Saturday, November 29, 2008

மும்பை குண்டுத்தாக்குதலும் கிரிக்கெட்டும்


மும்பையில் கடந்த புதன்கிழமை இரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களினால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இந்திய கிரிக்கெட்டை மும்பைத் தாக்குதல் பாதித்துள்ளது. இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நடக்க ஏற்பாடாகியிருந்த டெஸ்ட் போட்டி சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மும்பைத் தாக்குதல்களினால் கிரிக்கெட் வீரர்களும் அதிர்ந்து போயுள்ளனர். 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக மும்பையில் தங்கியிருந்த பாகிஸ்தான் வீரர்களான தன்வீரும், அக்மலும் இச் சம்பவத்தால் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மும்பைச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் பாகிஸ்தானில் உள்ள அவர்களது உறவினர்கள் இருவருடனும் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

ரோயல் சலஞ்சின் தலைவர் ஷேர்ன் வோர்ன் மும்பையில் பயிற்சி பெறுவதற்குத் திட்டமிட்டிருந்தார். கடைசி நேரத்தில் அவரது பயிற்சி பெங்களூருக்கு மாற்றப்பட்டது.

உதைபந்தாட்ட நட்சத்திரம் மரடோனா இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார். மும்பைத் தாக்குதலினால் இந்தியாவின் பாதுகாப்பு பற்றிக் கேட்டுள்ளார்.

பயங்கராதிகளின் தாக்குதலுக்கு இலக்கான தாஜ், ஒபராய் ஆகிய இரண்டும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருப்பமான ஹோட்டல்கள்.

No comments: