உலகக்கிண்ண தகுதிகாண் போட்டியில்
பொலிவியாவிடம் 2-0 என்ற கோல் கணக்கில்
சிலி அணி தோல்வியடைந்ததை அடுத்து, தலைமை பயிற்சியாளர் ரிக்கார்டோ கரேகா இராஜினாமா செய்தார். இந்தத் தோல்வியின் மூலம்
2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை
சிலி இழந்தது..
தென் அமெரிக்க தகுதிப் போட்டியில் சிலி அணி 10வது
தோல்வியை சந்தித்தது. 10 நாடுகள் கொண்ட குழுவில்
சிலி அணி கடைசி இடத்தில் உள்ளது. பிளேஆஃப் வாய்ப்பையும் இழந்தது.
2024 ஆம் அண்டு ஜனவரியில் ரிக்கார்டோ கரேகா பயிற்சியாளர் பதவியை
பொறுப்பேற்றார்.அவருடைய தலைமையில் 13 போட்டிகளில்
விளையாடிய சிலி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது.
2015 , 2016 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக கோபா அமெரிக்கா பட்டங்களை வென்ற சிலி, 2018,2022 ஆம் ஆண்டுகளில் உலகக்கிண்ணப் ஓட்டியில் விளையாடத் தகுதி பெறாத சிலி தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கிண்ணப் போட்டியைத் தவற விடுகிறது.
No comments:
Post a Comment