Sunday, December 31, 2023

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய கப்டன் விஜயகாந்த்

தமிழக சினிமாவிலும்அரசியலிலும் தனக்கென்று ஒரு பாதையை அமைத்து வெற்றிக் கொடி நாட்டிய விஜயகாந்தின் பயணம்  முடிவுக்கு வந்துள்ளது.   விஜயகாந்த கடந்து வந்த பாதை இலகுவானதல்லகேலி,கிண்டல்  அனைத்யும்கடந்து உச்சம் தொட்ட வுஜயகாந்த், தான்  உயர்ந்ததுபோல மற்றவர்கள் மேலே செல்ல ஏணி போல் உதவினார்.

நடிகர் எம்.ஜி.ஆர்  அரசியலில் இருந்த போது அவருக்காகவே பல அரசியல் பாடல்கள் எழுதப்பட்டன.அரசியலைப் பற்றிய எந்த ஒரு  எதிர் பார்ப்பும் இல்லாதபோது சினிமாவுக்காக எழுதப்பட்ட பாடல் வரிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் விஜயகாந்த்.  "வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே..."  என்ற பாடலை போன்றதே அவரது மனம்.

கமல்,ரஜினி  என்ற  இரு பெரும்  துருவ நட்சத்திரங்கள்  சினிமாவில் ஜொலித்த போது விஜயகாந்த்  சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.  முதலில் அவரது நிறம் கேலிக்குள்ளாகியது.   எல்லோரும் ரஜினியைப் போல் வருமா என  கேட்டார்கள். ரஜினிக்கு சவால் விடும் வகையில் சினிமாவில் மிக  ஆழமாகத் தந்து காலைப் பதித்தார்.

கருணாநிதி, ஜெயலலிதா எனும்  இரு பெரும் ஆழுமைகள் தமிழகத்துக்கு அப்பாலும் தமது அரசியல் பலத்திக் கான்பித்த போது அரசியல் அரங்கில் புகுந்தார் விஜயகாந்த். அண்ணாவின் மறைவுக்க்பு பின்னர் கட்சியைப் பொருப்பேற்று  தனது அரசியல் சாணக்கியத்தை நிரூபித்தவர் கருணாநிதி,எம்.ஜி.ஆரி மறைவுக்குப் பின்னர்  உட்கட்சி  எதிர்ப்புக்கு  மத்தியில் தனது அரசியல் இராஜதந்திரத்தால் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. எந்த விதமான அரசியல் பின்னணியும்  இல்லாமல்   அரசியல் அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியவர்  விஜயகாந்த்.

விஜயகாந்தை   அரசியலில்  தூக்கிவிட்டு  குப்புற விழுத்தியவர்  ஜெயலலிதா. தனது கட்சியைச் சேர்ந்தவர்களின்   துரோகம் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதன் பின்னர் அரசியலில் அவரால் தலைதூக்க முடியவில்லை

கப்டன் என்று பலராலும் அன்புடன் அழைக்கப்படும் நடிகர்-அரசியல்வாதி விஜயகாந்த், கடந்த 28 ஆம் திகதி   வியாழக்கிழமை  அதிகாலை  காலமானார்.

தமிழ் சினிமாவின் அர்ப்பணிப்புள்ள கலைஞர்களில் ஒருவராகவும், சிறந்த மனிதர் என்றும் விஜயகாந்த் அபோற்றப்படுகி||றார். உதவி என கேட்டு வருபவர்களுக்கு   உதவி செய்யும் வள்ளல் குணம் கொண்டவர்.  அவரின் கல்யாண மண்டபத்தில், வெளிஊர்களில் இருந்து வருபவர்களுக்கு, தினந்தோறும் விருந்தளிக்கும் கொடையாளி எனவும் பெயர் பெற்றவர்.

கே.என்.அழகர்சுவாமி ,ஆண்டாள் அழகர்சாமி ஆகியோருக்கு மகனாக, விஜயராஜ் அழகர்சாமியாக ஆகஸ்ட் 25, 1952 இல் பிறந்தார்.

அவரின்  மனைவி பிரேமலதா.விஜய பிரபாகரன் , சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

எம்.ஜி.ஆர் மீது கொண்ட அன்பினால், சினிமா மீது சிறுவயது முதல் ஆர்வம் கொண்டிருந்தார் விஜயகாந்த்.

1979ல் எம்..காஜாவின் 'இனிக்கும் இளமை' படத்தின் மூலம் அறிமுகமான இவர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்..சந்திரசேகரின் 'சட்டம் ஒரு இருட்டறை ' படத்தின் மூலம் முதல் கமர்ஷியல் வெற்றியை ருசித்தார்.

பல படங்களில் கண்டிப்பான பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.   100வது படமான 'கப்டன் பிரபாகரன்' படத்தில் நடித்த பிறகு, 'கப்டன்' என்ற பட்டத்தை பெற்றார்.

80 களில், திரைப்படங்களில் பல புரட்சிகரமான பாத்திரங்களில் நடித்தார். அதனாலேயே அவர் புரட்சி கலைஞர் என அழைக்கப்பட்டார். ஒரு சில படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்துள்ளார் விஜயகாந்த்.1982 இல் 'ஓம் சக்தி' படத்திற்குப் பிறகு, அவர் கமெர்ஷியல் படங்கள் பக்கம் கவனம் செலுத்த துவங்கினார்

1984 இல், அவர் நடிப்பில் கிட்டத்தட்ட 18 திரைப்படங்கள் வெளியாகி, அனைத்துமே கிட்டத்தட்ட   வெற்றி பெற்று சாதனை படைத்தன.

விஜய், சூர்யா  ஆகியோருன் ஆரம்பகால படங்கலில் நடித்து அவர்களுன் எதிர்கால சினிமாவுக்கு உரமூட்டினார். பிலிம் இன்ஸ்ரிரியூட்டில் படித்து வெளியேறும்  கலைஞர்களுக்கு கைகொடுத்து தூக்கி விட்டார்.  ஊமை விழிகள்  இன்றும்  பேரும் படமாக  இருக்கிறது.  இயக்குநர் ஆர்.கே. செல்வமணிக்கு வாய்ப்புக் கொடுத்தவர்.  கதை சொல்ல யார் வந்தாலும் மறுக்காமல் கதை கேட்பார். அன்றைய சாப்பாடு அவர்களுக்கு   விஜயகாந்தில் அலுவலகத்தில்தான்.

விஜயகாந்த் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் கொண்டாடப்பட்ட நாயகனாக  மிளிர்ந்தார். 1992இல், அவர் நடித்த'சின்ன கவுண்டர்' இல் நடித்தார், இது இன்றும் ஒரு உன்னதமானதாக கருதப்படுகிறது.'சேதுபதி ஐபிஎஸ்', 'ஹானஸ்ட் ராஜ்', 'உளவுத்துறை', 'பெரியண்ணா' , 'கண்ணுபட போகுதையா' ஆகியவை 90களில் அவர் நடித்த வெற்றிப் படங்களில் சில.

2000களில், 'வானத்தைப் போல, 'நரசிம்மா' , 'தவசி' உள்ளிட்ட வெற்றிப் படங்கள், அவரின் மற்றொரு அவதாரத்தை வெளிப்படுத்தியது.

.ஆர்.முருகதாஸின் 'ரமணா' திரைப்படம் அவரை ஊழலுக்கு எதிரான போரளியாகியது.   அதுவே அவரை அரசியலுக்கு வர தூண்டியது எனவும் கூறலாம்.

2005ல் அரசியலுக்கு நுழைந்த பிறகு, அவர் சினிமா துறையில் கவனம் செலுத்தவில்லை.


  2005 ஆம் ஆண்டு செப்டெம்பர்  14 ஆம் திகதி , மதுரையில் தனது அரசியல் கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை (தேமுதிக) தொடங்குவதாக விஜயகாந்த் அறிவித்தார்.ஒரே வருடத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் முக்கிய தலைவர்களில் ஒருவராக உருமாறினார்.அவர் தனது கட்சிக்காக என்றைக்குமே தொடர்களிடத்தில் நன்கொடை கேட்டதில்லை. ஆரம்ப தேர்தலில், தேமுதிக எந்தக் கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டு உள்ளாட்சித் தேர்தலிலும் தனது பலத்தை  நிரூபித்தது. 2011-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (அதிமுக) இணைந்து 41 தொகுதிகளில் போட்டியிட்டார்.41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றனர். அந்த ஆண்டு திமுகவை விட (திராவிட முன்னேற்றக் கழகம்) தேமுதிக அதிக இடங்களைப் பெற்றதால்  விஜயகாந்த எதிர்க் கட்சித்தலைவரானார்.

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயரிட்டவர். ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையை கண்டித்து தமிழ் திரையுலகை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர். நடிகர்கள்  அனைவரையு ஒரெ குடியின்  கீழ்  கொண்டுவந்து நடிகர் சங்க கடனை அடைத்த பெருமைக்குரியவர்.

 பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த தமிழ்ச் செல்வன் பட ஷூட்டிங் மைசூர் அருகே தொடங்கியது. கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே கொல்லேகால் பகுதியில் நடந்தது. அப்போது படக்குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வாட்டாள் நாகராஜும் அவருடைய கட்சி நிர்வாகிகளும் சென்று அங்கு தமிழ்மொழியில் வைக்கப்பட்டிருந்த கிளாப் போர்டை பயன்படுத்தக் கூடாது என தகராறு செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் பொலிஸாஅர்  குவிக்கப்பட்டனர்.   வாட்டாள் நாகராஜின் ஆட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் காரில் வந்த விஜயகாந்த், இயக்குநர் பாரதிராஜாவிடம் என்ன பிரச்சினை என கேட்டிருந்தார். பாரதிராஜா விஷயத்தை சொன்னதும் விஜயகாந்தின் கண்கள் சிவந்தன. காரில் இருந்து இரும்புக் கம்பியை எடுத்துக் கொண்டு ஆவேசமாக கிளம்பினார் விஜயகாந்த். அப்போது வாட்டாள் நாகராஜ் இருந்த இடத்திற்கு தனி ஆளாக சென்று வாட்டாள் நாகராஜ்னா பெரிய ஆளா.. வாடா பார்த்துக்குவோம் என சவால் விட்டார். வேட்டியை மடித்துக் கொண்டு கையில் இரும்புக் கம்பியுடன் விஜயகாந்தை பார்த்த வாட்டாள்   தனது ஆதரவாளர்களுடன் ஓடிவிட்டாராம்.

சிவாஜியின்   இறுதி  ஊர்வலத்தின் போது கட்டுகடங்காத ர்சிகர் கூட்டம்  நெருக்கடியை ஏர்படுத்தியதால். தனி ஆளாக வேட்டிக்யை மடித்துக்கட்டி  ரசிகர்களை ஆறுதல்  படுத்தினார்.

  சக்கர நார்காலியில்  விஜயகாந்த் அழைத்து வரப்படுவார். அபோது அவரைப் பார்க  பரிதாபமாக  இருக்கும்.   அதனி பலர் விமர்சனம் செய்தார்கள்.    விஜயகாந்தின்  உடல் நிலை பாதிக்கப்பட்டதால்  கட்சிப்பனிகள்  முடங்கின. விஜயகாந்தின்  மனைவி  பொதுச்செயலாளரானார். அப்போதெ அவரது எதிர்காலம்  வெளிச்சத்த்குக்கு வந்து விட்டது.  ஆனால், இவளவு சீக்கிரமாக விஜயகாந்த் மறைவார் என எதிர்  பார்க்கவில்லை.

எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த  வரவேற்பு ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்டது.  விஜயகாந்தின்      இடத்தை பிரேமலதாவால் நிரப்ப முடியாது. 2014, 2016, 2019, 2021 என எல்லா தேர்தல்களிலும் தேமுதிகவின் வாக்கு வங்கி சரிவை நோக்கியே சென்றது. அதனை முன்னேற்றுவதற்டவில்லை. விஜயகாந்த்  இருக்கும் போதே சில கட்சிகள் சில கட்சிகள்  அவரது கட்சியைக் கண்டுகொள்ளவில்லை

ரசிகர்கள், தொண்டர்கள், விஜயகாந்தால் அரவணைக்கப்பட்ட  சினிமாக் கலைஞர்கள்  அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.விஜயகாந்தின் சகாப்தம்  முடிவுக்கு வந்துள்ளது.

No comments: