Tuesday, September 30, 2008

முப்பெரும்தேவியரே போற்றி



மலைமகளே மாதரசியே
கலையூர்தியே கற்பகமே
முக்கண்ணன் நாயகியே
முக்கனியே வந்திடம்மா

நாரணியே தரணிபோற்றும்
பூரணியே வந்திடம்மா
பகையைதீர்த்திடம்மா வெற்றி
வாகையைத்தந்திடம்மா


நண்ணார்மிடுக்கொடிக்க
மண்ணிலேவந்திடம்மா
எல்லையிலாநாயகியே
தொல்லைகளைப்போக்கிடம்மா

திருப்பாற்கடலில்தோன்றியவளே
திருமாலைத்துணையாய் தேர்ந்தவளே
திருவேஉருவாய் உடையவளே
கருணைக்கண்காட்டிடம்மா

செங்கமலநாயகியேதாயே
மங்காதசெல்வம் தந்திடம்மா
திருமகள் எனும்நாமத்தவளே
திரும்பியேகொஞ்சம்பாரம்மா


செல்வத்துக்கதிபதியே
செல்வியே முண்டகாசினி
பெருந்தன்மைகாத்திடவே
பெருமலையைத்தந்திடம்மா


கலைகளின் நாயகியே
கலைவாணியே வந்திடம்மா
முத்தமிழைத்தந்திடம்மா
பக்தர் நாம்சிறப்புறவே

நான்முகன் கிழத்தியே
வெண்தோடகத்தில் இருப்பவளே
பண் இசைபாடிடவே
நாவினில் வந்திடம்மா

வெண்டாமரைத்தேவியே
கண்மலர்ந்துபார்த்திடம்மா
கலையரசியேமாதேவி
நிலையாகநின்றிடம்மா

அங்கையற்கண்ணியே போற்றி
அர்த்தநாரீஸ்வரியே போற்றி
அலையிடைப்பிறந்தவளேபோற்றி
செல்வாம்பிகையே போற்றி
வித்தியார்த்திதேவியேபோற்றி
முப்பெரும்தேவியரே போற்றி
ஆதிபராசக்தியே போற்றி போற்றி

ரமணி
வீரகேசரி வாரவெளியீடு 28 09 08

No comments: