'கன்னடம்
தமிழிலிருந்து பிறந்தது' என்று கூறியதற்காக
கமல் மன்னிப்பு கேட்க மறுத்ததால், கர்நாடகத்தில் வெளியிட
முடியாத நிலை ஏற்பட்டது. கன்னட
மொழியை கமல்
அவமதித்ததாகத் தெரிவித்து கமலுக்கு எதிராக அங்கு
போராட்டம் நடை பெற்றது. இதன் பின்னணியில்
அரசியலும் உள்ளது. கர்நாடக அரசியலில்
சிக்க விரும்பாத கமல்படத்தின் வெளியீட்டை
ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதனால்
சுமர் 30 முதல் 40 கோடிவரை தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்பாடும் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.கமலும், மணிரத்தினமும் இணைந்து
தயாரித்த படம்
தக்
லைஃப். கமலுக்கு எதிராக கர்நாடகாவில் வழக்குத்
தொடரப்பட்டது. மன்னிப்புக் கேட்கும்படி நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
மன்னிப்பா கேட்க மாட்டேன் என
கமல் தெரிவித்தார்.
அவர் தவறாக எதையும் பேசவில்லை.
தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை
என்பதில் கமல் உறுதியாக இருக்கிறார்.
கர்நாடகாவில்
தக் லைஃப் திரைப்படம்
வெளியிடப்படாததால், படத்தின் தயாரிப்பு
BOX OFFICE இல் 35 முதல்40
கோடி மொத்த வசூலையும், தயாரிப்பாளர்களுக்கு 12 முதல்
-15 கோடி வரை இழக்க
நேரிடும் என்று தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான
ஜி. தனஞ்சயன் தெரிவித்தார்.
புஷ்பா
2, பாகுபலி 2, RRR ஆகியவை கர்நாடகாவில் மட்டும்
உலக வருவாயில் 74 முதல்-104 கோடியை ஈட்டின
என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கணக்கீடு
செய்யப்பட்டது.
ஜெயிலர்,
லியோ, பொன்னியின் செல்வன், கோட் , விக்ரம்
போன்ற அதிக வசூல் செய்த
தமிழ் படங்கள் கூட கர்நாடகாவில்
பெரும் சந்தைப் பங்கைக் கொண்டிருந்தன
என்று தயாரிப்பாளர் கூறினார்.
"தமிழ் படங்களுக்கும்,
கர்நாடக சந்தை மொத்த வருவாயில்
7% ஆகும்" என்று தயாரிப்பாளர் கூறினார்.
பணம்,
வருமானம் எல்லாம் தேவை இல்லை
ஒரு முறை சொன்னது
சொன்னது தான். மன்னிப்பு என்ற
வார்த்தைக்கே இடம் இல்லை எனப்தே
கமலின் நிலைப்பாடு.
ரஜினியே
மன்னிப்புக்கெட்டுள்ளார். கமல் ஏன் மன்னிப்புக்
கேட்கக்குடாது என நீதி
மன்றத்தில் சூடான விவாதம் நடந்தது.
1950-களில் இந்திய
கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலாச்சாரி
இதேபோன்ற ஒரு கருத்தை தெரிவித்தார்.
அதற்கு கன்னட எழுத்தாளர்கள் கண்டனம்
தெரிவித்து அவருக்கு கடிதம் எழுதினர்.
அதன்பிறகு ராஜகோபாலாச்சாரி தனது கருத்துக்கு மன்னிப்பு
கேட்டார். அவரால் மன்னிப்பு கேட்க
முடிந்தபோது, கமல்ஹாசனால் ஏன் மன்னிப்பு கேட்க
முடியவில்லை.
இதேபோல
காலா திரைப்படத்தின்போது நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு
கேட்டார். அதனால் அந்த திரைப்படம்
கர்நாடகாவில் வெளியானது.
தக்
லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாக வில்லை. கமலின்
ரசிகர்கள் ஓசூருக்குப் படை எடுத்துள்ளனர்.கர்நாடகத்தில்
எல்லையில் கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் ஓசூர்
உள்ளது. ஓசூர் தமிழகத்தில் இருப்பதால்
அங்கு தக்
லைஃப் திரையிடப்பட்டுள்ளது.
கர்நாடகா
மாநிலத்தின் தும்கூர், மண்டியா, பெங்களூரு
ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கமல் ரசிகர்கள்
ஓசூருக்கு படையெடுத்துள்ளனர்.
ஓசூரில் உள்ள திரையரங்கில் கர்நாடகா மாநிலத்தவர்கள் வருகை தந்து பட்டாசு வெடித்து, டிஜே நிகழ்ச்சிகளுடன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கமலின் கட்- அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும், கற்பூரம் ஏற்றியும் உற்சாகமடைந்தனர்.
இது
குறித்து கர்நாடக மாநில ரசிகர்கள்
கூறும்போது, “கமலின் ‘தக்லைஃப்’ திரைப்படம்
கர்நாடகா மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில்
திரையிடப்பட இருந்தது. இதற்காக பல
லட்சம் செலவு செய்து கட்
அவுட் பேனர்கள் என தடபுடலான
ஏற்பாடு செய்திருந்தோம்.
இந்நிலையில்
கன்னட மொழி குறித்து கமல்
பேச்சால் கர்நாடக மாநிலத்தில் ‘தக்
லைஃப்’ திரைப்படம் வெளியாகவில்லை . இதனை எங்கள் மாநிலத்தில்
அரசியல் ஆக்கிவிட்டனர். சினிமாவுக்கு தடை போடலாம் ஆனால்
ரசிகர்களான எங்களுக்கு தடை போட முடியாது.
அதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள
ஒட்டுமொத்த கமல் ரசிகர்களும் ஓசூரில்
படம் பார்க்க வந்துள்ளோம். இங்கு
தமிழகத்தை சேர்ந்த ரசிகர்களை விட
80 சதவீதம் கர்நாடக மாநிலம் ரசிகர்கள்
தான் அதிகமாக உள்ளனர்.” எனக்
கூறினர்.
கமலின்
படத்துக்குத் தடை போடலாம் ஆனால்,
ரசிக்கர்களுக்குத் தடை போட முடியாது
என்பதை அரசியல் வாதிகள் உணர்ந்து கொள்வதில்லை.
No comments:
Post a Comment