தமிழக தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.களம் கண்ட அரசியல் ஜாம்பவான்களுடன் போட்டி போட அடுத்த தலைமுறையினர் தயாராகி விட்டனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கையில் இருந்த ஆட்சியை ஜெயலலிதாவின்
மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் கைப்பற்றினார்.
ஆட்சியைத் தக்க வைக்க ஸ்டாலின் காய் நகர்த்துகிறார்.இழந்த ஆட்சியைக் கைப்பற்ற எடப்பாடி
வியூகம் வகுக்கிறார். இத்தனை களேபரங்களுக்கிடையில் அரசியல் களத்தில் விஜய் ஆலோசனை செய்கிறார்.
மறுபுறம்
பிறேமலதாவும் தனது இருப்பை உறுதிப்படுத்துகிறார். அரசியல் சாணக்கியரான கருணாநிதியையே
ஓரம் கட்டியவர் விஜயகாந்த். ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையால் தமிழக எதிர்க்கட்சி ஆசனத்தைக்
கைப்பற்றியவர். ஜெயலலிதாவின் கோபப்பார்வை விஜயகாந்தை
அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்றியது.
விஜயகாந்த்
விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க அவரது மனைவி பிரேமலதா மகனை முன்னிலைப் படுத்துகிறார்.
2026
ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலை
எதிர்கொள்வதற்காக தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக என பல்வேறு கட்சிகளுடன் சீமான், விஜய் ஆகியோரும் திட்டமிட்டு செயல்பட்டு
வருகின்றனர். இவர்களுடன் பிரேமலதாவும் அரசியல்
களத்தில் குதித்துள்ளார்.
தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கடந்த 30ம் திகதி நடைபெற்றது. விஜயகாந்த் மறைவுக்குப் பின்னர் நடைற்ற முதல் பொதுக்குழுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதால் பல முக்கிய முடிவுகளும் இதில் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில்
தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக
அணி துணை செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட
கழக அவைத்தலைவர், மாவட்ட கழக பொருளாளர், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள், தலைமை செயற்குழு
உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள்,
பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட
மகளிர் அணி செயலாளர்கள் (ஒரு நபர் மட்டும்), மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா,
ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் இப்பொதுக்குழு
கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
தேமுதிக
பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் தேமுதிகவின்
இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரனும், பொருளாளராக எல்.கே சுதீஷும் நியமனம் செய்து அக்கட்சி
பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து விஜய பிரபாகரன் மேடையில் வைக்கப்பட்டு
இருந்த விஜயகாந்த் படத்தின் முன் நின்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்
அதன்பிறகு
விஜய பிரபாகரன் மேடையில் இருந்து கீழே இறங்க முற்பட்டார். அப்போது பிரேமலதா பிரபா..
பிரபா என்று அழைத்து கொஞ்சம் நிற்க வேண்டும் என்று கூறினார். பின்னர் மைக்கில் பேசிய
பிரேமலதா கையில் இருப்பது கப்டன் விஜயகாந்த்
மோதிரம். இந்த நாளில் அவருடைய தந்தை மோதிரத்தை அணிய வேண்டும் என்று விஜய பிரபாகரன்
விருப்பப்பட்டார். அதனால் கப்டனின் மூத்த புதல்வர் கப்டனின் வாரிசான விஜய பிரபாகரன்
அவர்களுக்கு கப்டன் மோதிரத்தை அட்சய திருதி நாளில் உங்களின் அனைவரின் சார்பாக நான்
ஒரு அணிவிக்கிறேன் என்று கூறினார்.
அப்போது
எல்.கே.சுதீஷ் பிரேமலதா விஜயகாந்த் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். தொடர்ந்து
பேசிய பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து கழகத்தின் வளர்ச்சிக்காக
50,000 ரூபாயை கழகப் பொருளாளர் இடம் வழங்குகிறேன் என்று கூறினார். இதனை தொடர்ந்து நடைப்பெற்ற
பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்திற்கு மணிமண்டபம், பாரத ரத்னா விருது உள்ளிட்ட 9 தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது.இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி
தேமுதிக நடைபெறும் என்று அறிவித்தார்.
பொதுக்குழுக்
கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்டந்தோறும் விஜயகாந்த் சிலைகளை
நிறுவுவது, சென்னையில் உள்ள 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயர் சூட்டப்பட வேண்டும்,
விஜயகாந்த்துக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்பது சில முக்கிய முடிவுகள் ஆகும்.
தானும்
விஜய பிரபாகரனும் அனைத்து சட்டசபைத் தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திக்கப் போவதாகவும்
பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்
தேமுதிக தற்போது எந்தக் கூட்டணியில் இருக்கிறது என்பதில் தெளிவு இல்லை. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. கடந்த லோக்சபா தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. தற்போது பிரிந்து கிடந்த அதிமுகவும், பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. இதனால் தேமுதிகவின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் அதிமுக - பாஜக கூட்டணியில்தான் தேமுதிகவும் இடம்பெறும் என்று தெரிகிறது. ஒரு வேளை அங்கு தேமுதிகவுக்கு உரிய மரியாதை கிடைக்காத பட்சத்தில் திமுக பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது. அல்லது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் இணைந்து போட்டியிடவும்சந்தர்ப்பம் இருக்கிறது.
அரசியல் களத்தில் குதித்த விஜய் கட்சியினரை மட்டும் சந்தித்து வருகிறார். பத்திரிகையாளர் சந்திப்பு எதனையும் நடத்தவில்லை. தமிழக வெற்றி கழகத்தின் வாக்கு சாவடி முகவர்களின்
கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் ரோடு ஷோ நடத்தினார்.இதில்
இலட்சக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.அப்போது விஜய் திறந்த வெளி வாகனத்தில் வரும் போது ரசிகர்கள்
திடீரென குதிப்பது, வாகனத்தை வேகமாக பின் தொடர்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இது
தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி
வைரலானது.
விஜயின் பின்னால் தொண்டர்கள் இல்லை.
வெறி பிடித்த ரசிகர்கள் மட்டுமே இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.
விஜயைப்
பார்ப்பதற்காக கூடிய கூட்டம் கட்டுக்கடங்காததால் பல அசம்பாவிதங்கள் நடைபெற்றன. இதனால் நொந்துபோன விஜய் அறிக்கைமூலம் கோரிகை விடுத்துள்ளார்.
என்
நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம்.
மூன்று
தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி
முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய
வைத்தீர்கள்! I love you Kovai and Kongu Thangams.
நம்
மீது இத்துணை அன்பைக் காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும், உண்மையான மக்களாட்சியையும்
உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் நாம் காட்டும் அன்புக் காணிக்கையாக
இருக்கும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம்.
இந்த
மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு என்னுடைய அன்பு
வேண்டுகோள்கள் சில உண்டு. அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம்
இல்லை.உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்
உங்க
அன்ப நான் மதிக்கறேன்…
இனி எப்பவும் மதிப்பேன்… அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது
உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விஜயைக் காணக் கூடும் கூட்டம் வாக்காகுமாஎன்பது தேர்தலின் போது தெரிந்து விடும்.
ரமணி
11/5/25
No comments:
Post a Comment