Monday, April 24, 2023

நீதியைத் தேடி 4 ஆவது ஆண்டு

இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று நான்கு வருடங்கள் கடந்து விட்டன. உறவுகளை இழந்தவர்களின் துயர்  இன்னமும் தீரவில்லை.முடமானவர்கள்  இன்றும்  அப்படியே  இருக்கின்றன.  காயங்களின் வடு  நடந்த கோரத்தை நினைவூட்டுகிறது.ஈஸ்டர் தாக்குதல் நடந்து 4 ஆண்டுகள் ஆகிறது. சர்வதேச நீதிமன்றம் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. ஏபர்ல்  21 ஆம் திகதியுடன்  ஈஸ்டர் தாக்குதல் நடந்து  நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால், இதுவரை எந்த சந்தேக நபரும்  தண்டிக்கப்படவில்லை.

ஈஸ்டர் தின தாக்குதலை அமைதியான முறையில் நினைவு கூர்வதற்கு  பேராயர்  கர்தினால் மல்கம் ரஞ்சித்  ஆண்டகை அழைப்பு விடுத்தார். ஈஸ்டர் தினத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி  21 ஆம் திகதி  நீர்கொழும்பில்நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட  நீர்கொழும்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை தடை செய்யுமாறு நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர்கள் விடுத்த கோரிக்கையை நீர்கொழும்பு பதில் நீதவான் திரு.இந்திக்க சில்வா  (19) நிராகரித்தார். ஈஸ்டர் தின தாக்குதலில் உயிரிழந்தர்களுக்கான நினைவேந்தம் அமைதியான  முறையில் நாடெங்கும் நடைபெற்றது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஏற்பாடு செய்யப்பட்ட அமைதியான பேரணிகள் ,  நிகழ்சிகளை தடுக்க முயற்சி செய்த பொலிஸார்  யாரைத் திருப்திப் படுத்த முயற்சிகிறார்கள்.

  இது அரசாங்கத்தை கவிழ்க்கவோ அல்லது வன்முறையை ஏற்படுத்தவோ அல்லது மற்றொரு நபருக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சியோ அல்ல. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும், இந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ள உண்மையை அறியவும் கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் மேற்கொண்ட முயற்சிகளின் மற்றொரு படி இது. இது தீவிரவாத செயல் அல்ல. உண்மையையும் நீதியையும் கேட்பது பயங்கரவாதமா? எனக் கேள்வி எழுப்பப்படுகிரது. வடக்கு, கிழக்கில்  நினைவேந்தல்களுக்குத் தடை விதித்தது போல்  மெற்கொண்ட முயற்சி பிசுபிசுத்துப் போனது. 

தியைக் கோரும் மக்களின் உரிமையைப் பயன்படுத்துவதை பயங்கரவாதச் செயலாக சித்தரிக்கும் காவல்துறையின் முயற்சிகளை அவர்கள் நிராகரிக்கிறார்கள்.ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஏற்பாடு செய்யப்பட்ட அமைதியான பேரணிகள் மற்றும் நிகழ்வுகளை தடுக்கும் முயற்சிகள் குறித்து சிக்னிஸ் அமைப்பின் முன்னாள் தேசிய பணிப்பாளர் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ அரசாங்கம் மற்றும் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அரசும் காவல்துறையும் ஏன் இத்தகைய அணிவகுப்புகளுக்கு பயப்படுகின்றன? நீதி வழங்குவது எந்த ஒரு நபரையும் எதிர்மறையாக பாதிக்குமா? ” என்று கத்தோலிக்க பாதிரியார் கேட்டார். நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா, நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ஏனைய அதிகாரிகள் குழு நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி கத்தோலிக்க திருச்சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரார்த்தனை ஊர்வலத்தை தடுக்குமாறு உத்தரவிடுமாறு நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பெர்னாண்டோ குறிப்பிட்டார். ஏனைய நினைவேந்தல் நிகழ்வுகள் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கட்டுவாப்பிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வத்தளை பொலிஸாராலும் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதிரியார் தெரிவித்தார்.

"இதுபோன்ற கோரிக்கையை வைப்பதில் காவல்துறையின் உண்மையான நோக்கம் நம் அனைவருக்கும் தெளிவாக உள்ளது," என்றும் அவர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் பின்வருமாறு,

நாட்டின் புலனாய்வுப் பொறுப்பதிகாரியாக இருந்த நிலந்த ஜயவர்தனவை இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் நான்கு முறை எச்சரித்த போதும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.

நிலந்த ஜயவர்தன தனது கணினியில் உள்ள குறிப்புகளையும் நீக்கியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட கூடவில்லை.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நிலந்த ஜயவர்தன அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை.

சஹாரானின் கையடக்கத் தொலைபேசி மதர்போர்டு இலங்கை இரகசியப் பொலிஸாரால் அமெரிக்க FBஈ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு தொடர்பு இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் இந்த நாட்டிற்கு அறிக்கை அளித்த போதிலும், ரகசிய போலீசார் அமைதியாக இருந்தனர்.

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய சஹாரானை கைது செய்ய முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது.

தாக்குதல் நடத்தப்படும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் விசேட அதிரடிப்படையினருக்கு எச்சரித்திருந்த நிலையில், உயர்ஸ்தானிகராலயத்தில் மாத்திரம் படைத் தலைவர் பாதுகாப்பை நிறுத்தியுள்ளார்.

தேவாலயங்கள் பற்றி பொலிஸ் புலனாய்வுத் தலைவரின் அறியாமை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சஹாரானைப் பின்தொடர்ந்த பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்.

சஹாரானை கைது செய்வதை தவிர்க்குமாறு காவல்துறைக்கு அரசு அதிகாரி உத்தரவு.

தேவாலயங்கள் தாக்கப்படும் என எச்சரிக்கும் கொழும்பு பொலிஸ் அதிகாரியின் மாற்றம்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து பிரிட்டனின் பெருநகர காவல்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

ஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புகள் பற்றி சிரியா-துருக்கி மற்றும் ரஷ்ய புலனாய்வு சேவைகளிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கு இலங்கையின் இரகசியப் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

கத்தாரில் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு நிதியளித்தவர் கைது

பாதுகாப்பு தோல்விகளை வெளிப்படுத்துதல்.

ஈஸ்டர் தாக்குதல் பற்றி இராணுவ புலனாய்வு சேவையின் அறியாமை.

இராணுவப் புலனாய்வுப் பிரிவில் 4000 பேர் இருந்த போதிலும், தாக்குதல்கள் பற்றி யாருக்கும் தெரியாது.

இதுதவிர, ஈஸ்டர் தாக்குதல் நடந்த போது கொழும்பில் விரைவுத் தாக்குதல் படை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது தவிர புத்தளம் வனாத்தவில்லுவில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட தென்னந்தோப்புக்கு பொறுப்பாக இருந்த சந்தேக நபரும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி, சாரா ஜாஸ்மின் டிஎன்ஏவில் இறந்தார். விசாரணையில் உறுதி செய்யப்பட்டதாக காவல்துறை சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதல் குறித்து பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. தாக்குதல் நடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கத்தோலிக்க திருச்சபை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் புகார் அளித்தது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி உட்பட பலருக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனினும் 600க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. சந்தேகநபர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாக முஸ்லிம் தீவிரவாதிகளை கைது செய்ய முடியாமல் போனதாகவும் சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சந்தேக நபர்களை அடையாளம் காண ஜப்பான் வழங்கிய அதிநவீன தொழில்நுட்ப வாகனத்தை கூட ப

யன்படுத்த வேண்டாம் என பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு உத்தரவு கிடைத்துள்ளது.

இது தவிர கட்டுநாயக்கவில் பிடிபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். இந்த சம்பவங்களில் ஈடுபட்ட அதிகாரிகள் இன்றும் பணியில் உள்ளனர். இது மிகவும் சோகமான நிலை. ஈஸ்டர் தாக்குதலின் எதிரொலி இன்னும் மறையவில்லை. இயக்கியது யார்? கத்தோலிக்க திருச்சபையைத் தவிர எந்த அரசியல்வாதியும் இதை கேள்வி கேட்கவில்லை. ஈஸ்டர் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை இந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைத்ததா?

No comments: