Wednesday, March 28, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 26


7ஜி ரெயின் போ காலனியில் வசிக்கும் . ரவிகிருஷ்ணா அங்கு குடியேறிய சோனியா அகர்வாலைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிறார். ரவி கிருஷ்ணாவின் காதலை ஏற்க மறுத்த சோனியா அகர்வால் அவரை அவமானப்படுத்துகிறார். அவமானங்களைத் தாங்கிக் கொண்டு தொடர்ச்சியாக காதலிக்கும் ரவி கிருஷ்ணாவிடம் தன்னை இழக்கிறார் சோனியா அகர்வால்.
செல்வராகவனின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான இப்படத்துக்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. அபரிமிதமான பாலியல் காட்சிகள் உள்ள படம் என்று பத்திரிகைகள் விமர்சனம் செய்தன. பத்திரிகைகள் புலம்பித் தள்ளினாலும் இளைஞர் பட்டாளத்தைத் திரை அரங்குக்கு அழைத்த பெருமையை செல்வ
ராகவன் பெற்றார்.
ரெயின்போ காலனியின் வசிக்கும் ரவி கிருஷ்ணாவும் அவரது நண்பர்களும் அரட்டை அடிப்பதையே முழு நேரமாகச் செய்வார்கள். வேலை இன்றி அலையும் இவர்கள் பஸ் நிலையம், கல்லூரி வாசல் போன்ற இடங்களில் காணும் பெண்களைக் கிண்டல் செய்வதைப் பெருமையாக நினைப்பார்கள். ரெயின்போ காலனியில் சோனியா அகர்வாலின் குடும்பம் குடியேறியது. சோனியா அகர்வாலைக் கண்டதில் இருந்து ரவி கிருஷ்ணாவின் வாழ்க்கை முறை மாறியது. சோனியா அகர்வாலைக் காதலிக்கத் தொடங்குகிறார் ரவி கிருஷ்ணா.
ரவி கிருஷ்ணாவும் அவரது நண்பர்களும் செய்யும் கலாட்டாக்களினால் வெறுப்படைந்த சோனியா அகர்வால் ரவி கிருஷ்ணாவின் காதலை ஏற்க மறுக்கிறார். சோனியா அகர்வாலை காதலிப்பதால் ஏற்படும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு தனது காதலை வெளிப்படுத்துகிறார் ரவிகிருஷ்ணா. ரவிகிருஷ்ணா மீது தனக்குக் காதல் வரவில்லை என்று உறுதியாகக் கூறிய சோனியா அகர்வால் அவரது வாழ்க்கையில் புதிய அத்தியாயம் ஒன்றை ஏற்படுத்துகிறார். ரவி கிருஷ்ணாவுக்கு வேலை பெற்றுக் கொடுக்கிறார் சோனியா அகர்வால். ரவி கிருஷ்ணா வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுகிறார். ஆனால் ரவி கிருஷ்ணாவின் மீது சோனியாவுக்கு காதல் ஏற்படவில்லை. சோனியா அகர்வாலுக்கு திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. திருமணத்தை சோனியா அகர்வால் விரும்பவில்லை. ரவி கிருஷ்ணாவைக் காதலிக்காத சோனியா அகர்வால் இன்னொருவரை திருமணம் செய்யவும் விரும்பவில்லை.
சோனியா அகர்வாலின் மனம் குழம்பித் தவிக்கிறது. தன்னைக் காதலிக்கும் ரவி கிருஷ்ணாவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அ@த@வளை இன்னொருவனுக்குக் கழுத்தை நீட்டவும் விரும்பவில்லை. ரவி கிருஷ்ணாவை கூட்டிக்கொண்டு வேறு ஊருக்குச் செல்கிறார் சோனியா அகர்வால். ஹோட்டல் அறையில் தன்னை ரவி கிருஷ்ணாவுக்கு விருந்தாக்குகிறார். வீடு திரும்பும் போது விபத்தில் இறக்கிறார் சோனியா அகர்வால்.
திரைக்கதையும் காட்சிகளும் பாலியல் உணர்வைத் தூண்டினாலும் இளைஞர்களின் ஆதரவால் பெரு வெற்றி பெற்று செல்வராகவன் என்ற இயக்குனரை அடையாளம் காட்டியது 7 ஜி ரெயின் போ காலனி. ஏ.எம்.ரத்தினம் தயாரித்த இப்படத்தின் மூலம் அவரது இளைய மகன் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமானார். அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு காட்சிகளை துல்லியமாக மனதில் பதித்தது.
இப்படத்தைப் போன்றே பாடல்களும் ரசிகர் மனதில் ஒட்டிக் கொண்டது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியான கண்பேசும் வார்த்தைகள், கனா காணும் காலங்கள், நினைத்து நினைத்துப் பார்த்தால், ஜனவரி மாதம் பூப்பனி விழும் நேரம், நாம் வயதுக்கு வந்தோம், இது போர்க்களமா ஆகிய நா.முத்துக்குமாரின் பாடல்களை முணுமுணுக்காதவர்களே இல்லை.
ரமணி



மித்திரன்01/04//12

No comments: