Tuesday, February 25, 2014

யாதும் ஊரே


நாகரீகப் பெட்டகப் பாதுகாப்பிற்கு வலுச்சேர்க்கும் யாதும் ஊரே ஒழி ஆவணத் தொடர் தயாரிப்பு 
-ஒரு அறிமுகக் குறிப்பு -

மனித வாழ்க்கை என்பது பரந்து பட்டது .உலகளாவிய ரீதியில் பார்க்கின்ற போது பல்வேறு பிராந்தியங்களாக மனித வாழ்வு பரந்து காணபட்டாலும் கூட ஒவ்வொரு இன மத சார் பண்பாட்டியல் கலாசாரங்களை முன்வைத்து அவை வேறுபட்டும் மாறுபட்டும் காணப்படுகின்றன .
உண்மையில் மனிதனானவன்  நிகழ் வெளி வாழ்வை  பெரிதும் முக்கியப்படுத்தும் அளவிற்கு தான் சார்ந்த அல்லது பிறர் சார்ந்த பொதுமை சார்ந்த கடந்தகால வால்வியர்தடன்கலையும் அவற்றின் முக்கியத்துவங்களையும் கண்டு கொள்ளும் நிலை அருகி வருகின்ற ஒரு காலகட்டத்தில் உலக நகரங்கள் பற்றியும் ,பரந்து பட்ட பிராந்தியங்களின் பண்பாடு ,புராதான கலாசாரங்களை முன்வைத்து யாதும் ஊரே என்கின்ற ஒரு ஒளி ஆவணத் தொடர்  லண்டனில் வசிக்கு பிரபல ஊடகவியலாளரும் ,ஆய்வாளருமாகிய தவ   சஜிதரனை பிரதம   செயர்ப்பாட்டாலராக கொண்டு அவர் சார்ந்த குழுவினரால் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது .

கடந்த வாரம் இணையத்தில் வெளியான இந்த முயசியின் முதல் தொடராக பிருத்தானிய அருங் காட்சியகத்தின் புராதன வரலாறு குறித்த ஒரு ஆவணமாக வெளிவரவுள்ளதாக அந்த முதலாவதாக வெளியாக காணொளி எமத்து தெட்டத்  தெளிவாக புலப்படுத்தியிருன்தது .உண்மையில் தமிழில் வெளிவர இருக்கின்ற இந்த  முயற்சி பெரிதும் பாராட்டப் படவேண்டிய ஒன்று ஆகும் .உண்மையில் இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்வில் புராதனம் ,அல்லது பண்டைய வரலாறு குறிந்த ஆய்வியல் நோக்கில் வெளிவரும் படைப்புகளின் தேக்க நிலை அரிதாக காணப்படும் இக்காலத்தில் உலக நாகரீகங்கள் ,பன்பாட்டியர் கோலங்கள் ,புராதன நாகரிக சின்னங்கள் என வாழ்வின் மிக முக்கியமான பல சுவாரஷ்ய தகவல்களை இந்த ஒளி ஆவணத் தொடர் தரும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை .இந்த  ஆவணத் தொடர் முயசி ஆனது காலம் காலமாக    பேணிப் பாதுகாக்கப்படவேண்டிய ஒரு விடயமாகிறது .உலக வரலாறு ,பண்பாட்டியல் தேடல் என எல்லாவற்றிற்கு ம் இணையத்தில்  தங்கி இருக்காது இப்படியான இந்த ஒளி ஆவணத் தொடர் மூலம் மென் மேலும் நாம் வரலாற்றை அறிந்து கொள்ளக் கூடிய ஒரு அரிய வாய்ப்பு உருவாகியிருக்கின்றது என்றே சொல்ல வேண்டும் ,இந்த ஒரு வார காலத்தில் இணையத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்களால் இந்த முன்னோட்டம் பார்வையிடப் பட்டிருக்கின்றது ,எனவே பல சுவாரஷ்யமான தேடல்களின் பதிவுகள் ,புதிய விடயங்கள் என எல்லாவற்றையும் ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாக :யாதும் ஊரே "என்ற தலைப்பில் வெளியாக இருக்கின்றது ,எனவே இந்த அரிய முயசியை செய்துவரும் ஊடகவியலாளர் தவ சஜிதரன் மற்றும் அவர் சார் குழுவினருக்கு நன்றிகளையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளவேண்டியதில் ஒவ்வொரு வாசகர்களின்  பணியும் மிக முக்கியமானதொன்றாக இருக்கின்றது .

வெற்றி -துஷ்யந்தன்

 சுடர் ஒளி 23/02/14

No comments: