Friday, January 31, 2014

சுவிட்ஸார்லாந்து 1954

ஐந்தாவது உலகக்கிண்ண உதை பந்தாட்டம் சுவிட்ஸர்லாந்தில் 1954 ஆம் ஆண்டு நடைபெற்றது. இப்போட்டியில் விளையாடுவதற்கென 45 நாடுகள் தகுதிகாண் போட்டியில் விளையாடின. 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றன.

ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து ஒஸ்ரியா, செக்கஸ்லோவாக்கியா, பிரான்ஸ்.ஹங்கேரி, ஸ்கொட்லாந்து, துருக்கி, பெல்ஜியம், இங்கிலாந்து, மேற்கு ஜேர்மனி, இத்தாலி, சுவிட்ஸர்லாந்து, யூகஸ்லோவாக்கியா  ஆகிய நாடுகள் தகுதி பெற்றன. ஆசியாவிலிருந்து தென் கொரியா, வட அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோ, தென் அமெரிக்காவிலிருந்து பிரேஸில், உருகுவே ஆகியனவும் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய ஸ்பெய்ன் தகுதி பெறவில்லை.தென் கொரியா முதல் முதலாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
மேற்கு ஜேர்மனி ஹங்கேரி ஆகியன இறுதிப்போட்டியில் விளையாடின.3-2 கோல் கணக்கில் வெற்றி பெற்ற மேற்கு ஜேர்மனி சம்பயனானது. 26 போட்டிகளில் 140 கோல்கள் அடிக்கப்பட்டன. 768607 பேர் போட்டிகளைப் பார்வையிட்டனர்.போட்டிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.90 நிமிட போட்டியின் பின்னர் போட்டி சமநிலையில் முடிந்தால் மேலதிக நேரம் விளையாடு வதற்கு ஒதுக்கப்பட்டது.

உலகக்கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்ற 16 நாடுகளும் நான்கு குழுக்களாக்கப்பட்டன. ஒரு குழுவில் தலா நான்கு நாடுகள் இடம் பிடித்தன. முதல்  இரண்டு இடம் பெற்ற நாடுகள் கால் இறுதிக்கு முன்னேறின. பிளே ஓவ் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டதனால் ஒரு குழுவில் உள்ள சில நாடுகளுக்கிடையே போட்டி நடைபெறவில்லை.
பிரேஸில் ,யூகஸ்லோவாக்கியா , பிரான்ஸ்.மெக்ஸிகோ, ஆகியன குழு 1 இல் இடம்பிடித்தன. முதலிடம் பிடித்த பிரேஸிலும், யூகஸ்லோவாக்கியாவும் கால் இறுதிக்குத் தெரிவாகின. மெக்ஸிகோவுக்கு எதிரான போட்டியில் பிரேஸில் 5-0 கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஒரு குழுவில் இருந்த பிரேஸிலும், பிரான்ஸும் சந்திக்க வில்லை.

ஹங்கேரி,ஜேர்மனி, துருக்கி, தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ள குழு 2 கோல் மழை பொழிந்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்தது. தென் கொரியாவுக்கு எதிரான  போட்டியில் 9-0 கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஹங்கேரி 8-3 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜேர்மனியை வீழ்த்தியது. துருக்கி 7-0 கோல் கணக்கில் தென் கொரியாவை வென்றது.7-2 கோல் கணக்கில்  ஜேர்மனியிடம் துருக்கி தோல்வியடைந்தது. இந்தக் குழுவில் மொத்தமாக 36 கோல்கள் அடித்தது. தென்கொரியா, ஜேர்மனி ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடவில்லை. அதே போல் ஹங்கேரியை எதிர்த்து துருக்கி விளையாடவில்லை. ஹங்கேரியும் மேற்கு ஜேர்மனியும்  கால் இறுதியில் விளையாடத் தகுதி பெற்றன.சுவிட்ஸர்லாந்து, இங்கிலாந்து, இத்தாலி, பெல்ஜியம்  ஆகியன குழு 4 இல் இருந்தன. பெல்ஜியம் சுவிட்ஸர்லாந் தையும், இங்கிலாந்து இத்தாலியையும் எதிர்த்து விளையடவில்லை.முதல் இரண்டு இடங்களைப் பெற்ற சுவிட்ஸர்லாந்தும் இங்கிலாந்தும் கால் இறுதிக்குத் தெரிவாகின.

ஒஸ்ரியா, சுவிட்ஸர்லாந்து, உருகுவே, இங்கிலாந்து, ஹங்கேரி, பிரேஸில் மேற்கு ஜேர்மனி, யுகஸ்லோவாக்கியா ஆகியன கால் இறுதியில் வெற்றி பெற்ற ஒஸ்ரியா, உருகுவே, ஜேர்மனி ஆகியன அரை இறுதிக்கு முன்னேறின.
ஹங்கேரி,      உருகுவே ஆகியவற்றுக்கிடையேயான அரை இறுதிப் போட்டியில் 4-2 கோல் கணக்கில் ஹங்கேரி வெற்றி பெற்றது. 6-1 என்ற கோல் கணக்கில் ஒஸ்ரியாவை வீழ்த்திய ஜேர்மனி இறுதிப்போட்டிக்கு தெரிவானது. உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஜேர்மனியும், ஹங்கேரியும் சந்தித்தன.3-2 கோல் கணக்கில் வெற்றி பெற்ற மேற்கு ஜேர்மனி வெற்றி பெற்றது.
ஐந்து போட்டிகளில் 11 கோல்கள் அடித்த ஹங்கேரியின் வீரர் சன்டோர் கொஸ்ஸில் கோல்டன் விருது பெற்றார்.தலா ஐந்து கோல் அடித்த  செப்க்கி (சுவிஸ்) , மக்ஸ் மலோசிக் (பிரான்ஸ்)எரிக் ரொட்ஸட் (ஒஸ்ரியா) ஆகியோரின்  பெயர் கோல்டன் க் வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

தென்கொரியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் அதிகபட்சமாக 16 கோல்கள் அடிக்கப்பட்டது.மேற்கு ஜேர்மனி விளையாடிய பிரிட்ஸ் ஒட்டமார் வட்லர் எனும் சகோதரர்கள் ஒஸ்ரியாவுக்கு எதிரான அரை இறுதியில் கோல் அடித்து  உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் கோல் அடித்த சகோதரர்கள் என்ற பெருமையைப் பெற்றன.பிரேஸில், ஹங்கேரி ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் மூன்று பிரேஸில் வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.போட்டி முடிவடைந்த பின்பும் பிரேஸில் வீரர்கள் அங்குச்சென்று குழப்பம் விளைவித்தனர்.
இரண்டாவது உலக மகாயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு ஜேர்மனி சம்பியனாகி ஆறுதலடைந்தது.

ரமணி  
சுடர் ஒளி  29/01/14

No comments: