Tuesday, March 16, 2010

வைகோ நாடாளுமன்றம் செல்லவழிவிடுவாரா ஜெயலலிதா?


அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறப்பினர்களில் பலர் அக்கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் விசுவாசம் இன்றி இருக்கும் நிலையில் வைகோ, ஜெயலலிதா மீதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் அளவு கடந்த விசுவாசம் வைத்துள்ளார். அந்த விசுவாசத்தின் நன்றிக் கடனை ஜெயலலிதா நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து டெல்லி ராஜ்ய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆறு பேரின் பதவிக் காலம் ஜுன் மாதம் 29 ஆம் திகதி முடிவடைகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த டி.டி.வி. தினகரன், கே. மலைச்சாமி, எஸ். அன்பழகன், என்.ஆர். கோவிந்தராஜ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம். சுதர்ஸனா நாச்சியப்பன், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் ஜுன் மாதம் 29 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியின் சார்பில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களும் திராவிட முன்னேற்றக் கழகக்கூட்டணியின் சார்பில் அதன் கூட்டணிக் கழகக் கட்சிகளான காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு சந்தர்ப்பம் வழங்காது நான்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்தது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவோர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் என்றும், மாநிலங்களில் உள்ள சட்ட சபை உறுப்பினர்களினால் தேர்ந்தேடுக்கப்படுவோர், ராஜ்யசபா அல்லது மேல்சபை நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் அழைக்கப்படுவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றப் பரிந்துரை செய்யும் சட்டங்கள் மேல்சபை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டால் தான் அந்தச் சட்டம் முழுமையானதாக நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும்.
மாநில சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவுடன் ராஜ்ய சபை உறுப்பினர்கள் தேர்ந்öதடுக்கப்படுவர். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி சட்ட சபை உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ராஜ்ய சபை உறுப்பினர்களின் பலம் கூடிக் குறைகிறது. ராஜ்ய சபை நாடாளுமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஆறு வருடங்களாகும். இந்தப் பதவி சுமார் இருமுறை நிரப்பப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் இருந்து டெல்லி மேல் சபைக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க குறைந்த பட்சம் 34 சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 மேல் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 232 தமிழ்நாட்டில் இருந்து 18 பேர் மேல் சபை உறுப்பினர்களாக உள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஏழு பேரும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நான்கு பேரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நான்கு பேரும் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றில் இருந்து தலா ஒவ்öவாருவரும் மேல் சபை உறுப்பினர்களாக உள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து நான்கு உறுப்பினர்களும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து இரண்டு உறுப்பினர்களும் பதவி இழக்க உள்ளனர். இதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து நான்கு உறுப்பினர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து இரண்டு உறுப்பினர்களும் ராஜ்ய சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பம் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றிலிருந்து தலா இரண்டு பேர் ராஜ்ய சபா உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் நிலை சற்றுக் குழப்பமாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 57 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் இருவர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சென்று விட்டனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களினால் ஒரே ஒரு ராஜ்ய சபை உறுப்பினரைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். இரண்டாவது உறுப்பினரைத் தேர்வு செய்வதற்கு கூட்டணிக் கட்சி உறுப்பினர்களின் தயவு தேவைப்படுகிறது.
தமிழக சட்ட சபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒன்பது பேரும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆறுபேரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் மூன்று பேரும் உள்ளனர். இவர்களின் ஆதரவு இல்லாமல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியினால் இரண்டாவது உறுப்பினரைத் தேர்வு செய்ய முடியாது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இரண்டாவது மேல் சபை உறுப்பினர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவவர் அல்லது இரண்டாவது உறுப்பினரை கூட்டணிக் கட்சிக்கு ஜெயலலிதா விட்டுக் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக எவரும் இல்லை. வைகோவின் குரல் நாடாளுமன்றத்தில் ஒங்கி ஒலிக்க வேண்டும் என்று வைகோவை நேசிப்பவர்கள் விரும்புகிறார்கள். ஜெயலலிதா மனது வைத்தால் அது கண்டிப்பாக நடைபெறும். ஜெயலலிதா மனது வைப்பாரா வைகோ நாடாளுமன்றம் செல்வாரா என்ற கேள்விக்கு விடை தெரிய இன்னமும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
வைகோ நாடாளுமன்றத்துக்குச் சென்றால் திராவிட முன்னேற்றக் கழக காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார். இதேவேளை வைகோ போட்டியிட்டால் அவரை வீழ்த்துவதற்குரிய வியூகங்களை வகுக்க திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சி செய்யும். வைகோவும் வைகோவின் கட்சியும் தலை எடுக்கக்கூடாது என்பதில் குறியாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் வைகோவை வீழ்த்துவதற்கு சகல முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியடைந்த ஜெயலலிதா துவண்டு போய் அடிக்கடி ஓய்வெடுக்கிறார். ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து தோல்வி அடைந்த வைகோ துவண்டு விடாமல் போராட்டம், உண்ணாவிரதம், கால்நடைப் பயணம் என சுறுசுறுப்பாக உள்ளார்.
வைகோ ராஜ்ய சபை நாடாளுமன்ற உறுப்பினரானால் ஜெயலலிதாவுக்கும் அது நன்மையாகவே அமையும்.
வைகோ நாடாளுமன்றம் செல்ல இடது சாரிகள் வழி விடுவார்களா என்ற சந்தேகமும் உள்ளது.
நாடாளுமன்றத்தின் தமது அங்கத்தவர்களுள் ஒருவர் இருக்க வேண்டும் என்பதில் இடதுசாரிகள் குறியாக உள்ளனர். ஆகையினால் இரண்டாவது உறுப்பினராக தமது கட்சியை சேர்ந்த ஒருவரை அனுப்புவதற்கே இடதுசாரிகள் விரும்புவார்கள்.
மேல் சபை உறுப்பினர்களுக்காக பேரம் பேசும் சக்தியுடைய பாட்டாளி மக்கள் கட்சி எதுவும் செய்ய முடியாது குழம்பிய நிலையில் உள்ளது. 18 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி எந்தக் கூட்டணியிலும் இல்லாது தனித்து நிற்கிறது. முன்னர் கருணாநிதியுடனும் ஜெயலலிதாவுடனும் பேரம் பேசுகையில், தனது மகனான அன்பு மணிக்காக மேல் சபை உறுப்பினர் பதவியை கேட்டு ஒப்பந்தம் செய்த டாக்டர் ராமதாஸ் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளõர்.
நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததனால் கூட்டணியில் இருந்தாலும் ராமதாஸின் கட்சிக்கு ஜெயலலிதா உதவி செய்ய மாட்டார் என்பது வெளிப்படையானது. ஜெயலலிதாவின் மனதில் உள்ளதை யாராலும் இலகுவாக ஊகிக்க முடியாது.
வர்மா

வீரகேசரிவாரவெளியீடு 14/03/10

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

good post, but 1 correction.

MDMK has one Memeber of Parliment (Loksabha)- Ganesamoorthi from Erode.

Only in Rajyasabha it does not have a representative.

வர்மா said...

thankas
varmah