கிசுகிசு, பிரச்சனை ஆகியவற்றில் சிக்காத சினிமாப் பிரபலங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தான் உண்டு தன் வேலை உண்டு என இசைத்துறையில் முன்னேறிய ஏ.ஆர்.ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு வெளியிட்ட அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்ப்
படத்தில் அறிமுகமாகி இந்தியாவின் பல மொழிகளில் கோலோச்சிய ரஹ்மான்
ஆங்கிலப் படத்துக்கு இசை அமைத்ததம் மூலம் சினிமாவின் மிக உயரிய விருதான ஒஸ்கார்
விருதை இரண்டு கைகளிலும் தூக்கிப் பிடித்தார்.
தனது கணவர் ஏஆர் ரஹ்மானைப் பிரிவதாகசாயிரா பானு அவரது வழக்கறிஞர் சார்பில் அறிக்கை
வெளியிட்டுள்ளார். சட்ட ரீதியாக இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
சுமார் 30 வருட திருமண பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த தம்பதிக்கு
கதிஜா, என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.
தனது கணவர் ஏஆர் ரஹ்மானை பிரிவதாக சாயிரா பானு வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்சட்ட ரீதியாக இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். தரப்பிற்கும் ஏற்பட்ட மனக்கஷ்டங்கள்,பிரிவினைகள், ஆடிக்கடி ஏர்படும் சணடைகள் ஆகியனவே இந்த முடிவுக்குக் காரணம் . இவர்கள் திருமண உறவு வெளியே சுமுகமாக இருந்தாலும் உள்ளே நிறைய மனக்கசப்பு இருந்துள்ளது.
இதுதொடர்பாக
அவர்களது மகன் ஏஆர் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 16 வார்த்தைகளில் ஸ்டோரி
ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛ இந்த நேரத்தில் எங்களின் வாழ்க்கையின்
தனிப்பட்ட உணர்வுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். உங்களின் புரிதலுக்கு நன்றி''
என்று குறிப்பிட்டு உள்ளார். சமீபத்தில் நடந்த பெரிய சண்டைதான் இவர்களின் விவாகரத்திற்கு
முக்கியமான காரணமாக மாறிவிட்டது என்கிறார்கள். அதன்பின்பே இவர்கள் விவாகரத்து செய்ய
முடிவு செய்துள்ளனர். அதற்கு முன் தங்கள் மகள்கள், மகன் ஆகியோருடன் ஆலோசனை செய்து அதன்பின்பே
பிரியும் முடிவை எடுத்துள்ளனர்.
.
தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தனது வக்கீல் மூலம் வெளியிட்ட
அறிவிப்பு பலரது இதயங்களையும் உடைத்து விட்டது. பொய்யாக இருக்காதா என ரஹ்மானின்
ரசிகர்கள் ஏங்கினர். ஒரு வேளை வதந்தியாக இருக்குமோ என்றுதான் பலரும் முதலில் நினைத்தனர்.
ஆனால் உண்மை என்று தெரிந்ததும் பலருக்கும் இது அதிர்ச்சிதான்.
ஆனால் நமக்குப் பிடித்தமானவர்கள் பிரியும்போதுதான் பெரும் வேதனை ஏற்பட்டு விடுகிறது. அப்படித்தான் கோடானு கோடி தமிழர்களின் இதயங்களில் வீற்றிருப்பவர் ஏ.ஆர். ரஹ்மான். அவரது பாடல்களுக்கு பலரும் அடிமையாகவே உள்ளனர். அப்படிப்பட்ட ஒருவர் விவாகரத்து முடிவுக்குப் போகிறார் என்றால் அது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதில் வியப்பு இல்லைதான்.
இத்தனைக்கும் மிக மிக மனம் ஒத்த தம்பதியாக வலம் வந்தவர்கள் இவர்கள். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூட தனது மனைவியுடன் மேடையில் தோன்றினார் ரஹ்மான். அப்படி ஒரு அழகான காட்சி அது. ஆனால் அவர்கள் பிரியப் போகிறார்கள் என்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது.
இந்த நிலையில் தனது மனைவியின் அறிவிப்பைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரு எக்ஸ் பதிவைப் போட்டிருந்தார். அதில், 30வது திருமண நாளை பிரமாண்டமாக கொண்டாடுவோம் என நம்பினோம், ஆனால் விஷயங்கள் வேறு மாதிரியாகப் போய் விட்டது. பார்க்க முடியாத அது எட்டி விட்டது. உடைந்து போன இதயங்களின் பளுவைத் தாங்க முடியாமல், கடவுளின் அரியாசனமே நடுங்கிப் போய் விடும். இது எங்களை சிதறடிப்பதாக இருந்தாலும் கூட, உடைந்த சிதறல்களை மீண்டும் அதனதன் இடத்தில் ஒன்று சேர்ப்பது கடினம்.
எங்கள் மீது அன்பும், அக்கறையும் காட்டிய நண்பர்களுக்கும், அனைவருக்கும் நன்றி. மிகவும் துயரமான நேரத்தில் நாங்கள் இருக்கும் இந்த சமயத்தில் எங்களது பிரைவசியை மதிப்பதற்கும் நன்றி என்று கூறியுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.
தமிழ்
திரையுலகில் சமீபத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் தனது மனைவி
சைந்தவியை பிரிவதாக அறிவித்தார். இதில் ஜிவி பிரகாஷ் குமார் ஏஆர் ரஹ்மானின்
உடன்பிறந்த சகோதரியின் மகன் ஆவார்.
தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து பலரும் விவாகரத்து செய்து வருகின்றனர். முன்னணி நடிகர்,
நடிகைகள், பல ஆண்டுகளாக திருமண உறவில் இருந்தவர்கள் கூட விவாகரத்து செய்ய தொடங்கி உள்ளனர்.
சினிமா திரை உலகை இந்த தொடர் சம்பவங்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
தனுஷ்,
சமந்தா, ஜெயம் ரவி, இமான் ஆகியோரைத் தொடர்ந்து ஏ.ஆர் ரகுமான் மனிவியை விட்டுப்
பிரிந்துள்ளார்.
சமீப காலமாகவே திரைத்துறையில் விவாகரத்துகள் அதிகரித்து விட்டன. திரைத்துறை என்று இல்லை, ஒட்டுமொத்தமாகவே மக்களிடையே இணைந்து வாழும் தன்மை குறைந்து கொண்டே வருகிறது. பல காரணங்கள் இதற்கு சொல்லலாம். ஆனால் முன்பை விட பல மடங்கு விவாகரத்துகள் அதிகரித்து விட்டன. முன்பு போல இப்போது யாரும் தயங்குவது இல்லை, சகித்துக் கொண்டிருக்கவும் விரும்புவதில்லை. பிடிக்கவில்லை, ஒத்து வரவில்லை என்ற நிலை வரும்போது உடனடியாக விவாகரத்துக்குப் போய் விடுகிறார்கள்.
No comments:
Post a Comment