Monday, March 15, 2010

திரைக்குவராதசங்கதி 16




மிகவும் அமைதியான அந்த மாணவியாரிடமும் அதிகமாகப் பேசமாட்டார். படிப்பில் மட்டுமே கவனம்செலுத்துவார். விளையாட்டு, பாட்டு, நடனம் இவை
எதிலுமே அந்த மாணவி பங்கு பற்றியதில்லை. சினிமா என்றால் வெறுப்பு. பிற்காலத்தில் மிகச் சிறந்த நடிகையாக இருப்பேன் என இந்த மாணவி
கனவிலும் சிந்திக்கவில்லை.கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தைச்சேர்ந்த ராமசாமி கவுண்டர், தங்கலட்சுமி ஆகியோரின் அன்பு மகள் விஜயகு
மாரிதான் அந்த மாணவி. சினிமாவைவெறுத்த விஜயகுமாரிதான் பின்னாளில்புகழ்பெற்ற நடிகையானார்.படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம்செலுத்தாத விஜயகுமாரி ஆண்டு விழாவில்நடனமாட வேண்டும் என்று ஆசிரியை கூறினார். ஆசிரியையின் உத்தரவைத் தட்டிக்கழிக்க முடியாததனால்வேதாள உலகம் என்னும் படத்தில் உள்ளவாசமுள்ள பூப் பறிப்பேனே என்ற பாட்டுக்குநடனம் ஆடப் பழகினார் விஜயகுமாரி.
ஆசிரியையைத் திருப்திப் படுத்தவே ஆண்டு விழாவில்விஜயகுமாரி நடனமாடினார். அவரின் நடனம்மிகச் சிறப்பானதெனக் கூறி அதற்குப் பரிசுவ ழங்கினார்கள். நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய். சினிமாவில்நடிக்க முயற்சி செய் என்று ஆசிரியை விஜயகுமாரியிடம் கூறினார். சினிமா என்றாலே எட்டடி தூரம் தள்ளிநிற்கும் விஜயகுமாரிக்கு அந்த ஆசிரியை மீதுவெறுப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த ஆசிரியையோதினமும் விஜயகுமாரியின் மனதில் சினிமா ஆசையைஊட்டினார்.ஆசிரியையின் போதனையால்மனம் மாறிய விஜயகுமாரி சினிமாக் கனவில் மிதக்கத் தொடங்கினார். சினிமாவில் நடிக்கும் தனது ஆசையைதகப்பனிடம் விஜயகுமாரி கூறி யபோது அதற்குக் கிடைத்த பதில் பளார்என ஒரு அடி.தன் கனவுசிதைந்ததால் அழுதுசாப்பிடாமல் இருந்தார்
விஜயகுமாரி. மகளின் வேதனையை உணர்ந்த தாயார்தகப்பனிடம் மகளின் ஆசைக்கு தடை போட வேண்டாம் எனக் கேட்டார். குடும்பத்தில் ஏதாவது பிரச்சினைஎன்றால் சாதகம் பார்ப்பது அக்குடும்பத்தின் வழமைகளில்ஒன்று.விஜயகுமாரியின் சாதகத்தை பார்ப்பதற்குஒரு சாத்திரியாரை அழைத்தார். அவர் விஜயகுமாரியின் சாதகத்தைப் பார்த்து ""சினிமாவில் இவ நல்லபேரும் புகழும் பெறுவார்'' என்றார். சாதகமே சொல்லிவிட்டது இனி தடைபோடுவது தப்பு என உணர்ந்ததகப்பன் மகள் விஜயகுமாரி சினிமாவில் நடிப்பதற்குபச்சைக்கொடி காட்டினார்
.விஜயகுமாரியின் சினிமாக்கனவை நிறைவு செய்வதற்கு உரிய சந்தர்ப்பமாகபுதுமுக நடிகை தேவை என ஏ.வி.எம்.நிறுவனம்விளம்பரம் செய்தது.ஸ்ரூடியோவில் புகைப்படம்எடுத்து ஏ.வி.எம். நிறுவனத்துக்கு விண்ணப்பம்அனுப்பினார். இரண்டு வாரங்களில் நேர்முகத் தேர்வுக்கு வரும்படி கடிதம் வந்தது. மகிழ்ச்சியுடன் சென்னைக்குச் சென்றார் விஜயகுமாரி.ஆடத் தெரியுமா? பாடத்தெரியுமா? நடிக்கத் தெரியுமா? எனக் கேட்ட கேள்வி
களுக்கு இல்லை என்று பதிலளித்தார். பாடசாலைஆண்டு விழாவில்ஆடிய நடனத்தைஆடிக் காண்பித்தார். ஊருக்குப்போங் கள் கடிதம்அனுப்புகி
றோம் என்று கூறினார்கள். மகளின்சினிமா வாழ்க்கைஇத்துடன் முடிந்துவிட்டது. தொடர்ந்து படிக்கட்டும்என்று விஜயகுமாரியின் தகப்பன்நினைத்தார். ஆனால் ஏ.வி.எம்மில் இருந்து கடிதம்வரும் என்ற நம்பிக்கை விஜயகுமாரியின் மனதில்இருந்தது. விஜயகுமாரி எதிர்பார்த்த அந்தக் கடிதம் வந்
தது. குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றனர்
.ஏ.வி.எம். மின் படங்களில் நடிப்பதற்கு விஜயகுமாரி ஒப்பந்தம் செய்யப்பட்டார். "குலதெய்வம்' என்ற படத்தில்எஸ். எஸ். ஆரின் ஜோடி யாக அவர் அறிமுகமானார்.திரையில் இணைந்த விஜயகுமாரியை இரண்டாந்தாரமாக மணமுடித்தார் எஸ்.எஸ். ஆர். குலதெய்வம் படத்தின்கதை வசனம் எழுதியவர் முரசொலி மாறன். அவருக்கும் அதுதான் முதல்படம்.குலதெய்வம் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் விஜயகுமாரியின் தாயார் மரணமானார். சென்னையில் அவர்களுக்குத் தெரிந்தவர் யாரும் இல்லை.எஸ்.எஸ். ஆர்தான் முன்னின்று எல்லா உதவியும் செய்தார்.குலதெய்வம் வெளியாகி விஜயகுமாரியின்நடிப்பு மிக நன்றாக இருப்பதாக எல்லாப் பத்திரிகைகளும் விமர்சனம் எழுதின. நல்ல ஒரு நடிகையைஏ.வி.எம். அறிமுகப்படுத்தியதாக ரசிகர்கள் கூறினார்கள். ஏ.வி.எம். மின் இன்னொரு வெற்றிப் படமாக குலதெய்வம் விளங்கியது.விஜயகுமாரியின் நடிப்பைப்பார்த்து வியந்த ஜெமினி மார்டடன் தியேட்டர்ஸ் புத்தாபிலிம்ஸ் ஆகியன தமது படத்தில் நடிக்கும் படிகேட்டன. ஏ.வி.எம்.முடன் விஜயகுமாரி செய்துகொண்ட ஒப்பந்தம் அதற்கு தடையாக இருந்தது. இதனைக்கேள்விப்பட்ட ஏ.வி. மெய்யப்பச் செட்டியார்ஒப்பந்தத்தை ரத்துச் செய்து ஏனைய நிறுவனங்களின்படங்களில் விஜயகுமாரி நடிக்க அனுமதி வழங்கினார்


.ரமணி
மித்திரன்வாரமலர்27/08/2007

No comments: