Thursday, April 10, 2025

சந்திக்கு வந்த குடும்பச் சண்டை மகனின் பதவியை பறித்த தந்தை


 

 அரசியல் என்றாலே அங்கே வரிசுக்கு தனி மரியாதை இருக்கும் வரிசு அரச்யல் என விமர்சகர்கள்   பெரிதாக கூப்பாடு போட்டாலும். வரிசு அரசியலை அடுத்த கட்ட தலைவர்களும், தொண்டர்களும் சிரமேல் தூக்கிக் கொண்டாடுகிறார்கள்.

வாரிசுக்காக  இரண்டாம் கட்டத் தலைவர்கள் தூக்கி எறியப்பட்ட சம்பவங்களும், நின்று பிடிக்க முடியாமல்  கட்சியை விட்டே  ஓடிஒ போன சம்பவங்களும்  அரசியல் அரங்கில்  நிறையவே உள்ளன. மகனிடம்  இருந்த தலமைப் பதவியைப் பரித்து  தன்னை  மீண்டும் தலைவராக்கிய அதிர்ச்சியான  அரசியல் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான அன்புமணியிடம்  இருந்த தலைமைப் பதவிடை  தகப்பனான‌ டாக்டர் ராமதாஸ்  பிடுங்கி எடுத்துள்ளார்.

பாமக நிறுவனரான நானே இனி கட்சித் தலைவர் பதவியையும் வகிக்கப் போகிறேன். கட்சியின் செயல் தலைவராக டாக்டர் அன்புமணி செயல்படுவார். கெளரவத் தலைவராக ஜி.கே.மணி தொடர்கிறார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது பெரும்  இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஒரு கட்சிக்கு மூன்று தலைவர்களா என்ற கேள்வியஒயும் எழுப்பி உள்ளது.

பாமக தலைவராக கடந்த 2022ம் ஆண்டு வரை ஜி.கே.மணி செயல்பட்டு வந்தார். டாக்டர் ராமதாஸும், ஜி.கே.மணியும் இணைந்து பல கூட்டணிகளை உருவாக்கியுள்ளனர். சிறப்பாகவும் செயல்பட்டுள்ளனர். இந்த நிலையில் 2022ம் ஆண்டு பாமக தலைவராக, அதுவரை இளைஞர் அணித் தலைவராக செயல்பட்டு வந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். கெளரவத் தலைவராக ஜி.கே.மணி மாற்றப்பட்டார்.

 சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் நடந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தின்போது இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இவர் டாக்டர் ராமதாஸின் மகள் வழிப் பேரன் ஆவார். இதற்கு அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். இருவருக்கும் இடையே கடும் வாதமும் மூண்டது. அப்போது இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்க விரும்பாதவர்கள், யாராக இருந்தாலும் வெளியேறி விடுங்கள் என்று கோபமாக கூறினார்.

தகப்பனின்  கோபத்தால் ஒந்தளித்த அன்புமணி தனது அலுவலகம் பனையூரில் இருப்பதாகவும் தன்னை விரும்புவர்கள் அங்கு வந்து சந்திக்கலாம் எனவும் தெரிவித்து விட்டு  வெளியேறிபனார்.   அரசியல் காரணமாக தகப்பனும் மகனும்  பிரிந்திருப்பதை விரும்பாத கட்சியின் மூத்த தலைவர்கள்  இருஅவ்ரையும் சமாதானமாக்கினார்கள்.தகப்பனின் தைலாபுர வீட்டுக்கு அன்புமணி சென்றார். இறுக்கமான முகத்துடன் அன்புமணியை ஏறெடுத்தும் பார்க்காமல் ராமதாஸ். இருந்தார்.  பிரச்சனை முற்றுப் பெற்ரு விட்டதாக அனைவரும் நினைத்தனர். இப்போ அது பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மகனிடம் இருந்த தலைமைப் பதவியைப் பரித்ததற்கு  பல காரணங்கள்  உண்டு அதனைத் தெரிவிப்பேன் என ராமதாஸ் தெரிவித்தார்.

 அன்புமணியின் தலைமையில் கட்சி  பல தோல்விகளைச் சந்தித்தது. வாக்கௌ வங்கி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. பாரதீய ஜனதாவுடன் மிக நெருக்கமாக இருக்கும் அன்புமணி பாரதீய ஜனதாக் கூட்டணியில் தொடர விரும்புகிறார். அரசியலில் மிகவும் அனுபவம் உள்ள ராமதாஸின் பார்வை வேறு விதமாக  உள்ளது. அதிமுகவுடன்  கூட்டணி சேர ராமதாஸ் ஆசைப்படுகிறார். அதிமுகவின் அனுரசணையில் எம்பியாக இருக்கிறார் அன்புமணி. தனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என கனவுகண்டு காலத்தைக் க்டத்துகிறார்.  நாடா ளுமன்றத்துக்கு  அன்புமணி செல்வதில்லை என்ற விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழகத்துக்காக நாடாளுமன்றத்தில்  தமிழ் அம்பிக்க குரல் கொடுக்கும்  போது அங்கு  அன்புமணி  தென்படுவதில்லை. மக்களுக்காகச் சேவை செய்யச் சென்ற அவர் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

 வன்னியர் சமூகத்துக்காக‌ வன்னியர் சங்கத்தில் தீவிரமாக களமாடி வந்தவர் டாக்டர் ராமதாஸ். அவரது அயராத உழைப்பு, கடுமையான முயற்சிகள், கிராமம் கிராமமாக சென்று அவர் மேற்கொண்ட திண்ணைப் பிரச்சாரத்தால் அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அளப்பறியது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கே கடும் சவாலாக திகழ்ந்தவர் டாக்டர் ராமதாஸ்.

பின்னாளில், பாட்டாளி மக்கள் கட்சி உருவானது. வட மாவட்டங்களில் மிகப்பெரிய சக்தியாக பாமக ஒரு காலத்தில் திகழ்ந்தது. இப்போதும் வட மாவட்ட முக்கிய அரசியல் சக்தியாக பாமக இருந்தாலும் கூட முக்கியமான வெற்றிகளை பெற அது தவறி வருகிறது. இதற்கு காரணம் பாமகவின் செயல்பாடுகளில் காணப்படும் ஒரு விதமான தொய்வு. பாமகவின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் பல்வேறு தலைவர்களை தனது கட்சியின் தலைமைப் பொறுப்பில் ஈடுபடுத்தி செயல்பட வைத்தார்

 கருணாநிதியும், ஜெயலலிதாவும் ராமதாஸுடன் முதலில் பேசி   தொகுதிகளை அறிவித்த பின்னரே எஆனிய கட்சிகளுடன்  பேச்சு வார்த்தி நடத்துவார்கள்.  அந்த நிலை இப்போது  மாரிவிட்டது. தொடர் தோல்விகள் தொண்டர்களிடையே சலிப்பை ஏறப்ப‌டுத்தியுள்ளது. ஜி.கே.மணி காலம் வரை பாமகவின் செயல்பாடுகள் சற்று சிறப்பாக இருந்தது என்று சொல்ல வேண்டும். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு பாமகவின் புதிய தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். அன்புமணியின் வரவுக்கு பின்னர் பாமகவின் செயல்பாடுகள் அதன் போக்கில் பல மாற்றங்கள் காணமுடிந்தது. ஒரு ஜாதி கட்சியாக மட்டுமே அறியப்பட்ட பாமகவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தீவிரம் காட்டினார். அதற்கு ஏற்ப அவர் செயல்பாடுகளில் முன்னெடுத்தார். வெறும் ஜாதி கட்சியாக மட்டும் இருக்கக் கூடாது என்பது அவரது எண்ணமாக இருந்தது. அதற்கு காரணம் அவர் அரசியல் செய்தது டெல்லியில், டாக்டர் ராமதாஸின் அரசியல் தமிழ்நாட்டில். எனவே அவரவர் சூழலுக்கு ஏற்ற அரசியலை அவர்கள் செய்ய முனைந்தனர். இதன் காரணமாக இருவருக்குள்ளும் பல்வேறு முட்டல் மோதல்கள் வெடித்தன.

கூட்டணி கட்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சந்திக்க உள்ள நிலையில், பாமகவில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி கொண்டிருக்கிறது.. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி, தன்னை தானே தலைவராக ராமதாஸ் அறிவித்துக் கொண்டுள்ளார்.. இது பாமக தொண்டர்களையும் சேர்த்து குழப்பி வருகிறது.. டாக்டர் ராமதாஸின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? அமித்ஷா வரும்போது இப்படியொரு முடிவை வெளிப்படுத்தும் நோக்கம் என்ன? என்ற கேள்விடும் எழுந்துள்ளது.

கடந்த முறை அதிமுகவுடன் வலிமையாக கூட்டணி வைத்தும்கூட, பாமகவால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. அப்படியிருக்கும்போது, எம்பி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து எப்படி வெற்றி பெற முடியும்? என்பதே இந்த அதிருப்தியாளர்களின் சந்தேகமாக எழுந்தது. சாதிவாரி கணக்கெடுப்பை பாமக வலியுறுத்தியபோது, அதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால், பாஜக அமைதி காப்பது ஏன்? பாஜகவின் நிலைப்பாடு தெரியாதபட்சத்தில், எப்படி அந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது எனத் தொண்டர்கள்  கேள்வி எழுப்பி உள்ளனர்.

 அதாவது கட்சி சார்ந்த அனைத்து விஷயங்களையும் அன்புமணியும், செளமியா அன்புமணியும் சேர்ந்து எடுக்கிறார்களாம்.. இது தொடர்பாக தன்னை ஆலோசிப்பதில்லை என்றும், இதனால் தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் ராமதாஸ் உணர்ந்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை முக்கிய கட்சியான அதிமுக பலவீனப்பட்டு நிற்கிறது. இந்த நிலையில் பாமகவும் பலவீனப்பட்டால் அல்லது பிளவுபட்டால் அது அக்கட்சிக்கு நல்லதல்ல என்று தொண்டர்கள் கவலைப்படுகிறார்கள். அன்புமணியும், ராமதாஸும் வெளிப்படையாக பேசி தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் பிளவு வரைக்கும் போய் விட்டால் பல வருடங்களாக கடுமையாக உழைத்து செங்கல் செங்கல்லாக பார்த்துப் பார்த்து உருவாக்கிய பாமகவின் கோட்டை தகர்வதை யாராலும் தடுக்க

    

Wednesday, April 9, 2025

சாதித்தார் சாய் சுதர்சன் வென்றது குஜராத்


  குஜராத் மாநிலம் அஹம‌தாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் போட்டியில்   ராஜஸ்தானை எதிர்த்து விளையாடிய குஜராத 58 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனான சாய் சுதர்சன் ஐபிஎல் இல் விளையாடிய  முதல் 30 இன்னிங்ஸ்களில்  அதிக  ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார்.

நாணயச் சுழற்சியில்  வெற்றி பெற்ற  ராஜஸ்தான் கப்டன் சஞ்சு சாம்சன், பந்து வீசைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத  20 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்து 217  ஓட்டங்கள் எடுத்தது. 19.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த ராஜஸ்தான் 159  ஓட்டங்கள் எடுத்தது.

  குஜராத் அணிக்கு கப்டன் சுப்மன் கில் 2  ஓட்டங்களுடன் வெளியேறினார். சாய் சுதர்சன், பட்லர் ஜோடி நம்பிக்கை தந்தது. பொறுப்பாக ஆடிய சுதர்சன், 32 பந்துகளில்  அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 80  ஓட்டங்கள் சேர்த்த போது தீக் ஷனா பந்தில் 36 ஓட்டங்கள் எடுத்த  பட்லர் ஆட்டமிழந்தார். பட்லர் வெளியேற களத்துக்கு வந்த ஷாருகான் அதிரடி காட்டினார்.

 பரூக்கி வீசிய 12வது ஓவரில்   2 பவுண்டரி  அடித்த‌ ஷாருக்கான், ஷாருக்கான், தீக் ஷனா வீசிய 14வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து மிரட்டினார்.  மூன்றாவது விக்கெட்டுக்கு 62  ஓட்டங்கள்  சேர்த்த போது தீக் ஷனா 'சுழலில்' சிக்கிய  ஷாருக்கான்  36  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.53 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்த சாய்சுதர்சன் ஆட்டமிழந்தார். 

சுதர்சன் 82 ரன்னில் (3 சிக்சர், 8 பவுண்டரி) ஆட்டமிழந்தார். ரஷித் கான் (12) நிலைக்கவில்லை. சந்தீப் சர்மா வீசிய 20வது ஓவரில் அசத்திய ராகுல் திவாதியா, ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார்.

குஜராத் அணி 20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்து 217  ஓட்டங்கள் எடுத்தது. 218 எனும்  இமாலய இலக்கை விரட்டிய ராஜஸ்தானின் வீரர்கள் நிலைக்கவில்லை கப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஜோடி ஓரளவு கைகொடுத்தது.  மூன்றாவது விக்கெட்டுக்கு 48  ஓட்டங்கள் அடித்தபோது 26 ஓட்டங்கள் எடுத்த பராக் ஆட்டமிழந்தார்  பறக்கவிட்டார்.  சாம்சன் 41 ,ஹெட் மெயர்  52 ஓட்டங்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 159 ஓட்டங்கள் எடுத்தது. 

ஐபிஎல் இல் விளையாடிய  முதல் 30 இன்னிங்ஸ்களில்  அதிக  ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் சாய் சுதர்சன். இவர், 1307  ஓட்டங்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில்  1338 ஓட்டங்களுடன் ஷான் மார்ஷ்  உள்ளார். 1141 ஓட்டங்களுடன்  கிறிஸ் கெயில்: மூன்றாவது இடத்திலும், 1096 ஓட்டங்களுடன் . கேன் வில்லியம்சன் நான்காவது இடத்திலும், 1082 ஓட்டங்களுடன்  மேத்தியூ ஹைடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

ராஜஸ்தான் அணி கப்டன் சஞ்சு சாம்சன்,   தனது 300வது 'ரி-20' போட்டியில் பங்கேற்றார். 

பிரிமியர் லீக் அரங்கில் குஜராத் அணி, ராஜஸ்தானுக்கு எதிராக 6வது வெற்றியை பதிவு செய்தது.  இரு  அணிகளும் மோதிய 7 போட்டியில், குஜராத் 6 போட்டிகளிலும்,  ராஜஸ்தான் ஒரு போட்டியிலும்  வென்றன.

 

எடப்பாடியை நெருங்கும் அமித்ஷா உறுதியானது கூட்டணி


  தமிழகத்தில் நடைபெற்ற 11 தேர்தல்க்ளில்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி  படு தோல்வியைச் சந்தித்தது. தனது  தலமையிலான ண்அணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தோல்விகளுக்கு பாரதீய ஜனதா தான் காரணம் எனக் கண்டு பிடித்த எடப்பாடி  பாரதீய ஜனதாவுடனான கூட்டணியைத் துறந்தார்.

 மோடி, அமித் ஷா ஆகியோர் அழைப்பு விடுத்தும் எடப்பாடி இறங்கிவரவில்லை.கடந்தவாரம் ஒரு நாள் திடுதிப்பென டெல்லிக்குப் பறந்த எடப்பாடி அமித்ஷாவை இரகசியமாக‌ச் சந்தித்தார்.

அதிமுக  தலைவர்களுக்குக் கூடத் தெரியாமல் எடப்பாடி டெல்லி சென்றது  கழகத்துக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்பொழுதே கூட்டணி உறுதி எனத்  தகவல்கள் வெளியாகின. டெல்லியில் அதிமுக அலுவலகத்தைப் பார்க்கச் சென்றதாககூறிய எடப்பாடி  அமித்ஷாவைச் சந்தித்ததை  மழுப்பினார்.எடப்பாடியின் மகனுடைய தில்லு முல்ல்லு  ஆவணங்கள் அமித்ஷாவின் கையில் இருப்பதால் எடப்பாடி  இறங்கி வந்த்தாகவும் செய்திகள் பரவின.

தமிழகத்தில் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்ற பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது.  அண்ணாமலைஒயும்  இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.இதற்கிடையே தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்கிறார். நாளை இரவு எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக தலைவர்கள் அமித்ஷாவை சென்னையில்  சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2021 சட்டசபை தேர்தலின்போது அதிமுகவும், பாஜகவும் கூட்டணியாக போட்டியிட்டன. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதன்பிறகு கடந்த 2022ம் ஆண்டில் இந்த கூட்டணி முறிந்தது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் உள்ளிட்டவற்றில் பாஜகவும், அதிமுகவும் வெவ்வேறு கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்த தேர்தல்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் தான் அமோக வெற்றி பெற்றன.

 சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்கும் அமித்ஷாவை நள்ளிரவில் மூத்த அதிமுக தலைவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பின்போது அதிமுக - பாஜக கூட்டணி பற்றி இருதரப்பும் விவாதிக்க உள்ளதாகவும், அதன்பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்றிய பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமித்ஷா தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் போது  சீமானை சந்திக்கப்போவதாகவும் தகவல் பரவி உள்ளது.  அண்மையில் ஒரு கல்லூரி விழாவில்  சீமானும், அண்ணாமலையும் ஒரே மேடையில் தோன்றினார்கள். சீமான் மோடியைப் புகழ்ந்து பேசிஒனார்,அண்ணாமலை,  சீமானை வானளாவக் பாராட்டினார். அப்போதே விமர்சகர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாட்டு  விஜயத்தை முன்னிட்டு முக்கியமான உத்தரவு ஒன்றை நிர்வாகிகளுக்குஎடப்பாடி  பிறப்பித்து உள்ளார்.   5 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டுள்ள போதும்.. அதனால் யாரும் வீட்டிற்கு போக வேண்டாம்.. சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம்.. எல்லோரும் சென்னையிலேயே இருக்குமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். முக்கியமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சென்னையிலேயே இருக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாம். ஆனால் செங்கோட்டையனுக்கு இந்த அறிவிப்பு செல்லவில்லை. அவர் சென்னையில்தான் இருக்கிறார். ஆனாலும் அவருக்கு அறிவிப்பு செல்லவில்லை. அதேபோல் தங்கமணி சென்னையில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக - காங்கிரசின் இந்தியா கூட்டணி. அதிமுக - பாஜகவின் என்டிஏ கூட்டணி. கடைசியாக தமிழக வெற்றிக் கழகம். இதில் தமிழக வெற்றிக்கழகம்.. திமுகவை அரசியல் எதிரி என்று கூறிவிட்டது. பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிவிட்டது. இதனால் அவர்கள் இருவருடனும் திமுக சேரவே வாய்ப்பு இல்லை. எனவே தமிழக வெற்றிக் கழகம் 3வது அணியாக உருவெடுத்து இருப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அப்படி இருக்க மிச்சம் இருப்பது நாம் தமிழர்தான்.

 விஜய் - சீமான் கூட்டணி கணிசமான வாக்குகளை பெற்று... தேமுதிக 2011ல் திமுகவை எதிர்க்கட்சி சீட்டில் இருந்து அகற்றியது போல.. அதிமுகவை எதிர்க்கட்சி கூட ஆக விடாமல் செய்ய முடியும். சீமான் இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்தே களம் மாறுபடும். பெரியார் விவகாரம், பெண் பலாத்கார வழக்கு காரணமாக தற்போது முடங்கி உள்ள சீமான் மீண்டும் களமாடும் போது  அது பெரிய வாக்கு வங்கி மாற்றங்களை ஏற்படுத்தலாம். 

போராடித் தோற்றது கொல்கத்தா

 கொல்கத்தா டன் கார்டன் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் கொல்கத்தா    லக்னோ அணிகள் மோதின லக்னோவுக்கு எதிராக  கடைசி ஓவர் வரை 'டென்ஷன்' எகிறிய போட்டியில் லக்னோ பக்கம் அதிர்ஷ்டம் அடித்தது. 4  ஓட்ட வித்தியாசத்தில் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

நணயச் சுழற்சியில்கொல்கத்தா க‌ப்டன் ரகானே, 'பவுலிங்' தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ 3 விக்கெற்களை இழந்து 238 ஓட்டங்கள் எடுத்தது. 239 ர்னும் பிரமாண்டமான இலக்கைத் துரத்திய  கொல்கத்தா 7 விக்கெற்களை  இழந்து 234 ஓட்டங்கள் எடுத்தது.

ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான மிட்சல் மார்ஷ், மார்க்ரம் கலக்கினர்.  முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 99  ஓட்டங்கள்  சேர்த்த நிலையில், ஹர்ஷித் ராணா பந்தில் மார்க்ரம் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.   . இத்தொடரில் நான்காவது அரைசதம் கடந்த மார்ஷ், 81  ஓட்டங்களுடன் வெளியேறினார்.

  பூரன். 21 பந்துகளில்   அரைசதம் எட்டினார். ரசல் ஓவரில் (18வது), பூரன் 24  ஓட்டங்கள்  விளாசினார்.   கடைசி 10 ஓவர்களில்  143  ஓட்டங்கள் அடிக்கப்பட்டன.  லக்னோ அணி 20 ஓவர்கலில் 3 விக்கெற்களை இழந்து  238 ஓட்டங்கள் எடுத்தது.   பூரன் ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்கள் எடுத்தார்.

239  எனும் கடின இலக்கை விரட்டிய கொல்கத்தா மிரட்டியது.   குயின்டன்15,  நரைன், 30 ஓட்டங்களுடன் வெளியேறினர்.  26 பந்துகளில்  அரைசதம் எட்டிய‌னார் ரகானே. ஷர்துல் தாகூர் பந்தில் ரகானே 61 ஓட்டங்கள் அடித்த ரகானே ஆட்டமிழந்ததுடன் கொல்கத்தசவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.  ரமன்தீப் சிங் 1, ரகுவன்ஷி 5   வெங்கடேஷ், 45 , ரசல் 7 ஓட்டங்கலில் ஆட்டமிழந்தனர். 18 ஓவர்களீல்   7 விக்கெற்களை  இழந்து  கோல்கட்டா  201 ஓட்டங்கள் எடுத்தது.

கடைசி 12 பந்துகளில்  வெற்றிக்கு 38  ஓட்டங்கள்  தேவைப்பட்டது. அவேஷ் கான் ஓவரில்  19 ஓட்டங்கள் , ரிங்கு சிங் 14  ஓட்டங்கள்  (6,4,4) விளாச, 'டென்ஷன்' அதிகரித்தது. கடைசி ஓவரில் 24  ஓட்டங்கள்  தேவை என்ற நிலையில், பிஷ்னோய் பந்துவீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஹர்ஷித் ராணா, அடுத்த இரு பந்தில் ஒரு ஓட்டம் எடுக்க வாய்ப்பு மங்கியது. கடைசி 3 பந்துகளில் 19 ஓட்டங்கள்  தேவைப்பட்டன. 3 சிக்சர் அடித்தால் 'சூப்பர் ஓவருக்கு' வாய்ப்பு இருந்தது. ரிங்கு சிங் (4, 4, 6) விளாசியும் பலன் கிடைக்கவில்லை. கோல்கட்டா அணி 20 ஓவரில் 234/7 ரன் மட்டும் எடுத்து, தோற்றது. ரிங்கு சிங் (38), ஹர்ஷித் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.ஆட்டநாயகன் விருதை பூரன் வென்றார்.

லக்னோ அணியின் ஷர்துல் தாகூர் தனது 100வது பிரிமியர் போட்டியில் பங்கேற்றார். இவருக்கு '100' என்ற நம்பர் பொறிக்கப்பட்ட சிறப்பு 'ஜெர்சி'யை லக்னோ ஆலோசகர் ஜாகிர் கான் வழங்கினார்.

 தடுமாறிய ஷர்துல், பிரிமியர் அரங்கில் தொடர்ந்து 5 'வைடு' (12.1வது ஓவர்) வீசிய முதல் வீரரானார்.

பிரிமியர் அரங்கில் லக்னோ அணி அதிபட்சமாக 257/7 ரன் (எதிர், பஞ்சாப், 2023, மொகாலி) எடுத்து உள்ளது.   இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை (238/3) பதிவு செய்தது.

பிரிமியர் அரங்கில் அதிவேகமாக 2,000  ஓட்டங்கள்  எட்டிய இரண்டாவது வீரரானார் பூரன் (1198 பந்து). முதலிடத்தில் ரசல் (1120 பந்து) உள்ளார்.

  61 ஓட்டங்கள் எடுத்த கொல்கத்தா கப்டன் ரகானே, 'ரி-20' அரங்கில் 50வது அரைசதம் அடித்தார். 'ரி-20' அரங்கில் 7,000  ஓட்டங்கள்  (276 போட்டி) எட்டி அசத்தினார்.

பிரிமியர் அரங்கில்,  ஓட்ட  அடிப்படையில் 3வது குறைவான வித்தியாசத்தில் (4 ஓட்டங்கல் ) லக்னோ வென்றது. இதற்கு முன் 1  ஓட்டம்  (எதிர், கோல்கட்டா, 2023), 2  ஓட்டங்கள்  (எதிர், கோல்கட்டா, 2022) வென்றிருந்தது.

* பிரிமியர் அரங்கில் 'சேஸ்' செய்த போட்டிகளில் 4 அல்லது அதற்கு குறைவான ஓட்ட‌ வித்தியாசத்தில் 7 முறை  கொல்கத்தா  தோற்றது. இதில் 3 முறை லக்னோவிடம் தோல்வியை சந்தித்தது.

Tuesday, March 25, 2025

ருதுராஜ், ரச்சின் அரைசதம் சென்னை வெற்றி

 சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் மும்பைக்யை எதிர்த்து விளையாடிய சென்னை     4 விக்கெற்களால் சென்னை வெற்றி பெற்றது.நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை கப்டன் ருதுராஜ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்தது

  மும்பை அணிக்கு ரோகித் சர்மா  18 ஆவது முறையாக டக் அவுட்டாகி ஏமாற்றினார்.   ரியான் ரிக்கிள்டன் 13, வில் ஜாக்ஸ் 11  ஓட்டங்களில் வெளியேறினர். க‌ப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஜோடி நிதானமாக விளையாடியது. நான்காவது விக்கெட்டுக்கு 51  ஓட்டங்கள்  சேர்த்த போது நுார் அகமது 'சுழலில்' சிக்கிய சூர்யகுமார் 29 ஓட்டங்களுடன் வெளியேறினார்.  தொடர்ந்து அசத்திய நுார் அகமது பந்தில் ராபின் மின்ஸ் 3,, திலக் வர்மா 31,, நமன் திர்  11  ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்  மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 155  ஓட்டங்கள் எடுத்தது.  .

156 எனும் எட்டக்கூடிய  இலக்கை சென்னை விரட்டியது.  ராகுல் திரிபாதி 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.   ரச்சின் ரவிந்திரா, கப்டன் ருதுராஜ் ஜோடி கைகொடுத்தது. தீபக் சகார், சான்ட்னர், வில் ஜாக்ஸ் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட ருதுராஜ், 22 பந்துகளில்  அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 67  ஓட்டங்கள் சேர்த்த போது  56 ஓட்டங்கள் எடுத்த‌ ருதுருாஜ்  ஆட்டமிழந்தார்.   'சுழலில்' ஷிவம் துபே (9), தீபக் ஹூடா (3) ஆகிய இருவரும் விக்னேஷின் சுழலில் சிக்கினர்.


  மறுமுனையில் அசத்திய ரச்சின், விக்னேஷ் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்த போது ரவிந்திர ஜடேஜா (17) 'ரன்-அவுட்' ஆனார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 4  ஓட்டங் தேவைப்பட்டது. சான்ட்னர் பந்துவீசினார். முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரச்சின், வெற்றி துவக்கத்தை உறுதி செய்தார்.சென்னை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரச்சின் (65*), டோனி (0*) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சென்னையின் நுார் அகமது வென்றார்.

ரோகித் '18'

பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் அதிக முறை 'டக்-அவுட்' ஆன வீரர்கள் வரிசையில் முதலிடத்தை மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் உடன் பகிர்ந்து கொண்டார் ரோகித். மூவரும் தலா 18 முறை 'டக்' அவுட்டாகினர்.

நுார் அசத்தல்

பிரிமியர் லீக் அரங்கில் மும்பைக்கு எதிராக சிறந்த பந்துவீச்சை (4 ஓவர், 18  ஓட்டங், 4 விக்கெட்) பதிவு செய்த சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளரானார் நுார் அகமது. இதற்கு முன், ரவிந்திர ஜடேஜா (4 ஓவர், 20 ஓட்டங்கள் , 3 விக்கெட், 2023, இடம்: மும்பை) இச்சாதனை படைத்திருந்தார்.

  பிரிமியர் லீக் அரங்கில் நுார் அகமதுவின் சிறந்த பந்துவீச்சானது. இதற்கு முன் 2023ல் குஜராத் அணிக்காக விளையாடிய இவர், மும்பைக்கு எதிராக 37/3 (4 ஓவர்) தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருந்தார்.

22 பந்தில்

அபாரமாக ஆடிய சென்னை கப்டன் ருதுராஜ், பிரிமியர் லீக் அரங்கில் தனது அதிவேக (22 பந்து) அரைசதத்தை பதிவு செய்தார். இதற்கு முன், 2023ல் குஜராத் அணிக்கு எதிராக ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் 23 பந்தில் அரைசதம் விளாசினார்.

தொடரும் சோகம்

பிரிமியர் லீக் தொடரில் மும்பை அணி, தனது முதல் போட்டியில் தொடர்ந்து 13வது ஆண்டாக (2013-2025) தோல்வியடைந்தது. கடைசியாக 2012ல் மும்பை அணி, தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

பிரிமியர் போட்டிக்காக சமீபத்தில் சென்னை வந்த 'தல' தோனியின் 'டி-சர்ட்டில்' 'மோர்ஸ் கோடு' ரகசிய மொழியில் 'கடைசியாக ஒரு முறை' என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டுடன் ஓய்வு பெறப் போகிறாரா என்ற சந்தேகம் எழுந்தது.

டோனி 43, கூறுகையில்,''நான் விரும்பும் வரை சென்னை அணிக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் விளையாடலாம். இது எனது அணி. நான் 'வீல் சேரில்' அமர்ந்திருந்தாலும், என்னை ரசிகர்கள் இழுத்துச் செல்வர்,'' என்றார்.

 

Monday, March 24, 2025

ஐபிஎல் இல் காணாமல் போன அணிகள்

  ஐபிஎல் திருவிழா ஆரம்பமாகிவிட்டது.  மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் கடந்த 18 சீசன்களில்  விளையடிய சில அணிகள் பங்கேற்று பின்னர் நிரந்தரமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகின.  அந்த அணிகளின் பட்டியல்.

டெக்கான் சார்ஜர்ஸ்:

ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடந்து வகிறது. இந்த அணி கடந்த 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. டெக்கான் கிரானிக்கல் நிறுவனம் இந்த அணியை நிர்வகித்து வந்தது. ஆந்திராவை மையப்படுத்தி இந்த அணி ஆடியது. 2012ம் ஆண்டு வரை மட்டுமே இந்த அணி ஆடியது. கில்கிறிஸ்ட் தலைமையில் 2009ம் ஆண்டு ஐபிஎல் பட்டத்தையும் கைப்பற்றியது.

கொச்சி டஸ்கர்ஸ் கேரளா:

கேரளாவை மையப்படுத்தி இந்த அணி ஆடியது. 2011ம் ஆண்டு மட்டுமே இந்த அணி ஆடியது. மஹேல  ஜெயவர்தன தலைமையில் இந்த அணி ஆடியது. ஆனால், அந்த ஒரே சீசனில் இந்த அணி தொடரில் இருந்து விலகியது. கொச்சி பிரைவேட் கிரிக்கெட் லிமிடெட் இந்த அணியை நிர்வகித்தது.

புனே வாரியர்ஸ் இந்தியா:


சஹாரா இந்தியா பரிவார் நிறுவனம் இந்த அணியை நிர்வகித்தது. 2011ம் ஆண்டு கொச்சி அணியுடன் இந்த அணியும் ஐபிஎல் தொடரில் களமிறங்கியது. புனேவை மையமாக கொண்டு ஆடிய இந்த அணிக்கு கங்குலி கப்டனாக ஆடினார். 2011ம் ஆண்டு 9வது இடத்தையும், 2012ம் ஆண்டு கடைசி இடத்தையும், 2013ம் ஆண்டு கடைசி இடத்தையும் பிடித்தது. 2013ம் ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து இந்த அணி விலகியது.

ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ்:


சூதாட்ட குற்றச்சாட்டு காரணமாக சென்னை , ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிலையில், 2016ம் ஆண்டு உருவானது ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட். டோனி தலைமையில் களமிறங்கிய முதல் சீசனில் மோசமான தோல்வி அடைந்து வெளியேறியது. பின்னர், அடுத்த ஆண்டு ஸ்மித் கப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த அணியின் உரிமையாளர் கோயங்கா தற்போது லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியை நிர்வகித்து வருகிறார். இந்த அணி இரண்டு சீசன்கள் மட்டுமே ஆடியது.

குஜராத் லயன்ஸ்:


2016ம் ஆண்டு சென்னை, ராஜஸ்தான் அணிக்கு பதிலாக களமிறங்கிய அணிகளில் புனேவுடன் இணைந்து களமிறங்கிய அணி குஜராத் அணி ஆகும். இந்த அணியும் 2 சீசன்கள் மட்டுமே ஆடியது. குஜராத் அணிக்கு கப்டனாக சுரேஷ் ரெய்னா ஆடினார். இன்டெக்ஸ் டெக்னாலாஜிஸ் இந்த அணியை நிர்வகித்தது.

இந்த அணிகளில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி மட்டுமே சம்பியன் பட்டம் பெற்றது. மற்ற அணிகள் சம்பியன் பட்டம் பெற முடியவில்லை.

 

   

 

ஐபிஎல் அணிகளின் பயிற்சியாளர்கள்

கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் தொடரின்  அணிகளுக்கும் அதன் வீரர்களுக்கும் பலத்த ஆதரவை ரசிகர்கள் வழங்கி வருகிறார்கள்.  சில  அணிகளின் பயிற்சியாளர்களுக்கும் ரசிகர் கூட்டம்  உள்ளது. ஐபிஎல் அணிகலின் பயிற்சியாள‌ர்களைப்  பற்றிய தொகுப்பு 

சென்னை சூப்பர் கிங்ஸ் - ஸ்டீபன் ப்ளெமிங்:


ஐபிஎல் தொடரில் 5 முறை சம்பியன் பட்டம் பெற்ற அணியாக திகழும் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங். முன்னாள் சென்னை அணியின் வீரரும், நியூசிலாந்து அணியின் முன்னாள் கப்டனாகவும் இருந்தவர். நியூசிலாந்து அணிக்காக சம்பியன்ஸ் டிராபி பட்டம் பெற்று தந்தவர். இவரது பயிற்சியின் கீழே சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 51 வயதான ப்ளெமிங் டெஸ்டில் 7172 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 8 ஆயிரத்து 37ஓட்டங்களும் எடுத்துள்ளார்.


டெல்லி கேபிடல்ஸ் - ஹேமங் பதானி:

அக்ஷர் படேல் தலைமையில் களமிறங்கும் டெல்லி அணிக்கு பயிற்சியாளராக ஹேமங் பதானி களமிறங்கியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹேமங் பதானி இந்திய அணிக்காக 4 டெஸ்ட்டில் 94 ஓட்டங்களும், 40 ஒருநாள் போட்டிகளில் 867 ஓட்டங்களும்எடுத்துள்ளார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஜாப்னா கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் - ஆஷிஷ் நெஹ்ரா:


முதல் சீசனிலே ஐபிஎல் பட்டத்தை பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா உள்ளார். இந்திய அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்த இவர்  17 டெஸ்ட் போட்டியில் 44 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 157 விக்கெட்டுகளையும், ரி20யில் 34 விக்கெட்டுகளையும், 88 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 106 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக நெஹ்ரா திகழ்ந்தார். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சந்திரகாந்த் பண்டிட்:


ரஹானே தலைமையில் களமிறங்கும் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக திகழ்பவர் சந்திரகாந்த் பண்டிட். கடந்த சீசனிலும் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக திகழ்ந்தவர் இவரே ஆவார். இந்திய அணியின் முன்னாள் வீரரான இவர் 36 ஒருநாள் போட்டிகளில் ஆடி 290 ஓட்டங்களும், 5 டெஸ்டில் ஆடி 171 ஓட்டங்களும் எடுத்துள்ளார். மும்பை அணிக்காக அடுத்தடுத்து இரண்டு முறை ரஞ்சி டிராபியை பயிற்சியாளராக வென்று தந்துள்ளார்.


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஜஸ்டின் லாங்கர்:

முதல்முறை கோப்பையை வெல்ல போராடும் லக்னோ அணிக்காக பயிற்சியாளராக இருப்பவர் ஜஸ்டின் லாங்கர். அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இவர் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆவார். 54 வயதான ஜஸ்டின் லாங்கர் டெஸ்ட் போட்டிகளில் 7 ஆயிரத்து 696 ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர்

மும்பை இந்தியன்ஸ் - ஜயவர்தன:


5 முறை சம்பியன் பட்டம் பெற்ற மும்பை அணிக்கு அந்த அணியின் முன்னாள் வீரரும், இலங்கை அணியின் முன்னாள் கேப்டனுமாகிய மஹேல‌ ஜயவர்தன பயிற்சியாளராக உள்ளார். ஜயவர்தன டெஸ்டில் 11 ஆயிரத்து 814 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 12 ஆயிரத்து 650 ஓட்டங்களும்  எடுத்துள்ளார். மும்பை அணிக்காக 6வது முறையாக கோப்பையை வென்று தர வேண்டும் என்று இவர் களமிறங்கியுள்ளார். 

பஞ்சாப் கிங்ஸ் - ரிக்கி பொண்டிங்:


ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இந்த முறை பயிற்சியாளராக ரிக்கி பொண்டிங் களமிறங்கியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் கப்டனாக களமிறங்கியுள்ளார். 2000ம் காலகட்டத்தில் கிரிக்கெட்டையே கட்டி ஆண்டவராக உலா வந்தவர் ரிக்கி பொண்டிங். இவர் அவுஸ்திரேலிய அணிக்காக 2 முறை 50 ஓவர் உலகக்கோப்பை வாங்கித் தந்துள்ளார். டெஸ்ட்டில் 13 ஆயிரத்து 378 ஓட்டங்களும், ஒருநாள் போட்டியில் 13 ஆயிரத்து 704 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் - ராகுல் ட்ராவிட்:


ஐபிஎல் தொடரின் முதல் மகுடத்தை கைப்பற்றிய ராஜஸ்தான் அணிக்கு ராகுல் ட்ராவிட் பயிற்சியாளராக உள்ளார். இந்திய அணியின் தூணாக திகழ்ந்த ராகுல் ட்ராவிட் இந்திய அணிக்காக ரி20 உலகக்கோப்பையை தனது பயிற்சியாராக திகழ்ந்தவர். ராகுல் டிராவிட் டெஸ்ட்டில் 13 ஆயிரத்து 288 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரத்து 889 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஐதரபாத் - டேனியல் வெட்டோரி:


பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதரபாத் அணிக்கு டேனியல் வெட்டோரி பயிற்சியாளராக உள்ளார். இவரது பயிற்சியின் கீழ் கடந்த சீசனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஐதராபாத். நியூசிலாந்து அணியின் முன்னாள் கப்டனாகிய இவர் டெஸ்ட்டில் 4 ஆயிரத்து 531  ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 2 ஆயிரத்து 253 ஓட்டங்களும்எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 362 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 305 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஆன்டி ப்ளவர்:


18வது சீசனில் தங்களது முதல் கோப்பை கனவுடன் களமிறங்கியுள்ள ஆர்சிபி அணிக்கு பயிற்சியாளராக ஆன்டி ப்ளவர் உள்ளார். ரஜத் படிதார் தலைமையில் களமிறங்கும் பெங்களூர் அணி பயிற்சியாளர் ஆன்டி ப்ளவர் ஸிம்பாப்வே அணியின் முன்னாள் கப்டன். இவர் டெஸ்டில் 4 ஆயிரத்து 794 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரத்து 786  ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

ஐபிஎல்25,ஏகன் மீடியா,ஏகன்,ரி20,விளையாட்டு,கிறிக்கெற்

 

Sunday, March 23, 2025

உலக சாதனையுடன் வென்றது ஹைதராபாத்

      ஹைதராபாத்தில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான  போட்டியில் வரலாற்றுச் சாதனையுடன் சன் ரைசஸ் ஹைதராபாத்.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ஹைதராபாத்  முதலில் துடுபெடுத்தாடி  6 விக்கெற்களை இழந்து 286 ஓட்டங்கள் எடுத்தது.

287 எனும் இமாலய  இகக்குடன் களம்  இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்கலில்விக்கெற்களை இழந்து 242 ஓட்டங்கள் எடுத்தது.ஹைதராபாத் 44  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

  ஹைதராபாத் அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே இஷான் கிசான் சதத்தை அடித்தார்.  47 பந்துகளில் ஆட்டமிழக்காது  106*  ஓட்டங்கள்   அடித்தார்டிராவிஸ் ஹெட்  31 பந்துகளில் 67 ஓட்டங்களும், ஹென்றிச் க்ளாஸென்  14 பந்துகளில் 34 ஓட்டங்களும்,   நிதிஷ் ரெட்டி   15 பந்துகளில் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.

4 ஓவர்களில் 76 ஓட்டங்களிக் கொடுத்து  ஆச்சார் வெறுப்பேற்றினார்.

   தேஷ்பாண்டே, 3, தீக்சனா 2 விக்கெற்களை எடுத்தனர்ராஜஸ்தானுக்கு  வீரர்களான ஜெய்ஸ்வால் 1, கப்டன் ரியான் பராக் 4   நிதீஷ் ராணா 11  ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.   சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த துருவ் ஜுரேல் தம்முடைய பங்கிற்கு அதிரடி காட்டினார்மூன்றாவது விக்கெட்டுக்கு 11   ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

  சாம்சன்  66 (37)    ஜுரேல் 70 ஓட்டங்கள் எடுத்தனர்.    சிம்ரோன் ஹெட்மயர் முடிந்தளவுக்கு அதிரடியாக போராடி 42 , சுபம் துபே 34* (11)  ஓட்டங்கள்  எடுத்தனர்.   20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்த ராஜஸ்தான் 242 ஓட்டங்கள் எடுத்தது.

இந்தப் போட்டியையும் சேர்த்து  ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்  4 முறை 250க்கும் மேற்பட்ட  குவித்து சாதனை படைத்தது. (287/3, 286/6, 277/3, 266/7) குவித்துள்ளது. இதன் வாயிலாக ரி20 கிரிக்கெட்டில் அதிக முறை 250  ஓட்டங்கள் அடித்த அணி என்ற உலக சாதனையை ஹைதராபாத் படைத்துள்ளது. இதற்கு முன் இந்திய அணி,இங்கிலாந்தின் கவுண்டி அணியான சர்ரே ஆகியன தலா 3 முறை 250+ ஓட்டங் கள் அடித்ததே முந்தைய சாதனை. இஷான் கிஷான்  ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

  

முதல் போட்டியில் வென்றது பெங்களூர்


 கொல்கதாவில் நடைபெற்ற முதலாவது ஐபிஎல் போட்டியில் 7 விக்கெற்றால் பெங்களூர் வென்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற பெங்களூர் பந்து வீசத்தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 174 ஓட்டங்கள் எடுத்தது.16.2 ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்த பெங்களூர் 177 ஓட்டங்கள் எடுத்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட்ட வீரரான டீ கொக் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சுனில் நரேனுடன், கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 103 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தது.

10 ஓவர்களில் 1 விக்கெற்றைஇழந்த கொல்கத்தாவின் எனைய வீரர்கள் தடுமாறினார்கள். நரேன் 44 , ரகானே 56 , வெங்கடேஷ் ஐயரை 6 , ரிங்கு சிங் 4 , அண்ட்ரே ரசல் 4 , ரகுவன்சி 30 ஓட்டங்கள் எடுத்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்த கொல்கத்தா 174 ஓட்டங்கள் எடுத்தது.

ஜோஸ் ஹேசல்வுட் 2, கருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்தப் போட்டியில் ரசிக் சலாம் வீசிய 8வது ஓவரின் 4வது பந்தை சுனில் நரேன் எதிர்கொண்டார். அந்தப் பந்து ஒயிடாக வீசப்பட்டதால் அதை அவர் அடிக்கவில்லை. அதைப் பார்த்ததும் களத்தில் இருந்த நடுவர் ஒயிட் கொடுத்தார். அடுத்த நொடியே பந்தை எதிர்கொண்ட வேகத்தில் சுனில் நரேன் பேட் அவரை அறியாமலேயே பின்னே சென்று ஸ்டம்ப்பில் பட்டு பெய்ல்ஸ் கீழே விழுந்தது. அதன் காரணமாக ஹிட் விக்கெட் முறையில் அவர் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த பந்து ஒயிட் என்று சில நொடிகள் முன்பாக நடுவர் அறிவித்து விட்டார். அதனால் அந்த பந்து காலாவதியானதன் காரணமாக சுனில் நரேன் ஹிட் விக்கெட் முறையில் தப்பி தொடர்ந்து விளையாடினார்.

பெங்களூர் அணியின் பில் சாட் 56, படிக்கல்10,ராஜ் படிதார் 34, ஓட்டங்கள் எடுத்தனர். 16.2 ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்த பெங்களூர் 177 ஓட்டங்கள் எடுத்தது. விராட் கோலி ஆட்டமிழக்காது 56 ஓட்டங்கள் எடுத்தார். கருணால் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார்