Wednesday, April 21, 2010

உலகக்கிண்ணம்2010


பிரேஸில் 1950
பிரேஸிலில் நடைபெற்ற‌ நான்காவது உலகக் கிண்ண உதைபந்தாட்டம் போட்டியில் உருகுவே சம்பியனானது. இரண்டாவது உலக மகா யுத்தத்தின் காரணமாக 12 வருடங்களின் பின்னர் நான்காவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றது.
நான்காவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு 34 நாடுகள் போட்டியிட்டு கூடுதல் புள்ளிகளைப் பெற்ற 13 நாடுகள் தகுதி பெற்றன.
மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய பிரான்ஸ், ஜேர்மன், ஹங்கேரி ஆகியன நான்காவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறவில்லை. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட பொலிவியா தகுதி பெற்றது.
ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், சுவீடன், சுவிட்ஸர்லாந்து, யூகோஸ்லாவியா ஆகிய நாடுகளில் வட அமெரிக்கா, மத்திய அமெரிக்காவில் இருந்து மெக்ஸிக்கோ, அமெரிக்கா ஆகிய நாடுகளும், தென் அமெரிக்காவில் இருந்து பொலிவியா, பிரேஸில், சிலி, பரகுவே, உருகுவே ஆகிய நாடுகளும் நான்காவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற 13 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. அவற்றில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற உருகுவே, பிரேஸில், சுவீடன், ஸ்பெயின் ஆகிய நாடுகள் அரை இறுதிக்குத் தெரிவாகின.
இறுதிப் போட்டியில் பிரேஸிலை எதிர்த்து விளையாடிய உருகுவே வெற்றி பெற்று சாம்பியனானது. 1934 ஆம் ஆண்டு சம்பியனான உருகுவே இரண்டாவது முறை சம்பியனானது. ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற சுவீடன் மூன்றாவது இடத்தையும் தோல்வி அடைந்த சுவீடன் நான்காவது இடத்தையும் பிடித்தன.
32 போட்டிகளில் 88 கோல்கள் அடிக்கப்பட்டன. 1, 043, 500 பேர் மைதானத்தில் போட்டிகளைப் பார்த்தனர். பிரேஸில் 22 கோல்களையும் உருகுவே 15 கோல்களையும், சுவீடன் 116 கோல்களையும், ஸ்பெயின் 10 கோல்களையும் அடித்தன.
அட்மிர் (பிரேஸில்) ஒன்பது கோல்களும், பசோரா (ஸ்பெயின்), மிகுஸ் (உருகுவே) ஆகியோர் தலா ஐந்து கோல்களையும் அடித்தனர். சிறந்த விளையாட்டு வீரருக்கான கோல்டன் சூவுக்காக இவர்கள் மூவரின் பெயரும் பிரேரிக்கப்பட்டன. ஒன்பது கோல்கள் அடித்த பிரேஸில் வீரரான அட்மிர் கோல்டன் சூவைப் பெற்றார்.
பிரிட்டன் சாம்பியன் சிப் போட்டிகளில் வெல்லும் அணி இறுதிப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என 1950 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஸ்கொட்லாந்து 1950 பிரிட்டன் சாம்பியன் சிப் போட்டியில் வெள்ளாரம் இறுதிப்போட்டிக்கு அனுமதிக்கப்படவில்லை.
இரண்டாவது உலக மகா யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனியும் ஜப்பானும் போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
உலகப்போட்டிகளில் விளையாட இந்தியா தகுதி பெற்றும் சப்பாத்து இல்லாமல் வெறும் கால்களுடன் விளையாட பீபா அனுமதிக்கவில்லை. 3000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பிரேசிலில் விளையாட மறுத்து முதல் சுற்று போட்டியில் பிரான்ஸ் பின்வாங்கியது.
போட்டிகளிற்காக அதிக தூரம் பயணிக்கவேண்டும் என்பதால் அமைப்பாளர்கள் கண்ட ரீதியாக நாடுகளை தெரிவு செய்ய மறுத்துவிட்டனர். சுவீடனை சேர்ந்த எரிக் நில்சன் மற்றும் சுவீட்சர்லாந்தைச் சேர்ந்த அல்பிரட் பிக்கெல் ஆகிய இரண்டு வீரர்களும் உலக மகா யுத்தத்தின் முன்னரும் பின்னரும் விளையாடினார்கள்.
1950 ஆண்டு உலக கிண்ணம் பீபாவில் 25 வருடங்கள் தலைவராக பணியாற்றி ஜீலஸ் றிமெட்டின் பெயரிடப்பட்டது.
மே மாதம் 1949 ஆம் ஆண்டு இடம்பெற்ற விமான விபத்தில் எட்டு இத்தாலிய தேசிய உதைப்பந்தாட்ட வீரர்கள் இறந்தனர்.
ஆடை மாற்றும் ஆலையில் இரும்புத் தூண் ஒன்றுடன் யுகோசிலேவிய வீரர் ராஜ்கோ மிட்டிக் மோதியதால் உரிய நேரத்தில் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. நடுவர் போட்டியை தாமதப்படுத்த வில்லை. யூகோஸ்லாவிய அணி 10 வீரர்களுடன் விளையாடியது.
இறுதிப்போட்டியைப் பார்வையிட 199850 பார்வையாளர்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
நான்காவது உலகக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டியில் உருகுவே சம்பியனானது. இரண்டாவது உலக மகா யுத்தம் காரணமாக 12 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி பிரேஸிலில் நடைபெற்றது.
ரமணி
மெட்ரோநியூஸ்

No comments: