கருவுறுதல் பாதுகாப்பு நடைமுறைக்கு உட்படுத்த விரும்பும் வீராங்கனைகள் விளையாட்டிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, பாதுகாக்கப்பட்ட தரவரிசையுடன் போட்டி நடவடிக்கைகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று பெண்கள் டென்னிஸ் நிர்வாகக் குழு ( WTA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
பெண்
விளையாட்டு வீரர்கள் தங்கள் குடும்ப இலக்குகள் , தொழில் லட்சியங்களை சமநிலைப்படுத்துவதை
ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த புதிய விதி, WTA முதல் முறையாக வீரர்களுக்கு 12 மாதங்கள்
வரை ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை வழங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு வருகிறது.
"புதிய
விதியின்படி, வீராங்கனைகள் தொழில்முறை டென்னிஸிலிருந்து முட்டை அல்லது கருவை
உறைய வைப்பது போன்ற கருவுறுதல் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு நேரத்தை ஒதுக்கி, பாதுகாக்கப்பட்ட
தரவரிசையுடன் பாதுகாப்பாக போட்டிக்குத் திரும்பலாம்" என்று ந்டா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"தகுதியுள்ளவர்கள் சிறப்பு நுழைவு தரவரிசை (SER) பெறுவார்கள், இது அவர்களின் போட்டிக்கு வெளியே உள்ள காலம் தொடங்குவதற்கு எட்டு வாரங்களுக்கு முந்தைய WTA தரவரிசையின் 12 வார சராசரியின் அடிப்படையில் மூன்று போட்டிகளில் நுழையப் பயன்படுத்தப்படலாம்."
2017
யுஎஸ் ஓபன் சம்பியனான ஸ்லோன் ஸ்டீபன்ஸ், முட்டை உறைபனியை ஒரு பாதுகாக்கப்பட்ட தரவரிசை
நடவடிக்கையாக அங்கீகரிக்க வேண்டும் என்று முன்னர்
கோரிக்கை விடுத்திருந்தார். புதன்கிழமை
அறிவிப்பை "புதிய" நடவடிக்கை என்றும் அழைத்தார்.
சவூதி பொது முதலீட்டு நிதியத்தால் வழங்கப்படும் WTA மகப்பேறு நிதியத்தின் மூலம், வீராங்கனைகள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு,கருவுறுதல் பாதுகாப்பு மானியங்களைப் பெறுவார்கள் என்றும் WTA தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment