Tuesday, October 25, 2011

சி.பி.ஐ.யின் வலையில்தயாநிதிமாறன்

தமிழக அரசியல் சூடு பிடித்துள்ள இவ்வேளையில் ஸ்பெக்ரம் விவகாரம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. ஸ்பெக்ரம் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜாவும், கனிமொழியும் சிறைக்குச் சென்ற பின்னர். அடுத்த இலக்கு யார் என்ற பட்டிமன்றம் தமிழகத்தை பரபரப்பாக்கியது. தயாநிதி மாறன், கலாநிதிமாறன், சன் தொலைக்காட்சி மீது சி. பி. ஐ. பாயும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. தயாநிதி மாறன் தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்தது வெறும்வாயை மன்றவர்களுக்கு சுவையான அவலாக மாறியது.
உள்ளாட்சித் தேர்தல் திருச்சி மேற்கு இடைத் தேர்தல் ஆகியவற்றின் மீது தமிழக அரசியல் வாதிகள் கவனத்தைத் திருப்பிய வேளையில் சி.பி.ஐ. சத்தமில்லாது தயாநிதிமாறன் மீது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
ஸ்பெக்ரம் விவகாரத்தில் தயாநிதிமாறன் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட மாட்டாது என்று முதலில் செய்தி வெளியானது. அந்தச் செய்தி பற்றிய விமர்சனங்கள் கடுமையாகியதும் சி.பி.ஐ. விளக்கம் கூறவேண்டிய நிலை ஏற்பட்டது. தமது அறிக்கையை ஊடகங்கள் தவறாக விளங்கிக் கொண்டதாகவும், திரிவுபடுத்திய தாகவும் சி.பி.ஐ. தன்னிலை விளக்கம் தெரிவித்தது. ஸ்பெக்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் மட்டுமல்லாது அமைச்சர் ப.சிதம்பரம் மீதும் குற்றச்சாட்டு எழுந்தும் சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்கும் என்ற செய்தியால் அரசியலில் பரபரப்புத் தொற்றியது.
அமைச்சர் சிதம்பரத்துக்கும் அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் இடையேயான பனிப்போர் பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதம் அம்பலமாகியதால் உள்வீட்டு பிரச்சினை சந்திக்கு வந்தது. பிரணாப் முகர்ஜியின் கடிதத்தின் பிரகாரம் சிதம்பரம் ஸ்பெக்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ளாரா? என்ற கேள்வி எழுந்தது. இறுதியில் வழக்கம் போல அந்தப் பிரச்சினை பூசி மெழுகப்பட்டதால் ஸ்பெக்ரம் விவகாரத்தில் இருந்த சிதம்பரம் விடுவிக்கப்பட்டதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டது. ஸ்பெக்ரம் விவகாரத்தில் ராசா எதனையும் தனித்துச் செய்யவில்லை. பிரதமருக்கும் அமைச்சர் சிதம்பரத்துக்கும் அறிவித்து விட்டு அவர்களின் அனுமதியின் பேரிலேயே ஸ்பெக்ரம் விற்பனை செய்யப் பட்டது என்று ராசாவின் வழக்கறிஞர் வாதிட்டார். பின்னர் அவர்கள் மீதான குற்றச் சாட்டை மறுத்தார். மன்மோகன், சிதம்பரம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்படுவதும் பின்னர் வாபஸ் பெறுவதும் வாடிக்கையாகி விட்டது.
இதை போன்றுதான் தயாநிதி மாறன் மீது குற்றம் சுமத்தப்படுவதும் பின்னர் அது கைவிடப்படுவதும் வாடிக்கையானது. ஆனால் சி.பி.ஐ,க்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாக தயாநிதிமாறன், கலாநிதி மாறன் ஆகி யோரின் வீடுகள் சன் ரீவி அலுவலகத்திலும் தேடுதல் நடைபெற்றது. இத் தேடுதலில் முக்கிய ஆவணங்கள் எவையும் கிடைத்ததாகத் தகவல் வெளிவரவில்லை. ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டதும் ஸ்பெக்ரம் கைமாறியதும் மேக்கிஸிலின் துணை நிறுவனம் மூலம் சன் ரீ.வி குழுமத்துக்கு 600 கோடி முதலீடு செய்தது. 600 கோடி ரூபா முதலீடு ஏன் செய்யப்பட்டது என்ற கேள்வியை சி.பி.ஐ. தொடர்ந்து பல மாதங்களாகக் கேட்டு வந்தது. இச் சம்பவம் பற்றி தயாநிதி மாறனுக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் விசாரித்து மிகவும் காலதாமதம் செய்தே தயாநிதி மாறன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட் டுள்ளது.
2004 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முதல் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி வரை தொடர்ந்து தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் பதவி வகித்தார். அக் காலத்தில் ஸ்பெக்ரம் அலைவரிசையை விற்பனை செய்ய இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் வழங்கியது. ஸ்பெக்ரம் விற்பனை செய்வதற்கான விலையை நிர்ணயம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சுக்குழு ஒன்øற நியமித்தார் தனது அமைச்சுக்குள் ஏனைய அமைச்சர்கள் தலையிடுவதை விரும்பாத தயாநிதி மாறன் விரும்பவில்லை. தனது அமைச்சு சுதந்திரமாக இயங்குவதை ஏனைய அமைச்சர்கள் குழு தடுக்கும் என்று பிரதமருக்கும் கடிதம் எழுதினார். தயாநிதி மாறனின் விருப்பப்படி முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ரம் அலைவரிசை விற்பனை செய்யப்பட்டது.
தயாநிதி மாறனின் வழி காட்டலிலேயே ஸ்பெக்ரம் விற்பனையை மேற்கொண்டார் ராசா. ராசா சிறையில் இருக்கும் பொழுது இதற்கு முன்னோடியாக விளங்கிய தயா நிதிமாறன் சுதந்திரமாகத் திரிவதைப் பொறுக் கமாட்டாத சுப்பிரமணிய சுவாமி நீதிமன் றத்தை நாடினார். ஸ்பெக்ரம் விவகாரம் சூடாறிய நேரங்களில் சுப்பிரமணிய சுவாமி அறிக்கைகளை வெளியிட்டு சூடாக்கினார். விசாரணை கைது என்ற வட்டத்தினுள் மாறன் குடும்பம் வந்துள்ளது. சன் குழுமத்தின் வரவுசெலவு அறிக்கைகளை சி.பி.ஐ. துல்லியமாக ஆராய்ந்தது.
திராடவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான பரிதி இளம் வழுதி கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார். உள்கட்சி ஜனநாயகம் சீராக இல்லை என்ற குற்றம்சாட்டியே அக்கட்சியிலிருந்து இராஜினாமாச் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வி அடைந்த வேளையில் தமிழக சட்ட மன்றத்தில் தனி ஒருவனாக நின்று கட்சியின் மானத்தைக் காத்தவர். கட்சியை வளர்ப்பதற்காக நடைபெற்ற போராட்டங்கள் பலவற்றில் கலந்து கொண்டு சிறை சென்றார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோபப்பார்வைக்கு ஆளானவர் பரிதி இளம் வழுதி. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி யின் போது, ஜெயலலிதாவின் கோபப்பார்வையில் பலமுறை சிறை சென்றவர். தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது தான் தோல்வியடையக் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதனா லேயே கட்சியே விட்டு வெளியேறியுள்ளார் பரிதி இளம் வழுதி.
கருணாநிதியைச் சந்தித்து தனது தோல்விக் குக் காரணமான மூவரைப் பற்றியும் புகார் கொடுத்தார் பரிதி இளம் வழுதி. அவரு டைய புகாரில் உள்ள மூவரையும் கட்சியை விட்டு நீக்குவதாக முரசொலியில் செய்தி வெளியாகியது. ஆனால் மறுநாள் அவர்கள் நீக்கப்படவில்லையென்று என்று செய்தி வெளியானது. கட்சித் தலைமை தன்னை அவமதிப்பதாகக் கருதிய பரிதி இளம் வழுதி கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்.
ஸ்டாலினுக்கும், பரிதி இளம் வழுதிக்கும் இடையேயான உறவில் இப்போது விரிசல் விழுந்துள்ளது. தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தனது தோல்விக்கு காரணை மானவர்கள் பற்றி விபரத்தை ஸ்டாலினிடம் கொடுப்பதற்கு பலமுறை முயற்சி செய்தார் பரிதி இளம் வழுதி. ஸ்டாலினைச் சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஸ்டாலினுடன் கைகோர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் இளைஞர் அணியை வழி நடத்தியவர் பரிதி இளம் வழுதி இன்று அவரைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார் ஸ்டாலின்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஸ்டாலின் கை ஓங்கியுள்ளது. அழகிரிக்கும் ஸ்டாலினுக்குமான பனிப்போரில் ஸ்டாலின் பக்கமே கருணாநிதி நிற்கிறார். பரிதி இளம் வழுதியின் விவகாரத்திலும் ஸ்டாலினைப் பகைத்துக் கொள்ள கருணாநிதி விரும்ப வில்லை.
பரிதி இளம் வழுதியைச் சமாதானப்படுத் தும் முயற்சியில் சில திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அழகிரி, வீரபாண்டி, ஆறுமுகம் போன்ற பலம் வாய்ந்த தலைவர்கள் ஸ்டாலினுக்கு எதிராக உள்ளார்கள். அவர்களின் பின்னால் பரிதி இளம் வழுதி செல்லக் கூடாது என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு16/10/11

No comments: