உதைபந்தாட்டத்தில் சிறந்த
வீரர்களான லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ
ரொனால்டோ ஆகிய இருவரும் விளையாடும் கடைசி உலகக்கிண்ணப் போட்டி என்பதால் ரசிகர்கள்
மிகுந்த எதிர் பாஅர்ப்புல் உள்ளனர்.
நான்கு
ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ஜென்ரீனாவை உலகக் கிண்ண சம்பியன் பட்டத்திற்கு அழைத்துச் சென்ற
மெஸ்ஸி , இந்த முறை அமெரிக்காவில் வரலாற்றை மீண்டும் நிகழ்த்த முயற்சிப்பார்.
2016 ஆம் ஆண்டில் போத்துகலை லை முதன்முறையாக ஐரோப்பிய
சம்பியன்ஷிப்பை - வென்ற அணியாக வழிநடத்திய ரொனால்டோ, தனது 40வது வயதில் இந்த அரிய வாய்ப்பை
வெல்லும் நம்பிக்கையுடன் இருப்பார், இது அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் அவருக்கு
கிடைக்காமல் போன மிகச் சில பட்டங்களில் ஒன்றாகும்.
உலகக்
கிண்ணப் போட்டியில் மெஸ்ஸியும் ரொனால்டோவும் மோத முடியுமா? என்ற எதிர் பார்ப்பு ரசிகர்களிடன் இருக்கிறது.
உலகக் கிண்ணப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவும், போத்துகலும்
நேரடியாக மோதுவதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் முதல்
சுற்றில் இரண்டு அணிகளும் முதலிடத்தில் இருக்க
வேண்டும்.
ங்கள்
குழுவான குரூப் ஜே-ஐ முதலிடத்தில் வைத்திருக்க வேண்டும்.
ஆர்ஜென்ரீனா
குழு J-ல் முதலிடத்திலும், போத்துகல் குழு K-ல் முதலிடத்திலும் இருந்தால் ஜூலை 11 ஆம் திகதி மிசோரியின் கன்சாஸ்
நகரில் உள்ள ஆரோஹெட் மைதானத்தில் நடைபெறும்
காலிறுதியில் மெஸ்ஸியும், ரொனால்டோவும் மோதுவார்கள்.
முதன்மையாக
அமெரிக்க கால்பந்துக்காக உருவாக்கப்பட்ட இந்த மைதானம், உலகக் கோப்பைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட
13 இடங்களில் ஒன்றாகும், மேலும் இது ஒரு மாதத்திற்கு கால்பந்து இடமாக மாற்றப்படும்.
ஆர்ஜென்ரீனா
குழு J-ல் முதலிடத்தில் உள்ளது, போத்துகல் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அல்லது மூன்றாம்
இடத்தைப் பிடிக்கும் அணிகளில் ஒன்றாகத் தகுதி பெறுகிறது.
ஜூலை
15 ஆம் திகதி ஜார்ஜியாவின் அட்லாண்டாவில்
உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் மைதானத்தில் நடைபெறும் உலகக் கிண்ண அரையிறுதியில் மெஸ்ஸியும் ரொனால்டோவும் மோதுவார்கள்.
ஐந்து
உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடிய மெஸ்ஸி, 13 கோல்கள் அடித்துள்ளார், 8 கோல்கள் அடிக்க
உதவியுள்ளார், இரண்டு முறை கோல்டன் பந்து விருது பெற்றுள்ளார். உலகக்கிண்ண சம்பியன்
அணிக்குத்தலைமைதாங்கினார்.
ஐந்து உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடிய ரொனால்டோ 8 கோல்கள்
அடித்துள்ளார். இரண்டு கோல்கள் அடிக்க உதவியுள்ளார்.
ரமணி
21/12/25

No comments:
Post a Comment