Thursday, January 16, 2014

பிரான்ஸ் 1938

பிரான்ஸில்  1938ஆம் ஆண்டு மூன்றாவது உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டி நடைபெற்றது. ஜூன் மாதம் 4ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெற்ற போட்டியில் இத்தாலி சம்பியனானது. 37 நாடுகள் தகுதிகாண் போட்டியில் விளையாடின. உலக உதைபந்தாட்டப் போட்டியில் 15 நாடுகள்  விளையாடுவதற்குத் தகுதிபெற்றன. 18 போட்டிகள் நடைபெற்றன. 84 கோல்கள் அடிக்கப்பட்டன. 3,75,760 ரசிகர்கள் போட்டியைப் பார்வையிட்டனர்.

ஐரோப்பாக் கண்டத்திலிருந்து பெல்ஜியம், பிரான்ஸ், ஹங்கேரி, நெதர்லாந்து, போலாந்து சுவீடன், செக்கஸ்லோவாக்கியா, ஜேர்மனி, இத்தாலி, நோர்வே, ரொமேனியா, சுவிட்ஸர்லாந்து ஆகிய 12 நாடுகள் விளையாடத் தகுதிபெற்றன வட அமெரிக்காவிலிருந்து கியூபாவும், தென் அமெரிக்காவிலிருந்து      பிரேசிலும் விளையாடத் தகுதிபெற்றன.  ஆசியாக்கண்டத்திலிருந்து டச்சு கிழக் கிந்தியத் தீவுகள் தகுதிபெற்று ஆச்சரியமளித்தன. கடந்த உலகக் கிண்ணத்தில் விளையாடிய ஆர்ஜென்ரீனா, இங்கிலாந்து, ஸ்பெய்ன், உருகுவே ஆகியன விளையாடும் தகுதியை இழந்தன.

முதல் சுற்றில் வெற்றிபெற்ற நாடுகள் கால் இறுதிக்குத் தெரிவாகின. டச்சு, கிழக்கிந்திய தீவுகளுக்கெதிரான போட்டியில் 6-0   கோல்கள் அடித்து அசத்தியது. ஹங்கேரி, இத்தாலி, போலாந்து ஆகியவற்றுக்கிடை யேயான போட்டியில் இரு  அணிகளும் தலா நான்கு கோல்கள் அடித்ததனால் பெனால்டி வழங்கப்பட்டது. 6-5 கோல்களால் வெற்றிபெற்றது பிரேஸில். பிரேஸில், செக்கஸ் லோவாக்கியா,  ஹங்கேரி, சுவிட்ஸர்லாந்து, சுவீடன்,   கியூபா, இத்தாலி, பிரான்ஸ் ஆகியன கால் இறுதியில் விளையாடின. கியூபாவுக்கு எதிரான போட்டியில் 8-0  கோல்கள் அடித்து வெற்றி பெற்றது சுவீடன்.  செக்கஸ்லோவாக்கியா, பிரேஸில் ஆகியவற்றுக்கிடையிலான  போட்டியில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்தமையால் பெனால்டி வழங்கப்பட்டது. பெனால்டியிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமப்படுத்தின. மீண்டும் இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் 2-1 கோல் கணக்கில் பிரேஸில் வெற்றிபெற்றது.
கால் இறுதியில் வெற்றிபெற்ற ஹங்கேரி, சுவீடன், இத்தாலி, பரேஸில் ஆகியன அரை இறுதிக்குத் தகுதி பெற்றன. சுவீடனுக்கு எதிரான போட்டியில் 5-1 கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஹங்கேரியும், பிரேஸிலுக்கு  எதிரான போட்டியில் 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலியும் இறுதிப்போட்டியில் விளையாடத்தகுதி பெற்றன. பிரேஸில், சுவீடன் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற மூன்றாவது  இடத்துக்கான போட்டியில் 4-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இத்தாலி, ஹங்கேரி ஆகியவற்றுக்கிடையேயான இறுதிப் போட்டி பரபரப்பானது. உலகக்கிண்ண சம்பியன் பட்டத்தை இத்தாலி தக்கவைக்குமா? ஹங்கேரி தட்டிப்பறிக்குமா  என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஹிட்லரின் ஆட்சியில் உலகை கலக்கிய வேளையில் "வின் ஓ டை" என்ற தகவலை இத்தாலி அணிக்கு ஹிட்லர் அனுப்பி வைத்தார். இறுதிப் போட்டியில் 4-2 கோல் கணக்கில் இத்தாலி வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறை சம்பியனானது.

பிரான்ஸில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டிகளின் மூலம் சீருடையில் இலக்கம் பொறிப்பது அறிமுகமானது. இத்தாலி அணி கப்ரன் மெஸ்ஸாஸ்,  அரை இறுதிப்போட்டியில் பெனால்டி அடித்தபின் கட்டை விரலை உயர்த்திக்காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு ஒஸ்ரியா தகுதிபெற்றபோதிலும் ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டதனால் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தை இழந்தது. ஒஸ்ரியா வீரர்கள் சிலர் ஜேர்மனிக்காக விளையாடினார்கள்.
சுவிட்சர்லாந்து ஏர்னஸ்ட் லியோஸ்ரக்கன் ஓன் கோல் அடித்து முதல் முதலாக தன் பெயரைப் பதிவு செய்தார். இத்தாலியின் பயிற்சியாளரான பொஸ்ஸோ 12 வருடங்களின் பின் சுவிஸ் நாட்டின் பயிற்சியாளரானார்.

கறுப்புவைரம் என்றழைக்கப்பட்ட பிரேஸில் வீரர் லியோனிடாஸ்,  ஏழு  கோல்கள் அடித்து கோல்டன்  ஷீ´ விருதைப் பெற்றார். இத்தாலியின் சில்வியோ பெனோடா, ஹங்கேரியைச் சேர்ந்த ஜோர்ஜ் கரோஸி, கியூபாவின் செஸன் எல்லே ஆகியோர் தலா ஐந்து கோல்கள் அடித்து கோல்டன்  ஷீ´ விருதுக்கு போட்டியிட்டனர். ஹங்கேரி பதினைந்து  கோல்களும், பிரேஸில் 14 கோல்களும், இத்தாலி, சுவீடன் ஆகியன தலா பதினொரு  கோல்கள் அடித்தன. நெதர்லாந்து டச்சு கிழக்கிந்தியத் தீவுகள் ஆகியன கோல் அடிக்காது தோல்வியடைந்தன.

ரமணி 
சுடர் ஒளி 12/01/14

No comments: