Sunday, January 3, 2010

உலகக்கிண்ணம்2010


பரகுவே
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு தென் அமெரிக்காவில் இருந்து தெரிவான மூன்றாவது நாடு பரகுவே. மிகுந்த நம்பிக்கையுடன் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை எதிர்பார்த்துள்ளது பரகுவே. 18 உலகக் கிண்ண உதைபந்தாட்ட தகுதி காண் போட்டியில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமநிலையில் முடித்த பரகுவே ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்தது. 24 கோல்களை பரகுவே அடித்துள்ளது. பரகுவேக்கு எதிராக 16 கோல்கள் அடிக்கப்பட்டன. 42 தடவை மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. ஒரு தடவை எச்சரிக்கை விடப்பட்டது. ஒருமுறை சிவப்பு அட்டை காட்டப்பட்டது. 33 புள்ளிகள் பெற்று தெரிவானது.
முதல் சுற்றில் பலம் வாய்ந்த நாடுகளான பிரேசிலை 20, உருகுவேயை 10, சிலியை 30 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆர்ஜென்டீனாவுடனான போட்டி 11 என்ற கோல் கணக்கில் சமநிலையுடன் முடிந்தது.
இரண்டாவது சுற்றில் இரண்டு போட்டிகள் மீதமிருக்கையில் ஆர்ஜென்ரீனாவை 21 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது பரகுவே. இந்தச் சந்தோஷத்தைக் கொண்டாட ஒருநாள் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஈக்குவடோருக்கு எதிராக 51 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பொலிவியா 4 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
1998ஆம் ஆண்டு பிரான்சிலும் 2002ஆம் ஆண்டு கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்ற பரகுவே 2010 ஆம் ஆண்டும் இரண்டாவது சுற்றில் விளையாடும் நம்பிக்கையுடன் உள்ளது.
பரகுவேயின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மார்ட்டினோ, மெக்ஸிக்கோவிலும் ஐரோப்பாவிலும் உள்ள கழகங்களில் விளையாடி வருகிறார். நெல்சன் சயாடா வல்டஸ் 11 கோல்கள் அடித்து எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார். ரொகியோ சாந்த குரூஸ், சல்வடோர், கபனாஸ் ஆகியோரும் நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறார்கள். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த செரார்டோ மாட்டினோ பரகுவே உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக உள்ளார்.இத்தாலி, நியூசிலாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுடன் எஃப் பிரிவில் பரகுவே உள்ளது
ரமணி
மெட்ரோநியூஸ்

No comments: