Friday, September 16, 2011

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்குழம்பிக் கிடக்கும் கூட்டணி

பிரமாண்டமான வெற்றியுடன் தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திருச்சி மேற்கு இடைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றின் மூலம் தனது பலத்தை வெளிக்காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு தேர்தல்களும் ஜெயலலிதாவுக்குப் பலப் பரீட்சையாகவே அமைய உள்ளன. திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் கடந்த சட்ட சபைத் தேர்தலின் போது பெற்ற வெற்றியை விடக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அல்லது குறைந்த மொத்த வாக்குகளால் வெற்றி பெற்றால் எதிர்க்கட்சிகள் அதனையேதமது துரும்புச் சீட்டாக்கி ஆளும்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
திருச்சி மேற்குத் தொகுதியில் வெற்றி பெற்ற மரியம் பிச்சை அமைச்சரவையில் இடம்பிடித்தார். சட்டசபை உறுப்பினராகப் பதவியேற்க கடந்த மே மாதம் சென்னைக்குச் சென்று கொண்டிருக்கையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் மரியம் பிச்சை. அப்போது எதிர்க்கட்சிகளின் சதியால் ஏற்பட்ட விபத்து என்று குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அது விபத்து என்று உறுதி செய்யப்பட்டது.
திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதுவித நெருக்கடியும் இன்றி வெற்றி பெற்று விடும். ஆளும் கட்சி என்ற பலம் இருப்பதனால் கூட்டணிக் கட்சிகளின் தயவை அதிகம் நாட வேண்டிய அவசியம் இல்லை. சட்ட சபைத் தேர்தலில்போது பெற்ற வெற்றியை விட அதிக வெற்றியைப் பெறுவதற்கு கூட்டணிக் கட்சிகளின் தயவு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அவசியம்.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் அடுத்த மாதம் முடிவடைதனால் ஒக்டோபர் கடைசி மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்ககப்படுகிறது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களைக் கட்சிகள் செய்யத் தொடங்கி விட்டன. தமிழகசட்ட சபைத் தேர்தலின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம், மாக்ஸிட் கட்சி, இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, கொங்கு இளைஞர் முன்னேற்றகப் பேரவை ஆகியன போட்டியிட்டன.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட இக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடருமா அல்லது சில கட்சிகள் வெளியேறி விடுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்தக் கூட்டணி உள்ளாட்சித் @தர்தலையும் Œந்திக்க @வண்டும் என்று கட்சித் தலைவர்கள் விரும்புகிறார்கள். தமிழகச்சட்டசபைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி தொடருமா இல்லையா என்பதை ஜெயலலிதா இன்னமும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
தமிழக அரசைக் கைப்பற்றுவதற்காக கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதலால் தனது பிடியைத் தளரவிட்ட ஜெயலலிதா உள்ளாட்சித்தேர்தலின்போது அளவுக்கதிகமாக விட்டுக் கொடுக்கமாட்டார். ஜெலலிதாவுடன் கூட்டணி சேராது தனித்து நின்று தேர்தலில் போட்டியிட்டிருந்தால் விஜயகாந்தின் கட்சி இப்படிப்பட்ட பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்காது. உள்ளாட்சி மன்றங்களிலும் இதேபோன்று வெற்றியைப் பெறுவதற்கு விஜயகாந்த் விரும்புகிறார். அதற்குரிய சந்தர்ப்பத்தை ஜெயலலிதா இலகுவில் வழங்கமாட்டார். எதிர்பார்த்த உள்ளாட்சி மன்றங்கள் கிடைக்காத போது தனித்து போட்டியிடுவதா அல்லது கிடைத்தது போதுமென்று திருப்திபடுவதா என்பøத் தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தம் விஜயகாந்துக்கு ஏற்படும்.
திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் முன்னரைப் போல உறவாடவில்லை. என்றாலும் இரண்டு கட்சிகளும் இணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளன. தமிழக அரசு கொடுக்கும் நெருக்குதலைச் சமாளிக்க முடியாத திராவிட முன்னேற்றக் கழகம் தடுமாறுகிறது. தமிழக அரசை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி இதுவரை குரல் கொடுக்கவில்லை. ஊழல் மோசடி, நில அபகரிப்பு போன்ற குற்றச்சாட்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை கைது செய்யப்படுகிறார்கள். சில குற்றச்சாட்டுகள் உண்மையானவை. சில போலியானவை.


சமச்சீர்க் கல்வியைத் தமிழக அரசு முடக்கியதை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகளே குரல் கொடுத்தன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பங்காளிகளான காங்கிரஸ் மௌனம் காத்தது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான பிளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருந்தபோதிலும் தேர்தலின்போது இரண்டு கட்சிகளும் ஒன்றாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்த டாக்டர் ராமதாஸ் வெளியேறிவிட்டார். திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிட மாட்டாது என்று அறிவித்துவிட்டார். இதனால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பெரிய பாதிப்பு ஏற்படப் போவதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுத் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக சட்ட சபைத் தேர்தலில் ஒதுங்கி இருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலையும் இதுதான். தனித்து போட்டியிடப் போவதாக வைகோவும் ராமதாஸும் அறிவித்துள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் உள்ளாட்சித் தேர்தல் பற்றி வெளிப்படையாக எதனையும் அறிவிக்கவில்லை. தனக்குத் சாதகமான உள்ளாட்சி மன்றங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற விருப்பம் திருமாவளவனுக்கு உள்ளது. காங்கிரஸைக் கழற்றி விட வேண்டும் என்று திருமாவளவன் விரும்புகிறார். காங்கிரஸைக் கைவிட கருணாநிதி தயாராக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் திருமாவளவன் தொடர்ந்து இருப்பாரா அல்லது வெளியேறுவாரா என்பது உள்ளாட்சி மன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தெரிந்து விடும். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனது ரசிகர்களைக் களமிறக்க விஜய் தயாராகிவிட்டார். சீமானும் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க தேர்தல் பரப்புரை பரபரப்பாகிவிடும்.
சொத்துகள் குவித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, இளவரசி சசிகலா, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான வழக்கு பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கில் இதுவரை நேரில் ஆஜராகாத ஜெயலலிதாவை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சார்பில் வாதிடும் ஹரீஷ் சால்வே, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபல வழக்கறிஞர். ஜெயலலிதா, நேரில் ஆஜராவதைத் தவிர்ப்பதற்கு பலமுறை முயற்சி செய்து வெற்றி பெற்றார். ஆனால் நீதிபதிகளின் திடுக்கிடுப் பிடியினால் இவரின் வாதம் எடுபடவில்லை. ஜெயலலிதா ஆஜராகும் நாளை 12 ஆம் திகதிக்கு முன் அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அண்டை மாநில நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை. ஜெயலலிதா நீதிமன்றத்துக்குச் சென்றால் அது தேசிய அளவில் பிரபலமாகிவிடும். ஜெயலலிதாவுக்கு எதிரான கட்சிகளின் தொலைக்காட்சிகளில் அந்தச் செய்தி திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படும். ஊழல் குற்றச்சாட்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களைப் பிடித்து சிறையிலிடும் தமிழக அரசுக்கு இது மிகப் பெரிய அடியாக இருக்கும். இந்த ஒரு சம்பவத்தை வைத்து தமது தவறுகளை மறைத்து விடுவதற்கு ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் தயாராகி விட்டனர்.


வர்மா

சூரன்.ஏ.ரவிவர்மா

வீரகேசரிவாவாரவெளியீடு04/09/11


No comments: