Sunday, November 8, 2009

அசுரபலத்துடனான தமிழக அரசும்பலமிழந்துள்ள எதிர்க்கட்சிகளும்


தமிழக எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் முடங்கிப் போயுள்ளதால் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் எதுவித இடைஞ்சலும் இன்றி ஆட்சி செய்கிறது. காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய இரண்டு கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக உள்ளன. ஏனைய கட்சிகள் அனைத்தும் எதிர்க்கட்சிகளாகவே உள்ளன. அவை பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயற்படாமையினால் தமிழக அரசு சிறப்பாகச் செயற்படுவதாகவே மக்கள் கருதுகிறார்கள்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா ஆறு மாத அஞ்ஞாதவாசத்தின் பின்னர் கடந்த வாரம்தான் சென்னைக்குத் திரும்பினார். ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுத்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்துப் போயுள்ளன. கொடநாட்டில் ஓய்வெடுத்த ஜெயலலிதா தமிழக அரசுக்கு எதிராகப் போராட்டம் எதனையும் முன்னெடுக்கவில்லை. இதேவேளை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சில செயற்பாடுகளை கொடநாட்டில் இருந்து நிறைவேற்றினார் ஜெயலலிதா. கொடநாட்டில் இருந்து விடுத்த உத்தரவுக்கிணங்க கட்சியில் இருந்து சிலர் வெளியேற்றப்பட்டார்கள். ஒரு சில நிர்வாகிகள் தூக்கியெறியப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
முல்லை பெரியாறு விவகாரத்தில் இந்திய மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையில் ஏற்பட்ட புகைச்சலை சரியான முறையில் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தவறிவிட்டது. முல்லைபெரியாறு அணையை ஆய்வு செய்வதற்கு இந்திய மத்திய அரசின் துணை அமைச்சர் அனுமதி அளித்ததை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் போர்க்கொடி தூக்க அழைப்பு விடுத்தது.
தமிழக அரசுக்கு ஆதரவு வழங்கும் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்கள் அவ்வப்போது தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதும் பின்னர் அடங்கிப் போவதும் வழமையான நடவடிக்கைகளில் ஒன்று. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் இணைந்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள், தற்போது காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதையே தனது பிரதான கொள்கையாகக் கருதுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன ஒரே கூட்டணியில் இருந்தாலும் மூன்று கோணங்களில் உள்ளன. இந்த மூன்று கட்சிகளின் பலவீனங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவதற்கு ஜெயலலிதா தவறிவிட்டார். ஜெயலலிதாவின் பலவீனத்தினால் திராவிட முன்னேற்றக் கழகம் பலமான கட்சியாக உள்ளது.
அகில இந்திய ரீதியில் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடும் எனக் கருதப்படும் பாரதிய ஜனதாக் கட்சி தமிழகத்தில் தனி மரமாக உள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர தமிழக அரசியல் கட்சிகள் எவையும் தயாராக இல்லை.
பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழகத்தில் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு அக்கட்சியை விட்டு ஒதுங்கி உள்ளார். தனித்து நின்று தமிழக அரசை எதிர்க்கும் துணிவு பாரதீய ஜனதாக் கட்சிக்கு இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு மாற்றீடாக அரசியல் நாடகத்தில் நடிக்க களமிறங்கிய விஜயகாந்த் ஜெயலலிதாவையும் முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து அறிக்கை விடுவதுடன் தன் கடமை முடிந்தது என்ற திருப்திப்படுகிறார். எதிர்க்கட்சித் தலைவி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் விஜயகாந்த் நிலைமையை சரிவரப் பயன்படுத்தாமல் காட்டமான அறிக்கை வெளியிடுவதிலேயே கவனமாக உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இருந்தபோது, பொறுப்பான எதிர்க்கட்சி போன்று செயற்பட்ட டாக்டர் ராமதாஸ் அடுத்து என்ன செய்வதென்று தெரியாது தடுமாறுகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை பரம எதிரியாக கருதும் வைகோ, இலங்கைத் தமிழர் பிரச்சினையை மையப்படுத்தி தமிழக அரசைச் சாடுகிறாரே தவிர, தமிழக அரசின் தவறுகளை மக்கள் மத்தியில் அழுத்தமாகப் பதிவதற்குரிய நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் இரண்டு எதிர்க்கட்சி வரிசையில் உள்ளன. அவையும் தமக்குரிய பொறுப்பை சரிவர நிறைவேற்றவில்லை. தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தாமையினால் தமிழக அரசு எதுவித இடைஞ்சலும் இன்றி தனது பணியைத் தொடர்கிறது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியதையும் எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டிய தமிழக எதிர்க்கட்சிகள் பத்திரிகை அறிக்கையுடன் தமது பணியை முடித்துக் கொண்டன. தமிழக அரசை எதிர்ப்பதற்குரிய சந்தர்ப்பத்தை தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்து தவறவிட்டுள்ளன.
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு உரிமை வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி விரும்புகிறார். இதுவரை காலமும் அதிக அக்கறை காட்டாத அகதிகள் மீது தமிழக அரசு தற்போது கருணை காட்டத் தொடங்கி உள்ளது. துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆகியோர் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தங்கி இருக்கும் முகாம்களுக்குச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளின் அபிமானத்தைப் பெறுவதற்கு தமிழக அரசு திட்டம் தீட்டி உள்ளது. தமிழக எதிர்க்கட்சிகள் இந்த விசயத்திலும் முழு அளவிலான அக்கறையைக் காட்டவில்லை. எதிர்க்கட்சிகளின் பலவீனங்களை தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளம்ர் தமிழக முதல்வர் கருணாநிதி.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 08/11/09

5 comments:

Anonymous said...

நான் சமிபத்தில் படித்த ஒரு மிக சிறந்த அரசியல் கட்டுரை.. மிக ஆழமாக யோசித்து சரியாய் எழுதி உள்ளிர்கள்.. தி.மு.க எல்லோரையும் பணம் கொடுத்து வாங்கி நாட்களாகிவிட்டது அதில் தமிழக மக்களும் அடக்கம்.. என்பதை மறந்துவிட்டீர்கள்.. ஜெயலலிதா ஒரு சுயநல பேர்வழி..கருணாநிதி ஒரு கொள்ளைக்கார பேர்வழி.. மற்றவர்கள் பற்றி தாங்கள் அறிந்ததே.. பின் எப்படி ஜனநாயகம் தழைத்தோங்கும்..

Anonymous said...

நான் சமிபத்தில் படித்த ஒரு மிக சிறந்த அரசியல் கட்டுரை.. மிக ஆழமாக யோசித்து சரியாய் எழுதி உள்ளிர்கள்.. தி.மு.க எல்லோரையும் பணம் கொடுத்து வாங்கி நாட்களாகிவிட்டது அதில் தமிழக மக்களும் அடக்கம்.. என்பதை மறந்துவிட்டீர்கள்.. ஜெயலலிதா ஒரு சுயநல பேர்வழி..கருணாநிதி ஒரு கொள்ளைக்கார பேர்வழி.. மற்றவர்கள் பற்றி தாங்கள் அறிந்ததே.. பின் எப்படி ஜனநாயகம் தழைத்தோங்கும்..

Anonymous said...

நான் சமிபத்தில் படித்த ஒரு மிக சிறந்த அரசியல் கட்டுரை.. மிக ஆழமாக யோசித்து சரியாய் எழுதி உள்ளிர்கள்.. தி.மு.க எல்லோரையும் பணம் கொடுத்து வாங்கி நாட்களாகிவிட்டது அதில் தமிழக மக்களும் அடக்கம்.. என்பதை மறந்துவிட்டீர்கள்.. ஜெயலலிதா ஒரு சுயநல பேர்வழி..கருணாநிதி ஒரு கொள்ளைக்கார பேர்வழி.. மற்றவர்கள் பற்றி தாங்கள் அறிந்ததே.. பின் எப்படி ஜனநாயகம் தழைத்தோங்கும்..

Anonymous said...

நான் சமிபத்தில் படித்த ஒரு மிக சிறந்த அரசியல் கட்டுரை.. மிக ஆழமாக யோசித்து சரியாய் எழுதி உள்ளிர்கள்.. தி.மு.க எல்லோரையும் பணம் கொடுத்து வாங்கி நாட்களாகிவிட்டது அதில் தமிழக மக்களும் அடக்கம்.. என்பதை மறந்துவிட்டீர்கள்.. ஜெயலலிதா ஒரு சுயநல பேர்வழி..கருணாநிதி ஒரு கொள்ளைக்கார பேர்வழி.. மற்றவர்கள் பற்றி தாங்கள் அறிந்ததே.. பின் எப்படி ஜனநாயகம் தழைத்தோங்கும்..

Anonymous said...

நான் சமிபத்தில் படித்த ஒரு மிக சிறந்த அரசியல் கட்டுரை.. மிக ஆழமாக யோசித்து சரியாய் எழுதி உள்ளிர்கள்.. தி.மு.க எல்லோரையும் பணம் கொடுத்து வாங்கி நாட்களாகிவிட்டது அதில் தமிழக மக்களும் அடக்கம்.. என்பதை மறந்துவிட்டீர்கள்.. ஜெயலலிதா ஒரு சுயநல பேர்வழி..கருணாநிதி ஒரு கொள்ளைக்கார பேர்வழி.. மற்றவர்கள் பற்றி தாங்கள் அறிந்ததே.. பின் எப்படி ஜனநாயகம் தழைத்தோங்கும்..