Saturday, March 10, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள்24

தாய்மை அடையும் போது தான் ஒரு பெண் மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். ச‌கல வச‌திகளும் உடைய ஒரு பெண் திருமணம் முடித்த பின்னும் தாயாகவில்லை என்றால் அவளைநோநாக்கி வீச‌ப்படும் அவச் சொற்கள் மிக ஏராளம். ஒரு பெண் வயதுக்கு வரவில்லை என்றால் அவளுடைய பெற்றோருடயவேதனையையும் அவளூடையபிரச்சினைகளையும்வெளிப்படுத்தும் படம் தான் 1975 ஆம் ஆண்டு வெளியான தென்னங்கீற்று.
விஐயகுமாரும் சுஜாதாவும் ஒன்றாக படித்தவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உண்டாகிறது. நட்பு காதலாக மாறுகிறது. சுஜாதாவின் வீட்டிலே வாடகைக்கு தங்குகிறார் விஜயகுமார். இவர்களின் காதல் சுஜாதாவின் பெற்றோருக்கு தெரியவருகிறது. சுஜாதாவின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். வயதுக்கு வராத பெண்ணுக்கு எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்றுகேட்கிறார்கள் சுஜாதாவின் பெற்றோர்.சுஜாதா வயதுக்கு வரவில்லை என்பது சுஜாதாவின் பெற்றோருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. இந்த உண்மையை தெரிந்த மூன்றாவது ஆளான விஜயகுமார் அதிர்ந்து விட்டார்.
சுஜாதாவின் குறையைத் தீர்ப்பதற்கு பிரபல வைத்தியர்களிடம் ஆலோசனை பெறுகிறார்கள்.சுஜாதாவை பரிசோதித்த வைத்தியர்கள் இது வைத்தியத்திற்கு அப்பால்பட்டது என்று கையை விரிக்கிறார். உள்ளங்கள் இணைவதே திருமணம். உடல்கள் இணைவது திருமணமல்ல என்பதை சுஜாதாவின் பெற்றோருக்கு விளங்கப்படுத்திய விஜயகுமார் சுஜாதாவை திருமணம் செய்கிறார்.
சுஜாதாவுக்கு எந்த குறையும் இல்லாது பார்க்கிறார் விஜயகுமார். கணவனை திருப்திபடுத்த முடியவில்லை என்ற மனக்குறையுடன் குடும்பம் நடத்தினார் சுஜாதா. ஒரு நாள்சுஜாதாவுக்கு அதிர்ச்சியான செய்தி கிடைக்கிறது. அந்த அதிர்ச்சியின் காரணமாக அவளது உடலில் மாறுதல் உண்டாகிறது. அவள் வயதுக்கு வந்துவிடுகிறாள். அந்த சந்தோதாஷமான செய்தியைகேகட்க விஜயகுமார் உயிருடன் இல்லை. விஜயகுமார் இறந்துவிட்டதாக கேள்விப்பட்ட அதிர்ச்சியால் சுஜாதாவின் உடல் குறை நீங்கியது.
விஜயமார், சுஜாதா, செந்தாமரை, கமல்ஹாச‌ன், வி.ஆர்.திலகம்,ஹேமமாலினி, டைப்பிஸ்ட் கோபு, கிரிஜாதேவி ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை வச‌னம் எழுதி இயக்கியவர் பிரபல எழுத்தாளர் கோவி.மணிசேக‌"ரன். நாவலாக வெளிவந்து பரப்பரப்பாக பேச‌ப்பட்ட இக்கதையை துணிச்ணிலுடன் படமாக்கினார்கள்.
ரமணி
மித்திரன் 18/02/12

No comments: