Saturday, March 20, 2010

திரைக்குவராதசங்கதி 17




குடும்பப் படங்களை இயக்கி தனக்கெனஒரு முத்திரை பதித்தவர் இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.அவர் முதன் முதலில் இயக்கிய படம்சார‌தா! கவியர‌சு கண்ணதாசனின்அண்ணன் ஏ.எல். சீனிவாசன் அப்படத்தைத்தயாரித்தார். விஜயகுமாரியும்எஸ்.எஸ். ஆரும் அப்படத்தில் ஜோடியாக நடித்தனர்.வித்தியாசமான கதை அம்சம் உள்ளசார‌தா என்ற அப்படம் அந்தக் காலத்தில்வெற்றி பெற்றது பெரிய அதிசயம்தான். விபத்து ஒன்றில் ஆண்மையைஇழந்த எஸ்.எஸ்.ஆர். தன் மனைவியான விஜயகுமாரிக்கு மறுமணம்செய்து வைக்க முடிவு செய்கிறார். விஜயகுமாரி முதலில் மறுக்கிறார். கணவனின்விருப்பத்துக்காக மணப் பெண்ணாகிறாள்.மணக்கோலத்துடன் நாயகி
கணவனின் காலடியில் மர‌ணமாகிறாள்.ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்,தட்டுத் தடுமாறி நெஞ்சம், மெல்லமெல்ல அருகில் வந்து மென்மையானகையை தொட்டது போன்ற காலத்தால்அழியாத பாடல்கள் இன்றும்பழைய ர‌சிகர்களின் மனதில் நீங்காதுஉள்ளன.
சார‌தா படத்தின் வெற்றியினால் சந்தோசப்பட்ட பட அதிபர் ஏ.எல். சீனிவாசன், மெஜஸ்ரிக் ஸ்ரூடியோவை வாங்கிஅதற்கு சார‌தாஸ்ரூடியோ எனப் பெயரிட்டார். சாரதாவின் வெற்றியைத் தொடர்ந்துஏ.எல். சீனிவாசன் தயாரித்த படங்களுக்கு சாந்தி, வசந்தி,
ஆனந்தி என்று கதாநாயகியின் பெயர்வைத்தார். பாதகாணிக்கை என்ற படத்துக்காகவிஜய குமாரிக்கு மேக்கப் பொருத்தமானதாக இருக்கவில்லை. அதனால் அந்தக் காலத்தில் பிμபலமான ஹரிபாபுவிடம் மேக்கப் போடுவதற்கு விஜயகுமாரியை அனுப்பினார்கள். அதி
காலை நான்கு அல்லது ஐந்து மணிக்குஹரிபாபுவின் வீட்டிற்குச் சென்று விடுவார் விஜயகுமாரி. ஹரிபாலாவிடம்மேக்கப் போட வேண்டுமென்றால் அவரது வீட்டிற்குத் தான் செல்ல வேண்டும்.ஹரி பாபுவின் வீட்டிற்கு விஜயகுமாரி சென்றபோது என்.டி.ராமரவும்
மேக்கப் போட அங்கு சென்றார். இருவருக்கும் அப்போது பரீட்சயம் ஏற்பட்டது.தெலுங்குப் படத்தில் நடிக்கும்படிவிஜயகுமாரியிடம் என்.டி.
ராமராவ்அழைப்பு விடுத்தார். தெலுங்கு தெரியாதபடியால் நடிக்க முடியாது என விஜயகுமாரி மறுத்துவிட்டார்.தெலுங்கு படிப்பது சுலபம். நான்சொல்லித் தருகிறேன் என என்.டி.ராமராவ் கூறினார். விஜயகுமாரி மறுத்துவிட்டார்.தெலுங்குப் படங்களில் நடித்திருந்தால் அங்கும் விஜயகுமாரி வெற்றிக்கொடி நாட்டி இருப்பார்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். இலட்சிய நடிகை விஜயகுமாரி ஆகியோர்நடித்த மிகவும் சிறந்த படம் சாந்தி. கண்தெரியாதபெண்ணாக அப்படத்தில் விஜயகுமாரி நடித்தார். எஸ்.
எஸ்.ஆரும் விஜயகுமாரியும் காதலர்கள். சந்தர்ப்பசூழ்நிலையால் விஜயகுமாரியின் கழுத்தில் எஸ்.எஸ்.ஆரின் நண்பனான சிவாஜி
தாலி கட்டுகிறார். முதலிரவன்று விஜயகுமாரியின்புடைவையில் தீப்பிடிக்கிறது.முதலிரவு ஒத்திவைக்கப்படுகிறது.புடைவை தீப்பிடித்ததும்
கையில் கசக்கி தீயைஅணைக்கிறார் விஜயகுமாரி. உண்மையிலேயே கை தீயில் வெந்துவிட்டது.அதனைக் கண்ட சிவாஜிபதறியபடி விஜயகுமாரியின் கைக்குமருந்து போட்டார்.பச்சை விளக்கு படத்தில்சிவாஜி கணேசனின் தங்கையாகநடித்தார் விஜயகுமாரி. அப்படத்தில் ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில்தெரிகிறது என்ற பாடல் உள்ளது. அப்பாடலில் குங்குமச்சிலையே குடும்பத்துவிளக்கே குல மகளே வருக எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக'' என்ற வரி உள்ளது.அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டது
ம் ""விஜி நிச்சயமாக கண்ணகியாகநடிப்பாய்'' என்று சிவாஜி கூறினார். பூம்புகார் படத்தில் விஜயகுமாரி கண்ணகியாக நடித்து அசத்தினார்.
நானும் ஒரு பெண் என்ற படம் விஜயகுமாரியின் நடிப்பினால் வெற்றி பெற்றபடங்களில் ஒன்று. ஏ.வி.எம். தயாரித்தஅப்டத்தில் கறுப்புப் பெண்ணாக விஜயகுமாரி நடித்தார். அழகில்லாதவர்கள்கூட மேக்கப்பினால் தம்மை அழகுபடுத்திக்காட்டுவதில் அதிக அக்கறை காட்டு
கின்றனர். ஆனால் விஜயகுமாரியோகறுப்புப் பெண்ணாக நடிக்க ஒப்புக்கொண்டார்.விஜயகுமாரியின் பாத்திரத்தைப்பற்றிகேள்விப்பட்டவர்கள் அவருடைய ஆட்டம் முடிந்து விட்டது என்று நேரடியாகக் கூறினார்கள்.
ரமணி
மித்திரன்வாரமலர்
2/09/2007

1 comment:

manjoorraja said...

//ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில்தெரிகிறது என்ற பாடல் உள்ளது//

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்ற பாடல் உள்ளது