Tuesday, April 20, 2010

உலகக்கிண்ணம்2010


பிரான்ஸ் 1938
பிரான்ஸில் 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டியில் இத்தாலி சாம்பியனானது. இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டியில் சாம்பியனான இத்தாலி மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டியிலும் சாம்பியனாகி தனது சம்பியன் பட்டத்தைத் தக்க வைத்தது.
மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டியில் 15 நாடுகள் பங்குபற்றின. ஆசியாவில் இருந்து முதன் முதலாக டச் கிழக்கு இந்தியத் தீவுகள் (இந்தோனேஷியா) உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. வட அமெரிக்காவில் இருந்து முதன் முதலில் கியூபா பங்குபற்றியது.
ஐரோப்பா கண்டத்தில் இருந்து பெல்ஜியம், செக்கஸ்லோவேதியா, பிரான்ஸ், ஜேர்மன், ஹங்கேரி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, ரொமேனியா, சுவீடன், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் விளையாடும் தகுதியைப் பெற்றன. தென் அமெரிக்காவில் இருந்து பிரேஸில் பங்குபற்றியது.
இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய ஆர்ஜென்ரீனா இங்கிலாந்து, ஸ்பெயின், உருகுவே ஆகிய நாடுகள் மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறவில்லை.
முதல் சுற்றில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற எட்டு நாடுகள் அரை இறுதிக்குத் தெரிவாகின. டச் கிழக்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஹங்கேரி 6 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
பிரேஸில், ஹங்கேரி, சுவீடன், இத்தாலி, செக்கன்லோவேகியா, சுவிட்ஸர்லாந்து, கியூபா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கால் இறுதியில் விளையாடின. கியூபாவுக்கு எதிரான போட்டியில் 8 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன் ஒரு போட்டியில் அதிக கோல் அடித்த நாடாக பதிவு செய்தது.
ஹங்கேரி, சுவீடன், இத்தாலி, பிரேஸில் ஆகிய நாடுகள் கால் இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தெரிவாகின.
5 1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வென்ற ஹங்கேரியும் 2 1 என்ற கோல் கணக்கில் பிரேஸிலை வென்ற இத்தாலியும் இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
அரை இறுதியில் தோல்வி அடைந்த பிரேஸிலுக்கும் சுவீடனுக்கும் இடையிலான போட்டியில் 4 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் மூன்றாவது இடத்தையும் சுவீடன் நான்காவது இடத்தையும் பிடித்தன. இத்தாலிக்கும் ஹங்கேரிக்கும் இடையிலான போட்டியில் 4 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி உலகக் கிண்ண சாப்பியனானது.
மூன்றாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக 37 நாடுகள் போட்டியிட்டு 15 நாடுகள் தகுதி பெற்றன. மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டியில் 18 போட்டிகள் நடைபெற்றன. 8 6 என்ற கோல்கள் அடிக்கப்பட்டன. 37, 600 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளை பார்வையிட்டனர்.
சிறந்த விளையாட்டு வீரருக்கான கோல்டன் சூ பெறுவதற்காக லொனி டாஸ், பிரேஸில், கியூபா, சென்கிலர் (ஹங்கேரி), சில்வியோ கபிஓலா (இத்தாலி), கயோரி சதோஷி (ஹங்கேரி) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. லெனிடாஸ் கோல்கள் அடித்த லொனிடாஸ் சிறந்த வீரராகத் தெரிவு செய்யப்பட்டு கோல்டன் சூ வழங்கப்பட்டது.
ஹங்கேரி 15 கோல்களும், பிரேஸில் 14 கோல்களும், இத்தாலி, சுவீடன் ஆகியன தலா 11 கோல்களும் அடித்தன. லொனிடாஸ் (பிரேஸில்) ஏழு கோல்களும், கியூலா சென்திலர் (ஹங்கேரி) ஆறு கோல்களும், கயோரி சரோஷி (ஹங்கேரி) ஆறு கோல்களும், சில் பியோபி ஒலா (இத்தாலி) ஆகியோர் தலா ஐந்து கோல்களும் அடித்தனர். ஹன்ஸ் பென்ஸர் (ஜேர்மனி), ஜான்ரியா (செக்கஸ்லோவேதியா), ஸீஸீ புலாகோபியா (பிரேஸில்), மசாடோ (பிரேஸில்) ஆகிய வீரர்களுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
போட்டியை நடத்தும் நாடு தானாகவே போட்டியில் தகுதி பெறும் விதி முதல் தடவையாக உருவாக்கப்பட்டது.
சட்டைகளில் இலக்கம் இடுவது முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒஸ்ரியா உதைப்பந்தாட்ட உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றும் ஜெர்மனியால் ஒஸ்ரியா கைப்பற்றப்பட்டதும் ஒஸ்ரியா போட்டியில் இருந்து விலக நேரிட்டது.
சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த வீரரான ஏனஸ் லெக் ரெக்ஸர் ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் முதன் முதலாக 1 கோல் அடித்தார்.
இத்தாலிய அணித் தலைவர் மெஸாஸ், பெனால்டி அடிக்கும் போது அவரது கால் சட்டை நழுவியது.
ஒரு கையில் கால்சட்டையைப் பிடித்துக் கொண்டு பெனால்டி அடித்தார். இறுதிப்போட்டி இத்தாலிக்கும் ஹங்கேரிக்கும் இடையே இடம்பெற்றது. இப்போட்டியின்போது இத்தாலிய விளையாட்டு வீரர்களிற்கு பெனிடோ முசேõலினியிடம் இருந்து வெல்லுங்கள் அல்லது சாவைத் தழுவுங்கள் win or die என்ற தந்தியை அனுப்பி வைத்தார்.
எனும் தந்தி வந்தது. இப்போட்டியில் இத்தாலி வெற்றி பெற்றது.
நான் 4 கோல்களை விட்டு இருக்கலாம் ஆனால் இத்தாலிய வீரர்களின் உயிரை காப்பாற்றியுள்ளேன் என ஹங்கேரியின் கோல் கீப்பர் தெரிவித்தார்.

No comments: