Tuesday, June 17, 2025

தமிழக அரசியலில் குழம்பிய கூட்டணிக் கணக்குகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல்  சூடு பிடித்துள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க ஸ்டாலினும், இழந்த ஆட்சியைப் பிடிக்க எடப்பாடியும் வியூகம் வகுக்கின்றனர்.

மெகா கூட்டணி என்ற கோஷம் மட்டுமே எடப்பாடியின் தரப்பில் இருந்து வெளிவருகிறது. ஆனால், எடப்பாடியுடன் கூட்டணி சேர இப்போதைக்கு யாரும் தயாராக இல்லை.

எடப்பாடியின் தலைமையில் தமிழகத்தில் கூட்டணி என அமித்ஷா சொல்லியுள்ளார்.  ஆனால், அண்ணாமலையின் வாக்கு மூலம் வேறு வகையாக இருக்கிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை.பாஜக ஆட்சிதான் என அண்ணாமலை திருவாய் மலர்ந்தருளுகிறார். தமிழக முதல்வர் கனவில் எடப்பாடி மிதக்கிறார். எடப்பாடியை எப்படி அடக்குவது என அமித்ஷா கணக்குப் போடுகிறார்.

பாரதீய ஜனதாக் கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியில் குடும்பச் சண்டை நடைபெறுகிறது. அப்பாவும், மகனும் எட்ட்டிக்குப் போட்டியாக  அறிக்கை விடுகிறார்கள். இருவரும்  ஒற்றூமையாக  இருந்த போதே பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது.  குடும்பப் பிரச்சனையால் கட்சி  பிளவுபடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி எனபதுபோல்  பிரேமலதா ஒரு கணக்குச் சொல்கிறார். 36 தொகுதிகள்  வேண்டுமாம் ஒரு தொகுதி குறைந்தாலும்  ஒப்புக் கொள்ள மாட்டாராம். ஆனாலும்  கடந்தகாலத்தைப் போல இரண்டு பெரிய கட்சிகளுடனும்  பேரம் பேசுகிறார் பிரேமலதா.

எடப்பாடி   ஏமாற்றி விட்டார் என குற்றம் சுமத்திய  பிரேமலதா  இப்போதைக்கு இறங்கி வருவார் போலத் தெரியாது. எடபாடிக்கும் சுதீஷுக்கும் இடையிலான  பேச்சு வார்த்தையில்  சுமுகமான முடிவு எட்டப்பட்டது. 2026 ஆம் ஆண்டு  ராஜ்யசபா  எம்பி பதவி தரப்படும் என எடப்பாடி பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆகையால் அவசரப்பட வேண்டாம் என சிலர் பிரேமலதாவுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.

எடப்பாடியுடன் இருந்த வாசன் பாரதீய ஜனதாவின் பக்கம் சென்றுவிட்டார்.ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோரும் பாரதீய ஜனதாவின்  பக்கம் பலமாக  இருக்கின்றனர். ஓபிஎஸ்ஸுக்கு, தினகரனுக்கும் மக்களிடம் செல்வாக்கு  இருக்கிறது. சசிகலாவின் நிலைதான் கேள்விக்குறியாக  இருக்கிறது.

இவர்கள் எல்லோரும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கையில் விஜய் சுறுசுறுப்பாக   இயங்குகிறார்.

விஜயுடன் எந்தக் கட்சியும்  இணையவில்லை. ஆனால், மற்றைய  கட்சிகளின்  பிரமுகர்கள் விஜயுடன் கைகோர்த்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஆகியவற்றின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயின் கட்சியில்  இணைகிறார்கள்.

ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள் ஆர்.ராஜலட்சுமி,   டாக்டர் ஏ.ஸ்ரீதரன், திமுக முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வன் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.

 ராஜலட்சுமி, சென்னை மைலாப்பூர் தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்தவர். இவர் அதிமுக.,வில் இருந்து விலகி பாஜக.,விற்கு சென்று, பிறகு மீண்டும் அதிமுக.,வில் இணைந்தவர். அதே போல் டேவிட் செல்வன் என்பவர் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்தவர்.

வழக்கமாக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் இணைவார்கள். ஆனால் பெரிய கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ.,க்கள், புதிதாக துவங்கப்பட்ட விஜய் கட்சியில் இருந்துள்ளதை  ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜயுடன்  பிரேமலதா  இணையலாம் என்ற‌ ஊகங்கள் வெளியாகின்றன.

பிரேமலதாவிடம் ஊடகவியலாளர்கள்         கேட்ட போது, விஜய் எங்க வீட்டுப் பிள்ளை தான். அரசியல் கூட்டணி நிலைப்பாடு குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன்  கூட்டணி சேர பிரேமலதா விரும்புகிறார். தான் எதிர்பார்க்கு தொகுதிகளை  ஒதுக்க மறுத்தால் தனித்துப்  போட்டியிடப் போவதாகவும் பிரேமலதா சொல்லியுள்ளார்.

தனித்துப் போட்டியிட்டால்  பிரேமலதவால் வெற்றி பெற முடியாது. ஆனால், இன்னொரு கட்சியின் வெற்ரி வாய்ப்பைத் தவிடு பொடியாக்க முடியும்.

ஸ்டாலினுடன்  இருக்கும் திருமாவளவனும், கொம்யூனிஸ்ட்டுகளும் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. காங்கிரஸும்  சில வேளை அதிக தொகுதிகளைக் கேட்கும் நிலை ஏற்படலாம்.

தமிழகத்தில் எப்படியும் தாமரையை மலரவைக்க பாரதீய ஜனதா முயற்சி   செய்கிறது. கடந்த வாரம் அமித்ஷா தமிழகத்துக்கு விஜயம் செய்தார்.

தேர்தலைக் குறிவைத்து முருகன் மாநாட்டை நடத்த பாரதீய ஜனதா திட்டமிட்டுளது. முருக பக்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கோடு முருகன் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. பழனியை தொடர்ந்து   மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. வருகிற ஜூன் 22ம் தேகதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பகல் பகல் 3 மணி துவங்கி, இரவு 8 மணி வரை மதுரை பாண்டி கோவில் அருகில் உள்ள அம்மா திடலில் இந்த பிரம்மாண்ட ஆன்மிக மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டு திடலில் ஜூன் 10ம் திக‌தி முதல் அறுபடை முருகன் கோவில் கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு அறுபடை முருகனின் கோவில்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட வேல், பக்தர்களின் தரிசனத்திற்காக கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் சிறப்பு அம்சமாக கந்த சஷ்டி கவசத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் ஒருமித்த குரலில் பாராயணம் செய்ய உள்ளனர். பிரபலமானவர்களின் ஆன்மிக உரைகள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் நாட்டிற்கே உரிய நாட்டுப்புற கலைகளில் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பக்தர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகள், வாகனம் நிறுத்தும் இடங்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் எங்கு இருந்தும் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் வகையில் மாநாட்டு திடலை சுற்றிலுமே் எல்இடி திரைகள் அமைக்கப்பட உள்ளன. மாநாட்டு வளாகத்தில் ஆன்மிக மற்றும் இந்து விழிப்புணர்வு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

 கடைசியில்  முருகனிடன் சரணடைந்தது  பாரதீய ஜனதாக் கட்சி. 

ரமணி

15/6/25

 

அமெரிக்காவில் கிளப் உலகக்கிண்ணப் போட்டி

உலக  உதைபந்தாட்டத்தில்  தரவரிசையில்  முன்னணியில் உள்ள 32 அணிகள் பங்கேற்கும் பீபாகிளப் உலகக்  கிண்ணபபோட்டி அமெரிக்காவில் நடைபெறுகிறது.   மியாமியில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில்  ஜூன் 14 ஆம் திகதி கிளப் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாகிறது.

டேவிட் பெக்காமின் இணை உரிமையாளரும் லியோனல் மெஸ்ஸியின் தலைவருமான மேஜர் லீக் கால்பந்து அணியான இன்டர் மியாமி, மியாமி கார்டன்ஸில் ஆப்பிரிக்க சம்பியன் அல் அஹ்லிக்கு எதிராக  முதல் போட்டியில் விளையாடுகிறது.

ஆப்பிரிக்கா: 4  அணிகள்.

ஆசியா: 4   அணிகள்.

ஐரோப்பா: 12 அணிகள்.

வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, கரீபியன்: 4 கான்காகாஃப் அணிகள்

ஓசியானியா: 1  அணி.  .

தென் அமெரிக்கா: 6  அணிகள்

குழு A: பால்மீராஸ், எஃப்சி போர்டோ, அல் அஹ்லி, இன்டர் மியாமி

குழு B: பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன், அட்லெடிகோ மாட்ரிட், போடாபோகோ, சியாட்டில் சவுண்டர்ஸ்

குழு C: பேயர்ன் முனிச், ஆக்லாந்து நகரம், போகா ஜூனியர்ஸ், பென்ஃபிகா

குழு D: ஃபிளமெங்கோ, எஸ்பரன்ஸ் ஸ்போர்டிவ் டி துனிசி, செல்சியா, கிளப் லியோன்

குழு E: ரிவர் பிளேட், உராவா ரெட் டயமண்ட்ஸ், மோன்டெர்ரி, இன்டர் மிலன்

குழு F: ஃப்ளூமினென்ஸ், போருசியா டார்ட்மண்ட்,உல்சன்,

          மாமெலோடி  சன் டோன்ஸ்

குழு G: மான்செஸ்டர் சிட்டி, வைடாட், அல் ஐன், ஜுவென்டஸ்

குழு எச்: ரியல் மாட்ரிட், அல் ஹிலால், பச்சுகா, சால்ஸ்பர்க்

ஜஸ் 

  கிளப் உலகக்  கிண்ணப் போட்டிகான  தனது அணியை இன்டர் மியாமி புதன்கிழமை அறிவித்தது, அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அணியை வழிநடத்த உள்ளார். 

இன்டர் மியாமி ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை அணி

கோல்கீப்பர்கள்: டிரேக் காலன் டெர், ரோக்கோ ரியோஸ் நோவோ, ஆஸ்கார் உஸ்டாரி, வில்லியம் யார்ப்ரோ

டிஃபெண்டர்கள்: ஜோர்டி ஆல்பா, நோவா ஆலன், டோமஸ் அவிலெஸ், இஸ்ரேல் போட்ரைட், மாக்சிமிலியானோ ஃபால்கான், இயன் ஃப்ரே, கோன்சாலோ லுஜான், டைலர் ஹால், டேவிட் மார்டினெஸ், ரியான் மாலுமி, மார்செலோ வெய்காண்ட்

மிட்ஃபீல்டர்கள்: யானிக் பிரைட், செர்ஜியோ புஸ்கெட்ஸ், பெஞ்சமின் கிரெமாச்சி, சாண்டியாகோ மோரல்ஸ், ஃபெடரிகோ ரெடோண்டோ, பால்டாசர் ரோட்ரிக்ஸ், டேவிட் ரூயிஸ், டெலஸ்கோ செகோவியா

முன்கள வீரர்கள்: லியோ அபோன்சோ, தடியோ அலெண்டே, லியோனல் மெஸ்ஸி, ஆலன் ஒபாண்டோ, ஃபாஃபா பிகால்ட், லூயிஸ் சுரேஸ் 

ரமணி

15/6/25

சிலி உதைபந்தாட்ட பயிற்சியாளர் இராஜினாமா

 உலகக்கிண்ண தகுதிகாண்  போட்டியில்  பொலிவியாவிடம் 2-0 என்ற   கோல் கணக்கில் சிலி அணி தோல்வியடைந்ததை அடுத்து, தலைமை பயிற்சியாளர் ரிக்கார்டோ கரேகா இராஜினாமா செய்தார்.  இந்தத் தோல்வியின்  மூலம்  2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை சிலி இழந்தது..

  தென் அமெரிக்க தகுதிப் போட்டியில் சிலி அணி 10வது தோல்வியை சந்தித்தது. 10 நாடுகள் கொண்ட  குழுவில் சிலி அணி கடைசி இடத்தில் உள்ளது.  பிளேஆஃப்  வாய்ப்பையும் இழந்தது.

  2024 ஆம் அண்டு  ஜனவரியில் ரிக்கார்டோ கரேகா பயிற்சியாளர் பதவியை பொறுப்பேற்றார்.அவருடைய தலைமையில்  13 போட்டிகளில் விளையாடிய சிலி  ஒரே ஒரு போட்டியில் மட்டும்  வெற்றி பெற்றது.

2015 , 2016 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக கோபா அமெரிக்கா பட்டங்களை வென்ற சிலி, 2018,2022 ஆம் ஆண்டுகளில்  உலகக்கிண்ணப் ஓட்டியில் விளையாடத் தகுதி  பெறாத சிலி   தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக்  கிண்ணப் போட்டியைத்  தவற விடுகிறது.

Monday, June 16, 2025

உலகக்கிண்ணப் போட்டிக்குத் தயாரான அமெரிக்க நகரங்கள்

 உலகக் கிண்ண  உதைபந்தாட்டப் போட்டி நடை பெறுவதற்கு முன்னதாக  அமெரிக்காவின் 11 போட்டிகளை நடத்தும் நகரங்களின் பிரதிநிதிகள், இந்தப் போட்டி கலாசார சமத்துவம் , உள்கட்டமைப்பு முதல் இளைஞர் விளையாட்டு அணுகல் வரை நீண்டகால சமூக தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்கான திட்டங்களை முன்வைத்துள்ளனர்.

நியூயார்க்கில் உள்ள பேலி சென்டர் ஃபார் மீடியாவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒரு குழுவில், கலாசார உள்ளடக்கத்தை வலுப்படுத்துதல், இளைஞர் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் பொது உள்கட்டமைப்பில் முதலீடு செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளை ஹோஸ்ட் நகர அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.

மிகவும் விரிவான முயற்சிகளில் ஒன்று சியாட்டிலின் சீன அமெரிக்க கலை மரபு திட்டம் ஆகும், இது நகரத்தின் சீனாடவுன்-சர்வதேச மாவட்டத்தில் சீன அமெரிக்கர்களின் வரலாற்று பங்களிப்புகளை எடுத்துக்காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட 250,000 அமெரிக்க டொலர் நகர நிதியுதவி திட்டமாகும்.

மற்ற நகரங்களும் இதேபோன்ற உள்ளூர்மயமாக்கப்பட்ட அணுகுமுறைகளை எடுத்து வருகின்றன. லொஸ் ஏஞ்சல்ஸ் சமூக இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது; மியாமி கலாசார ரீதியாக மூழ்கடிக்கும் ரசிகர் விழாவை நடத்துகிறது; கன்சாஸ் நகரம் ஒரு புதிய பிராந்திய போக்குவரத்து மாதிரியை முன்னோட்டமாக உருவாக்குகிறது; டல்லாஸ் இளைஞர் கால்பந்து உள்கட்டமைப்பு , ஊடக திறனில் முதலீடு செய்கிறது.

போட்டியின் போட்டி கட்டமைப்பை  பீபா  மேற்பார்வையிடும் அதே வேளையில், அமெரிக்க நகரங்கள் நிகழ்வை உள்ளடக்கியதாகவும் உள்ளூர் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்துகின்றன. இலவச பொதுப் பார்வை மண்டலங்கள், அடிமட்ட கூட்டாண்மைகள் , பிராந்திய பிராண்டிங் முயற்சிகள் ஆகியவை உலகக் கோப்பையை நீண்டகால குடிமை நலனுக்கான தளமாகப் பயன்படுத்துவதற்கான பரந்த உத்தியின் ஒரு பகுதியாகும்.

2026 போட்டி அமெரிக்கா, கனடா ,  மெக்சிகோ  ஆகிய மூன்று நாடுகளில்  16 நகரங்களில் நடைபெறும், இறுதிப் போட்டி உட்பட 60 போட்டிகளை அமெரிக்கா நடத்துகிறது. 

கருவுறுதல் நடைமுறைகளுக்கு உட்படும் வீராங்கனைகளுக்கு சிறப்பு சலுகை


 கருவுறுதல் பாதுகாப்பு நடைமுறைக்கு உட்படுத்த விரும்பும்  வீராங்கனைகள் விளையாட்டிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, பாதுகாக்கப்பட்ட தரவரிசையுடன் போட்டி நடவடிக்கைகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று பெண்கள் டென்னிஸ் நிர்வாகக் குழு ( WTA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பெண் விளையாட்டு வீரர்கள் தங்கள் குடும்ப இலக்குகள் , தொழில் லட்சியங்களை சமநிலைப்படுத்துவதை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த புதிய விதி, WTA முதல் முறையாக வீரர்களுக்கு 12 மாதங்கள் வரை ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை வழங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு வருகிறது.

"புதிய விதியின்படி,  வீராங்கனைகள்  தொழில்முறை டென்னிஸிலிருந்து முட்டை அல்லது கருவை உறைய வைப்பது போன்ற கருவுறுதல் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு நேரத்தை ஒதுக்கி, பாதுகாக்கப்பட்ட தரவரிசையுடன் பாதுகாப்பாக போட்டிக்குத் திரும்பலாம்" என்று ந்டா   அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"தகுதியுள்ளவ‌ர்கள் சிறப்பு நுழைவு தரவரிசை (SER) பெறுவார்கள், இது அவர்களின் போட்டிக்கு வெளியே உள்ள காலம் தொடங்குவதற்கு எட்டு வாரங்களுக்கு முந்தைய WTA தரவரிசையின் 12 வார சராசரியின் அடிப்படையில் மூன்று போட்டிகளில் நுழையப் பயன்படுத்தப்படலாம்." 

2017 யுஎஸ் ஓபன் சம்பியனான ஸ்லோன் ஸ்டீபன்ஸ், முட்டை உறைபனியை ஒரு பாதுகாக்கப்பட்ட தரவரிசை நடவடிக்கையாக அங்கீகரிக்க வேண்டும் என்று முன்னர்  கோரிக்கை  விடுத்திருந்தார். புதன்கிழமை அறிவிப்பை "புதிய" நடவடிக்கை என்றும் அழைத்தார்.

சவூதி பொது முதலீட்டு நிதியத்தால் வழங்கப்படும் WTA மகப்பேறு நிதியத்தின் மூலம்,  வீராங்கனைகள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு,கருவுறுதல் பாதுகாப்பு மானியங்களைப் பெறுவார்கள் என்றும் WTA தெரிவித்துள்ளது.  

Friday, June 13, 2025

இலங்கை யுத்தத்தில் போர்க்குற்றம் ஆரம்பமானது விசாரணை


 விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இங்கிலாந்து கூலிப்படையினர் போர் புரிந்ததாக குற்றம் சுமத்தி  அவர்கள்  மீது  போர்க்குறா விசாரணை நடைபெறுவதை இங்கிலாந்து  உறுதிப்ப்டுத்தியுள்ளது.

 புலிகளுக்கு எதிரான  இறுதிக் கட்ட யுத்தத்தில்     ஆயுதம், ஆலோசனை என்ற போர்வையில் உலக நாடுகள் பல  இலங்கைக்கு ஆதரவளித்தன.  

புலிகளுகு எதிரான யுத்தத்தில்  வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் மிக அதிகமாகப்பாதிக்கப்பட்டனர். தரை,விமானம், கடல் வழித்தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் நிராயுதபாணிகளாக பலர் பலியாகினர். சிலர் காயங்களுடனும் ஆறாத வடுக்களுடனும் இன்று நடைப்பிணமாக வாழ்கின்றனர்.

புலிகளுக்கு எதிரான  போரில் இலங்கை இராணுவத்துடன்  இணைந்து  இங்கிலாந்தின்  முன்னாள் சிறப்பு விமானப் படையினரும், கூலிப்படையினரும்  போர் புரிந்ததாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

 அந்தக் குற்றச் சாட்டைப் புறந்தள்ளாமல் தீவிர விசாரணை நடைபெறுவதாக இங்கிலாந்து அரசாங்கம்  உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழ் காடியன் செய்தி வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரனின்  கேள்விக்கு பதிலளித்த  வெளியுறவுத்துறை அமைச்சர் கேத்தரின்  வெஸ்ட் இதனை உறுதிப் படுத்தினார்.

இலங்கையில் நடந்த மோதலின்  போது  போர்க்குற்றங்கள் நடந்ததாகக் கூறபடும் குற்றச்சாட்டை நாங்கள் தீவிரமாக எடுத்துள்ளோம். வெளியுறவு,காமன் வெல்த்,  மேம்பாட்டு அலுவலகம் என்பன விராசணைகளுக்கு உதவின.ஆனாலும்  கூடுதல் தகவல் கிடைக்கவில்லை என கேத்தரின்  வெஸ்ட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கூலிப்படையினர் 1980 களில்  இலங்கையில் செயல்படத் தொடங்கினார்கள். 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அது பற்றிய விசாரணைக்ள ஆரம்பமாகின.

 கீனி  மீனி என்ற கூலிப்படை நிறுவனம் 1980 களில் செயற்பட்டது. சிறப்பு விமானப்படை அதிகரியான மேயர் டேவிட் வாக்கர் அதனுசன்  இணைந்து செயலாற்றினார்.அந்தக் கூலிப்படை நிறுவனத்தின் மீது  போர்க்குற்ற விசாரணை நடைபெறுகிறது. STF எனப்படும் இலங்கையின் இராணுவத்துடன்  இணைந்து  இங்கிலாந்தின் கூலிப்படை நிறுவனம் செயற்பட்டது.

இலங்கையின் வடக்கு,கிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற பொதுமக்கள் மீதான துன்புறுத்தல்களுக்கு  கூலிப்படை நிறுவனமும் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது

 இலங்கையில் மனித  உரிமைகளை  நலைநாட்டுவதற்கு இங்கிலாந்து     உறுதியக இருப்பதாக வெளியுறவு அமைச்சர்  வெஸ்ட் கூறினார்.

மனித      உரிமைகளி மீறிய நான்கு இலங்கையருக்கு இங்கிலாந்து தடை விதித்ததை அவர் ஞாபகப்படுத்தினார். 

இலங்கையில் போர்க்குற்றம் செய்ததாகக் கூறப்படும்  கீனி மீனி சர்வீஸ்பற்றிய ஆவனங்களை வெளியிடத்தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலண்டனில் நடைபெற்ற தீர்ப்பாய விசாரணையின்  பின்னர் அந்த ஆவணங்கள்  பகிரங்கப்படுத்தப்பட்டன.

அந்த ஈரகசிய ஆவணங்கள்  2025 ஆம் ஆண்டு பெப்ரவரியில் பகிரங்கப்படுத்தப்பட்டன. சுமார் 30 வருடங்களாக ஆவணங்கள் மறைக்கப்பட்டதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

அந்த ஆவணங்கள் 1985 ஆம் ஆண்டுக்கு முந்தியவை. அன்றைய பிரதமர்  மார்க்கிரட் தட்சரின்  இலங்கை விஜயத்தின் காலம் அது.  1980 அம் ஆண்டு  கீனி மீனி என்ற கூலிப்படை நிறுவனம்  இலங்கை அரசுடன்  ஒப்பந்தம் செய்தது. இங்கிலாந்தின் முன்னாள் சிறப்பு விமானபப்டையினர் கீனி மீனியில் பணியாற்ரினார்கள்.

அவர்கள்  இலங்கைப் படையினருக்கு பயிற்சியளித்தனர். போர்  நடவடிக்கையில்  உதவினர்.  கீனி மீனி  உறுப்பினர் ஹெலிகொப்டர் விமானியாகச் செயற்பட்டார். ஹெலிக்கொப்டரில் இருந்து வெளியேறிய துப்பாக்கிக் குண்டுகளுக்கு கூலிப் படையினர்  பதிலலிக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற மனித  உரிமை மீறல்களுக்கு இங்கிலாந்து கூலிப்படையினரும்  காரணமாகினர்.  அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் மார்க்கிரட் தட்சரும் இதனை நன்கு அறிந்திருந்தார். கொழும்புக்கு பிரிட்டனின்  இராணுவ             உதவி பற்றியும் தாட்சருக்கு விளக்கப்பட்டது.

 இலங்கையில் கிளர்ச்சிய அடக்குவதற்கு இங்கிலாந்து செய்த  உதவி போதுமானதல்ல்ல என அன்றைஇய பிரதமர் தட்சர் கூறியதாக அவரது  உயர் வெழ்ளியுறவுக்கொள்கை ஆலோசகர் சார்லஸ் பவர்வ் எலியிட்ட குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடத்தப்பட்ட போர்க்குற்றம் தொடர்பான விசாரனைகளை 2020 ஆம் ஆண்டு  பெரு நகர காவல்துறை  விசாரணை செய்கிறது.

பத்திரிகையாளர் பில் மில்லர் எழுதிய  புத்தகம்  போர்க்குற்ற விசாரனையைத் தூண்டியது.

1980 களில் நடைபெற்ற போர்க்குற்றத்துக்கு இங்கிலாந்து பொறுப்பேற்ற முடியுமா என்ற  ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.

 கூலிப்படை மீதான  போர்க்குற்ற விசாரணைஅது மிக பரியதொரு அதிர்ச்சிய ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம்  இல்லை.

  

பிரெஞ்சு ஓபனில் NO 1 ஐ வீழ்த்திய NO 2

 பிரான்சின் பாரிஸில் உள்ள ரோலண்ட் கரோஸில் நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்   மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், இரண்டாம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃப், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்காவை 6-7 (5), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தனது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற சபலென்கா, 5-4 என்ற முன்னிலைக்குப் பிறகு தனது சர்வீஸில் முதல் செட்டை வெல்ல ஒரு சிறந்த வாய்ப்பைப் பெற்றார், ஆனால் காஃப் விடாமுயற்சியுடன் டை-பிரேக்கரை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டை-பிரேக்கரின் ஆரம்பத்தில் காஃப் ஆதிக்கம் செலுத்திய போதிலும், சபலென்கா மீண்டும் வந்து முதல் செட்டை 7-6 (5) என்ற கணக்கில் வென்றார்..

2023 அமெரிக்க ஓபன் சாம்பியனான காஃப் விரைவாக மீண்டு இரண்டாவது செட்டை 6-2 என வென்ற பிறகு, 21 வயதான அமெரிக்க வீரர் இறுதி செட்டில் வலுவாக நுழைந்து 6-4 என வெற்றியை உறுதி செய்தார்.

  

Thursday, June 12, 2025

உஸ்பெகிஸ்தான், ஜோர்தான் அணிகள் உள்ளே வெளியேற்றப்பட்டது சீனா


 

 

 

 உலகக்  கிண்ண   உதைபந்தாட்ட  தகுதிப் போட்டிகளில் முதலிடம் பெற்ற   உஸ்பெகிஸ்தான் , ஜோர்தான் அணிகள் முதன்முறையாகப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.  ஆசியாவின் பலமான் அணியாக உள்ள சீனா ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் வெளியேற்றப்பட்டது.

குரூப் ஏ‍யில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான கோல் இல்லாத டிராவுடன் உஸ்பெகிஸ்தான் தனது இடத்தைப் பிடித்தது. இந்த வெற்றி மத்திய ஆசிய அணிக்கு போதுமானதாக இருந்தது - இதில் மான்செஸ்டர் சிட்டி டிஃபென்டர் அப்துகோதிர் குசானோவ் மற்றும் ரோமா ஃபார்வர்ட் எல்டோர் ஷோமுரோடோவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் -

ஜப்பான், நியூசிலாந்து, ஈரான்,ஆர்ஜென்ரீனாவுடன் இணைந்து உலகக்க்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில்  விளையாடும் ச்   ஐந்தாவது அணியாக மாறியது.

குரூப் பி பிரிவில், ஓமானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம் ஜோர்தான் தனது முதல் உலகக்  கிண்ணப் போட்டிக்குத்  தகுதி பெற்று வரலாறு படைத்தது.

 உலகக் கிண்ண தகுதிப் போட்டியில்    முன்னிலையில் இருக்கும் தென் கொரியா, 1986 முதல் தனது  இடத்தித் தக்க வைத்துக் கொள்ள ஈராக்கிற்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றது. ஈராக் பிளேஆஃப்களில் இணையும், அதே நேரத்தில் குரூப்பில் இருந்து இறுதி பிளேஆஃப் இடம் ஓமன் ,பாலஸ்தீனம் ஆகியன மோதும்.

ஜகார்த்தாவில் இந்தோனேசியாவிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த பிறகு, குரூப் சி-யில் சீனாவின் மெலிதான நம்பிக்கைகள் தகர்ந்து போயின. ஓலே ரோமெனி இடைவேளைக்கு சற்று முன்பு பெனால்டியை கோலாக மாற்றி வெற்றியைப் பெற்று இந்தோனேசியாவை பிளேஆஃப் சுற்றுக்கு அனுப்பினார்.

  

ஓய்வு பெறுகிறார் நோவக் ஜோகோவிச்?


 பிரெஞ்சு ஓபன் அரையிறுதிப் போட்டியில், தோல்வியடைந்த ஜோகோவிச் 2025 ஆம் ஆண்டுடன் டென்னிஸ்ஸில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

பிலிப்-சாட்ரியரில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போட்டியில் உலகின் நம்பர் 1 ஜானிக் சின்னரிடம் 4-6, 5-7, 6-3 (3-7) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

தோல்விக்குப் பிறகு, ரோலண்ட் கரோஸுக்கு விடைபெறுவதற்கான சைகையாக ஜோகோவிச் களிமண் மேற்பரப்பைத் தொட்டார்.

"இது நான் இங்கு விளையாடிய கடைசி போட்டியாக இருக்கலாம், எனவே எனக்குத் தெரியாது. அதனால்தான் நான் இறுதியில் கூட சற்று உணர்ச்சிவசப்பட்டேன்." என்று ஜோகோவிச் தனது போட்டிக்குப்  பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

  அடுத்த ஆண்டு திரும்புவது குறித்து நிச்சயமற்ற தன்மையை நோவக் ஜோகோவிச், வெளிப்படுத்தினார்.

இந்த ஆண்டு இறுதியில் விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபனில் போட்டியிடும் தனது விருப்பத்தை ஜோகோவிச் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், 2025 க்கு அப்பால் தனது எதிர்காலம் குறித்து அவர் உறுதியாக இல்லை. இதனால் 2025 சீசன் முடிந்த உடன் அவர் ஓய்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மார்கரெட் கோர்ட்டுடன் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் சாதனையைப் பகிர்ந்து கொள்ளும் ஜோகோவிச், தனது 25வது பெரிய வெற்றியை பெற்றுவிட்டு ஓய்வு பெறும் முனைப்பில் உள்ளார்.

 பிரெஞ்சு ஓபன் அரையிறுதிப் போட்டியில், உலகின் நம்பர் 1 ஜானிக் சின்னர் 6-4, 7-5, 7-6(3) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்., இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான கார்லோஸ் அல்கராஸை அவர்  எதிர்கொள்கிறார்.

1976 ஆண்டு சம்பியனான அட்ரியானோ பனாட்டாவுக்குப் பிறகு  பிரெஞ் ஓபன்  இறுதிப் போட்டியை எட்டிய இரண்டாவது இத்தாலிய வீரர் என்ற பெருமையை சின்னர் பெற்றார். 

 


Saturday, June 7, 2025

கூட்டணிக்கு கைகொடுக்கும் ஸ்டாலின் கூட்டணியைக் கைவிட்ட எடப்பாடி

ஸ்டாலினின் தலைமையிலான  இந்தியா கூட்டணி தமிழ்கத்தில் மிக வலுவாகக் கால் ஊன்றியுள்ளது. மெகா கூட்டணியை அமைக்கப்போவதாகச் சவால் விட்ட எடப்பாடியைக் கூட்டணிக் கட்சிகளைக் கைகழுவிவிடுகிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது நடைபெறும்  கூட்டணிப் பேரங்களில்  மாநிலங்களவை எம்பிப் பதவியும்  முடிவு செய்யப்படும்.தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன சொல்லைக்காப்பாற்றும் விதமாக கமலுக்கு எம்பிப் பதவியைத் தூக்கிக் கொடுத்துள்ளார்.

ஆனால், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி  பிரேமலதாவுக்குக் கொடுத்த வாக்கைக் காற்றில் பறக்கவிட்டுள்ளார்.

வைகோ, அன்புமணி, பி.வில்சன், எம்.சண்முகம், என்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27ம் திகதியுடன் முடிவடைகிறது. புதிதாக 6 பேரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 19ம்  திகதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதிமுக தரப்பிலிருந்து அன்புமணி, என்.சந்திரசேகரன் ஆகியோரும், திமுக சார்பில் மற்ற 4 பேரும் எம்.பி.யாக தேர்வாகிர் எம்பியாகினர்

 ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். அந்த அடிப்படையில், திமுகவுக்கு 4 உறுப்பினர்களும் அதிமுகவுக்கு 2 உறுப்பினர்களும் தேர்வுபெறும் நிலை உள்ளது.

  திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் மு..ஸ்டாலின்   வெளியிட்டார். . திமுக வேட்பாளர்களாக, பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள்’’ என அறிவித்துள்ளார்.மற்றைய ஒரு இடம் மக்கள் நீதிமைய கட்சியின் தலைவர் கமலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த வாக்குறுதியின்  பிர்காரம் தேமுதிகவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொடுத்த வாக்குறுதியின் படி ஒரு  எம்பி பதவி தரப்பட வேண்டும் என  பிரேமலதா ஞாபகப் படுத்துகிறார். அப்படி ஒரு வாக்குறுதி கொடுக்கப்படவில்லை என எடப்பாடி சத்தியம்செய்யாத குறையாக வாக்குமூலம் கொடுக்கிறார்.

ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில்,  இரு இடங்களுக்கும் அதிமுக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

  தேமுதிகவுக்கு 2026 மாநிலங்களவைத் தேர்தலின்போது சீட் தரப்படும் என்று அதிமுக தெரிவித்துள்ளது. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தரப்படும் என்று முதல் முறையாக அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவிரவாக சுதீஷைக் கூப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே எடப்பாடி அரிவித்துள்ளார்.

  மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  இரண்டு  நாட்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது தேமுதிகவுக்கான ராஜ்யசபா சீட் விவகாரம் தொடர்பாகவும் கூட ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.   கட்சி முன்னணியினருடனும் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசித்துள்ளார். அப்போது அனைவருமே ஒரு மனதாக தேமுதிகவுக்கு இப்போது சீட் தர வேண்டாம் என்று கூறி விட்டதாக தெரிகிறது.

ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளுக்காக நாம் நிறைய இழந்துள்ளோம். ஜி.கே.வாசனுக்கு சீட் தந்தோம். அவரை நம்மை கண்டு கொள்ளவே இல்லை. கடந்த தேர்தலில் பாஜக பக்கம் போய் விட்டார். பாமகவுக்கும் சீட் தந்தோம். அன்புமணி எம்.பி. ஆனார். ஆனால் அவரோ கடைசி நேரத்தில் நமது கழுத்தறுத்து விட்டு பாஜக பக்கம் போய் விட்டார். இப்போது தேமுதிகவுக்கும் அதேபோல கொடுத்தால், அவர்களும் அணி மாற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு மூத்த தலைவர்கள் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து தேமுதிக பொருளாளர் சுதீஷை நேரில் அழைத்த எடப்பாடி பழனிச்சாமி, 2026 சட்டசபைத் தேர்தல் முடியட்டும். அதன் பிறகு வரும் மாநிலங்களவைத் தேர்தலில் உங்களுக்கு சீட்  தருகிறோம். இப்போது வாய்ப்பில்லை என்று கூறி விட்டாராம். இதனால்தான் சுதீஷ் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

  அதிமுக சார்பில் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ இன்பதுரையும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் வழக்கறிஞர் தனபால் ஆகியோர்   போட்டியிடுவர்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ம்பவைத்து ஏமாற்றியதால் மிகுந்த கடுப்பில் இருக்கிறார் பிரேமலதா. இந்த நிலையில்


 தமிழகத்தில் உள்ள இந்தியா கூட்டணியில் இணைய வருமாறு, அதாவது திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வருமாறு தேமுதிக.,விற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை தேமுதிக ஏற்குமா? அப்படியே ஏற்று திமுக கூட்டணியில் இணைந்தால் அது எந்த அளவிற்கு தேமுதிக.,வின் வளர்ச்சி பலன் தரும்?.. அதை விட முக்கியமாக, திமுக கூட்டணியில் முதலில் தேமுதிகவுக்கு இடம் இருக்கா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தேமுதிக தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் தேமுதிக.,விற்கு வருகிற ராஜ்யசபா எம்.பி., சீட் தர முடியாது என அதிமுக தலைமை மறுத்து விட்டதால், அதிமுக தலைமை மற்றும் கூட்டணி மீது தேமுதிக கடுமையான அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்தடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் திமுகவைப் புகழ்ந்து பேச ஆரம்பித்திருக்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறித்து சிலாகித்து நன்றி கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரை புகழ்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

பிரேமலதாவின் அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே, திமுக கூட்டணியில் இணைய வருமாறு தேமுதிக.,விற்கு செல்வ பெருந்தகை அழைப்பு விடுத்தார்.  திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்புதல் இல்லாமல் செல்வப் பெருந்தகை அழைப்பு விடுத்திருக்க மாட்டார்.

எடப்பாடியின் நடவடிக்கையால் அதிருப்தியில் இருக்கும் பிரேமலதா விஜயின் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகின. விஜயும்,  பிரேமலதாவும் இணையக்கூடாது என்பதால் செல்வப் பெருந்தகை அழைப்பை விடுத்திருக்கலாம்.

விஜயுடன் யாரும் கூட்டனி வைக்கவில்லை.  விஜய்க்கு சாதகமான மன நிலை இளைஞர்கள் மத்தியில் நிலவுவதாலும் தனக்கான வெற்றி வாய்ப்புகள் எந்த வகையிலும் சிதைந்து போய் விடக் கூடாது என்று கவனம் காட்டுகிறது திமுக.

இதனால்தான்   இதுநாள் வரை பார்க்காமல் இருந்து வந்த தனது அண்ணன் மு..அழகிரியை முதல்வர் மு..ஸ்டாலின் நேரில் போய்ச் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் தென் மாவட்டங்களில் உள்ள பலவீனத்தை சரிப்படுத்தி விடலாம் என்று முதல்வர் மு..ஸ்டாலின் கருதுவதாக கூறப்படுகிறது. அதேபோல விஜய் பக்கம் போகும் வாய்ப்புள்ள தேமுதிகவையும் தன் பக்கம் திருப்ப திமுக முயல்வதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த சமயத்தில் திமுக., கூட்டணியில் தேமுதிக இணைவது சரியான முடிவாக இருக்கும் என்பது சந்தேகத்திற்குரிய கேள்வி தான். தற்போதுள்ள அரசியல் கள நிலவரம் ஒரு புறம் இருந்தாலும் தேதிமுக தலைவர் விஜயகாந்த் தான் உயிருடன் இருந்தது வரை எந்த காரணத்திற்காகவும் திமுக., கூட்டணியில் இணைவது இல்லை என்பதில் உறுதியாக இருந்தார். திமுக ஆட்சி காலத்தில் மேம்பால பணிகளுக்காக தன்னுடைய திருமண மண்டபத்தை இடித்தது முதலே தனிப்பட்ட முறையில் திமுக., மீது விஜயகாந்த் கடுமையான கோபத்தில் இருந்தது அனைவரும் அறிந்ததே. கருணாநிதி எவ்வளவோ முயற்சித்தும் கூட திமுக., கூட்டணியில் இணைய கூடாது என்பதில் விஜயகாந்த் மிக உறுதியாக இருந்தார்.

பிரேமலதாஅவுக்கு முன்புபோல் வாக்கு வங்கி இல்லை. எதிரணியில் பிரேமலதாவின் கட்சி வெற்றி பெறாது. ஆனால் சில வேளை வெற்றி வாய்ப்பைப் பாதிக்கலாம்.

தற்போது விஜயகாந்த் இல்லாத நிலையில் பிரேமலதா, திமுக கூட்டணியில் இணையும் முடிவை எடுத்தால் அது கண்டிப்பாக கட்சி தொண்டர்களிடமும், விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியிலும் தேமுதிக., மீது அதிருப்தியை உருவாக்கும். மற்றொரு புறம் திமுக எதிர்ப்பும் தேமுதிக.,வின் பக்கம் திரும்பும். அப்படி நடந்தால் அது தேமுதிக.,வின் செல்வாக்கையும், ஓட்டு வங்கியையும் மேலும் பலம் இழக்க வைக்கும் என்று கருதப்படுகிறது. அதேசமயம், தேமுதிக கூட்டணிக்குள் வந்தால் அந்தக் கட்சிக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாகும்.

ரமணி

8/6/25