Wednesday, December 20, 2023

ஐபிஎல் வரலாற்றில் மிட்செல் ஸ்டார்க்குக்கு அதிக விலை

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று  துபாயில் நடைபெற்றது. அதில் அனைத்து 10 அணிகளிலும் உள்ள வெறும் 77 இடங்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 33 வீரர்கள் போட்டி போட்டதால் அதிக தொகைக்கு விலை போகப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது.

அவுஸ்திரேலியாவின் நட்சத்திர பௌலரான மிட்செல் ஸ்டார்க்கை கடும் போட்டிக்குப் பிறகு ரூ.24.75 கோடிக்கு வாங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஸ்டார்க்கை ஏலம் எடுக்க குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. நிலையில் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து கொல்கத்தா எடுத்துள்ளது.  2023 சீசனில் இங்கிலாந்து வீரர் சாம் கரண் 18.5 கோடிக்கு பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டதே முந்தைய சாதனையாகும். 

அவுஸ்திரேலியாவின் பட் கமின்ஸை வாங்குவதற்கு பெங்களூரு ,ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கிடையே மெகா போட்டி ஏற்பட்டது.    ஹைதராபாத்   20.50 கோடி என்ற பிரம்மாண்டத் தொகைக்கு பட் கமின்ஸை வாங்கியது.  

  2023 டெஸ்ட் சாம்பியன்

ஷிப் ஃபைனல் , உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியாவை அடித்து நொறுக்கி வெற்றியை பறித்த அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை வாங்குவதற்கு சென்னை , ஹைதராபாத் அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால் கடைசியில் ஹைதராபாத் நிர்வாகம் விட்டுக் கொடுக்காமல் 6.80 கோடிக்கு போட்டி போட்டு அவரை வாங்கியது.ரோவ்மன் போவல் ராஜஸ்தான் அணிக்காக வாங்கப்பட்ட நிலையில் நியூசிலாந்தை சேர்ந்த இளம் வீரர் ரச்சின் ரவீந்தராவை சென்னை சூப்பர் கிங்ஸ் 1.8 கோடி என்ற குறைந்த தொகைக்கு வாங்கி அசத்தியது. குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் 523  ஓட்டங்கள் குவித்த அவர் அறிமுக தொடரிலேயே அதிக  ஓட்டங்கள் அடித்த வீரராக மாபெரும் உலக சாதனை படைத்தார்.

உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடிய நியூசிலாந்து வீரரான டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியிருக்கிறது.ஹர்ஷல் படேலை 11.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியிருக்கிறது.ஹர்ஷல் படேலை வாங்க குஜராத், பஞ்சாப், லக்னோ அணிகளிடையே கடும் போட்டி நிலவியது.முன்பு சென்னை அணிக்கு ஆடிய ஷர்துல் தாகூரை ஏலத்தில் 4 கோடிக்கு மீண்டும் வாங்கியிருக்கிறது சென்னை அணி.இலங்கை அணியின் ஸ்பின்னரான வனிந்து ஹசராங்காவை அடிப்படை விலையான 1.50 கோடிக்கே வாங்கியது சன்ரைசர்ஸ்.டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஹாரி ப்ரூக்கை 4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது.கரீபிய வீரரான ரோவ்மன் பவலை 7.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியிருக்கிறது.உமேஷ் யாதவை குஜராத் டைட்டன்ஸ் அணி 5.80 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியிருக்கிறது.அல்சாரி ஜோசப்பை 11.50 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது பெங்களூர் அணி.

மிகப்பெரிய தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி போட்டு வாங்கியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் கடந்த வருடம் எந்த அணியும் வாங்காததால் விலை போகாத அவரை இம்முறை சென்னை இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. இருப்பினும் இதன் பின்னணியில் தோனி இருப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஏனெனில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான அவர் 2023 உலகக் கோப்பையில் தரம்சாலா நகரில் பேட்டிங்க்கு சாவலான மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து நியூசிலாந்தின் வெற்றிக்கு போராடினார். அதை விட மும்பையில் நடைபெற்ற முதல் செமி ஃபைனலில் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக 7 விக்கெட்களை எடுத்து மிரட்டிய ஷமி போன்ற அனைத்து பவுலர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்ட அவர் சதமடித்து 134 (119) ஓட்டங்கள் விளாசி வெற்றிக்கு போராடினார்.

அந்த வகையில் 2023 உலகக் கோப்பையில் சிறந்த பவுலிங்கை கொண்ட இந்திய அணிக்கு எதிரான 2 போட்டிகளிலும் மிட்சேல் 2 சதங்கள் அடித்து இந்திய சூழ்நிலைகளில் தம்மால் அசத்த முடியும் என்பதை காண்பித்தார். இது மட்டுமல்லாமல் கடந்த வருடத்துடன் அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்ற நிலையில் பென் ஸ்டோக்ஸையும் சென்னை விடுவித்தது. எனவே மிடில் ஆர்டரில் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடக்கூடிய திறமையும் தேவைப்படும் நேரங்களில் மித வேகப்பந்து வீச்சாளராக செயல்படும் தன்மையையும் கொண்டுள்ள காரணத்தாலேயே அவரை சென்னை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது என்றே சொல்லலாம். மொத்தத்தில் ராயுடு, ஸ்டோக்ஸ் ஆகியோரது இடத்தை நிரப்புவதற்காக 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அசத்திய மிட்சேலை கப்டன் தோனியுடன் விருப்பத்துடன் சென்னை வாங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வம் மவியை ரூ.6.8 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வாங்கியுள்ளது. இந்திய பௌலரான இவர் இதற்கு முன்னர் கொல்கத்தா அணிக்காக விளையாடியுள்ளார்.உமேஷ் யாதவை குஜராத் டைட்டன்ஸ் அணி 5.80 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியிருக்கிறது.

கருண்நாயரையும் ஸ்மித்தையும் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. 50 லட்சத்தை அடிப்படை விலையாக கொண்டிருந்த மனீஷ் பாண்டேவும் விற்கப்படவில்லை

No comments: