Friday, July 1, 2011

உலகக்கிண்ணதகுதிகாண்போட்டி

பிரேஸிலில் 2014ஆம் ஆண்டு நடைபெறும் உலக கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் விளையாட உள்ள நாடுகளைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. நேற்று முன்தினம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
மலேஷியா, வியட்நாம், மொங்கோலியா, பங்களாதேஷ், பலஸ்தீனம், நேபாளம், கம்போடியா ஆகிய நாடுகள் வெற்றி பெற்றன. இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுக்கிடையேயான போட்டிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
சைனீஸ் தாய்பேக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மலேஷியா மக்காவுக்கு எதிரான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் வியட்நாமும் மியான்மாருக்கு எதிரான போட்டியில் 1- 0 என்ற கோல் கணக்கில் மொங்கோலியாவும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் பங்களாதேஷûம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பாலஸ்தீனமும், திமோருக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நேபாளமும்,
லாவேசுக்கு எதிரான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் கம்போடியாவும் பெற்றி பெற்றன.

ரமணி
மெட்ரோநியூஸ்

1 comment:

தருமி said...

இந்திய நிலை என்ன?