Thursday, July 23, 2009

திரைக்குவராதசங்கதி 13

தமிழ்த் திரை உலகில் மிகச் சிறந்த கதாசிரியர்களில்காரைக்குடி நாராயணனும் ஒருவர். அவர் கதை வசனம் எழுதிய படங்கள் எல்லாம் வெற்றி பெற்ற காலமது. திரைப்படத்துறையில் ஏதாவது சாதித்து முன்னேற வேண்டும் என்ற ஆசை காரைக்குடி நாராயணனின்மனதிலும் உதித்தது. அதன் காரணமாக திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க விரும்பினார்.அச்சாணி என்ற பெயரில் திரைப்படம் ஒன்றைத்தயாரிக்கும் ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கினார்.காரைக்குடி நாராயணன் இளைய ராஜாவின் இசை
யில் சொக்கிப் போன காரைக்குடி நாராயணன். அவரையே தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்தார்.அச்சானி படப்பூஜையிலன்று பாடல்களை ஒலிப்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அச்சாணி படத்தின்பாடல்களை கவிஞர் வாலி எழுதினார். பிரசாத்
ஸ்ரூடியோவில் அச்சாணி படத்துக்கான பூஜையும் பாடல்ஒலிப்பதிவும் நடைபெறும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. அழைப்பிதழ் கிடைத்தவர்கள் காலை7 மணிக்கு பிரசாத், ஸ்ரூடியோவுக்கு சென்றனர். அங்கே பாடல் ஒலிப்பதிவுக்கான ஆயத்தம் நடைபெற்றதுபிரசாத் ஸ்ரூடியோவுக்கு இளையராஜா சென்றபோது அங்கே இருந்த வாத்தியக் குழுவினர் தனது
குழுவினர் அல்ல என்பதை அறிந்தார். அங்கிருந்தவாத்தியக் குழுவினர் கன்னட இசையமைப்பாளரானஉபேந்திராவின் குழுவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.பிரசாத் ஸ்டூடியோவின்கவுண்ட் எஞ்ஜினியர் எஸ்.பி. இராமநாதன்இரண்டு குழுவின
ருக்கும் காலை 7மணிக்கு நேரம் ஒதுக்கிக்கொடுத்தார். தெரியாமல் செய்தாரா அல்லது ஒருகுழுவின் ஒலிப்பதிவு முடிந்ததும் அடுத்த குழுஒலிப்பதிவை செய்யும் என்ற என்னத்தில் இரண்டுகுழுக்களுக்கு நேரத்தை கொடுத்தாரா தெரியவில்லை.
கன்னட இசையமைப்பாளர் உபேந்திரா எதனையும்கண்டுகொள்ளாமல் ஒத்திகையை ஆரம்பித்தார்.இளையராஜாவோ இன்று எப்படியும் ஒலிப்பதிவைமுடித்து விட வேண்டும் என்று நினைத்து கே.ஜே.ஜேசுதாஸின் தரங்கணி ஸ்டூடியோவைக் கேட்கும்படி
கூறினார். அங்கே ஒலிப்பதிவு செய்யலாம் என்றுதெரிந்ததும் இளையராஜாவின் குழு தரங்கணிஸ்ரூடியோவுக்குச் சென்றது.
பிரசாத் ஸ்ரூடியோவில் நடக்க வேண்டிய அச்சாணிபடப் பூஜை தரங்கிணி ஸ்ரூடியோவில் கோலாகலமாக நடந்தது. ஒலிப்பதிவு நடைபெற ஆயத்தமானபோது ஒலிப்பதிவு மெஷின் பழுதாகிவிட்டது. நேரம்ஒரு மணியை நெருங்கிவிட்டது.
ஒலிப்பதிவு மிஷன் திருத்தப்படவில்லை.இதற்கிடையில் உபேந்திராவின் ஒலிப்பதிவு முடிந்து அனைவரும் சென்றுவிட்டனர் என்ற தகவல் கிடைத்தது.இளையராஜாவும் அவரது குழுவினரும் இரண்டுமணிபோல் மீண்டும் பிரசாத் ஸ்ரூடியோவுக்குச் சென்றனர்.
இளையராஜாவின் இசைக்குழு தயாராகியதும் ஒருமுறை ஒத்திகை பார்த்தனர். எல்லாம் சரியானபின்னர் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதுமாதா உன் கோயிலில் மணிதீபம் ஏற்றினேன்என்ற அற்புதமான பாடல் அந்த ஒலிப்பதிவு
கூடத்தை நிரப்பியது. இரண்டு டேக் எடுத்தும்இளையராஜாவுக்கு திருப்தி வரவில்லை. அவ்வப்போது கற்பனையில் வந்த சங்கதிகளைஜானகியிடம் கூறி பாட்டுக்கு மெருகேற்றினார் இளையராஜா. அடுத்த டேக் மிக அற்புதமாக வந்து கொண்டிருந்தது. மூன்றாவதுபின்னணி இசை ஒலிக்க வேண்டிய தருணம்திடீரென எங்கும் நிசப்தமானது யாரும் வாத்தியத்தை இசைக்கவில்லை.மூன்றாவது பின்னணி இசைக்குசைகைகாட்ட வேண்டிய கோவர்த்தன் சைகை காட்டாததனால் தான் யாரும் பின்னணிஇசையைத் தொடரவில்லை என்பதை இளையராஜாஉணர்ந்து கொண்டார். கோவர்த்தன் இளையராஜாவை
விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்.ஜானகி உணர்ச்சிவசப்பட்டு பாடியதால் தன்னைமறந்து விம்மினார். அதனால்தான் அவர் சைகை காட்டவில்லை.
இந்தப் படத்துக்கு நீங்கள் இசையமையக்கவில்லை என்றால் நான் படமெடுக்க மாட்டேன் இந்தப் படத்தைஇப்படியே விட்டுவிடுவேன் என்றுயாராவது கூறினால் இளையராஜாவுக்குகெட்ட கோபம் வந்துவிடும். அப்படி யாராவது கூறினால்
ஒத்துக் கொள்ள மாட்டார்.நீங்கள் இசையமைக்கவில்லையென்றால் படத்தைத் தயாரிக்க மாட்டேன் என்று இசை ஞானியிடம் கூறிஅவர் க‌ண்டு கொள்ளாததால் வேறுஇசையமைப்பாளரை ஒப்பந்தம்செய்து வெளிவந்த படங்களில் கே.பாக்கியராஜின் ஒரு கை ஓசைபார்த்திபனின் புதிய பாதை, கே. பாலச்சந்திரின் உதவியாளரான அனந்தின் சிகரம் என்பன அடக்கம்.தீஸ்ரி மஞ்ஜில் என்ற படத்தை தமிழில் தயாரிப்பதற்கு உரிமை பெற்றசாரு சித்ரா சீனிவாசன் அப்படத்தைஇசைஞானிக்குப் போட்டுக் காட்டினா
ர். ஆர்.டி. பர்மனின் அற்புதமானஇசையில் உருவான பாடல்கள்அனைத்தும் பிரபலமானவை. அப்பாடல்கள் அனைத்தும் இசை
ஞானியின் மனதை விட்டு நீங்காதவை.அந்தப் படத்தின் பாடல்கள்போன்று தனக்கு வேண்டும் எனசாரு சித்ரா சீனிவாசன் கேட்டார்.சில பாடல்களுக்கு ஈடுஇணையில்லை. அதுபோன்று இசை அமைக்கமுயற்சிக்கக் கூடாது என்பதில் உறுதி
யாக இருக்கும் இசைஞானி இசையமைக்க மறுத்துவிட்டார்.இளையராஜாவின் இசையில் பாடுவதற்காக சென்றிருந்த டாக்டர்
கே.ஜே. ஜேசுதாஸுடன் ஒரு பெண்ணும் கூடச் சென்றிருந்தார். அந்தப்பெண்ணின் குரலைக் கேட்கும்படிடாக்டர் கே.ஜே. ஜேசுதாஸ், இசைஞானியிடம் கூறினார். அப்பெண்ணின்குரல் இசைஞானியைக் கவர்ந்தது.அடுத்த நாளே ஜென்சி என்ற அப்
பெண் தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகமானார். தேவராஜ், மோகன்இயக்கிய பூந்தளிர் என்ற படத்தில்""ஞான் ஞான் பாடணும்
ஊஞ்சல் ஆடணும்'' என்றமலையாளப் பாடலுடன்அறிமுகமான ஜென்சிஅதன் பின்னர் பிஸியானபாடகியாகிவிட்டார்.பாரதிராஜாவின் புதியவார்ப்பு என்ற படத்துக்குபூஜை போடுவதற்கு நாள்குறிக்கப்பட்டது. அன்றுபாடல் ஒன்று ஒலிப்பதிவுசெய்வதற்குரிய சகலஆயத்தங்களையும் இசைஞானி செய்திருந்தார்.அதற்குரிய பாடலையும்கவியரசு கண்ணதாசன் எழுதிக் கொடுத்துவிட்டார்.இரவு திடீரென பாரதிராஜா இளையராஜாவுக்கு போன் பண்ணி நாளைக்குவேறு ஒரு பாடல் ஒலிப்ப
திவு செய்ய வேண்டும் கவிஞரிடம்நான் கூறுகிறேன் எனக் கூறினார்.மறுநாள் காலை ஜேசுதாஸின்தரங்கிணி ஸ்டூடியோவில் காலை 7மணிக்கு இசைஞானி தனது குழுவுடன்ஒலிப்பதிவுக்குத் தயாராக ஒத்திகைபார்த்தார். 10 மணிபோல் கவிரசு வந்ததும் டூயட் பாட்டுத்தானேஎனக்கேட்டார். அதற்குஆமாண்ணே என இசைஞானி பதிலளித்தார்.டியூனைப் பாடும்படி இசைஞானியிடம் கவியரசு கூறினார். இசைஞானி டியூனைப் பாடினார். இன்னொரு முறை பாடும்படி கூறினார்.இசைஞானி மீண்டும்பாடி க்காட்டினார்.வான் மேகங்களே வாழ்த்துக்கள்!பாடுங்கள்! நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை'' என்ற வார்த்தை
கள் கவிஞரின் வாயிலிருந்துவெளிப்பட்டன.இசைஞானி அந்த வரிகளைப் பாடிகண்டு கொண்டேன் ராமனை எனமுடித்ததும் கவிஞர் அடுத்த வரியைஅழகாகக் கூறினார். இசையிலிருந்துஇம்மியும் பிசகாது வெளிவந்தவார்த்தைகளைக் கேட்டதும் கூடி இ
ருந்தவர்கள் கை தட்டி மகிழ்ந்தனர்.20 நிமிடங்களில் மிகவும் அருமையான பாடலை கவியரசு கூறினார்.

3 comments:

Learn Speaking English said...

சுவையான பதிவு

king said...

useful information,this segment is very beautiful in ur blog

வர்மா said...

வருகைக்கு ந்ன்றி
அன்புடன்
வர்மா