Wednesday, December 17, 2025

ஐபிஎல் ஏலம் விற்கப்படாத வீரர்கள்


ஐபிஎல் ஏலம் விற்கப்படாத வீரர்கள்

துடுப்பாட்டவீரர்கள்

ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் - 2 கோடி

பிரித்வி ஷா - 75 லட்சம்

டெவோன் கான்வே - 2 கோடி

அதர்வா தைடே - 30 லட்சம்

அன்மோல்ப்ரீத் சிங் - 30 லட்சம்

அபினவ் தேஜ்ரானா - 30 லட்சம்

அபினவ் மனோகர் - 30 லட்சம்

யாஷ் துல் - 30 லட்சம்

ஆர்யா தேசாய் - 30 லட்சம்

செடிகுல்லா அடல் - 75 லட்சம்

சல்மான் நிசார் - 30 லட்சம்

தீரஜ் குமார் - 30 லட்சம்

சிந்தல் காந்தி - 30 லட்சம்

டேனியல் லேட்டகன் - 30 லட்சம்

மனன் வோஹ்ரா - 30 லட்சம்

ஸ்வஸ்திக் சிகாரா - 30 லட்சம்

பந்துவீச்சாளர்கள்

ஜெரால்ட் கோட்ஸி - 2 கோடி

ஸ்பென்சர் ஜான்சன் - 1.5 கோடி

ஃபசல்ஹாக் ஃபரூக்கி - 1 கோடி

மஹீஷ் தீக்ஷனா - 2 கோடி

முஜீப் உர் ரஹ்மான் - 2 கோடி

ராஜ் லிம்பானி - 30 லட்சம்

சிமர்ஜீத் சிங் - 30 லட்சம்

ஆகாஷ் மத்வால் - 30 லட்சம்

வஹிதுல்லாஹ் ஜத்ரான் - 30 லட்சம்

சிவம் சுக்லா - 30 லட்சம்

கரண் சர்மா - 50 லட்சம்

கார்த்திகேய சிங் - 30 லட்சம்

கைல் ஜேமிசன் - 2 கோடி

ஆடம் மில்னே - 2 கோடி

சேதன் சகாரியா - 75 லட்சம்

குல்தீப் சென் - 75 லட்சம்

வக்கார் சலாம்கீல் - 1 கோடி

கே.எம். ஆசிஃப் - 40 லட்சம்

முருகன் அஸ்வின் - 30 லட்சம்

தேஜாஸ் பரோகா - 30 லட்சம்

கே.சி. கரியப்பா - 30 லட்சம்

மோஹித் ரத்தீ - 30 லட்சம்

தஸ்கின் அகமது - 75 லட்சம்

ரிச்சர்ட் க்ளீசன் - 75 லட்சம்

அல்சாரி ஜோசப் - 2 கோடி

ரிலே மெரிடித் - 1.5 கோடி

ஜெய் ரிச்சர்ட்சன் - 1.5 கோடி

இர்ஃபான் உமைர் - 30 லட்சம்

மயங்க் டாகர் - 30 லட்சம்

ஜிக்கு பிரைட் - 30 லட்சம்

இசாஸ் சவாரியா - 30 லட்சம்

மணி கிரேவால் - 30 லட்சம்

  


 

ஓல்-ரவுண்டர்கள்

கஸ் அட்கின்சன் - 2 கோடி

வியான் முல்டர் - 1 கோடி

தீபக் ஹூடா - 75 லட்சம்

விஜய் சங்கர் - 30 லட்சம்

ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் - 40 லட்சம்

மஹிபால் லோமரர் - 50 லட்சம்

ஈடன் டாம் - 30 லட்சம்

தனுஷ் கோட்டியன் - 30 லட்சம்

கமலேஷ் நாகர்கோட்டி - 30 லட்சம்

சன்வீர் சிங் - 30 லட்சம்

சீன் அபோட் - 2 கோடி

மைக்கேல் பிரேஸ்வெல் - 2 கோடி

டேரில் மிட்செல் - 2 கோடி

தாசுன் ஷனகா - 75 லட்சம்

விக்கி ஓஸ்ட்வால் - 30 லட்சம்

டான் லாரன்ஸ் - 2 கோடி

தனய் தியாகராஜன் - 30 லட்சம்

நாதன் ஸ்மித் - 75 லட்சம்

கரண் லால் - 30 லட்சம்

உத்கர்ஷ் சிங் - 30 லட்சம்

ஆயுஷ் வர்தக் - 30 லட்சம்

மணிசங்கர் முரசிங் - 30 லட்சம்

மெக்னீல் நோரோன்ஹா - 30 லட்சம்

சித்தார்த் யாதவ் - 30 லட்சம்

ரித்திக் தடா - 30 லட்சம்

சாமா மிலிந்த் - 30 லட்சம்

விக்கெட் கீப்பர்கள்

கே.எஸ்பாரத் - 75 லட்சம்

ரஹ்மானுல்லா குர்பாஸ் - 1.5 கோடி

ஜானி பேர்ஸ்டோவ் - 1 கோடி

ஜேமி ஸ்மித் - 2 கோடி

ருச்சித் அஹிர் - 30 லட்சம்

வான்ஷ் பேடி - 30 லட்சம்

துஷார் ரஹேஜா - 30 லட்சம்

டாம் பான்டன் - 2 கோடி

கானர் எஸ்டெர்ஹுய்சென் - 30 லட்சம்

 

 

ஐபிஎல் ஏலம் விற்கப்பட்ட வீரர்கள்


 

ஐபிஎல் ஏலம் விற்கப்பட்ட வீரர்கள்

துடுப்பாடவீரர்

டேவிட் மில்லர் - 2 கோடி - 2 கோடி - டெல்லி கேபிடல்ஸ்

கேமரூன் கிரீன் - 2 கோடி - 25.20 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பந்து வீச்சாளர்

ஜேக்கப் டஃபி - 2 கோடி - 2 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

மதீஷா பத்திரனா - 2 கோடி - 18 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அன்ரிச் நார்ட்ஜே - 2 கோடி - 2 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ரவி பிஷ்னோய் - 2 கோடி - 7.2 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்

அகீல் ஹொசைன் - 2 கோடி - 2 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்

அசோக் சர்மா - 30 லட்சம் - 90 லட்சம் - குஜராத் டைட்டன்ஸ்

கார்த்திக் தியாகி - 30 லட்சம் - 30 லட்சம் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

நமன் திவாரி - 30 லட்சம் - 1 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

சுஷாந்த் மிஸ்ரா - 30 லட்சம் - 90 லட்சம் - ராஜஸ்தான் ராயல்ஸ்

யாஷ் ராஜ் புஞ்சா - 30 லட்சம் - 30 லட்சம் - ராஜஸ்தான் ராயல்ஸ்

பிரசாந்த் சோலங்கி - 30 லட்சம் - 30 லட்சம் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

விக்னேஷ் புதூர் - 30 லட்சம் - 30 லட்சம் - ராஜஸ்தான் ராயல்ஸ்

ஓல்-ரவுண்டர்கள்

வனிந்து ஹசரங்கா - 2 கோடி - 2 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

வெங்கடேஷ் ஐயர் - 2 கோடி - 7 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Auqib Dar - 30 லட்சம் - 8.4 கோடி - டெல்லி கேபிடல்ஸ்

பிரசாந்த் வீர் - 30 லட்சம் - 14.20 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்

சிவங் குமார் - 30 லட்சம் - 30 லட்சம் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

விக்கெட் கீப்பர்கள்

குயின்டன் டி காக் - 1 கோடி - 1 கோடி - மும்பை இந்தியன்ஸ்

பென் டக்கெட் - 2 கோடி - 2 கோடி - டெல்லி கேபிடல்ஸ்

ஃபின் ஆலன் - 2 கோடி - 2 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கார்த்திக் சர்மா - 30 லட்சம் - 14.20 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்

முகுல் சவுத்ரி - 30 லட்சம் - 2.6 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

தேஜஸ்வி சிங் - 30 லட்சம் - 3 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

 

Sunday, December 14, 2025

கூட்டணிக்காகக் காத்திருக்கும் தமிழக‌ அரசியல் தலைவர்கள்

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வியூகம் அமைக்கின்றன.திராவிட முன்னேற்றக் கழ்கத்தின் தலைமையிலான  கூட்டணி தற்போது மிக வலுவாக இருக்கிறது. உள்ளே சில பூசல்கள்  இருந்தாலும் எந்தக் கட்சியையும் ஸ்டாலின் கைவிடமாட்டார்.

அண்ணா திடாவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக் கட்சி ஆக்யவற்றுக்கிடையேயான கூட்டணி  ஒன்றாக  இருப்பதாக வெளியே தெரிந்தாலும் உள்ளே நடக்கும் சதித் திட்டப் பிணக்குகளைத் தீர்த்து வைப்ப்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

தமிழக அரசியல் களத்தில் விஜயின் பங்கு அதிகரித்துச் செல்கிறது. விஜயுடன் கூட்டணி சேர தமிழகக் கட்சிகள் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. விஜயின் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க் முடியாது. ஆனால், வாக்குகளைச் சிதறடிகும் சக்தி விஜய்க்கு  இருக்கிறது. ஒரு தொகுதியின்  வெற்றி தோல்வியை விஜய்தான் முடிவு செய்யப் போகிறார்.

ராகுல் காந்திக்கு மிகவும் விசுவாசமன அரசியல் தலைவர் ஒருவர் மிக இரகசியமாக விஜயின் அலுவலகத்துக்குச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில்  இருந்து    காங்கிரஸ் வெளியேறப் போவதாக சிலர் அடித்துச் சொன்னார்கள். இந்தச் சம்பவம் ராகுலின் காதூக்குச் சென்றதால் நிலமை அப்படியே தலைகீழானது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், அண்ணா டிராவிட முன்னேற்றக் கழக செயற்குழு, பொதுக்கு கூட்டம் நடைபெற்றது.  சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பங்கேற்கவில்லை. இதன்காரணமாக தற்காலிக அவைத் தலைவராக கேபி முனுசாமி நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிமுக பொதுக்குழுவின் முதல் 8 தீர்மானங்களை வாசித்தார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் 8 தீர்மானங்களை வாசித்தார்.

 கூட்டணியில் இடம்பெறும் கட்சி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டுள்ளது உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மிக முக்கியமாக பன்னிர்ச்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியவர்களை  மீண்டும் கட்சியில் சேர்ப்பதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  பிளவு பட்டுள்ளதால் சகல தேர்தலிலும் எடப்பாடியின் தலைமையிலான கழகம் தோல்வியடிந்தது. இப்போது செங்கோட்டையனும் வெளியேறியதால்  கொங்கு மண்டலத்தில் சரிவு ஏற்படுவது நிச்சயம். இதனை எடப்பாடி எப்படி சரிக்கட்டப்போகிறார் எனத் தெரியவில்லை.

 தமிழக பாபாரதீய ஜனதாத் தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிற டிசம்பர் 14ம் திகதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சந்திப்பின் போது சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசவிருக்கிறார். இதற்கிடையில்  திடீர் என   எடப்பாடி பழனிச்சாமியை  அவர் சந்தித்துப் ப்ச்ச்ரி உள்ளார். எடப்பாடியின் செய்திய நயினார் நாகேந்திரன் டெல்லிக்குக் கொண்டு செலார் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசுகையில், இந்த சந்திப்பில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசவில்லை என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலநிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூரில் நடைபெற்றது.

  தலைவர் விஜயை முதலமைச்சர்  வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என   தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டை, நாஞ்சில் சம்பத் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மேலும் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேவேளை அன்புமணியின் நெருங்கிய சகாவான வழக்கறிஞ்ர் பாலு பனையூருக்குச் சென்றது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்  சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்திற்கு   நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   சார்பாக வழக்கறிஞர் பாலு,   ஆனந்திடம் அழைப்பு கடிதத்தை  வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கண்டித்து டிசம்பர் 17ஆம்திகதி பாட்டாளி மக்கள் கட்சி  போராட்டம் நடத்த உள்ளது.  இந்த போராட்டத்தில் பங்கேற்க தவெகவிற்கு  அன்புமணி கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தை அன்புமணி சார்பில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்திடம் வழக்கறிஞர் பாலுவும் கட்சியின் முக்கியஸ்தர்களும்  ர் நேரில் சென்று வழங்கியுள்ளனர்.

இந்த கடிதத்தை தவெக பொதுச்செயலாளர் ஆனந்தும் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து வழக்கறிஞர் பாலு பேசுகையில்,  தவெக ஆரம்பித்த முதல் மாநாட்டில் இருந்தே சாதிவாரி கணக்கெடுப்பு நடந்த வேண்டும் என்று செல்லக்கூடிய அமைப்பாக இது இருக்கின்றது. திராவிட இயக்கத்திற்கு எல்லாம் இன்றைக்கு பாடம் சொல்லக்கூடிய வகையில் இவருடைய கருத்து அமைந்துள்ளது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். திமுகவிற்கு மட்டும் நாங்கள் அழைப்பு விடுக்க வில்லை. காரணம் அவர்கள் எடுக்கக்கூடாது, எடுக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனவே தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிக்கின்றவர்களை எழுப்ப முடியாது. திமுகவை தவிர திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்து இருக்கிறோம். அரசியல் கூட்டணி குறித்து எல்லாம் தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த அழைப்பு போராட்டத்துக்கானதாகமட்டும் இல்லை. கூட்டணிகான சமிக்ஞையாக  இருப்பதாக விமர்சகர்கள் சொலிகிறார்கள்.

  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம்  ஒரு  முக்கிய அரசியல் போட்டிக்குத் தயாராகி வருகிறது.தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக வரவிருக்கும் ராஜ்யசபா தேர்தலை அது ஒரு ஆயுதமாக கையில் எடுக்கக் காத்திருப்பதாக தெரிகிறது. அதாவது கூட்டணியை விரிவுபடுத்த ராஜ்யசபா தேர்தலை கையில் எடுக்க திமுக திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி உலா வருகிறது.

தமிழகத்தில் இருந்து ஆறு ராஜ்ய சபா இடங்களுக்கான உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 1, 2026 அன்று நிறைவடைகிறது.  ஓய்வுபெறும் உறுப்பினர்களில் தி.மு..வைச் சேர்ந்த என்.ஆர். இளங்கோ, பி. செல்வரசு, திருச்சி சிவா, கனிமொழி சோமு ஆகியோரும், .தி.மு..வைச் சேர்ந்த எம். தம்பிதுரை , ஜி.கே. வாசன் ஆகியோரும் இருக்கின்றனர்.

தற்போதைய சட்டமன்ற பலத்தின் அடிப்படையில், தி.மு..வால் நான்கு இடங்களையும், .தி.மு..வால் மீதமுள்ள இரண்டு இடங்களையும் எளிதாக வெல்ல முடியும். ஒரு ராஜ்ய சபா இடத்தைப் பெற ஒரு வேட்பாளருக்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

தி.மு.. வட்டாரத் தகவல்களின்படி, என்.ஆர். இளங்கோ, திருச்சி சிவா ஆகியோர் மீண்டும் வேட்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.. வசம் உள்ள மீதமுள்ள இரண்டு இடங்கள், கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்களின் விருப்பத்தின் பேரில் நிரப்பப்படும். கூட்டணிக் கட்சிகள் யாருக்கேனும் வாய்ப்பு கிடைக்குமா என்றும் தெரியவில்லை.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால், பல முனைப் போட்டிக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் கூடுதல் கூட்டாளிகளைக் கொண்டு வருவதற்கான பேரம் பேசும் கருவிகளாக இந்த இடங்கள் பயன்படுத்தப்படும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

மகனை எம்பியாக்க வேண்டும் என ஆசைப்படும் பிரேமலதாவுக்கு கோடும் கொக்கியாகவும்  இருக்கலாம் எஹ சந்தே பொதுத்  தேர்தலின்போது ராஜ்ய சபா இடம் குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், .தி.மு..விடமிருந்து விலகிச் சென்றுள்ளார் பிரேமலதா.

இன்னும் நான்கு மாதங்களில் இந்தக் கூட்டணிக் கணக்குகளில் மாற்றம் ஏற்படலாம்.

ரமணி

14/12/25