Sunday, July 15, 2012

திரைக்குவராதசங்கதி 40



தமிழ்த்திரைஉலகில்ஓகோஎன்றிருந்தபலர்கடைசிக்காலத்தில்மிகவும்கஷ்டப்பட்டார்கள்.புகழின்உச்சியில்இருந்தபலருக்குபுகழ்ச்சிமட்டுமேமிஞ்சியது.வருமானம்இல்லாமையால்அடுத்துஎன்னசெய்வதெனத்தெரியாதுதடுமாறினார்கள்.புகழின்உச்சியில்தம்மைஉயர்த்திவைத்தஅதிர்ஷ்டம்மீண்டும்என்றோஒருநாள்வரும்என்றநம்பிக்கையிலேயேபலர்உயிரைவிட்டனர்.இழந்தவாழ்வைபெறறுவிடுவோம்வோம் என்ற நம்பிக்கையில் ஜோதிடர்களிடம் ஆலோசனைகேட்டு இருந்ததையும் இழந்தவர்கள்திரை உலகில் அதிகம் பேர் உள்ளனர்
.நடிகர்திலகத்தின்கர்ணன்,கப்பலோட்டியதமிழன்,வீரபாண்டியகட்டப் பொம்மன்எம்.ஜி.ஆரின்ஆயிரத்தில்ஒருவன்போன்றவெற்றிப்படங்களைதயாரித்துஇயக்கியவர்பி.ஆர்.பந்துலு.கப்பலோட்டியதமிழன்'மிகசிறந்தபடம்என்றுதமிழ்பேசும்மக்கள்அனைவராலும்புகழப்பட்டபடம்.ஆனால்அந்தப்படத்துடன்பி.ஆர்.பந்துலுவின்பொருளாதாரம்முடங்கியது.கப்பலோட்டியதமிழன்வெற்றிப்படம்என்றுபேசப்பட்டாலும்போட்டமுதல்திரும்பவும் கிடைக்காததனால் பி. ஆர். பந்துலுதலைநிமிர முடியாது திண்டாடினார்.பிளைமவுத் என்ற பென்னாம்பெரியபடகுக் காரில்பயணம்செய்தபி.ஆர். பந்துலு பெற்றோல் வைக்குறைப்பதற்காகமொரிஸ்மைனர்காருக்குமாறினார்.இதுபோன்றஅநாவசியமானசெலவுகள்எல்லாவற்றையும்குறைத்தார்.இந்தஇக்கட்டில்இருந்துவெளிவருவதற்காகமக்கள்திலகத்தின்ஒப்புதலுடன்மதுரையைமீட்ட‌ சுந்தரபாண்டியன்' என்ற படத்தை தயாரிக்கமுடிவு செய்தார். மக்கள் திலகத்துக்குஅட்வான்ஸ் கொடுத்து விட்டு திரைக்கதைஎழுத ஆரம்பித்து விட்டாரே தவிரபடம் தயாரிப்பதற்கான பணத்தை அவரால் திரட்ட முடியவில்லை.

மின்னல் என்று தமிழ்த் திரை உலகினால்அழைக்கப்படும் தயாரிப்பாளரானஎம். உதுமான் முகைதீன்தனக்குத் தெரிந்த ஜோதிடர்ஒருவரை பி.ஆர். பந்துலுவுக்கு அறிமுகப்படுத்தினார். பொலிஸ் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட அந்த ஜோதிடர்பி.ஆர். பந்துலுவின் ஓலைச்சுவடியைப் பார்த்து அவரதுஎதிர்காலம் சிறப்பாகஅமையும் என்றும் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற படத்துடன் அவரது பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்றும்கூறினார்.

ஜோதிடரின் வாக்கினால்உற்சாகமடைந்த பி.ஆர். பந்துலு அவரைப் பற்றி தனதுநண்பர்களுக்கு கூறி விட்டுபடத்துக்கான உடைகள்தெரிவு ய்வதற்காக பெங்களூர் சென்றார். பெங்களூரில் குளியலறையில் வழுக்கிவிழுந்த பி.ஆர். பந்துலு மரணமானார். பி.ஆர்.பந்துலுவின் மரணத்தைகேள்விப்பட்ட மின்னல் உதுமான் முகைதீன்ஜோதிடரின் வீட்டுக்குச் சென்றுஅவரை அடித்து உதைத்தார்.வித்துவான் வே. இலட்சுமணன் என்பவர் பிரபலமான ஜோதிட நிபுணர். அவரும் மணியனும் இணைந்து பல படங்களைத் தயாரித்தனர். அவர்கள் தயாரித்தவெற்றிப் படங்களில் ஒன்றான "இதயவீணை' என்ற படத்தை ஹிந்தியில் தயாரிக்க முடிவு செய்தார்கள். ஒருகோடி ரூபாவில்தயாரிக்கப்பட்ட அந்தப் படத்தில்ஹிந்தித் திரை உலகின் பிரபல கதாநாயகனானதர்மேந்திரா கதாநாயகனாக நடித்தார். படம் படுதோல்வியடைந்தது.
எல்லோருக்கும் நல்ல நேரம் கெட்டநேரம் கணித்துக் கூறும் ஜோதிட நிபுணர்தயாரித்த படமே படுதோல்வியடைந்துஅவரை கடன்காரனாக்கியது. அதுபற்றிஅவரிடம் கேட்ட போது ""மனிதனுக்குகெட்டநேரம் வரும் போது விதி நம் கண்ணைக்கட்டி இழுத்துப் போய் அங்குவிட்டு விடும். அதிலிருந்து தப்ப எந்தக்கொம்பனாலும் முடியாது'' என்றார்."தை பிறந்தால் வழி' பிறக்கும் என்றபடத்தைத் தயாரித்து பணம் சம்பாதித்தவர் ஏ.கே. வேலன். திராவிட முன்னேற்றக்கழகத்தின் பிரதம பேச்சாளரானஇவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.சில படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். புலவர் பட்டம் பெற்றவர்.

பணம் கையில் சேர்ந்ததும் அருணாசலம்ஸ்டூடியோவைக் கட்டினார். அங்கு பலபடங்கள் தயாரிக்கப்பட்டன. அவருக்கும் கஷ்ட காலம் ஆரம்பித்தது. தினசரிபிள்ளையாரை வணங்கினால் கஷ்டம்தீரும் என்று ஒரு ஜோதிடர் கூறினார். பிள்ளையாரை வணங்க வேண்டும் என்பதால் யானையை வளர்த்து தினமும்வணங்கினார். காலப் போக்கில் யானைக்குசாப்பாடு போட முடியாத நிலைஏற்பட்டது. ஸ்டூடியோவுக்கு வருபவர்களை யானை துரத்தத் தொடங்கியது.
ரமணி
மித்திரன்124/12/2006


2 comments:

Yaathoramani.blogspot.com said...

இது வரை அறியாத பல
அரிய செய்திகள்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா