Thursday, April 22, 2010

திரைக்குவராதசங்கதி 19


விஜயகுமாரி இரத்தம் சிந்தி நடித்தபடம் பூம்புகார்."கண்ணகி சாதாரண பெண் அல்ல; பத்தினித் தெய்வம். அதனால் நான் விரதம்இருந்து நடித்தேன்' எனக் கூறிய கண்ணாம்பா விஜயகுமாரிக்கு ஆசி வழங்கினார்.கண்ணாம்பா நடித்த கண்ணகி படத்தைப் பார்க்காது, பூம்புகாரில் விஜயகுமாரி கண்ணகியாகநடித்தார். அப்படத்தைப் பார்த்தால் அதன் பாதிப்புதன்னைப் பாதிக்கும் என எண்ணினார்.விஜயகுமாரியின் நடிப்பில் பூம்புகார்பெரு வெற்றி பெற்றது.பூம்புகார் படமாக்கப்பட்டகாலத்தில்,நடிக்கும்போதே பேசும் வசனம் ஒலிப்பதிவாகும். படப்பிடிப்பை நடத்திமுடித்து விட்டு வசனத்தை ஒலிப்பதிவுசெய்யும் வழக்கம் அப்போது இருக்கவில்லை.விஜயகுமாரியின் தலைக்கு மேலேஒலிவாங்கிவெகு உயரத்தில்தொங்கிக்கொண்டிருக்கும். உரத்த தொனியில் விஜயகுமாரி வசனங்களைப் பேசுவார்.சிலவேளைதொண்டைகட்டி விடும். வாயில் இரத்தம்வந்த சந்தர்ப்பங்களும் உண்டு.விஜயகுமாரி இரத்தம் சிந்தி நடித்ததற்குபூம்புகார் நல்ல பலனைக் கொடுத்தது.
பாண்டியன் அரச சபையில் ஒற்றைக்கையில் சிலம்புடன் "என் கணவன்கள்வனா' என கண்ணகி நீதி கேட்டுநடித்த காட்சியே சென்னை கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த கண்ணகிசிலைக்கு மாதிரி வடிவமாக இருந்ததுகண்ணகி சிலையைக் கடக்கும்போதுஅச்சிலையை கையெடுத்துக் கும்பிடுவார் விஜயகுமாரி.அரசியல் காரணங்களுக்காக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கண்ணகிசிலை அப்புறப்படுத்தப்பட்டது. கலை
ஞர் கருணாநிதி முதல்வரானதும் அச்சிலை மீண்டும் கடற்கரையில் நிறுவப்பட்டது
.கே.எஸ். கோபாலகிருஷ்ணன்தான்இயக்கப் போகும் படத்தில் நடிப்பதற்குவிஜயகுமாரியிடம் கால்ஷீட் கேட்டார்.அந்தத் திகதிகளை வேறு படங்களுக்குக்கொடுத்ததனால் நடிக்க மறுத்தார் விஜயகுமாரி. அதனால் கோபம் கொண்டகே.எஸ். கோபாலகிருஷ்ணன் உனக்குப்போட்டியாக புதிய விஜயாவை அறிமுகப்படுத்துகிறேன் என சபதம் செய்தார்.கற்பகம் படத்தில் கே.எஸ். கோபாலகிருஷ்ணனால் அறிமுகம் செய்யப்பட்டகே.ஆர்.விஜயா, விஜயகுமாரியை முந்திவிட்டார். கற்பகம் படத்தைப் பார்த்தவிஜயகுமாரி நல்ல சந்தர்ப்பத்தைஇழந்து விட்டேன் என வருத்தப்பட்டார்.புட்டண்ணாவின் இயக்கத்தில் டீச்சரம்மா என்ற படத்தில் விஜயகுமாரி நடித்துள்ளார். சினேகிதிக்காக காதலைத்தியாகம் செய்யும் கதை. விஜயகுமாரியும் வாணி ஸ்ரீயும் முக்கிய பாத்திரங்களில் நடித்தார்கள். டீச்சரம்மாவில் நடித்துக்கொண்டிருந்தபோது விஜயகுமாரியை அழைத்த இயக்குநர் ஸ்ரீதர் தனதுபடத்தில் நடிக்கும்படி கேட்டார்.
சகோதரிக்காக காதலைத் தியாகம் செய்யும் கதை. ஜெமினி வாணிஸ்ரீயுடன்விஜயகுமாரிக்கு முக்கிய பாத்திரம் எனஸ்ரீதர் கூறினார். டீச்சரம்மாவும் காதலைத் தியாகம் செய்யும் கதை. இதுவும்கிட்டதட்ட அதேபோன்ற கதை.இரண்டு படத்திலும் வாணி ஸ்ரீயும்தானும் இருப்பதால் நடிக்க மறுத்துவிட்டார் விஜயகுமாரி.விஜயகுமாரி நடிக்கவேண்டிய பாத்திரத்தில் சரோஜா தேவிநடித்தார். கல்யாணப் பரிசு என்ற அப்படம் தமிழ்த்திரைஉலகில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தேவதாஸ்படத்துக்குப் பின்னர் காதலுக்காககண்ணீரை வரவழைத்தபடம் கல்யாணப் பரிசு.கல்யாணப் பரிசுபடத்தைப் பார்த்தவிஜயகுமாரி மிகவும் கவலைப்பட்டார். அடிபோடிபைத்தியக்காரிஎன்ற பாடல் தனக்காகவே எழுதப்பட்டதுஎன பேட்டி ஒன்றில் கூறினார்.ராஜேஷ், சரத் பாபு, ராதிகா, விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் மெட்டிஎன்ற படம் உருவானது. அப்படத்தைமகேந்திரன் இயக்கினார். விஜயகுமாரிநடித்த முதல் காட்சியின்போது இயக்குனர் மகேந்திரன் கிளப் அடித்து படப்பிடிப்பை ஆரம்பித்தார். விஜயகுமாரிக்குஆச்சரியமாக இருந்தது. வழமையாகஉதவி இயக்குநர்கள் தான் கிளப் அடிப்பார்கள். இயக்குநர் கிளப் அடித்ததைக்கண்ட விஜயகுமாரியால் அந்த ஆச்சரியத்தில்இருந்து விடுபட முடியவில்லை.
"அம்மா காஞ்சித் தலைவன் படத்தில்நீங்கள் நடித்த போது நான் தான் முதலில் கிளப் அடித்தேன். எனது இயக்கத்தில்நீங்கள் நடிக்கும்போதும் நான் தான்கிளப் அடிக்க வேண்டும் என விரும்பினேன்'என்று கூறிவிஜயகுமாரியின் ஆச்சரியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ராஜராஜ சோழனில் நடிகர் திலகத்துக்குமனைவியாக, பார் மகளே பார் படத்தில்மகளாக, அன்பைத் தேடி படத்தில் அக்காவாக, குங்குமம் படத்தில் முறைப்பெண்ணாக, சவாலே சமாளி படத்தில்தங்கையாக விஜயகுமாரி நடித்துள்ளார்.இப்படி வேறு எந்த நடிகையும் நடிகர்திலகத்துடன் இப்படி நடிக்கவில்லை.அவை அனைத்தும் வெற்றிப் படங்கள்


ரமணி

மித்திரன்வாரமலர்

16/09/07


No comments: