Thursday, September 25, 2008

சர்ச்சைகளுக்குமத்தியில் சரித்திரம்படைத்தார்



இந்தியாவின் 13 ஆவது ஜனாதிபதியாகபிரதீபா பட்டீல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மிக அதிகளவில்
வாக்களித்து தமது நாட்டின் ஜனாதிபதியாகபிரதீபா பட்டீலை மிக அதிகப்படியான வாக்கு
களால் தெரிவு செய்துள்ளனர்.இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமுக்குப்
பின்னர் இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியார் என்ற கேள்வி எழுந்த உடனேயே எமது
ஜனாதிபதியான அப்துல் கலாம் இரண்டாவதுமுறையும் ஜனாதிபதியாக வரவேண்டு
ம் என்று இந்தியாவின் பெரும்பாலான மக்கள்கருதினார்கள்.
மக்கள் விருப்பத்துக்கு மாறாக இந்திய அரசியல் வாதிகள் அப்துல் கலாமைத் தவிர்த்து
வேறு ஒருவரை ஜனாதிபதி ஆக்கும் முயற்சியில் இறங்கினர்.
விஞ்ஞானியாக உலகுக்கு அறிமுகமாகியஅப்துல் கலாம் இந்தியாவின் ஜனாதிபதி
யான பின்பும் அரசியலை விட ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கே முதலிடம்
கொடுத்தார். இரண்டாவது முறை ஜனாதிபதியாகப் போவதில்லை என்று அப்துல்
கலாம் அறிவித்தது அரசியல் வாதிகளுக்குவாய்ப்பாகப் போய்விட்டது.
மீண்டும் தான் ஜனாதிபதியாவதை அப்துல் கலாமே விரும்பவில்லை என்று கூறிய
அரசியல்வாதிகள் தமது சொல்லுக்குத்தலையாட்டும் ஒருவரைத் தேடத் தொடங்கினர்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கட்சிகள் தமது செல்வாக்கை ஜனாதிபதி
தெரிவில் காட்ட முனைந்தன. இதன் காரணமாக ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்
யும் முடிவில் காலதாமதம் ஏற்பட்டது.துணை ஜனாதிபதி பைரோசிங்
ஷெவாக்கை ஜனாதிபதியாக்க வேண்டும்என்று பாரதீய ஜனதாக் கட்சி கூறியது.
துணை ஜனாதிபதியான ஷெகாவத்துக்கும்ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசை
எழுந்தது. அதன் காரணமாக பாரதீய ஜனதாக்கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதி வேட்
பாளரானார் ஷெகாவத்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கட்சியோ முடிவெடுக்க முடியாது தடுமாறி
யது. காங்கிரஸ் கட்சியும், கொம்யூனிஸ்ட்கட்சிகளும் ஆளுக்கு ஒருபுறமாக நின்று
தமது செல்வாக்கைக் காட்ட முயற்சித்தன.தமிழக முதல்வர் கருணாநிதி டெல்லியில்
முகாமிட்டு காங்கிரஸ் கட்சிக்கும் கொம்யூனிஸட் கட்சிக்கும் இடையில் இணைப்பாள
ராக செயற்பட்டார்.காங்கிரஸ் கட்சி கூறுபவர்களை கொம்யூனிஸ்ட் கட்சிகள் நிராகரித்தன. கொம்யூ
னிஸ்ட் கட்சிகள் சிபார்சு செய்பவர்களைகாங்கிரஸ் கட்சி நிராகரித்தது. இறுதியில் இந்
தியாவின் சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைக் தொடங்கும் வகையில் பிரதீபா பட்டீ
லின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இந் தியாவின் பல மாநிலங்களில் இருந்துபல சமூகத்தவர்களும், பலமதத்தவர்களும்இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இதுவரை பெண் ஒருவர்இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்ப
டவில்லை. இந்தக் குறையைப் போக்கும்விதமாக பெண் ஒருவரின் பெயர் இந்திய
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது.பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க
வேண்டும் என கோஷமிட்டவர்கள் இதனைமகிழ்ச்சியுடன் வரவேற்றனர். எதிர்க்கட்சிக
ளோ இதனை எப்படி முறியடிக்கலாம் என்றுதிட்டம் போட்டன.
பிரதீபா பட்டீலை எதிர்த்து தனது வேட்பாளரை நிறுத்த விரும்பாத பாரதீய ஜனதாக்
கட்சி சுயேட்சையாகப் போட்டியிட்ட ஷெகாவத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தது.
ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் ஜனாதிபதித் தேர்தலில் முழு மூச்சுடன் ஈடுபட்டிருக்கு
ம் வேளையில் ஜெயலலிதா, சந்திரபாபுநாயுடு, முலாயம்சிங் ஆகிய தலைவர்கள்
மூன்றாவது அணி என்று தம்மை அழைத்துக்கொண்டு தமது சார்பில் ஜனாதிபதி வேட்
பாளரைக் களமிறக்க ஆலோசனை செய்தனர்.
பிரதீபா பட்டீலும், ஷெகாவத்தும் நேரடியாகப் போட்டியிட்டால் பிரதீபா பட்டீல்
வெற்றி பெறுவது உறுதி.இந்த நிலையில் பிரதீபா பட்டீலை ஓரம்
கட்டக் கூடிய வேட்பாளரைத் தேடிய மூன்றாவதுஅணி ஜனாதிபதி அப்துல் கலாø
மயே மீண்டும் ஜனாதிபதி ஆக்க வேண்டும் என முடிவு செய்தது.
அரசியல் வாதிக்குரிய எந்தவிதமான குணநலன்களும் இல்லாது ஜனாதிபதி மாளிகைø
ய மக்கள் மாளிகையாக மாற்றிஅமைத்த அப்துல் கலாமின் பெயரை மூன்றா
வது அணி அறிவித்ததும் நடு நிலையாளர்கள் அதிர்ந்து விட்டனர்.
அரசியல் செய்தது போதும் மாணவர்களுக்காகதனது வாழ்க்கையை அர்ப்பணிக்கப்
போகிறேன் என்று கூறிய அப்துல்கலாம்இதற்கு ஒப்புக் கொள்ளமாட்டார் என்றே பல
ரும் கருதினர்.காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை அறிவித்தநிலையில் மூன்றாவது அணித்தலை
வர்கள் அப்துல் கலாமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஜனாதிபதித் தேர்தலில் சூடு ஏறத்தொடங்கிய வேளையில் போட்டியின்றி
ஜனாதிபதியைத் தெரிவு செய்ய முடியாதுஎன்பதை உணர்ந்த அப்துல் கலாம் போட்டி
யின்றி ஏகமனதாகத் தெரிவு செய்யப்படக்கூடிய சூழல் இல்லை என் பதை உணர்ந்து
கொண்ட அவர் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தினால் யோசிக்கலாம் எனக் கூறினார்.
இந்த வார்த்தை அவருக்கு எதிராக ஒருசிலரைப் பேச வைத்தது. யாரையும் பகைக்கக்
கூடாது என்பதற்காக ஒருமித்த கருத்தைஈட்டும்படி அவர் கூறியதை சில அரசியல்
வாதிகள் பகிரங்கமாக விமர்சித்தனர்.மூன்றாவது அணியின் முயற்சி தோல்வி
யில் முடிந்ததனால் ஜனாதிபதி தேர்தலில்யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என
மூன்றாவது அணி அறிவித்தது.
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி பிரதீபாபட்டீல்தான் என்ற திட்டவட்டமான முடிவான
நிலையில் பிரதீபா பட்டீலுக்கு எதிராககுற்றச் சாட்டுகள் குவிந்த வண்ணம் இருந்
தன.மிக மோசமான ஒரு குற்றவாளியையேகாங்கிரஸ்கட்சி தேர்வு செய்துள்ளது.
கொலை மோசடி, பழிக்குப்பழி என்று மூன்றாந்தர அரசியல் வாதிபோல் பிரதீபா பட்டீல்
நடந்து கொள்வார் என அவருக்கு எதிரானவர்கள் பிரசாரம் செய்தனர்.
நாளும் பொழுதும் பிரதீபா பட்டீலை பற்றிய புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
இவற்றை எல்லாம் புறந்தள்ளிய காங்கிரஸ்கட்சியின் கூட்டணிக் கட்சிகள் பிரதீபாவுக்கு
ஆதரவு தேடும் கூட்டங்களை கோலாகலமாக நடத்தின.
ஜனாதிபதி தேர்தலில் அன்று மூன்றாவதுஅணியின் மிக முக்கிய தலைவர்களில் ஒரு
வரான ஜெயலலிதா மனம்மாறி தேர்தலில்வாக்களிக்கும்படி தனது கட்சியின் நாடாளு
மன்ற உறுப்பினர்களுக்கும், சட்டசபைஉறுப்பினர்களுக்கும் உத்தரவிட்டார்.
ஜெயலலிதாவின் இந்த மனமாற்றத்தினால்வைகோவின் கட்சி உறுப்பினர்களும்
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தனர்.தமிழக சட்டசபையைச் சேர்ந்த 234 உறுப்
பினர்களில் 231 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,
மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்ஆகியவற்றின் சார்பில் 66 உறுப்பினர்கள்
சட்ட சபையில் உள்ளனர்.ஜெயலலிதா, மறுமலர்ச்சி திராவிட முன்
னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் வாக்க
ளிக்கவில்லை. ஒரு வாக்கு செல்லாதது.ஷெகாவத்துக்கே வாக்குகள் பதிவாகியி
ருக்கவேண்டும்.ஆனால் தமிழகத்தில் ஷெகாவத்துக்கு 59
வாக்குகள் கிடைத்தன. மாறி வாக்களித்தநான்கு பேர் யார் என்ற கேள்விக்கு விடைதெரி
யவில்லை.
தமிழகத்தில் மட்டுமல்லாது ஷெகாவத்துக்குவாக்களிக்க வேண்டிய 30 நாடாளு
மன்ற உறுப்பினர்களும் 47 சட்டமன்றஉறுப்பினர்களும் பிரதீபா பட்டீலுக்கு வாக்களித்
துள்ளனர்.பிரதீபாவுக்கு மொத்தம் 6 இலட்சத்து 26ஆயிரத்து 350 வாக்குகள் கிடைக்கும் என
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூடுதலாக 11ஆயிரத்து 766 வாக்குகள் அவருக்குக்
கிடைத்துள்ளன. கட்சி மாறி கிடைத்த வாக்குகளால்தான் இவ்வளவு கூடுதல் வாக்குகள்
பிரதீபாவுக்குக் கிடைத்துள்ளது.அதே சமயம், ஷெகாவத்துக்கு 3 இலட்சத்து 41 ஆயிரத்து 201 வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 9ஆயிரத்து 895 வாக்குகள் குறைந்துள்ளன.
குஜராத்தில் பாஜக சட்டசபை உறுப்பினர்கள் 4 பேர் அசாம் கண பரிஷத்தைச் சேர்ந்த
15 சட்டசபை உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்கள்பிரதீபாவுக்கு வாக்களித்துள்ளனர்.
இதேபோல், ஜார்க்கண்ட், அருணாசலப்பிரதேசத்திலும் பிரதீபாவுக்கு, எதிர் முகாமி
லிருந்து கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன.ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக
கூட்டணிக்கு 37 பேர் உள்ளனர். அவர்களில்8 பேர் பிரதீபாவுக்கு வாக்களித்துள்ளனர்.
அதை விட மோசமாக அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 8 பா.ஜ.க உறுப்பினர்களில்
ஒருவர் மட்டுமே ஷெகாவத்துக்கு வாக்களித்துள்ளார். மற்ற 7 பேரும் பிரதீபாவுக்கு
வாக்குப்போட்டு விட்டனர்.மத்திய பிரதேச மாநிலத்தில் ஷெகாவத்துக்கு
ஆதரவாக விழுந்த 11 வாக்குகளில்ஓம் ஜெய ஸ்ரீ ராம் என்ற எழுத்துக்கள் இருந்ததால்
அவை செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. இதனால் ஷெகாவத்துக்குப்
பின்னடைவு ஏற்பட்டது. மிஸோராம், கேரளா, மேற்கு வங்கம், திரி
புரா ஆகிய மாநிலங்களில் ஷெகாவத்துக்குஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை.
ரமணி

மெட்ரோநியூஸ் 27 07 2007

No comments: