Friday, August 25, 2017

தோல்வியை வெற்றியாக்கியது இந்தியா

இந்தியா இலங்கை  ஆகியவற்றுக்கிடையே கண்டியில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டக்வெர்த் லீவிஸ் முறைப்படி மூன்று விக்கெட்களால் இந்தியா வெற்றி பெற்றது.  நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் துடுப்பட்டத்தைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  50   ஓவர்களில் 8  விக்கெட்களை இழந்து  236  ஓட்டங்கள் எடுத்தது. மழை  பெய்ததால்   1 மணி 15   நிமிடம் தாமதமாக போட்டி ஆரம்பமானது 47  ஓவர்களில்  231  ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 44.2  ஓவர்களில்  7 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது. டோனி, புவனேஸ்வர்  ஆகிய இருவரும் பொறுமையாக விளையாடி  இந்தியாவுக்கு வெற்றியைப்பெற்றுக் கொடுத்தனர்.

 ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கிய டிக்வெல, குணதிலக ஆகிய இருவரும் நிதானமாக ஆடினர். டிக்வெல31,ஓட்டங்களிலும்  குணதிலக 19  ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.இலங்கை அணி  5 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்கள் எடுத்தபோது ஆறாவது இணையாகக் களம் இறங்கிய கபுகெதர, சிரிவர்தன ஆகிய இருவரும் 91  ஓட்டங்கள் அடித்து ஓட்ட எண்ணிகையை அதிகரித்தனர்.  கபுகெதர 58, ஓட்டங்களிலும்  சிரிவர்தன  40 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்ததும் இலங்கையின் வேகம் தடைப்பட்டது. இலங்கை அணி  50   ஓவர்களில் 8  விக்கெட்களை இழந்து  236  ஓட்டங்கள் எடுத்தது. பும்பரா  4 விக்கெட்களும்  சாகல் 2 விக்கெட்களும்  பட்டேல் யாதவ் ஆகியோர் தலா ஒரு  விக்கெற்றையும் கைப்பற்றினர்.


இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான  தவான், ரோஹித் சர்மா ஆகிய இருவரும் மிரட்டினர். இருவரும் இணைந்து  109   ஓட்டங்கள் எடுத்தனர். ரோஹித் சர்மா 54  ஓட்டங்களிலும்  தவான் 49 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா 43 பந்துகளில் அரைசதமடித்தார் ஒருநாள் போட்டியில் இவர் அடித்த அதி வேக அரைசதம் இதுவாகும். இந்தியா இலகுவாக வெற்றி பெற்றுவிடும் என நினைத்திருந்த வேளையில் 18 ஆவது ஓவரை வீசிய தனஞ்ஜெய, இந்திய அணிக்கு வில்லனாக மாறினார். முதலாவது மூன்றாவது ஐந்தாவது பந்தில்  முறையே கேதர் யாதவ், [1]கோஹ்லி[4] ராகுல் [1]ஆகிய மூவரும் விக்கெற்றைப் பறிகொடுத்தனர். 10  ஓட்டங்களில் 5 ஐந்து விக்கெற்களை இந்தியா இழந்தது. 
 தனஞ்ஜெயவின் 20  ஆவது ஓவரில் பொறுப்பற்ற  முறையில் விளையாடிய பண்டையா ஓட்டம் எடுக்காது ஆட்டமிழந்தார்.பட்டேல் நான்கு ஓட்டங்களுடன் வெளியேறினார். இந்தியா   7    விக்கெற்களை இழந்து 131    ஓட்டங்களை எடுத்தபோது எழாவது விக்கெற் இணையாக டோனியும் புவனேஸ்வரும் களம் இறங்கினர். 22 ஓட்டங்களில் 7 விக்கெற்களை இழந்து இந்தியா தவித்துக் கொண்டிருந்தது. இலங்கை ரசிகர்களின் வெற்றி முழக்கம் அரங்கை அதிர வைத்தது. தோல்வியை நோக்கிச்சென்று கொண்டிருந்த இந்தியாவை டோனியும்  புவனேஸ்வரும் இணைந்து வெற்றிப் பாதையை  நோக்கித் திருப்பினர்.மிக நிதனமாகவும்  பொறுமையாகவும்  விளையாடியதால் 44.2  ஓவர்களில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்தது.100  இவர்கள் இருவரும்  இணைந்து  100 ஓட்டங்களைப் பெற்றனர்.
டோனி 45 ஓட்டங்களையும்   புவனேஸ்வர்     53  ஓட்டங்களையும் பெற்றனர். ஐந்து ஒருநாள் போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று இந்தியா முன்னிலையில் உள்ளது. தான் மீதான விமர்சனங்களுக்கு டோனி பதிலளித்துள்ளார். ஒருநாள் போட்டியில்  புவனேஸ்வர் தனது முதலாவது அரைசதத்தைப்  பதிவு  செய்துள்ளார். டெஸ்ட் ஒருநாள் போட்டியில் ஒன்பதாவது வீரராகக்  களம் இறங்கி  அரை  சதம் அடித்த இரண்டாவது வீரராக புவனேஸ்வர் விளங்குகிறார்.  டோனி 29   ஓட்டங்கள் எடுத்திருந்தபோது  பெர்னாண்டோ வீசிய பந்து டோனியின் கால்களுக்கிடையில் சிக்கி விக்கெற்றில் பட்டது  பெயில்ஸ் விழாததால் அவர் தப்பினார். இப்போட்டியின் போது 99 ஆவது  ஸ்டம்பிங் செய்த  டோனி,சங்ககாரவின் சாதனையை சமன் செய்தார். சங்ககார  400  ஆவது போட்டியிலும் டோனி 298  ஆவது போட்டியிலும் இச்சாதனையைச் செய்தனர்.


நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடிய தனஞ்ஜெய  10  ஓவர்கள் பந்து வீசி  54  ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி அட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

 மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி கண்டியில் நடைபெறும்.


No comments: