13, 2025

வரலாற்றில் இடம் பிடித்தார் போப் லியோ


  புதிய போப்பைத் தேர்வு செய்ய‌  கார்டினர்கள்   கூடினார்கள். அடுத்த போப் யார் என்ர  கருத்துக் கணிப்புகள் உலகெங்கிலும் பரவின.

முதல் நாளில் கரும்புகை வெளியாகியதால் மக்கள் ஏமாற்ற மடைந்தனர்.  இரண்டாம் நாள் வியாழக்கிழமை வியாழக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி சிஸ்டைன் தேவால முன்றலில் கூடி இருந்த மக்கள் ஆவலுடன் குகைபோக்கியைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.   மேல் இருந்த தற்காலிக புகைபோக்கி வெள்ளைப் புகையை வெளியிட்டது, இது உள்ளே பணிபுரியும் 133 கார்டினல்கள் கத்தோலிக்க திருச்சபைக்கு ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அடைந்துவிட்டதைக் குறிக்கிறது.

அதன் பிறகு சிறிது நேரத்திலேயே அமெரிக்க கார்டினல் ராபர்ட் பிரீவோஸ்ட் 267வது போப்பாக அறிவிக்கப்பட்டார். அவர் லியோ XIV என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார் என்று ஒரு மூத்த கார்டினல் டீக்கன் அறிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களுக்கு ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில், புனித பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான  மக்கள்  வெள்ளைப் புகையைஅக் கண்டு  கைதட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான பல நூற்றாண்டுகள் பழமையான இரகசிய சடங்கான இந்த மாநாடு, நான்கு வாக்குப்பதிவுகளுக்குப் பிறகு இரண்டாவது நாள் வாக்களிப்பில் முடிந்தது.புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் புனித பீட்டர்ஸ் பசிலிக்கா மணிகள் ஒலித்தன.

கார்டினல்  ரொபேர்ட்  பிரான்சிஸ் பிரீவோஸ்ட் முதல் அமெரிக்க போப் ஆனார் - மேலும் லியோ XIV என்ற பெயரைப் பெறுவார்.

இந்தச் செய்தியை அறிவித்த அவர், கீழே உள்ள சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தபோது, "எங்களுக்கு ஒரு போப் இருக்கிறார்" என்று பொருள்படும் பிரபலமான லத்தீன் வார்த்தைகளான "ஹேபமஸ் பாப்பம்" என்று கூறினார் . 69 வயதான பிரீவோஸ்ட், சிகாகோவைச் சேர்ந்தவர்.பெருவில் ஒரு மிஷனரியாக தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தார், மேலும் 2023 இல்   கார்டினல் ஆனார்.அவர் சில ஊடக நேர்காணல்களை மட்டுமே வழங்கியுள்ளார்,  பொதுவில் அரிதாகவே பேசியுள்ளார்.

முதல் லத்தீன் அமெரிக்க போப்பாகவும், 12 ஆண்டுகள் திருச்சபையை வழிநடத்தியும், நவீன உலகிற்கு நிலையான நிறுவனத்தைத் திறக்க பரவலாக முயன்ற போப் பிரான்சிஸ் கடந்த மாதம் இறந்த பிறகு லியோ 267வது கத்தோலிக்க போப்பாண்டவராகிறார்.

பிரான்சிஸ் பல்வேறு சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினார் மற்றும் பெண்களின் நியமனம் மற்றும் LGBT கத்தோலிக்கர்களை சிறப்பாகச் சேர்ப்பது போன்ற பிளவுபடுத்தும் பிரச்சினைகள் குறித்து விவாதத்தை அனுமதித்தார்.


சிகாகோவை பூர்வீகமாகக் கொண்ட 69 வயதான இவர் முதல் அமெரிக்க போப் ஆவார், மேலும் திருச்சபையில் ஒரு இராஜதந்திரியாகவும் பார்க்கப்படுகிறார்.

"இது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் முதல் வாழ்த்து. உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்" என்று போப்பாக தனது முதல் உரையில் இத்தாலிய மொழியில் லியோ கூறினார். "இது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் அமைதி."

போப் லியோ XIV, போப்பாக தனது முதல் உரையில்  மறைந்த போப் பிரான்சிஸுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

புதிய போப்பாக பொறுப்பேற்ற சிறிது நேரத்திலேயே போப் லியோ XIV உலகிற்கு அளித்த முதல் செய்தி, உலகிற்கு அதிக அமைதியையும் தொடர்புகளையும் கொண்டு வருவதில் கவனம் செலுத்தியது.

புதிய போப், புனித பீட்டர்ஸ் பசிலிக்காவின் பால்கனியில் காலடி எடுத்து வைத்த பிறகு, எழுந்து நின்று, மிகப்பெரிய, ஆரவாரக் கூட்டத்தைப் பாராட்டினார்.

"இது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் முதல் வாழ்த்து. உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்" என்று லியோ இத்தாலிய மொழியில் கூறி, ஆரவாரங்களுக்கு மத்தியில் ஓய்வு எடுத்தார். "இது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் அமைதி."

ஈஸ்டர் பண்டிகைக்கு ஒரு நாள் கழித்து காலமான தனது முன்னோடி போப் பிரான்சிஸுக்கு போப் தனது அஞ்சலிகளைத் தெரிவித்தார்.

வியாழக்கிழமை ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 267வது போப்பாக தனது பால்ய நண்பர் ராபர்ட் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஷெர்ரி ஸ்டோன் அறிந்ததும், அவர் தனது கணினியில் வேலை செய்து, சிலரால் மட்டுமே செய்யக்கூடியதைச் செய்தார்: அவருக்கு வாழ்த்துக் குறிப்பை  சிக்காக்கோவில் இருந்து மின்னஞ்சல் மூலம் அனுப்பினார்.

"எங்கள் அடுத்த வகுப்பு பள்ளி மறு கூட்டத்தை வத்திக்கானில் நடத்துவது பற்றி யோசித்துக்கொண்டிருப்பதாக நான் அவரிடம் சொன்னேன்," என்று அவர் கூறினார்.

2009 ஆம் ஆண்டு  பராக் ஒபாமா வெள்ளை மாளிகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இந்த நகரத்தை பல மாதங்களாக மகிழ்ச்சியான உற்சாகத்தில் ஆழ்த்தியது, மேலும் ஒரு ஜனாதிபதியை உருவாக்கியது இன்னும் பெருமைக்குரியதாகவே உள்ளது.

சிகாகோ மேயர் பிராண்டன் ஜான்சன் புதிய போப்பிற்கு ஒரு முறைசாரா செய்தியை அனுப்ப இந்தச் செய்தியைப் பயன்படுத்தினார்: "போப் உட்பட அனைத்தும் சிகாகோவிலிருந்து வருகின்றன!" என்று அவர் X இல் பதிவிட்டார். "முதல் அமெரிக்க போப் லியோ XIV க்கு வாழ்த்துக்கள்! விரைவில் உங்களை வீட்டிற்கு வரவேற்போம் என்று நம்புகிறோம்."

லியோ வடக்கு பெருவில் இரண்டு தசாப்தங்களைக் கழித்தார், அங்கு அவர் ஒரு பிஷப்பாகவும் குடிமகனாகவும் ஆனார், அவரது ஆரம்பகால வேர்கள் தென்மேற்குப் பகுதியில் உள்ளன, இது எஃகு ஆலைகள் மற்றும் ஆட்டோமொபைல் ஆலைகள், ஒயிட் சாக்ஸ் மற்றும் பிளாக்ஹாக்ஸ் ரசிகர்கள், செங்கல் பங்களாக்களின் வரிசைகள் மற்றும் சுற்றுப்புற தேவாலயங்கள் மற்றும் கிரேடு பள்ளிகள் ஆகியவற்றின் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற பகுதி.

1955 ஆம் ஆண்டு சிகாகோவில் பிறந்த லியோ, நகரின் எல்லையில் உள்ள தற்போது மூடப்பட்டிருக்கும் ஒரு தரநிலைப் பள்ளியான செயிண்ட் மேரிஸ் ஆஃப் தி அஸ்ம்ப்ஷனில் பயின்றார், மேலும் அவர் பள்ளிக்கு எதிரே அமைந்துள்ள தென்மேற்கு புறநகர்ப் பகுதியான டால்டனில் வளர்ந்தார். பின்னர் அவர் 1982 ஆம் ஆண்டு ஏரிக்கரையில் அமைந்துள்ள ஹைட் பார்க்கில் உள்ள கத்தோலிக்க இறையியல் ஒன்றியத்திலிருந்து தெய்வீக முதுகலைப் பட்டம் பெற்றார், அதே ஆண்டு அவர் திருச்சபையில் நியமிக்கப்பட்டார். அவர் சிகாகோவின் அகஸ்டினியன் மாகாணத்துடன் தனது ஊழியத்தைத் தொடங்கினார், பின்னர் கத்தோலிக்க இறையியல் ஒன்றியத்தின் படி உலகளாவிய அகஸ்டினியன் ஒழுங்கின் முதன்மை ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 

அகஸ்டீனியன் சபையின் உறுப்பினரான ரெவ். வில்லியம் லெகோ, இருவரும் இளம் பாதிரியார்களாக மாறுவதற்கு முன்பு லியோவுடன் கிரேடு பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் செமினரியில் பயின்றார். வியாழக்கிழமை அவர் "ஃபாதர் பாப்" ஐ தனது புதிய பெயரால் அழைப்பதைப் பழக்கப்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

"அவர் எப்போதும் மிகவும் புத்திசாலி, ஒருபோதும் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காதவர், மக்களை மரியாதையுடன் நடத்தினார், மேலும் அவர் கேட்பார். அதைத்தான் அவர் போப்பாண்டவருக்குக் கொண்டு வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று லெகோ கூறினார்.

அவர்களின் பகிரப்பட்ட சிக்காகோ வேர்களைப் பொறுத்தவரை, லெகோ மேலும் கூறினார், "எப்போதும் பெருமையின் குறிப்பு இருக்கும்."

ஒபாமாவைப் போலவே, பல உள்ளூர்வாசிகளும் லியோவுடன் தனிப்பட்ட தொடர்பைக் கொண்டுள்ளனர். அந்த நேரத்தில் அவர்களின் கடைசி பெயர்கள் இரண்டும் "P" உடன் முடிவடைந்ததால், நதியா வீர் எட்டு ஆண்டுகள் வகுப்பறையில் லியோவின் அருகில் அமர்ந்திருந்தார். அப்போதும் கூட அவர் மிகவும் பக்தியுள்ளவராகவும் படிப்பில் ஆர்வமுள்ளவராகவும் இருந்தார், அவரது புனைப்பெயர் "ஃபாதர் ராபர்ட்" என்று அவர் கூறினார்.

"அவர் ஒரு பாதிரியாராக இருப்பார் என்று நாங்கள் எப்போதும் நினைத்தோம்," என்று அவள் சொன்னாள். "அவர் உண்மையிலேயே நீல நிறத்தில் இருந்தார். அவர் நல்லவர். நான் அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். மக்கள் வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், அவர்கள் அதற்கு தகுதியானவர்கள். ராபர்ட்டும் அதற்கு தகுதியானவர்."


சிறுவனாக இருந்தபோதே லியோ தனது நம்பிக்கையின் மீது கொண்டிருந்த தீவிரம் ஸ்டோனை மிகவும் கவர்ந்தது, அவர் ஒருமுறை போப்பாக தேவாலயத்தை வழிநடத்த விரும்புவதாக மக்களிடம் கூறியதாகக் கூறினார்.

"மிட்வெஸ்ட் மக்கள் மிகவும் நியாயமானவர்கள். அந்த சூழலில் வளர்ந்ததால் அவர் ஒரு மையவாத போப்பாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் மக்களை ஒன்றிணைப்பார். அவர் சிறந்த போப்களில் ஒருவராக இருப்பார்," என்று அவர் கூறினார்.

சிகாகோவின் தெற்குப் பகுதியில் ஒரு பள்ளி முதல்வராக இருந்த அவரது தந்தை, 1990களில் சிகாகோ மறைமாவட்டத்தில் தன்னார்வத் தொண்டு செய்தார். அப்போது மறைமாவட்டத்திற்கான பள்ளிகளின் இணை கண்காணிப்பாளராக இருந்த ஜேனட் சிஸ்லர், "ஃபாதர் பாப்" தனது சொந்த ஊருக்குத் திரும்பும்போது அங்கு வருவார் என்பதை நினைவு கூர்ந்தார்.

புதிய போப்பின் அறிக்கையில், திருச்சபையில் பெண்களின் நிலைப்பாடு முதல் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டம் மற்றும் போப்பாண்டவர் நிதியை மீட்டெடுப்பது வரை பல கோரிக்கைகள் உள்ளன.

கத்தோலிக்க திருச்சபைக்குள்ளும் உலகெங்கிலும் உள்ள மக்கள் புதிய போப் அவர்களை எவ்வாறு கையாள்கிறார் என்பதைக் கவனிப்பார்கள்.

பாலியல் துஷ்பிரயோகம் குறித்து போப் பிரான்சிஸ் தனது முன்னோடிகளை விட அதிகமாகச் சென்றதாக பல கத்தோலிக்க உள்நாட்டினர் பாராட்டுகின்றனர்.

2019 ஆம் ஆண்டு இந்தப் பிரச்சினை குறித்து ஒரு மாநாட்டிற்கு அவர் ஆயர்களை ஒன்று திரட்டினார், இது துஷ்பிரயோக வழக்குகளின் போது தேவைப்பட்டால் சிவில் நீதிமன்றங்களுடன் ஒத்துழைக்க அனுமதிக்கும் மாற்றத்திற்கு வழிவகுத்தது.

ஆனால் அது சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் வெளியிட கட்டாயப்படுத்தும் அளவுக்குச் செல்லவில்லை.

எந்தவொரு துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளும் இப்போது சர்ச் தலைவர்களிடம் குறிப்பிடப்பட வேண்டும், ஆனால் சீர்திருத்தவாதிகள் அத்தகைய வழக்குகள் தானாகவே காவல்துறையிடம் குறிப்பிடப்பட வேண்டும் என்று ஆணையிடுவதை நிறுத்திவிட்டனர்.

பல துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், போப் பிரான்சிஸின் கீழ் முன்னேற்றத்தைக் கண்டதாக ஒப்புக்கொள்கிறார்கள், அவர் தங்கள் கணக்குகளைக் கேட்பதில் அதிக நேரம் செலவிட்டார், ஆனால் சீர்திருத்தங்கள் போதுமான அளவு செல்லவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

அடுத்த போப் இந்த விஷயத்தில் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டிய அழுத்தத்தில் இருப்பார்.

போப் பிரான்சிஸ், வேறு எந்த போப்பாண்டவரையும் விட வத்திக்கானில் பெண்களை மேம்படுத்துவதற்கு அதிகமாகச் செய்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ஒரு குறிப்பிடத்தக்க ஆயர் கூட்டத்தில் பெண்கள் வாக்களிக்க அனுமதித்தார்.

பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தபோதிலும், அவர்கள் சர்ச் படிநிலையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அவர் எதிர்த்தார், மேலும் பெண்கள் திருச்சபை நியமனம் பெறுவதற்கான விதிகளை மாற்றவில்லை.

இந்த நிகழ்ச்சி நிரலை முன்னோக்கி தள்ளுவதா அல்லது மீண்டும் கட்டுப்படுத்துவதா என்பதை அவரது வாரிசு முடிவு செய்ய வேண்டும்.

பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் பெண்கள் அதிக அளவில் வேலை செய்வதால் இது ஒரு அழுத்தமான கவலையாகும், ஆனால் பலர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது குறித்து விரக்தியடைந்துள்ளனர். வத்திக்கான் புள்ளிவிவரங்களின்படி, 2012 முதல் 2022 வரையிலான தசாப்தத்தில் ஆண்டுக்கு 10,000 கன்னியாஸ்திரிகள் வெளியேறியுள்ளனர்.

  2013 ஆம் ஆண்டில் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் பற்றி கேட்டபோது "நான் யார் என்று தீர்ப்பளிக்க?"  என்று போப் பிரான்சிஸ்   கூறினார்.

அவரது ஆதரவாளர்கள், ஒரே பாலின ஜோடிகளுக்கு ஆசீர்வாதங்களை அனுமதிப்பது உட்பட, தேவாலயத்தை மேலும் திறந்ததாக மாற்ற அவர் முயன்றதாகக் கூறுகிறார்கள், ஆனால் விமர்சகர்கள் அவர் போதுமான அளவு செல்லவில்லை என்று வாதிடுகையில், சில பழமைவாதிகள் கோபமடைந்தனர்.

கத்தோலிக்க திருச்சபை அதன் பாரம்பரிய தளமான ஐரோப்பாவில் உறுப்பினர்களை இழந்து வரும் அதே வேளையில், உலகளாவிய தெற்கில் அது வேகமாக வளர்ந்து வருகிறது.

பிறேஸில், மெக்ஸிகோ மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்களுடன், இந்தப் பகுதி கத்தோலிக்க மதத்தின் புதிய ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகமான கார்டினல்களை நியமிப்பதன் மூலம் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்த போப் பிரான்சிஸ் முயன்றார், மேலும் புதிய போப் இதைத் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வத்திக்கான் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது.போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பட்ஜெட் பற்றாக்குறை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது மற்றும் ஓய்வூதிய நிதியில் €2 பில்லியன் (£1.7 பில்லியன்) வரை பற்றாக்குறை உள்ளது.

கொவிட்-19 மற்றும் நீண்டகால அதிகாரத்துவ சவால்களால் அதிகரித்த இந்தப் பணக் கவலைகள், அடுத்த போப்பிற்கு ஒரு பெரிய கவலையைக் குறிக்கின்றன.

 

 வர்மா

11/5/25 

சிஎஸ்கேயின் எல்லைச்சாமி டிவால்ட் பிரெவிஸ்


 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 மறக்க கூடிய சீசனாக மாறியுள்ளது, சீசனை வெற்றியுடன் சிஎஸ்கே அணி தொடங்கினாலும் அதன் பின்னர் ஏற்ப்பட்ட தொடர் தோல்விகள் காரணமாக சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பிளே ஆஃப் கூட செல்ல முடியாமல் வெளியேறியது. சிஎஸ்கே அணியின் நீண்ட நாள் ஃபார்மூலாவாக இருந்த அனுபவம் இந்த சீசனில் பலிக்காமல் போனது.

கப்டன் ருதுராஜும் காயத்தால் விலக சென்னை அணிக்கு மீண்டும் கப்டனானார் எம்.எஸ் டோனி, ஆனால் அவரின் மந்திரமும் இந்த உடைந்த சிஎஸ்கே கப்பலை கரை சேர்க்க முடியவில்லை.

சிஎஸ்கே அணியில் காயம் காரணமாக  இரண்டு மூன்று வீரர்கள் வெளியேற மாற்றுவீரர்களாக ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ், உர்வில் பட்டேல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் வந்ததிலிருந்து சென்னை அணி வேறு அணியாக மாறியுள்ளது.

முக்கியமாக சென்னை அணி புதிய எல்லைச்சாமியாக மாறியுள்ளார் டிவால்ட் பிரெவிஸ், சிஎஸ்கே அணிக்கு மிடில் ஆர்டரில்  மொசமானது  என்று சொன்னதற்கு  இது போதுமா  பொதுமா என்று கேட்கிற அளவுக்கு மிரட்டுகிறார் டிவால்ட் பிரெவிஸ். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். இறங்கிய முதல் போட்டியிலேயே தனது முத்திரையை பதித்தார் பிரெவிஸ் 25 பந்துகளில் 42  ஓட்டங்கள் என்று விளாசினார். அடுத்த நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இக்கட்டான நிலையில்  கைகொடுத்தார்.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் டக் அவுட்டானர்.   கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் சென்னை அணி  5 விக்கெற்களை இழந்து 61  ஓட்டங்கள் எடுத்து  தத்தளித்து கொண்டு இருந்த போது சென்னை அணியை சரிவிலிருந்து மீட்டதும் மட்டுமில்லாமல் சிஎஸ்கே அணியை வெற்றிப்பக்கம் திருப்பினார். 25 பந்துகளில் 52  ஓட்டங்கள் விளாசினார். இதில் வைபவ் அரோராவின் ஒரே ஓவரில் 30  ஓட்டங்களை விளாசினார். 

சென்னை அணிக்கு துடுப்பாட்டத்தில் மட்டுமில்லாமல் ஃபில்டிங்கிலும் அசத்தி வருகிறார் பிரெவிஸ் சென்னை அணிக்கு ஃபாப் டூ பிளெசிஸ் முன்னர் என்ன செய்தரோ அதையை மீண்டும் பிரதிப்பலிக்கிறார் பிரெவில் இவரை பேபி ஏபிடி என்று ரசிகர்கள் கூறினாலும், உண்மையில் இவர் பேபி ஃபாப் டூ பிளெசிஸ்  என்றே சொல்லலாம்.

  

Monday, May 12, 2025

அவமானப்படுத்தப்பட்ட ரோஹித் அன்றே கணித்த கில்கிறிஸ்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் கப்டனான ரோகித் சர்மா மே ஏழாம் திகதி  சர்வதேச டெஸ்ட்டில்   இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தற்போது 38 வயதாகும் ரோஹித் சர்மா ரி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் தொடர்ச்சியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதாக ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்திய அணியின்  வெற்றிகரமான க‌ப்டனாக ரி20 உலகக் கிண்ணம்,  ஐசிசி சம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்த கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா இன்னும் சில ஐசிசி கோப்பைகளை வெல்ல காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டதிலிருந்து அவரது டெஸ்ட் எதிர்காலம் குறித்த பல்வேறு பேச்சுகள் இருந்து வந்தன.

இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் அவர் கப்டன்சியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் சில செய்திகள் பரவி வந்தது. இவ்வேளையில் அவர்   திடீரென டெஸ்ட் கிறிக்கெற்றில்  இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இப்படி திடீரென ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் ரோகித் சர்மாவிற்கு அணியில் இடம் கிடைப்பது மிகக் கடினம். அதன் காரணமாக அணியில் இடம் கிடைக்காமல் போகும் அவலநிலை தனக்கு ஏற்படக்கூடாது என்று ரோகித் சர்மா நினைத்திருக்கலாம்.

  தற்போது 38 வயதாகும் அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்பது உறுதியாக தெரியாது. அதோடு அடுத்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் சுழற்சிக்கான முழு போட்டியிலும் அவரால் விளையாட முடியாது. இதன் காரணமாக 2027 ஒருநாள் உலகக்  கிண்ணத்திக்  கருத்தில் கொண்டு அதில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடலாம் என்பதற்காக ரோஹித் சர்மா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

ரி20 , டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றால் அவரது முழு கவனமும், செயல்பாடும் அந்த ஒருநாள் உலகக்கோப்பையை நோக்கி மட்டுமே இருக்கும் என்பதனால் அந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

 . 2024-25 இல் நடைபெற்ற இந்தியா ,அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிவிலேயே அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கலாம். ஆனால், அப்போது கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து தாமாக விலகியதாகக் கூறிய ரோஹித் சர்மா, அதன் பின்னர் கடும் கேலி கிண்டலைச் சந்தித்தார். தற்போது இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்திருக்கிறார். பிசிசிஐ வாய்ப்பை மறுக்கும் அளவுக்கு ரோஹித் சர்மா சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த மோசமான நிலையை அவரே தான் தேடிக் கொண்டிருக்கிறார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024-25ல் இந்திய அணி விளையாடிய கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றிலும் தோல்வியடைந்தது இந்திய அணி. அந்தத் தொடரில் கப்டன் ரோஹித் சர்மா படுமோசமாக விளையாடியிருந்தார்.

 இந்திய மண்ணிலேயே ஓட்டம் குவிக்க முடியாத அவர் அவுஸ்திரேலியாவில் எப்படி  ஓட்டங்களைக்  குவிப்பார் என்று கேள்வி அப்போதே இருந்தது. அப்போது அவரை இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலிருந்து ரோஹித் சர்மா பங்கேற்றார். முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி அடுத்து ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய 3 போட்டிகளில் வரிசையாகத் தோல்வியடைந்தது. இதை அடுத்து, ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. அப்போது தனது மோசமான ஃபார்ம் காரணமாக, ஐந்தாவது போட்டியிலிருந்து விலகுவதாக ரோஹித் சர்மா அறிவித்தார். ஒரு கப்டன் எப்படி தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக் கொள்ள முடியும் என முன்னாள் அவுஸ்திரேலிய வீரர்கள் அதைக் கேலி செய்தனர். ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் இது பற்றி நெத்தியடியாகப் பேசியிருந்தார். "'ரோஹித் சர்மா தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் மற்றொரு சுற்று துவங்க இருக்கிறது. இந்த நிலையில் அவர் இந்திய அணியின் கப்டனாக மீண்டும் செயல்படுவது சந்தேகமே. எனவே அவர் விரைவாக தனது ஓய்வை அறிவிக்க வேண்டும். இனி அவர் இந்திய அணிக்காக விளையாட ,மாட்டார்" என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போலவேதான் இப்போது நடந்துள்ளது. ரோகித் சர்மா சிட்னியில் ஓய்வு அறிவித்திருந்தால், அது அவருக்கும் கௌரவமாக அமைந்திருக்கும்.

67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4302 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரி 40.57 ஓட்டங்கள் ஆகும். 12 செஞ்சரி, 18 அரை செஞ்சரி,88 சிக்ஸஸ், 473 பவுண்டரி. அதிக பட்சமாக 212 ஓட்டங்கள் அடித்துள்ளார்.இந்தியாவிற்கு வெளியே நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 31.01 ஓட்டங்கள் ஆகும். அவுஸ்திரேலியாவில் அவரது சராசரி 24.38 ஆகவும், தென்னாப்பிரிக்காவில் 16.63 ஆகவும் உள்ளது. ஆனால், இங்கிலாந்தில் அவரது சராசரி 44.66 ஓட்டங்கள் ஆகும். 

ரமணி

11/5/25  


டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றார் கிங் கோலி

 டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் விராட் கோலி.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பக் காலங்களில் தடுமாறினாலும் அப்போதைய கப்டன் டோனியின் அபிமான வீரராக ஆதரவு பெற்றார். அந்த ஆதரவை சரியாகப் பயன்படுத்திய விராட் கோலி நாளடைவில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இடத்தை நிரப்பும் அளவுக்கு துடுப்பாட்டத்தில்  முதுகெலும்பாக உருவெடுத்தார். குறிப்பாக 2013க்குப்பின் உலகின் அனைத்து வகையான மைதானங்களிலும் சூழ்நிலைகளிலும் அசத்திய விராட் கோலி தொடர்ச்சியாக பெரிய  ஓட்டங் குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.  டோனி 2014இல் கப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து கப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி இந்திய அணியை முழுமையாக மாற்றினார்.

அவரது தலைமையில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்தியா 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் ஐசிசி டெஸ்ட் அணியாக முன்னேறி வெற்றிகளைக் குவித்தது. குறிப்பாக அவுஸ்திரேலிய மண்ணில் 2018 19 ஆம் ஆண்டு பார்டர்கவாஸ்கர்  கிண்ணத்தை  வென்ற இந்தியா சரித்திர சாதனை படைத்தது.

68 போட்டிகளில் கப்டனாக செயல்பட்ட விராட் கோலி தலைமையில் இந்தியா 40 வெற்றிகளை குவித்தது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைக் குவித்த இந்திய, ஆசிய கப்டன் என்ற இரட்டை சாதனையை விராட் கோலி படைத்தார். இருப்பினும் அவரது தலைமையில் இந்தியா ஐசிசி உலகக்  கிண்ணத்தை  வெல்லத் தவறியதால் விமர்சனங்கள் எழுந்தன. அதனால் 2022இல் கப்டன்ஷிப் பொறுப்பை இராஜினாமா செய்த விராட் கோலி சாதாரண  வீரனாக  விளையாடி வந்தார்.

சமீபத்தில் ஓய்வு பெற்ற ரோகித் சர்மாவின் நண்பனாக விராட் கோலியும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விடை பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டு ரி 0 உலகக்  கிண்ண   வெற்றியுடன் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதைப் போல அவர்கள் மீண்டும் ஜோடியாக டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளனர்..

 இதுவரை 123 போட்டிகளில் விராட் கோலி 31 அரை சதம் 20 சதம் உட்பட 9230 ஓட்டங்களை 46.85 சராசரியில் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000  ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றை விராட் கோலி தவற விட்டுள்ளார்.

அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்து அணி உடனான டெஸ்ட் தொடரின் மூலம், அடுத்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிக்கான சுற்றுகள் தொடர்கிறது. சுமார் 2 ஆண்டுகளுக்கு இந்த போட்டிகள் நீடிக்கும். இதனைக் கருத்தில் கொண்டே எதிர்கால தலைமுறைக்கு வாய்ப்பளிக்கும் விதமாக கப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். அதே காரணத்தால் தான், விராட் கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது