Sunday, December 3, 2023

ஐபிஎல் அணிகளால் விடுவிக்கப்பட்ட நட்சத்திர வீரர்கள்.


 கிறிக்கெற் வீரர்களின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுதியதில் ஐபிஎல்  முதன்மை வகிக்கிறதுஐபிஎல் இல் விளையாடினால் உலகளவில் பிரபலமாகலாம்,  சிறப்பாகச் செயற்கட்டால்  தேசிய அனியில்  இடம்  பிடிக்கலாம் என்ற நம்பிக்கை  இளம் வீரர்களிடம்  உள்ளது.

தேசிய அணியில் சிறப்பாகச் செயற்படும் வீரர்களைக் குரிவைத்து ஐபிஎல் அணிகள் ஏலத்தில்  பங்குபற்றுகின்றனதாம் நம்பும் சிறந்த வீரருக்காகக் கோடிக் கணக்கில்  கொட்டிக் கொடுக்க ஐபிஎல் அணிகள் தயாராக  உள்ளனஏலத்தின் முடிவில் தமக்கு விதிக்கப்பட்ட விலையை வீரர்களால் நம்ப முடியாதிருந்ததுநம்பிக்கையுடன் கோடிகளைக்  கொடுத்து வாங்கப்பட்ட வீரர்கள் அணியைக் கைவிட்ட வரலாறும் உண்டு.

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெற உள்ளது.   தக்கவைத்துக் கொள்ளும் , விடுவிக்கபடும்  வீரர்களின் விவரங்களை வழங்குமாறு, 10 அணி நிர்வாகங்களையும் ஐபிஎல் அமைப்பு கேட்டுக்கொண்டது.   10 அணிகளும் தங்களுக்கான வீரர்களின் விவரங்களையும் வெளியிட்டதுஅதில்,  யாரும் எதிர்பாராத விதமாககடந்த ஆண்டு ஏலத்தின் போது முட்டி மோதி பல கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட நட்சத்திர வீரர்களும்பல ஆண்டுகளாக அணியின் வெற்றிக்கு பங்களித்த முக்கிய வீரர்களும் வெளியேற்றப்பட்டவர்களின்  பட்டியலில்  உள்ளனர்

சென்னை சூப்பர் கிங்ஸ்:

இங்கிலாந்து டெஸ்ட் அணி கப்டனும்உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸைசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு கடந்த சீசனுக்காக ஏலத்தில் எடுத்ததுஆனால்காயம் காரணமாக அவர் பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கவே இல்லைஇந்நிலையில்பணிச்சுமை காரணமாக அடுத்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக கூறியதால்பென் ஸ்டோக்ஸை சென்னை அணி நிர்வாகம் விடுவித்துள்ளது

                           டெல்லி கபிடல்ஸ்

டெல்லி கபிடல்ஸ் அணியிலிருந்து 11 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.   கடந்த சீசனில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் விளையாடாதமனீஷ் பாண்டேசர்ஃபராஸ் கான்கமலேஷ் நாகர்கோடி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன

                                    பஞ்சாப் கிங்ஸ்

அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போன தமிழக வீரரான ஷாருக்கானுக்கு பலத்த  போட்டி இருந்தது.மற்றைய அணிகளுடன் முட்டி மோதி   9 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.    பஞ்சாப் அணி வெற்றி பெற்ற போட்டிகளில் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.  இருந்தும் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஆல்ரவுண்டரான‌ ஷரதுல் தக்கூரை கடந்த சீசனுக்காக கொல்கத்தா அணி 10 கோடியே 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. பெங்களூர் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி அந்த போட்டியில் தனிநபராக வெற்றியை தேடி தந்தார். இந்நிலையில் அவரை கொல்கத்தா அணி வெளியேற்றியுள்ளது. 

                       சன்ரைசர்ஸ் ஐதராபாத்:

இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி துடுப்பாட்ட வீரரான  ஹாரி ப்ரூக்கை ஏலத்தில் எடுக்க கடந்த ஆண்டு கடும் போட்டி நிலவியதுஏலத்தின் முடிவில் 13.25 கோடி ரூபாய் கொடுத்த ஐதராபாத் அணி வாங்கியதுஐபிஎல் வரலாற்றில் அந்த அணி வாங்கிய விலையுயர்ந்த வீரர் என்ற பெருமையை ப்ரூக் பெற்றார்ஆனால் எதிர்பார்த்த செயல்பாட்டை அவர் வெளிப்படுத்தாததால் அணி நிர்வாகம் ப்ரூக்கை விடுவித்துள்ளது.

                              மும்பை இந்தியன்ஸ்:

கடந்த ஆண்டு ஏலத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய வேகப்பந்து வீச்சாளர்களில் ஜோப்ரா ஆர்ச்சரும் ஒருவர்இவரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் திவிரம் காட்டினஇறுதியில் மும்பை அணி 8 கோடி ரூபாய்க்கு ஆர்ச்சரை ஏலத்தில் எடுத்ததுஆனால்தொடர்ச்சியான காயங்களால் அவர் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறியதோடுவிளையாடிய போட்டிகளிலும் ரன்களை வார் வழங்கினர்இதனால்மும்பை அணி அவரை தற்போது ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்துள்ளது.

                           ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

நட்சத்திர வீரர்களை விடுவித்ததில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பது பெங்களூர் அணியின் முடிவு தான்கடந்த ஏலத்தின் போது ரூ.10.75 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஷர்ஷல் படேல்,ரூ.7.75 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஹேசல்வுட் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களையும் விடுவித்துள்ளதுஇலங்கை கிரிக்கெட் சம்மேளனத்தை ஐசிசி இடைநீக்கம் செய்து இருப்பதால்அந்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ஹசரங்காவையும்  பெங்களூர்   விடுவித்துள்ளது.

No comments: