Monday, January 4, 2010

உலகக்கிண்ணம்2010


ஆர்ஜென்ரீனா
உலகின் மிகப் பலம் வாய்ந்த உதைபந்தாட்ட அணிகளில் ஒன்றான ஆர்ஜென்டீனா மிக மிக கஷ்டப்பட்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றது. பீஃபாவின் சிறந்த விளையாட்டு வீரராகவும் ஐரோப்பாவின் சிறந்த உதைபந்தாட்ட வீரராகவும் தெரிவு செய்யப்பட்ட லியோனல் மேர்ஸி ஆர்ஜென்டீனா உதைபந்தாட்ட அணியின் தலைவராக உள்ளார்.
உதைபந்தாட்ட ஜாம்பவானான பீலே க்கு அடுத்த படியாகப் போற்றிப் புகழப்படும் மரடோனா ஆர்ஜென்டீனா உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக உள் ளார்.
உதைபந்தாட்ட உலகில் சர்ச்சைகளின் நாயகனான மரடோனாவை சர்ச்சைகள் இன்றும் துரத்துகின்றன. ஆர்ஜென்ரீனா உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக மரடோனா பொறுப்பேற்ற பின்னர் அணியின் தரம் வீழ்ச்சி கண்டுள்ளது என்று குமுறிய ஆர்ஜென்ரீனா உதைபந்தாட்ட ரசிகர்கள் மரடோனாவை மாற்ற வேண்டும் என்று போர்க் கொடி தூக்கினர். வாழ்வா சாவா என்ற இறுதிப் போட்டியில் உருகுவேயை 1 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற் றது ஆர்ஜென்ரீனா.
18 தகுதிகாண் போட்டிகளில் விளையாடிய ஆர்ஜென்டீனா எட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு போட்டிகளை சமப்படுத்தி ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்தது. 23 கோல்கள் அடித்த ஆர்ஜென்டீனாவுக்கு எதிராக 20 கோல்கள் அடிக்கப்பட்டன. 37 முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஒரு முறை எச்சரிக்கை விடப்பட்டது. மூன்று தடவை சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
பிரேஸில்ஆர்ஜென்டீனா அணிகளுக்கிடையேயான முதலாவது போட்டியில் இரு அணிகள் கோல் எதுவும் அடிக்காது சமநிலையில் முடிந்தது. வெனிசுலாவுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 40 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான போட்டியில் வெனிசுலா 61 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆர்ஜென்ரீனாவுக்கு எதிராக அதிக கோல்கள் அடித்த நாடாக வெனிசுவெலா திகழ்கிறது. முதல் பாதியில் 3 1 கோல் கணக்கில் முன்னணியில் இருந்த வெனிசுலா இரண்டாவது பாதியில் மேலும் மூன்று கோல்கள் அடித்தது. இந்தப் போட்டி ஆர்ஜென்ரீனாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
பிரேஸிலுடனான போட்டியில் 31, பரகுவேயுடனான போட்டியில் 10 கோல் கணக்கில் தோல்வி அடைந்த ஆர்ஜென்ரீனா பெருவுடனான போட்டியில் 2 1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. என்றாலும் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்துக்கு தகுதி பெறும் புள்ளி கிடைக்காமையினால் தடுமாறிய ஆர்ஜென்ரீனா கடைசிப் போட்டிவரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைசிப் போட்டியில் உருகுவேயை 10 கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தில் விளையாடும் தகுதியைப் பெற்றது ஆர்ஜென்ரீனா.
உலக உதைபந்தாட்ட தகுதிகாண் போட்டியில் ஐந்து கோல்கள் அடித்த
ஜாவிர் மஸ்ரரானோ தலா நான்கு கோல்கள் அடித்த லியோனல் மேர்ஸி, ஜூன் ரெகியூலம் ஆகியோருடன் ஜுலியன் செபஸ்தியன் வோரோ ஆகியோர் ஆர்ஜென்ரீனாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாவர்.
தென் கொரியா, நைஜீரியா, கிரீஸ் ஆகிய நாடுகளுடன் பீ பிரிவில் ஆர்ஜென்டீனா உள்ளது.

No comments: