Friday, March 27, 2026

ரியல் மாட்ரிட் அணியில் ரொனால்டோவின் மகன்

 உதைபந்தாட்ட  ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 15 வயது மகன், தற்போது ரியல் மாட்ரிட்   கிளப்பின் இளைஞர் அமைப்புடன் சோதனை அடிப்படையில் உள்ளார் என்று ஸ்பானிய விளையாட்டுப் பத்திரிகையான டியாரோ ஏஎஸ் புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

கிறிஸ்டியானோவின் மகன் ர் திங்களன்று ரியல் மாட்ரிட்டின் கடெட் ஏ (16 வயதுக்குட்பட்டோர் அணி) உடன் பணியாற்றத் தொடங்கினார். பீபாவின்  விதிகளின்படி, அவர் எட்டு வாரங்கள் வரை சோதனை அடிப்படையில் கிளப்பில் இருக்கலாம்.

இந்த இளம் வீரர் தற்போது அல் நஸ்ர் இளைஞர் அமைப்பில் உள்ளார். இதற்கு முன்பு மான்செஸ்டர் யுனைடெட் ,யுவென்டஸ் அணிகளில் விளையாடியுள்ளார். அவர் ஒரு முன்கள வீரராக வளர்ந்து வருகிறார். தனது தந்தையைப் போலவே, இவராலும் விங்கராகவும் விளையாட முடியும். மேலும், அவர் ஏற்கனவே போர்ச்சுகல் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்காக அறிமுகமாகியுள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ (தந்தை) 2009-ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார். அங்கு அவர் 438 போட்டிகளில் 450 கோல்களை அடித்ததுடன், நான்கு சம்பியன்ஸ் லீக், இரண்டு கோபா டெல் ரே, இரண்டு லா லிகா பட்டங்கள் , மூன்று உலக கிளப் சாம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்றார். பின்னர் 2018-ல் யுவென்டஸ் அணியில் சேர்ந்தார்.

  

   

No comments: