Friday, April 27, 2018

ஹைதராபாத் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் வீழ்ந்தது பஞ்சாப்


   
ஐபிஎல் அரங்கில் துடுப்பாட்ட வீரர்கள் பவுண்டரி சிக்ஸர்களாக அடித்து  தமது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்கின்றனர். ஆனால் ஹைதராபாத்தின் பந்து வீச்சாளர்கள் துல்லியமான பந்து வீச்சில் எதிரணி வீரர்களை ஆட்டமிழக்கச்செய்து தமது அணியை வெற்ரி பெற வைத்துள்ளனர்.
 111 ஓட்டங்களுக்குப் பதிலளித்தாடிய மும்பாயை 87 ஓட்டங்களில் முடக்கிய ஹைதராபாத்தின் பந்து வீச்சாளர்கள் பஞ்சாப்பை 119 ஓட்டங்களில் பஞ்சராக்கிய பஞ்சாப் ஹைதராபாத்தையும் குறைந்தஓட்டங்களில் வீழ்த்தியது.
ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அஸ்வின களத்தடுப்பைத் தேர்வு செய்தார். அஷ்வின், பீல்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் யுவராஜ் சிங், மில்லர் நீக்கப்பட்டு, மனோஜ் திவாரி, கெய்ல் சேர்க்கப்பட்டனர்.முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெற்களை இழந்து 132ஓட்டங்கள் எடுத்தது. பஞ்சாப் ஓவர்களில் விக்கெற்களை இழந்து  ஓட்டங்கள் எடுத்து ஓட்டங்களால் வெற்ரி பெற்றது.

ஹைதராபாத்அணிக்கு கப்டன் வில்லியம்சன், ஷிகர் தவான் ஜோடி துவக்கம் கொடுத்தது. ராஜ்புட் 'வேகத்தில்' மிரட்டினார். இவரிடம் சிக்கிய வில்லியம்சன், .பி.எல்., அரங்கில் முதன் முறையாக 'டக்' அவுட்டானார். தவான்  11 ஓட்டங்களுடனும் சகாவும் 6 ஓட்டங்களுட்ஃபனும் இவரிடம் சிக்கினர். சாகிப் அல் ஹசன்  28 ஓட்டங்களுடன் வெளியேறினார்.. 4, 9, 46 என, மூன்று முறை தப்பிப்பிழைத்த மணிஷ் பாண்டே, 51 பந்துகளில்  53 ஓட்டங்கள் எடுத்தார்.  . ஹைதராபாத்  அணி, 20 ஓவரிவர்களில் 6 விக்கெட்டுக்கு 132ஓட்டங்கள்.  எடுத்தது. ராஜ்புட் 5 விக்கெற்களை வீழ்த்தினார். இந்த ஐபிஎல் சீசனில் முதலில் ஐந்து விக்கெற்களை கைப்பற்றினார்.

133
என்ற எளிய இலக்கைத் துரத்திய பஞ்சாப் அணிக்கு லோகேஷ் ராகுல் 32 ஓட்டங்களும் கெய்ல்  23 ஓட்டங்களும் எடுத்தனர். இந்தஜோடி  ஜோடி நல்ல துவக்கம் தந்தது.  கெயில் இதற்கு முன்னால் நான்கு முறை சந்தீப் சர்மாவின் பந்தில் அவுட்டாகியிருப்பதால் அவரை வைத்து ஓபனிங் ஸ்பெல் தொடங்கினார் கேன் வில்லியம்சன்   குறிந்த வெற்றி இலக்கு என்பதால் இருவரும் நிதானமாக விளையாடினர். 9-வது ஓவரில் இருந்து 14-வது ஓவர் முடியும் வரை வெறும் 25 ஓட்டங்கள்தான் எடுத்தது பஞ்சாப்.  அகர்வால் 12, கருண் நாயர் 13, பின்ச் 8,   திவாரி 1, டை 4 ஸ்ரண் 2 அஷ்வின்  4 ஓட்டங்கள் என வரிசையாக வெளியேறினர்.   அதிர்ச்சி தந்தார். விக்கெற் இழக்காமல் 55 ஓட்டங்கள் எடுத்த பஞ்சாப் , 101 ஓட்டங்களில், சரிந்தது.  , பஞ்சாப் அணி 19.2 ஓவரில், 119 ரன்னுக்கு சுருண்டு, 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பஞ்சாப் வீரர் ராஜ்புட், 14 ஓட்டங்களுக்கு 5 விக்கெற்கலை வீழ்த்தினார்.ர். .பி.எல்., அரங்கில் பஞ்சாப் வீரரின் சிறந்த பந்துவீச்சு  இதுவாக அமைந்தது. இதற்கு முன், 2012ல் புனே ஜயன்ட்ஸ் அணிக்கு எதிராக, மஸ்கரானஸ் 25 ரஓட்டங்களுக்கு  5 விக்கெற்களை வீழ்த்தி இருந்தார்
சாகிப் அல் ஹசன்,


  
அகர்வாலை அஆட்டமிழக்கச்செய்த ஐதராபாத்தின் சாகிப் அல் ஹசன், .பி.எல்., அரங்கில் 50 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.

  
பஞ்சாப் அணியின்கலத்தடுப்பு  மோசமாக இருந்தது. மணிஷ் பாண்டே, 4, 9, 46 ஓட்டங்களில் கொடுத்த மூன்று 'கேட்ச்களை' கோட்டை விட்டனர். பதான் 7ஓட்டங்களில்  கொடுத்த வாய்ப்பை, திவாரி நழுவ விட்டார். 
பஞ்சாப்பிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையில் நடந்த போட்டியில் பஞ்சாப் வீரர் அங்கீத் ராஜ்பூட் ஐந்து விக்கெற்களை எடுத்து இருக்கிறார். இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.  அங்கீத் ராஜ்பூட் மொத்தம் 4 ஓவர் வீசி 14 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார். மொத்தமாக இவர் ஐந்து விக்கெட் எடுத்தார். இந்த ஐபிஎல் தொடரில் ஐந்து விக்கெட் எடுத்த முதல் நபர் இவர்தான் என்ற சிறப்பை பெற்றுள்ளார். ஆனாலும் பஞ்சாப் அணி கடைசியில் ஹைதராபாத் பந்துவீச்சில் சுருண்டது.

இதில் அங்கீத் முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்தார். ஷிகர்தவான், சாகா, கேன் வில்லியம்சன், மனிஷ் பாண்டே என்று வரிசையாக முதல் நான்கு வீரர்களின் விக்கெட்டை எடுத்தார். அதன்பின் கடைசியில் முகமது நபி விக்கெட்டை எடுத்தார். இதன் மூலம் இவர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பஞ்சாப் அணிக்காக இவர் 3 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கப்பட்டார். அப்போதே இவர் மீது பலர் கவனம் செலுத்தினார்கள். உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர் இதற்கு முன் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர். இவருக்கு 24 வயது மட்டுமே ஆகிறது. வலது கை மிதவேகப்பந்து வீச்சாளர். ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி இருக்கிறார்.
இந்த போட்டியில் அங்கீத், ஷிகர் தவான் விக்கெட்டை எடுத்துவிட்டு, மோசமாக கத்தினார். பின் ஷிகர் தாவணி நோக்கி தகாத வார்த்தைகளில் திட்டி இருக்கிறார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்


No comments: