தமிழக
சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வியூகம் அமைக்கின்றன.திராவிட முன்னேற்றக் கழ்கத்தின் தலைமையிலான கூட்டணி
தற்போது மிக வலுவாக இருக்கிறது.
உள்ளே சில பூசல்கள்
இருந்தாலும் எந்தக் கட்சியையும் ஸ்டாலின் கைவிடமாட்டார்.
அண்ணா
திடாவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக் கட்சி ஆக்யவற்றுக்கிடையேயான கூட்டணி ஒன்றாக இருப்பதாக
வெளியே தெரிந்தாலும் உள்ளே நடக்கும் சதித் திட்டப் பிணக்குகளைத் தீர்த்து வைப்ப்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
தமிழக
அரசியல் களத்தில் விஜயின் பங்கு அதிகரித்துச் செல்கிறது. விஜயுடன் கூட்டணி சேர தமிழகக் கட்சிகள்
பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. விஜயின் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க் முடியாது. ஆனால், வாக்குகளைச் சிதறடிகும் சக்தி விஜய்க்கு இருக்கிறது.
ஒரு தொகுதியின் வெற்றி
தோல்வியை விஜய்தான் முடிவு செய்யப் போகிறார்.
ராகுல்
காந்திக்கு மிகவும் விசுவாசமன அரசியல் தலைவர் ஒருவர் மிக இரகசியமாக விஜயின்
அலுவலகத்துக்குச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ்
வெளியேறப் போவதாக சிலர் அடித்துச் சொன்னார்கள். இந்தச் சம்பவம் ராகுலின் காதூக்குச் சென்றதால் நிலமை அப்படியே தலைகீழானது.
தமிழகத்தில்
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், அண்ணா
டிராவிட முன்னேற்றக் கழக செயற்குழு, பொதுக்கு
கூட்டம் நடைபெற்றது. சென்னை
வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில்
இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்
அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பங்கேற்கவில்லை. இதன்காரணமாக தற்காலிக அவைத் தலைவராக கேபி முனுசாமி நியமனம்
செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
அதிமுக பொதுக்குழுவின் முதல் 8 தீர்மானங்களை வாசித்தார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் 8 தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டணியில்
இடம்பெறும் கட்சி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் எடப்பாடி
பழனிசாமிக்கு அளிக்கப்பட்டுள்ளது உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மிக
முக்கியமாக பன்னிர்ச்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியவர்களை மீண்டும்
கட்சியில் சேர்ப்பதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிளவு
பட்டுள்ளதால் சகல தேர்தலிலும் எடப்பாடியின்
தலைமையிலான கழகம் தோல்வியடிந்தது. இப்போது செங்கோட்டையனும் வெளியேறியதால் கொங்கு
மண்டலத்தில் சரிவு ஏற்படுவது நிச்சயம். இதனை எடப்பாடி எப்படி
சரிக்கட்டப்போகிறார் எனத் தெரியவில்லை.
தமிழக
பாபாரதீய ஜனதாத் தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிற டிசம்பர் 14ம் திகதி
டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சந்திப்பின் போது
சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசவிருக்கிறார். இதற்கிடையில் திடீர்
என எடப்பாடி
பழனிச்சாமியை அவர்
சந்தித்துப் ப்ச்ச்ரி உள்ளார். எடப்பாடியின் செய்திய நயினார் நாகேந்திரன் டெல்லிக்குக் கொண்டு செலார் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த
சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசுகையில், இந்த சந்திப்பில் கூட்டணி
மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசவில்லை என நயினார் நாகேந்திரன்
விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக
வெற்றிக் கழகத்தின் மாநிலநிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூரில் நடைபெற்றது.
தலைவர் விஜயை முதலமைச்சர் வேட்பாளராக
ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என தீர்மானம்
நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , இணை பொதுச் செயலாளர்
சி.டி.ஆர். நிர்மல்குமார்,
ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டை, நாஞ்சில் சம்பத் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மேலும்
நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதேவேளை
அன்புமணியின் நெருங்கிய சகாவான வழக்கறிஞ்ர் பாலு பனையூருக்குச் சென்றது
அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி
மக்கள் கட்சி நடத்தும் சாதிவாரி
கணக்கெடுப்பு போராட்டத்திற்கு நேரில்
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சார்பாக
வழக்கறிஞர் பாலு, ஆனந்திடம்
அழைப்பு கடிதத்தை வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கண்டித்து டிசம்பர் 17ஆம்திகதி பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம்
நடத்த உள்ளது. இந்த
போராட்டத்தில் பங்கேற்க தவெகவிற்கு அன்புமணி
கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தை அன்புமணி
சார்பில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்திடம்
வழக்கறிஞர் பாலுவும் கட்சியின் முக்கியஸ்தர்களும் ர்
நேரில் சென்று வழங்கியுள்ளனர்.
இந்த
கடிதத்தை தவெக பொதுச்செயலாளர் ஆனந்தும்
பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து வழக்கறிஞர் பாலு பேசுகையில்,
தவெக ஆரம்பித்த முதல் மாநாட்டில் இருந்தே சாதிவாரி கணக்கெடுப்பு நடந்த வேண்டும் என்று செல்லக்கூடிய அமைப்பாக இது இருக்கின்றது. திராவிட
இயக்கத்திற்கு எல்லாம் இன்றைக்கு பாடம் சொல்லக்கூடிய வகையில் இவருடைய கருத்து அமைந்துள்ளது.
இந்த
போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் நாங்கள் அழைப்பு
விடுத்துள்ளோம். திமுகவிற்கு மட்டும் நாங்கள் அழைப்பு விடுக்க வில்லை. காரணம் அவர்கள் எடுக்கக்கூடாது, எடுக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனவே தூங்குகிறவர்களை எழுப்பலாம்.
தூங்குவது போல நடிக்கின்றவர்களை எழுப்ப
முடியாது. திமுகவை தவிர திமுக கூட்டணியில்
இருக்கும் கட்சிகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்து இருக்கிறோம். அரசியல் கூட்டணி குறித்து எல்லாம் தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த
அழைப்பு போராட்டத்துக்கானதாகமட்டும் இல்லை. கூட்டணிகான சமிக்ஞையாக இருப்பதாக
விமர்சகர்கள் சொலிகிறார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள
நிலையில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு முக்கிய
அரசியல் போட்டிக்குத் தயாராகி வருகிறது.தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக வரவிருக்கும் ராஜ்யசபா தேர்தலை அது ஒரு ஆயுதமாக
கையில் எடுக்கக் காத்திருப்பதாக தெரிகிறது. அதாவது கூட்டணியை விரிவுபடுத்த ராஜ்யசபா தேர்தலை கையில் எடுக்க திமுக திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி உலா
வருகிறது.
தமிழகத்தில்
இருந்து ஆறு ராஜ்ய சபா
இடங்களுக்கான உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 1, 2026 அன்று நிறைவடைகிறது. ஓய்வுபெறும்
உறுப்பினர்களில் தி.மு.க.வைச் சேர்ந்த என்.ஆர். இளங்கோ, பி.
செல்வரசு, திருச்சி சிவா, கனிமொழி சோமு ஆகியோரும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.
தம்பிதுரை , ஜி.கே. வாசன்
ஆகியோரும் இருக்கின்றனர்.
தற்போதைய
சட்டமன்ற பலத்தின் அடிப்படையில், தி.மு.க.வால் நான்கு இடங்களையும்,
அ.தி.மு.க.வால் மீதமுள்ள இரண்டு
இடங்களையும் எளிதாக வெல்ல முடியும். ஒரு ராஜ்ய சபா
இடத்தைப் பெற ஒரு வேட்பாளருக்கு
34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
தி.மு.க. வட்டாரத்
தகவல்களின்படி, என்.ஆர். இளங்கோ,
திருச்சி சிவா ஆகியோர் மீண்டும்
வேட்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க.
வசம் உள்ள மீதமுள்ள இரண்டு
இடங்கள், கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
அவர்களின் விருப்பத்தின் பேரில் நிரப்பப்படும். கூட்டணிக் கட்சிகள் யாருக்கேனும் வாய்ப்பு கிடைக்குமா என்றும் தெரியவில்லை.
நடிகர்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால், பல முனைப் போட்டிக்கு
வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் கூடுதல் கூட்டாளிகளைக் கொண்டு வருவதற்கான பேரம் பேசும் கருவிகளாக இந்த இடங்கள் பயன்படுத்தப்படும்
என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
மகனை
எம்பியாக்க வேண்டும் என ஆசைப்படும் பிரேமலதாவுக்கு
கோடும் கொக்கியாகவும் இருக்கலாம்
எஹ சந்தே பொதுத் தேர்தலின்போது
ராஜ்ய சபா இடம் குறித்த
வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், அ.தி.மு.க.விடமிருந்து விலகிச்
சென்றுள்ளார் பிரேமலதா.
இன்னும்
நான்கு மாதங்களில் இந்தக் கூட்டணிக் கணக்குகளில் மாற்றம் ஏற்படலாம்.
ரமணி
14/12/25