Sunday, July 1, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 37


தம்பிக்கு கௌரவமான உத்தியோகம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கற்பை விலையாகக் கொடுத்த பெண் ஒருத்தி தன் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக விலை மாதுவாக மாறிய ஒருத்தியின் கதை தான் 1973 ஆம் ஆண்டு வெளியான அரங்கேற்றம். வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற ஏ முத்திரையுடன் வெளியான இப்படம் சகலரையும் கவர்ந்து 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.
ஆசாரம் மிக்க பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எஸ்.வி.சுப்பையா அவர் மனைவி எம்.என்.ராஜம் அவர்களுடைய மூத்த மகள் பிரமிளா, பிர

மிளாவின் தங்கைகளான ஜெயசித்திராவும், ஜெயசுதாவும் நடித்தனர். தம்பியாக கமலஹாசன் நடித்தõர். எஸ்.வி.சுப்பையா புரோகிதம் செய்ய மறுத்ததனால் அக்குடும்பம் வறுமையில் வாடியது. மூத்தமகள் பிரமிளா குடும்பச்சுமையை öபாறுப்பெடுத்தாள். தம்பி கமலஹாசனுக்கு டாக்டர் சீட்டு@கட்டு சென்னைக்கு செல்கிறாள் பிரமிளா. தம்பியின் படிப்புக்காக அவளது கற்பு விலைப் பேசப்படுகிறது. தம்பிக்கு வேலை கிடைத்தால் தன்குடும்ப வறுமை தீரும் என்பதனால் தன்னை இழக்கிறாள் பிரமிளா.
தம்பிக்காக தன் கற்பை இழந்த பிரமிளா குடும்பத்துக்காக விலை மாதுவாக மாறுகிறாள். கிராமத்தில் அவளது குடும்ப வறுமை படிப் படியாக நீங்குகிறது. பாடகியாக வர வேண்டும் என்ற தங்கையின் ஆசையை நிறைவேற்றுகிறாள் பிரமிளா. வானொலியில் பாடச் சந்தர்ப்பம் கிடைத்த சகோதரிக்கு மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் முன்னேறும் வழியினில் இளையவள் அரங்கேற்றம்... எனப்பாடுகிறாள்.

தங்கையின் திருமணத்துக்காக வீட்டிற்கு வருகிறாள் பிரமிளா. விதியும் அவள் கூடவே வந்தது. பிரமிளாவின் மேலாடை விலகியிருந்ததைக் கண்ட தா# துணியை சரியாப் போடு என்று கூற ஆம்பிளை என்பதே மரத்துப் போச்சு என்கிறாள். இதனைக் கேட்ட தாய் எம்.என்.ராஜம் அதிர்ச்சியடைகிறாள். மறந்து போச்சு எனக் கூறியிருப்பாள். உனக்கு மரத்துப் போச்சு என்று கேட்டிருக்கும் என்று சமாதானம் கூறுகிறார் எஸ்.வி.சுப்பையா.
பிரமிளாவின் தொழில் விபசாரம் தான் என்பதைத் தெரிந்த குடும்பம் அதிர்ச்சியடைகின்றது. வீட்டினுள் எதிர்ப்பு கிளம்புகிறது. பிரமிளா இதனை விரும்பிச் செய்யவில்லை. குடும்பக் கஸ்டத்தால் தான் மாறினாள் என்பதை அனைவரும் உணர்கின்றனர். பிரமிளாவின் கடந்த கால வாழ்க்கையைத் தெரிந்து கொண்ட சிவகுமார் அவளைத் திருமணம் செய்ய முன் வருகிறார். திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. பிரமிளாவின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். புத்தி பேதலித்தநிலையில் மண மேடையை விட்டு இறங்கி விடுகிறாள் பிரமிளா.

பிரமிளா அறிமுகமான படம் இது. குடும்பத்துக்காக பிரமிளா செய்த தியாகத்தை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் சிந்தினர். பெண் ரசிகைகளை அரங்கேற்றம் வெகுவாகப் பாதித்தது. இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான இப்படம் தடை செய்யப்படுமா என்ற அச்சம் எழுந்தது. பாலச்ச‌ந்தர் இயக்கிய முதலாவது பாலியல் படம் இது. பின்னர் இது போன்ற பாலியல் பிரச்சினைகளை மையமாக வைத்து பல படங்களை இயங்கினார் பாலச‌ந்தர்.

ஹிந்தியில் ஆய்னா எனும் பெயரிலும் தெலுங்கில் ஜுவிதரங்கமுரியை பெயரிலும் வெளியாகின. ஆண்டவனின் @தாட்டத்தி@ல அழுகு சிரிக்குது, மூத்தவள் நீ கொடுத்தாய், வாழ்வி@ல முன்@னற்றம், ஆரம்பகாலத்தில் அது இருக்கும். மாப்பிள்ளை இரகசியம் சொல்லவா? ஆகிய கண்ணதாச‌னின் பாடல்களுக்கு சிறப்பாக இசை அமைத்தார் வி.குமார்
ரமணி
மித்திரன்01/07/12

No comments: