Thursday, June 12, 2025

ஓய்வு பெறுகிறார் நோவக் ஜோகோவிச்?


 பிரெஞ்சு ஓபன் அரையிறுதிப் போட்டியில், தோல்வியடைந்த ஜோகோவிச் 2025 ஆம் ஆண்டுடன் டென்னிஸ்ஸில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

பிலிப்-சாட்ரியரில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போட்டியில் உலகின் நம்பர் 1 ஜானிக் சின்னரிடம் 4-6, 5-7, 6-3 (3-7) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

தோல்விக்குப் பிறகு, ரோலண்ட் கரோஸுக்கு விடைபெறுவதற்கான சைகையாக ஜோகோவிச் களிமண் மேற்பரப்பைத் தொட்டார்.

"இது நான் இங்கு விளையாடிய கடைசி போட்டியாக இருக்கலாம், எனவே எனக்குத் தெரியாது. அதனால்தான் நான் இறுதியில் கூட சற்று உணர்ச்சிவசப்பட்டேன்." என்று ஜோகோவிச் தனது போட்டிக்குப்  பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

  அடுத்த ஆண்டு திரும்புவது குறித்து நிச்சயமற்ற தன்மையை நோவக் ஜோகோவிச், வெளிப்படுத்தினார்.

இந்த ஆண்டு இறுதியில் விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபனில் போட்டியிடும் தனது விருப்பத்தை ஜோகோவிச் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், 2025 க்கு அப்பால் தனது எதிர்காலம் குறித்து அவர் உறுதியாக இல்லை. இதனால் 2025 சீசன் முடிந்த உடன் அவர் ஓய்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மார்கரெட் கோர்ட்டுடன் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் சாதனையைப் பகிர்ந்து கொள்ளும் ஜோகோவிச், தனது 25வது பெரிய வெற்றியை பெற்றுவிட்டு ஓய்வு பெறும் முனைப்பில் உள்ளார்.

 பிரெஞ்சு ஓபன் அரையிறுதிப் போட்டியில், உலகின் நம்பர் 1 ஜானிக் சின்னர் 6-4, 7-5, 7-6(3) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்., இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான கார்லோஸ் அல்கராஸை அவர்  எதிர்கொள்கிறார்.

1976 ஆண்டு சம்பியனான அட்ரியானோ பனாட்டாவுக்குப் பிறகு  பிரெஞ் ஓபன்  இறுதிப் போட்டியை எட்டிய இரண்டாவது இத்தாலிய வீரர் என்ற பெருமையை சின்னர் பெற்றார். 

 


No comments: